தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு விபத்தில் மாயமான மீனவர் சடலமாக மீட்பு..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு விபத்தில் மாயமான மீனவர் சடலமாக மீட்கப்பட்டார். இனையம் புத்தன் துறை கிராமத்தை சேர்ந்த மீனவர் அமல்ராஜ் உடலை சக மீனவர்கள் மீட்டனர்.

கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நிதி விடுவிப்பு: தமிழகத்திற்கு ரூ.1380 கோடி

புதுடில்லி: கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ரூ.15 ஆயிரம் கோடியை மத்தியஅரச விடுவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: மாநிலங்களுக்கு கிராமப்புற ஊராட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு ரூ.15075 கோடியை விடுவித்துள்ளது. தமிழகத்திற்கான பங்காக ரூ.1380 கோடி வரையில் மத்தியஅரசு ஒதுக்கி உள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களுக்கும் இது போன்று நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன்படி உ.பி.,க்கு ரூ. 3,733கோடி, ம.பி., ரூ.1,472 கோடி, ரூ. குஜராத்திற்கு 1,1181 கோடி என மத்திய அரசு நிதி ஒதுக்கி … Read more

ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல்… கூட்டுறவு சங்கத் தலைவர் கைது – என்ன நடந்தது?

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் கிராமத்தில் மாமன்னர் பூலித்தேவன் 307-வது பிறந்ததின நிகழ்ச்சி நாளை (செப்டம்பர் 1-ம் தேதி) நடக்கிறது. அரசு விழாவாக நடக்கும் இந்த விழாவில் அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். அத்துடன் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். இந்த விழாவில், அ.தி.மு.க சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து ஒருவர் பேசும் … Read more

‘குயிக்-பிக்ஸ்’ புதிய தொழில்நுட்பம் மூலம் சாலைகளை சீரமைக்கிறது சென்னை மாநகராட்சி

மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னையில் புதிய தொழில்நுட்பம் மூலம் சாலைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் மேடாக உள்ளதால் சாலையில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்படுகிறது. தானியங்கி இயந்திரத்தின் மூலம் இந்த பள்ளங்களை சீர் செய்து சாலையமைக்க உதவும் இயந்திரத்தை பயன்படுத்த இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இயந்திரம் முதல் கட்டமாக பள்ளங்களில் வேகமாக காற்றை அடித்து அதில் உள்ள தூசி தும்புகளை அப்புறப்படுத்தும் அடுத்ததாக … Read more

பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு..!!

பாட்னா: பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசினார். தேசிய அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து நிதிஷ்குமாருடன் சந்திரசேகர் ராவ் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எடு “புல்டோசர”.. உண்மையா இருந்தா இடிச்சுத் தள்ளுங்க! மம்தா பானர்ஜி போட்ட ஆர்டர் -ஆடிப்போன அதிகாரிகள்

India oi-Noorul Ahamed Jahaber Ali கொல்கத்தா: தாங்கள் அனைவரும் குத்தகைக்கு வீடு எடுத்து வசித்து வருவதாகவும், அது ஆக்கிரமிப்பு நிலமாக இருந்தால் புல்டோசரை எடுத்துசென்று இடிக்குமாறும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டு உள்ளார். மேற்கு வங்க முதலமைச்சராக உள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பாஜகவினர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். அதேபோல் மேற்கு வங்க மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரிணாமூல் … Read more

ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து உதைத்த அரசு பள்ளி மாணவர்கள்| Dinamalar

தும்கா : ஜார்க்கண்டில், மதிப்பெண் குறைவாக வழங்கியதால் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவர்கள் ஆசிரியர் மற்றும் அலுவலக ஊழியரை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள கோபிகந்தர் கிராமத்தில், பழங்குடியினருக்கான அரசு உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. இங்கு, 200 பேர் தங்கிப் படிக்கின்றனர். ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது.இதில், 11 பேர் தேர்ச்சி அடையவில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், பள்ளியின் கணித ஆசிரியர் சுமன் குமார் … Read more

FIFA உலக கோப்பை: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்த புதிய விசா..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு நிர்வாகம் கத்தார் நாட்டில் நடைபெறும் FIFA உலகக் கோப்பை காண வரும் பயணிகளுக்குப் புதிதாக ஒரு பலமுறை UAE நாட்டிற்குள் நுழையக் கூடிய விசாவை அறிவித்துள்ளது. 22வது FIFA உலகக் கோப்பைப் போட்டி 2022 ஆம் ஆண்டின் 20 நவம்பர் 20 முதல் 18 டிசம்பர் 2022 வரை கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இது அரபு நாடுகளில் நடைபெறும் முதல் உலகக் கோப்பையாகும், மற்றும் 2002 ஆம் ஆண்டுத் தென் … Read more

“ஃபெயிலாக்குவியா… ஃபெயிலாக்குவியா?!" – ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த மாணவர்கள்

மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால் ஆசிரியர்கள் அவர்களை தண்டிப்பது குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் குறைவான மதிப்பெண்கள் கொடுத்த ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தும்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இருக்கும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மதிப்பெண்களைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிகமான மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்திருந்தனர். வைரல் வீடியோ செயல்முறை தேர்வு மதிப்பெண்களை சேர்க்கவில்லை என்று … Read more

யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள் குறித்த சுவாரசிய தகவலை வெளியிட்ட இளையராஜா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா-வின் பிறந்தநாளான இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா-வும் தனது இசையுலக வாரிசின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து செய்தி ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜானி படத்திற்காக 1979 ம் ஆண்டு இசையமைக்கும் பணிக்காக வெளியூர் சென்றிருந்த போது யுவன் பிறந்த செய்தி கிடைத்தது. Happy Birthday, Yuvan @thisisysr @IMMOffl pic.twitter.com/DLQzMPwA9l — Ilaiyaraaja (@ilaiyaraaja) August 31, 2022 குடும்பத்தையும் … Read more