வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெளிப்புற விளையாட்டு மைதானம் திறப்பு…

சென்னை: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு வந்த வெளிப்புற விளையாட்டு மையம்  பயனர்களுக்காக பிப்ரவரி 6ந்தேதி திறந்த வைக்கப்பட்டது. ரயில்வேக்க வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையிலும், வேளச்சேரி ரயில் நிலையத்தில் பொழுது போக்கு வசதிகளுடன் கூடிய ஒரு விளையாட்டு மையத்தை அமைக்க தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து,  ஒப்பந்தப்புள்ளியை சென்னை ரயில்வே கோட்டம் கோரியது. ரயில் பயணிகள் … Read more

மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ பாலம்! 16ந்தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னையின் மைய பகுதியான, மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ‘எல்’ வடிவ பாலம்  கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வரும்  16ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்க முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த 60 கோடி ரூபாய் மேம்பாலத் திட்டத்திற்கு பல மாதங்களாக தாமதம் ஏற்பட்டது. ஆனால், இப்போது மாநில நெடுஞ்சாலைத் துறை இரண்டு முக்கிய தடைகளை நீக்கியுள்ளது. முதலாவது, சர்தார் படேல் சாலை-OMR சந்திப்பில் மையப் பாலத்தை அமைப்பது. இரண்டாவது, சர்தார் படேல் சாலையில் … Read more

தமிழ்நாட்டில் காலை சிற்றுண்டி திட்டம் மூலம் 20லட்சம் குழந்தைகள் பயன்! சேகர்பாபு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை சிற்றுண்டி திட்டம் மூலம் 20லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர் என அமைச்சர்  சேகர்பாபு  கூறினார். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம்  பேசிய அமைச்சர் சேகர்பாபு,   தமிழகத்தில் மழலைகளுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனா் என்தெரிவித்தாா். பணிக்குச் செல்லும் தொழிலாளா்களுக்கு அன்னம் தரும் அமுதக் கரங்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றவர்,   நூறு நாள் வேலைத் திட்ட பிரச்னையில் தமிழக முதல்வா் போராட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி … Read more

விழுப்புரம்: அணிவகுத்த பாரம்பர்ய உணவுகள்; சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் மகுடம் சூடிய மூவர்!

பெண்களின் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக, வழிகாட்டியாக இருக்கும் அவள் விகடன், அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சக்தி மசாலாவுடன் இணைந்து தமிழகம் முழுக்க சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தற்போது நடைபெறும் மூன்றாவது சீசனின் முதல் போட்டி விழுப்புரத்தில் இன்று தொடங்கியது. அந்த நிகழ்ச்சியில் விழுப்புரம், அரசூர், கோலியனூர், வளவனூர், செஞ்சி, உளுந்தூர்பேட்டை பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். டாப் 10 தேர்வாளர்கள் … Read more

மார்ச் 1ஆம் தேதி மதுரை வருகிறார் பிரதமர் மோடி! நயினார் நாகேந்திரன் தகவல்…

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகையில் மாற்றம்  செய்யப்பட்டு உள்ளதாகவும்,  மார்ச் 1ஆம் தேதி  மதுரை வருகிறார் என பாஜக மாநில தலைவர் நயினானர் நாகேந்திரன் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகை மார்ச் ஒன்றாம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும்,  மார்ச் 1ஆம் தேதி மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க இருப்பதாக நயினார் நாகேந்திரன் அறிவிப்பு. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தேர்தல் கள பணிகள் தீவிரமடைந்துள்ளது.  அதிமுக தலைமையிலான … Read more

அடுத்தடுத்த சிக்கல்கள்; திமுகவை நெருக்கும் கூட்டணி கணக்குகள்! என்ன முடிவெடுக்கப் போகிறார் ஸ்டாலின்?

தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி சிக்கலுக்கே இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில், அந்த அணியில் அடுத்தடுத்த சிக்கல்கள் எழ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தி.மு.க-வுக்கு நெருக்கமாக இருந்துவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் சீட் விசயத்தில் கறார் காட்டும் மூடில் இருப்பதால் அறிவாலயம் தரப்பு அப்செட்டில் இருப்பதாக செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளன. தி.மு.க கூட்டணயில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, ஐ.யு.எம்.எல், ம.ம.க உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கிறன. கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளுடனே இந்த முறையும் தேர்தலை … Read more

தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிஞர் பாவாணர் வாழ்க! முதலமைச்சர் பதிவு…

சென்னை: தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிஞர் பாவாணர் வாழ்க என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவில் கூறியிருப்பதாவது:- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் “தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; நானே மரமாக வளர்த்து வருகிறேன்” எனத் தம் தமிழ்ப்பணியை மதிப்பிட்டார் பாவாணர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தைத் தம் வாழ்நாள் கடமையாக … Read more

India – US Trade Deal: `இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நிர்ப்பந்தம் மட்டுமே!' – க.கனகராஜ் | களம் 03

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’ இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்’. களம் 03க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் – சிபிஐ(எம்) (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்) இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை … Read more

‘மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம்’! பிப்ரவரி 12ந்தேதி திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை:  ‘மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம்  காட்டப்பட்டு உள்ளதாகவும்,   தமிழ்நாடு புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழ்நாடு முழுவதும் வரும் 12ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்தியஅரசை கண்டித்து,  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 12.02.2026 அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் … Read more

`அமெரிக்காவில் முதலீடு… உறுதி அளிக்கவில்லை; ஆனால் வர்த்தகம் அதிகரிக்கும்'- விளக்கும் பியூஷ் கோயல்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்தது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) … Read more