ஐ.ஐ.டி. ஜோத்பூர் இயக்குநர் மீது தாக்குதல் நடத்திய உதவி பேராசிரியர்

ஜோத்பூர், ஐ.ஐ.டி. ஜோத்பூரில் நேற்று காலை கூட்டம் ஒன்று நடந்தது. இதில், ரசாயன பொறியியல் துறைக்கான உதவி பேராசிரியர் தீபக் குமார் அரோரா மற்றும் ஐ.ஐ.டி. ஜோத்பூரின் இயக்குநர் அவினாஷ் குமார் அகர்வால் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், இருவரும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த அரோரா, திடீரென அவினாஷை தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதுபற்றிய புகாரின் பேரில் அரோராவை போலீசார் கைது செய்தனர். எனினும், நேற்று மாலை அவர் … Read more

Maruti Suzuki Victoris on-road price and specs – மாருதி சுசுகியின் விக்டோரிஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

மாருதி சுசூகியின் நடுத்தர எஸ்யூவி பிரிவில் இரண்டாவது மாடலாக விக்டோரிஸ் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு முதன்முறை வசதிகளை மாருதி வழங்க துவங்கியுள்ளதால் என்னென்ன சிறப்புகளை பெற்றுள்ளது என்பதனை நாம் அறிந்து கொள்ளப் போகின்றோம். விக்டோரிஸ் விலை ரூ.10 லட்சத்துக்குள் துவங்கி ரூ.18 லட்சத்துக்குள் நிறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது, தற்பொழுது டீலர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் முன்பதிவுக்கு ரூ11,000 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது இந்தியாவில் ADAS கொண்டு வந்த மாருதி சுசூகி போட்டியாளர்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தவும், பாதுகாப்பில் மேம்படுத்தப்பட்ட … Read more

“பெரியாருக்கு என் கையால் சோறு பரிமாறியிருக்கிறேன்'' – லண்டனில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஒரு வார பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் போது, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தோட்ட தரணியின் கை வண்ணத்தில் உருவான தந்தை பெரியார் படத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார். பெரியார் படத்தைத் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் `விஜய் குறித்த கேள்வி, DMK vs TVK, புதிய கட்சிகள் வருகிறதா?’ – ஸ்டாலின் சொன்ன பதில் இதையடுத்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய … Read more

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களை அடித்து விரட்டுவதற்கா? அன்புமணி காட்டம் – காவல்துறை விளக்கம்…

சென்னை: உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களுக்கு உதவுவதற்கா? மக்களை அடித்து விரட்டுவதற்கா?  பாமக தலைவர்  அன்புமணி  ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை அருகே செப்டம்பர் 3ந்தேதி நடைபெற்ற  “உங்களுடன் ஸ்டாலின் முகாமில்” மனு கொடுக்க வந்த வயதானவரை காவலர் ஒருவர் முகத்தில் குத்தியும், மார்பை பிடித்து தள்ளியும் கடுமையாக தாக்கியதாக வீடியோ ஒன்று இணையத்தில்  வைரலானது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து,  சம்பவம்  குறித்து ராணிப்பேட்டை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் காவல்துறையினரால் தாக்கப்பட்ட முதியவர், … Read more

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு நவராத்திரி முதல் நாளில் இருந்து தொடங்கும்: பிரதமர் மோடி

புதுடெல்லி, பிரதமர் மோடி டெல்லியில் தேசிய ஆசிரியர் விருது பெற்றவர்களுடன் இன்று உரையாடினார். அப்போது அவர், ஜி.எஸ்.டி. வரி எளிமையாக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களால், இந்தியாவின் துடிப்பான பொருளாதாரத்திற்கு 5 புதிய ரத்தினங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன என குறிப்பிட்டார். ஜி.எஸ்.டி. 2.0 நாட்டுக்கான ஆதரவு மற்றும் வளர்ச்சிக்கான இரட்டை மருந்து ஆகும். 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அது துணையாக இருக்கும் என கூறினார். இந்தியாவை சுயசார்புடன் உருவாக்க அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்களை உருவாக்குவது என்பது முக்கியம். … Read more

சொத்துக் குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்; செப்., 15-க்குள் அமல்படுத்த உத்தரவு!

திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், 2006 – 2011 ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, 2007 – 2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரின் மனைவி சாந்தகுமாரி மீதும் 2001-ல் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017-ல் துரைமுருகன், அவரின் மனைவி ஆகிய இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தது. இருப்பினும், இருவரின் விடுதலையை … Read more

மிலாதுன் நபி: நாளை மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு…

சென்னை: இஸ்லாமியர்களின்  பண்டிகையான  மிலாதுன் நபி  நாளை கொண்டாடப்படும் நிலையில்,  நாளை மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு  தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடைபெறுகிறது. அதுவும் பண்டிகை நாட்களான தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் வந்துவிட்டால்  டாஸ்மாக் மது விற்பனை மூலம் பணம் கோடி கோடியாக கொட்டி வருகிறது. … Read more

‘பல் இல்லாத சட்டத்தால் என்ன பயன்?’ – மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு இலவச பொருட்களை வழங்கும் மருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளது என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார். அப்போது, பல் இல்லாத சட்டத்தால் என்ன பயன்? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 7-ந்தேதிக்கு தள்ளி … Read more

TVS Ntorq 150 launched price – டிவிஎஸ் என்டார்க் 150 முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

டிவிஎஸ் மோட்டாரின் புதிய ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற என்டார்க் 150 ஸ்கூட்டரின் விலை ரூ.1,19,000 முதல் ரூ.1,29,000 வரை எக்ஸ்-ஷோரூம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 150சிசி ஏர-கூல்டு என்ஜின் பெற்றதாக அமைந்துள்ளது. என்டார்க் 125 ஸ்கூட்டரின் அடிப்படையில் என்ஜின் மற்றும் சேஸிஸ் உட்பட பெரும்பாலான மெக்கானிக்கல் சார்ந்த பாகங்களை பகிர்ந்து கொள்வதன் பிரேக்கிங் அமைப்பில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது. இன்ட்கிரேட்டேட் ஸ்டார்டர் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ள 149.7cc ஏர்-கூல்டு என்ஜின் பெற்று 13.2 hp @ 7000 … Read more

"அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை" – காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம்!

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் போராடி 13-ம் தேதி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள் இன்று (செப்டம்பர் 4) காலையில் சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் கூடியிருந்தனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். அப்போது அங்கே செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகையாளர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – இணை ஆணையர் விஜயகுமார் மேலும், சென்னை கிழக்கு மண்டல இணை … Read more