வார ராசி பலன் 25-09-2022 முதல் 01-10-2022 | Vaara Rasi Palan | Astrology | weekly horoscope

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

நெல்லையில் சாலையோர தடுப்பில் கார் மோதி விபத்து: தாய், மகன் உயிரிழப்பு

விருதுநகர்: நெல்லை நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியதில் தாய், மகன் உயிரிழந்துள்ளார். விபத்தில் தாய் முத்துலட்சுமி, மகன் மௌலி உயிரிழந்துள்ளனர். ஓட்டுநர் ஞணசேகரன் மற்றும் கண்ணன் படுகாயம் அடைத்துள்ளனர். ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றபோது விபத்தில் தாய், மகன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

21 திரிணாமுல் காங். எம்.எல்.ஏக்களுக்கு பாஜக ஸ்கெட்ச்? மிதுன் சக்கரவர்த்தி பேச்சால் பரபரப்பு!

India oi-Mathivanan Maran கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கும் வகையில் 21 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தமது கட்சி வளைத்துக் கொண்டிருப்பதாக பாஜகவின் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக அல்லாத மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் அரசாங்கத்தை கவிழ்ப்பதில் பாஜக தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜகவின் இந்த ஆபரேஷன் தாமரை என்ற அரசியல் சித்து விளையாட்டுகள் அரங்கேறி … Read more

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ.45.5 லட்சம் மோசடி| Dinamalar

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி, புதுச்சேரியில் 10 பேரிடம் ரூ.45.5 லட்சம் வசூலித்து மோசடி செய்த பெண்ணை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியை சேர்ந்த 28 வயது பெண், கடந்த ஜூலை மாதம் இணையதளத்தில் வேலை தேடினார். அதில் கிடைத்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசியவர், அயர்லாந்து நாட்டில், பிரபல நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரி பணி வாங்கித் தருவதாக கூறி, ரூ.3.50 லட்சம் கேட்டார். அதன் பேரில், போனில் பேசிய … Read more

எந்த ஒரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது- ஐநா பொதுச் சபை கூட்டத்தில் ஜெய்சங்கர்

நியூயார்க், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா, அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நட்பு நாடுகள் பலமுறை ஐ.நா.சபையில் தீர்மானங்கள் கொண்டு வந்தன. ஆனால் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட சீனா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடுத்து நிறுத்தியது. இந்த நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் உயர்மட்ட அமர்வில் இந்தியா சார்பில் பேசிய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர் இதை கடுமையாக குறை கூறினார். … Read more

Doctor Vikatan: ஒருநாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கலாம்?

Doctor Vikatan: ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கலாம்? எல்லோரும் பொதுவாக 3 – 4 என சொல்கிறார்கள். அளவு எவ்வளவு என்று குறிப்பிடுவதில்லை. அதிக காபி, டீ குடிக்க வேண்டாம் என அறிவுறுத்த அதில் சேர்க்கப்படும் பால் பிரச்னையா அல்லது கஃபைன் பிரச்னையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம் கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர் காபியோ, டீயோ…. ஒருநாளைக்கு ஒன்று முதல் இரண்டு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். ஒரு கப் என்பது … Read more

சண்டிகர் பல்கலைக் கழகத்தின் சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரம்: ராணுவ வீரர் கைது

சண்டிகர்: சண்டிகர் பல்கலைக் கழகத்தின் சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரத்தில் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் தலைநகரில் இயங்கி வரும் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். மாணவிகள் ஹாஸ்டலில் குளிக்கும் வீடியோ இணையத்தில் வெளியானதே இந்தப் போராட்டத்திற்குக் காரணம். ஒரே நேரத்தில் பல மாணவிகள் போராட்டத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவிகளின் வீடியோதான் லீக் ஆனதாகத் தகவல் பரவியது. முதலில் அங்குப் படிக்கும் … Read more

சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என்று கூறி நீர்வளத்துறை அதிகாரியிடம் ரூ.10 லட்சம் பணம் பறிக்க முயற்சி: போலீஸ் வலை

சென்னை: சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என்று கூறி நீர்வளத்துறை அதிகாரியிடம் ரூ.10 லட்சம் பணம் பறிக்க முயற்சி செய்த்துள்ளனர். நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் புகாரின் பேரில் அரசு அதிகாரிகளை ஏமாற்றி பணம் பறிக்கும் மர்ம நபருக்கு தரமணி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்,

குழந்தைகள் பாலியல் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக நாடு முழுவதும் சி.பி.ஐ. அதிரடி சோதனை

சமீப காலமாக குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் அதிகரித்து வருகிறது. அரசு அதிரடி நாடு முழுவதும் குழந்தைகள் பல்வேறு வகையில் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் கட்டுக்குள் வராமல் ஆங்காங்கே குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. ஆதரவற்றநிலையில் உள்ள குழந்தைகள் தான் இந்தவகையில் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையை ஒடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை ஒடுக்கி வருகிறது. தொடர்ந்து இதுபோன்ற குழந்தைகளுக்கு … Read more

"சட்டசபையில் ஒருவர் பான்மசாலா போடுகிறார், இன்னொருவர் ரம்மி ஆடுகிறார்"- பாஜக-வை விமர்சித்த சமாஜ்வாடி

உ.பி-யில் ஆளுங்கட்சியான பா.ஜ.க-வுக்கும், எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே சமீபகாலமாகவே மோதல்போக்கு நிலவிவருகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் இரண்டு பேர் செய்த செயல்கள் அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. யோகி ஆதித்யநாத் எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி, பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் செயலை ட்விட்டரில் வீடியோவாக வெளியிட்டு, “சட்டப்பேரவையின் கண்ணியத்தைக் கெடுக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள். மக்களின் பிரச்னைகளுக்கு இவர்களிடம் பதில் இல்லை. ஆனால், சட்டப்பேரவையைப் பொழுதுபோக்கு இடமாக வைத்துள்ளனர். இது மிகவும் இழிவான மற்றும் வெட்கக்கேடான … Read more