கனடாவில் ஒன்றரை வயது குழந்தை சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: 3 பொலிஸார் மீது குற்றச்சாட்டு

கனடாவில் ஒன்றரை வயது குழந்தை சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் 3 பொலிஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து அவர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். 2020-ஆம் ஆண்டு ஒன்ராறியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் மூன்று கனேடிய பொலிஸ் அதிகாரிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் புதன்கிழமை அறிவித்தது. நவம்பர் 26, 2020 அன்று ரொறன்ரொவிற்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் (60 மைல்) … Read more

பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில முதல்வரே நியமனம் செய்யும் மசோதா! கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றம்…

திருவனந்தபுரம்: பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவை கேரள சட்டமன்றம்  நிறைவேற்றியது. ஏற்கனவே தமிழநாட்டில் இதுபோன்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது கேரள அரசு நிறைவேற்றி உள்ளது. கேரள மாநிலத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படும் விஷயத்தில், மாநில முதல்வருக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.  கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்.டி.எஃப் அரசுக்கும் இடையே சில … Read more

திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நியாயமான பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி சென்னை ராயப்பேட்டை திரையரங்கம் சார்பில் 2017-ல் வழக்கு தொடரப்பட்டது.

ஒரே \"பேட்டர்ன்\".. 72 மணி நேரத்தில் அடுத்தடுத்த கொலைகள்! சிட்டிக்குள் \"சீரியல் கில்லர்\"? பதறிய மக்கள்

India oi-Shyamsundar I போபால்: மத்திய பிரதேசத்தில் கடந்த 72 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலைகள் போலீசார் இடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அமெரிக்க படங்களில் காட்டுவது போல இந்தியாவிலும் பல சீரியல் கில்லர்கள் இருந்துள்ளனர். இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் சீரியல் கில்லர்கள் இருந்துள்ளனர். தொடர் கொலைகள்.. ஒரே மாதிரி ஸ்டைலில் கொலை செய்யும் ஆட்கள் என்று பல சீரியல் கொலைகாரர்கள் இந்திய கிரைம் வரலாறு முழுக்க நிறைந்து கிடைக்கிறார்கள். இந்த … Read more

ஆக., மாத ஜிஎஸ்டி வசூல் 1.43 லட்சம் கோடி: 28% அதிகம்| Dinamalar

புதுடில்லி: கடந்த ஆக., மாதம், 1.43 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி ஆக வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டு ஆக.,மாத வசூலை விட 28 சதவீதம் அதிகம் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆக., மாதம் ஜிஎஸ்டி ஆக ரூ.1,43,612 கோடி வசூலாகி உள்ளது. அதில்,சிஜிஎஸ்டி – ரூ. 24,710 கோடிஎஸ்ஜிஎஸ்டி – ரூ.30,951ஐஜிஎஸ்டி – ரூ.77,782 கோடி( இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.42,067 கோடி உட்பட)செஸ் – … Read more

13 நாடுகளில் 2 பெட்ரூம் அபார்ட்மெண்ட் வீட்டின் விலை.. இந்தியாவில் எவ்வளவு?

இந்தியா உள்பட உலகம் முழுவதும் ரியல் எஸ்டேட் பிசினஸ் உச்சத்தில் இருக்கும் நிலையில் வீடுகளின் விலை உயர்ந்து கொண்டே வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இரண்டு பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் வீடுகளின் விலை 13 நாடுகளில் என்னவாக இருக்கும் என்பது குறித்து தற்போது பார்ப்போம் குறிப்பாக இந்தியாவில் இரண்டு பெட்ரூம் வீடு விலை என்ன என்பதையும் பார்ப்போம். ஓரே நாளில் ஸ்பைஸ்ஜெட் CFO, ரெக்கிட் பென்கிசர் CEO ராஜினாமா.. என்ன காரணம் தெரியுமா..? 13. பின்லாந்து … Read more

சேலம்: காங்கிரஸ் துணை மேயரை தூக்க, கவுன்சிலர்களிடம் கையெழுத்து வாங்கிய திமுக மேயர்! – நடந்தது என்ன?

தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக தற்போது தேர்வுசெய்யப்பட்டு முதல்வர் கரங்களில் விருது பெற்ற சேலம் மாநகராட்சியில், அதிகாரிகளுக்கிடையேயும், அரசியல்வாதிகளுக்கு மத்தியிலும் பெரும் குழப்பங்கள் நிலவி வருகின்றன. தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுக்கு சில இடங்களில் மேயர் பதவிகளையும், பெரும்பாலான இடங்களில் துணை மேயர் அந்தஸ்தையும் கொடுத்திருக்கிறது. அந்த வகையில், சேலம் மாநகராட்சியில் துணை மேயர் பதவியை தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு வழங்கியிருக்கிறது தி.மு.க. அதன் மூலம் சேலம் மாநகராட்சியின் துணை மேயராக இருந்து வருபவர் சாரதாதேவி. தி.மு.க-வைச் … Read more

உக்ரைனிய அகதிப்பெண்ணால் வாழ்விழந்த பிரித்தானிய பெண் முதன் முறையாக மௌனம் கலைக்கிறார்

உக்ரைன் அழகிக்காக தன் மனைவியைக் கைவிட்டார் பிரித்தானியர் ஒருவர். அவர் உக்ரைனியர்களுக்கு உதவ இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.  தன் சொந்தப் பிள்ளைகளை கவனித்துகொள்ள முடியாதவர் உக்ரைன் பிள்ளைகளுக்கு உதவப்போகிறாராம் என்கிறார், உக்ரைன் அழகிக்காக தன் கணவரால் கைவிடப்பட்ட பிரித்தானிய பெண். ரஷ்யா போர் தொடுத்ததால் உக்ரைனிலிருந்து உயிர் தப்ப பிரித்தானியாவுக்கு அகதியாக ஓடி வந்தார் சோபியா (Sofiia Karkadym, 22) என்ற அழகான உக்ரைன் இளம்பெண். Bradfordஇல் வாழும் டோனி (Tony Garnett, 29), லோர்னா (Lorna) … Read more

குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக காஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கூண்டோடு விலகல்…

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்,  குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக அம்மாநில முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் 64 பேர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிவிட்டு, குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மூத்த காங்கிரஸ் தலைவரான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைமை மற்றும், ராகுல்காந்தி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்திய நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். ஆனால்,  காங்கிரஸ் கட்சியை … Read more

மாயாஜால் பொழுதுபோக்கு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 2 ஏக்கர் பட்டா ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாயாஜால் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ல் மாயாஜால் நிறுவனத்துக்கு 2 ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்குமாறு தனி நீதிபதி உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் வட்டாச்சியர் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.