தேனி: செப்டிக் டேங்க்கில் விழுந்து 2 சிறுமிகள் பலி; கொதிப்பில் சாலை மறியலில் இறங்கிய மக்கள்!

​தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அமைந்திருக்கிறது பண்ணைப்புரம் பேரூராட்சி. அங்கிருக்கும் பாவலர் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் மகள் நிகிதாஸ்ரீ (7), மேற்குத் தெருவைச் சேர்ந்த ஜெகதீஷ் மகள் சுபஸ்ரீ (6) ஆகியோர் அந்தப் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் ​2-ம் வகுப்பு படித்து வந்தனர்.  செப்டிக் டேங்க் ​இந்த நிலையில், அந்தப் பகுதியிலுள்ள  பெண்கள் பொது சுகாதார வளாகத்தின் ​செப்டிக் டேங்க் மேல் பகுதியில் சிறுமிகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டியின் சிமென்ட் கல் மேல் மூடி … Read more

“அவுரங்கசீப்பை விட அதிக கோயில்களை இடித்தவர் மோடி” மோடியை அர்ச்சித்த விஸ்வநாதர் ஆலய தலைமை பூசாரி…

அவுரங்கசீப்பை விட அதிக கோயில்களை இடித்தவர் என்ற பெயருடன் வரலாற்றில் இடம்பெற்றுள்ளார் நரேந்திர மோடி என்று விஸ்வநாத ஆலய தலைமை பூசாரி தெரிவித்துள்ளார். ஞானவாபி மசூதி சர்ச்சை தொடர்பாக விஸ்வநாதர் ஆலய தலைமை பூஜாரி மற்றும் பரம்பரை அறங்காவலரான ராஜேந்திர பிரசாத் திவாரி உடன் நியூஸ்-கிளிக் என்ற இணைய இதழ் நடத்திய பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை புணரமைக்கவும் அதன் பிரகாரத்தை விரிவுபடுத்தவும் ரூ. 339 கோடி செலவிலான முதல் கட்ட … Read more

நில மோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை; நில மோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மகள், மருமகன் நவீன்குமார் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை: போதைத் தகராறில் நடந்த கொலை! – நெல்லை பட்டதாரிக்கு ஆயுள் தண்டனை

விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வீரனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (39). இவர் கடந்த 25.10.2015-ம் ஆண்டு சென்னை, காரப்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் பாரில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். அப்போது அதே பாருக்கு வந்த இன்னொரு கும்பலுக்கும் பாண்டியன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் உருட்டுக்கட்டையால் தாக்கி பாண்டியன் கொலைசெய்யப்பட்டார். இது குறித்து டாஸ்மார்க் மேற்பார்வையாளர் சிவா என்பவர் கொடுத்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். உதயகுமார் விசாரணையில் … Read more

குளிர்காலமாக இருந்தாலும் சரி, எரிவாயுவை சேமியுங்கள்! ஜேர்மானியர்களுக்கு வலியுறுத்தல்

குளிர் காலநிலை இருந்தபோதிலும் அதிக எரிவாயுவை சேமிக்குமாறு ஜேர்மன் அரசங்கள் நுகர்வோரை வலியுறுத்துகிறது. உக்ரைனில் போரினால் ஏற்பட்ட கொந்தளிப்புகளுக்கு மத்தியில் எரிசக்தியைச் சேமிக்குமாறு ஜேர்மன் அரசாங்கம் நுகர்வோருக்கு பலமுறை அழைப்பு விடுத்துள்ளது. ஜேர்மனியின் உயர்மட்ட எரிசக்தி கட்டுப்பாட்டாளர் (Bundesnetzagentur) வியாழன் அன்று வெளியிட்ட அறிக்கையில், குளிர் காலநிலையைப் பொருட்படுத்தாமல் அதிக எரிவாயுவைச் சேமிக்குமாறு நுகர்வோருக்கு அவசர எச்சரிக்கை விடுத்தது. எரிவாயு பயன்பாத்தில் கட்டுப்பாடுகள் குறித்து பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், நாட்டின் புள்ளிவிவரங்கள் சராசரிக்கும் அதிகமான பயன்பாட்டைக் … Read more

30/09/2022: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,947 பேருக்கு கொரோனா பாதிப்பு… 5,096 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3,947 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 5ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்றுகாலை  8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று புதிதாக மேலும் 3,947 பேர் … Read more

காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலகினார் திக்விஜய் சிங்

காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து திக்விஜய் சிங் விலகியுள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக திருவனந்தபுரம் எம்.பி.சசிதரூர் பேட்டி அளித்தார். நாங்கள் அனைவரும் ஒரே சித்தாந்தத்தை நம்புபவர்கள், கட்சி வலிமையடைய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுவதாக சசிதரூர் கூறினார்.

காஷ்மீர் பஸ் ஸ்டாண்டில்அடுத்தடுத்து 2 குண்டு வெடிப்பு| Dinamalar

உதம்பூர் :ஜம்மு – காஷ்மீர் பஸ் ஸ்டாண்டில், நேற்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்து பஸ்கள் சேதம் அடைந்தன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில், உதம்பூர் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில், நேற்று அதிகாலை ௫:௩௦ மணியளவில் திடீரென குண்டு வெடித்தது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், பஸ்சின் மேற்கூரை மற்றும் பின்பகுதி கடும் சேதமடைந்தது. இதையடுத்து, ஒரு … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூன்றாவது வேட்பாளர் போட்டியிட வாய்ப்பு? ஜி23 குழு தலைவர்கள் நள்ளிரவில் திடீர் ஆலோசனை!

ஜெய்ப்பூர், காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா இல்லத்தில் நேற்றிரவு அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபேந்தர் சிங் ஹூடா, மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி பிருத்விராஜ் சவான், முன்னாள் மத்திய மந்திரி மணிஷ் திவாரி உள்ளிட்ட ஜி23 குழுவை சேர்ந்த தலைவர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். அதனை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா நேற்றிரவு ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் தங்கியுள்ள ஜோத்பூர் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து பேசினார். இந்நிலையில், … Read more

“விலையேற்றம்தான் திமுக-வின் `ஆட்சி' மாடல்!" – சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி காட்டம்

மின்கட்டண உயர்வு, வீட்டுவரி உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் சிவகாசியில் நேற்று கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்துக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். இதில், எதிர்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள், கழக உறுப்பினர்கள் உட்பட பல கலந்துகொண்டனர். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “தி.மு.க ஆட்சிக்கு … Read more