உ.பி.,யில் பல்பு திருடிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்

லக்னோ, :உத்தர பிரதேசத்தில், பூட்டிய கடைக்கு வெளியே இருந்த மின்சார ‘பல்பை’ திருடிய போலீஸ்காரர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரயாக்ராஜ் மாவட்டத்தில் புல்பூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தவர் ராஜேஷ் வர்மா. இவர், அக்., ௬ல் தசரா பண்டிகையையொட்டி, இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தெருவில் நடந்து சென்ற இவர், பூட்டியிருந்த கடைக்கு வெளியே மாட்டப்பட்டிருந்த மின்சார பல்பை பார்த்தார். பின், … Read more

பாரி மன்னனுக்கு வழிகாட்டி; விவசாயிக்கு நண்பன்! கரூர் – திண்டுக்கல்லில் தேவாங்கு சரணாலயம்!

இந்தியாவிலேயே தேவாங்குகள் கரூர், திண்டுக்கல் மாவட்ட எல்லைகளில் பரந்து விரிந்துள்ள காப்புக்காடுகளில் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில், சமூக ஆர்வலர்களின் நெடுங்கால கோரிக்கையை ஏற்று, தமிழ அரசு இந்தப் பகுதியில் தேவாங்கு சரணாலயம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இங்கு 11,806 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்பட இருக்கிறது. தேவாங்கு தேவாங்கு திசை காட்டி! குரங்கு குடும்பத்தைச் சேர்ந்த இரவாடி பாலூட்டி இனம் தேவாங்கு. கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி காலத்தில் இருந்த … Read more

மும்பையில் நடக்கிறது ஐ.நா., கவுன்சில் கூட்டம்| Dinamalar

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் துணைக் குழு கூட்டம், வரும் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடக்கவுள்ளது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் துணைக்குழுவான, பயங்கரவாத தடுப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் வழக்கமாக, அதன் தலைமையகமான அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கும்; மிக அரிதாக, வேறு நாடுகளில் நடக்கும். இந்நிலையில், இந்த குழுவின் கூட்டம் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நம் நாட்டின் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடக்கவுள்ளது. இதில் சமூக வலைதளங்கள் மற்றும் … Read more

16.10.22 ஞாயிற்றுக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | October – 16 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

கர்நாடகாவுக்கு ரூ.2,900 கோடி அபராதம் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு| Dinamalar

புதுடில்லி:கழிவுநீர் மற்றும் திடக்கழிவு பராமரிப்பில் அலட்சியமாக இருப்பதாக கூறி கர்நாடக அரசுக்கு 2,900 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களில் சுற்றுச்சூழல் பராமரிப்பு குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது. கர்நாடக மாநில சுற்றுச்சூழல் பராமரிப்பு குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஆதர்ஷ்குமார் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி பிறப்பித்த உத்தரவு: கர்நாடகாவில் கழிவு நீர் மற்றும் திடக்கழிவு பராமரிப்பில் மாநில அரசு … Read more

ஜம்மு – காஷ்மீர்: 33 ஆண்டுகளுக்கு மீண்டும் செயல்படும் திரையரங்குகள் – மக்களின் வரவேற்பு எப்படி?

பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் இமயமலையின் மடியில் வீற்றிருக்கும் ஜம்மு – காஷ்மீர் தன் இயற்கை அழகிற்காக உள்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அனைவராலும் அறியப்படும் மாநிலமாகும். தற்போது காஷ்மீர் இயல்பு நிலைக்கு வருவதற்குத் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. நாளுக்கு நாள் பயங்கரவாதம் அதிகரித்து சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களே சொத்துக்களை விட்டுவிட்டு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டது. கிளர்ச்சி அதிகரித்ததால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் டிசம்பர் 31, 1989-ல் … Read more

செவிவியர் தற்கொலை போலீசார் விசாரணை| Dinamalar

காரைக்காலில் செவிலியர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காரைக்கால், கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை வீதியை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி புனிதவள்ளி, 44; அரசு மருத்துவமனை செவிலியர். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோட்டுச்சேரி சுகாதார நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த 8ம் தேதி பணியில் இருந்தபோது அங்கு பணிபுரியும் அட்டென்டர் ராஜேஷ் என்பவர் சொல்லிக்கொள்ளாமல் வெளியே சென்றார். இது குறித்து அவரிடம் புனிதவள்ளி, கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே … Read more

இந்தியப் பொருளாதாரத்தைச் சித்திரிக்க மகுடி ஊதும் படம் – ஸ்பெயின் பத்திரிகையால் கிளம்பும் சர்ச்சை!

ஸ்பெயின் நாட்டினுடைய பத்திரிகை La Vanguardia. இதில், கடந்த 9-ம் தேதி இந்தியப் பொருளாதாரம் பற்றிக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இடம்பெற்ற சித்திரிப்பு படம் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மகுடி ஊதும் ஒரு பாம்பாட்டியின் சித்திரிப்பு படத்தை வைத்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பிட்டிருப்பது இந்தியக் கலாச்சாரத்தைக் கேலி செய்யும் விதமாக உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாகப் பேசிய பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன் … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் புத்தாடை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்..!!

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி பண்டிகைக்கு ஒரே வாரமே உள்ளதால், வேண்டிய பொருட்களை மக்கள் ஆர்வமுடன் தேடி தேடி வாங்குகின்றனர்.

உலக பட்டினி நாடுகள் பட்டியல்: மத்திய அரசு எதிர்ப்பு| Dinamalar

புதுடில்லி:உலக பட்டினி குறியீடு அறிக்கையில், இந்தியா கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதற்கு ‘கள நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல், தவறான மற்றும் உரிய முறையில் நடத்தப்படாத ஆய்வு இது’ என, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலகப் பட்டினி குறியீடு வெளியிடப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளான அயர்லாந்தைச் சேர்ந்த ‘கன்சர்ன் வேர்ல்ட்வைட்’ என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த ‘வெல்ட் … Read more