கச்சிக்கோடு – வாளையாறு ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி பெண் யானைகள் பலியானது குறித்து விளக்கமளிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: கச்சிக்கோடு – வாலையாறு ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி பெண் யானைகள் பலியானது குறித்து விளக்கமளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே, பாலக்காடு மண்டல பொது மேலாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகள் பாதுகாப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

"இல்லாதவங்களுக்கும், கஷ்டப்படறவங்களுக்கும் மருத்துவம் பார்க்கணும்!"- நீட் முதலிட மாணவி விருப்பம்

அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் சாதித்திருக்கிறார் ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி தேவதர்ஷினி. இவர் நீட் தேர்வில் 518 மதிப்பெண் பெற்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இச்சாதனை குறித்து மாணவி தேவதர்ஷினி நம்மிடம் கூறியது, ”கவுந்தப்பாடியை அடுத்த பொம்மன்பட்டிதான் எங்க கிராமம். எங்க அப்பா வேலுச்சாமி நெசவுத் தொழிலாளி. தாயார் பெயர் கோடீஸ்வரி. தந்தை வேலுச்சாமி 6 மாசத்துக்கு … Read more

தமிழ்நாட்டிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லை! 2021ம் ஆண்டு ஆர்டிஐ தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்றும், தமிழ் கட்டாயப் பாடம் கிடையாது என்பதும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டைய தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் செயல்படும் மத்தியஅரசின் கேந்திரியி வித்யாலயா பள்ளி உள்பட பல்வேறு சிபிஎஸ்இ பள்ளிகளிலும் தமிழ்ப்பாடம் இடம்பெறுவது இல்லை. அதே வேளையில் இந்தி பாடம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இயங்கி வரும் 49 கேந்திரியா வித்யாலயா … Read more

ஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு ஆணை..!!

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த வி.கே.சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்ட வல்லுநர்கள் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்  சி.விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் , ராமமோகன் ராவ், பிரதாப் ரெட்டி  உள்பட 8 பேர் மீது ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

பில்கிஸ் பானோ: `பாலியல் குற்றாவளிகளை ஹீரோக்கள் போல நடத்துகிறது!' – பாஜக-வைச் சாடும் எதிர்க்கட்சிகள்

கடந்த மார்ச் 3, 2002 அன்று, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிந்தைய கலவரத்தின்போது, குஜராத் மாநிலம், தஹோத் மாவட்டம், ரந்திக்பூர் கிராமத்தில், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோ, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரின் 2 வயது குழந்தை தரையில் அடித்துக் கொல்லப்பட்டது. அவரின் குடும்ப உறுப்பினர்களும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் பல்வேறு நீதிமன்ற போராட்டங்களுக்குப் பிறகு, இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் 11 பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு … Read more

லிஸ் ட்ரஸ்ஸுக்கு பதிலாக இவர்தான் பிரதமராகவேண்டும்: மக்கள் விருப்பத்தைக் காட்டும் ஆய்வு முடிவுகள்

லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள திணறிவரும் நிலையில், அவருக்கு பதிலாக மக்கள் யார் பிரதமராகவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என்பது முதலான கேள்விகள் மக்கள் முன் வைக்கப்பட்டன. கன்சர்வேட்டிவ் கட்சியே வேண்டாம் என்று கூட மக்கள் பதிலளித்திருக்கிறார்கள். பிரித்தானியா பொருளாதார பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் நிலையில், தற்போதைய பிரதமர்தான் பிரச்சினைகளுக்குக் காரணம் என பெரும்பாலான பிரித்தானியர்கள் நினைக்கிறார்கள். அடுத்து தேர்தல் வரக்கூடும் என்ற கருத்து பரவி வரும் நேரத்தில், சமீபத்தைய ஆய்வு ஒன்றின் முடிவுகள், ஆளும் கன்சர்வேட்டிவ் … Read more

இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்! பாஜக வெளிநடப்பு… முழு விவரம்…

சென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது. இந்த தீர்மானத்துக்கு எதிராக பாஜக எதிர்ப்பு தெரிவித்து சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. 2 ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  ஓ.பன்னீர்செல்வம் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் இன்று  கூடியது. எடப்பாடி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்களின் அமளி களைத் தொடர்ந்து, அவர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு,  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஜெயலலிதா மரணம் தொடர் பான ஆணையத்தின் அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது.  தொடர்ந்து இந்தி … Read more

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்: உத்தரகாண்ட் காவல்துறை தகவல்

டேராடூன்: கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கேதார்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகிய 3 பேரும் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர்கள் என உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.

`ஆதரவற்ற குழந்தைகள் அல்லர், அனைவரின் ஆதரவையும் பெற்ற குழந்தைகள்!' – எம்.எல்.ஏ.வின் நெகிழவைத்த செயல்

ராஜபாளையம் அருகே பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகரில் உள்ள குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஆகிய 3 காப்பகங்களில் உள்ள 211 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் எடுத்துக்கொடுத்து மாணவர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளார் ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன். குழந்தைகள் இந்த நெகிழ்ச்சியான முயற்சி குறித்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.விடம் பேசினோம்… “ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கடந்த ஐந்து வருடங்களாக தீபாவளிக்கு புத்தாடை வழங்கி வருகிறேன். அதுபோலத்தான் தற்போதும் தொடர்ச்சியாக 6-வது … Read more

சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை: எடப்பாடி தலைமையில் நாளை உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு…

சென்னை: சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை என்று குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதமர் இருப்பதாகஅறிவித்து உள்ளார். அவருடன் அவரது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட அதிமுகவினர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டம், நாளை காலை சென்னையில் உள் வள்ளுவர் கோட்டத்தில்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுகவில் மொத்தமுள்ள 65 எம்எல்ஏக்களில் 61 பேர் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளனர். 2 பேர் மட்டுமே ஓபிஎஸ்க்கு ஆதரவாக … Read more