விபத்தில் 200 அடிக்கு சாலையை மூடிய தக்காளிகள்: கலிபோர்னியாவில் பரிதாபம்!

கலிபோர்னிய சாலையில் கொட்டிய 1,50,000 தக்காளிகள். உலகின் தக்காளி ஏற்றுமதியில் பாதியளவு கலிபோர்னியாவில் உற்பத்தி. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் சுமார் 1,50,000க்கும் அதிகமான தக்காளிகள் சாலையில் கொட்டி போக்குவரத்தில் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் கலிபோர்னியா நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் மீது தக்காளியை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதி பிறகு அங்குள்ள செண்டர் மீடியனில் லொறி மீண்டும் மோதி விபத்திற்குள்ளானது. இதில் கலிபோர்னியா நெடுஞ்சாலை முழுவதும் சுமார் … Read more

தமிழ்நாட்டில் இன்று 491 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 76…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 491 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 76, செங்கல்பட்டில் 29, திருவள்ளூரில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 67, திருநெல்வேலி 11, தூத்துக்குடி 8, சேலம் 36, கன்னியாகுமரி 24, திருச்சி 11, விழுப்புரம் 8, ஈரோடு 33, ராணிப்பேட்டை 13, தென்காசி 1, மதுரை 3, திருவண்ணாமலை 11, விருதுநகர் 9, கடலூர் 8, தஞ்சாவூர் 4, திருப்பூர் 16, … Read more

8 முக்கிய உற்பத்தி துறைகளின் நிலை என்ன..?

நடப்பு நிதியாண்டின் 2022-23 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அதாவது முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 13.5 சதவீதம் உயர்ந்துள்ளது எனத் தேசிய புள்ளியியல் அலுவலகம் புதன்கிழமை தரவுகளை வெளியிட்டு உள்ளது. இதேவேளையில் ஒரு வருடத்திற்கு முன்பு 9.9 சதவீதமாக இருந்த இந்தியாவின் 8 முக்கியத் துறை உற்பத்தி பிரிவுகளின் வளர்ச்சி அளவீடுகள், ஜூலை மாதம் 4.5 சதவீதமாகக் குறைந்துள்ளது என மத்திய அரசின் தரவுகள் கூறுகிறது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் Q1ல் 12 -16% … Read more

இயற்கை உரம் பெயரில் களிமண் விற்பனை; தலைமறைவான மோசடி கும்பல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தார் உள்ளிட்ட தாலுகாக்களில் புரட்டாசி ராபி பருவத்தில் சாகுபடி செய்திட விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விளைநிலங்களில் போடப்படும் அடி உரமான டி.ஏ.பி, கடந்த ஆண்டில் தட்டுப்பாடு காரணமாக கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகள், இந்தாண்டு முன்கூட்டியே டி.ஏ.பி மூட்டைகளை அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். விற்பனை செய்யப்பட்ட போலி … Read more

என்னுடைய இயக்குநரை பார்த்ததில் மகிழ்ச்சி…பாரதிராஜாவை சந்தித்த பின் நடிகை ராதிகா நெகிழ்ச்சி!

என் இயக்குநரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி என நடிகை ராதிகா கருத்து. பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றி. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜாவை சந்தித்துவிட்டு என் இயக்குநரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி என நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா, சென்னை அமைந்த கரையில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாரதிராஜாவின் இரண்டாவது படமான … Read more

30வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க செப்-2ந்தேதி கேரளா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: மத்திய உள்துறை சார்பில் திருவனந்தபுரத்தில் செப்.3-ம் தேதி நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில்  பங்கேற்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 2ந்தேதி கேரளா செல்கிறார். அப்போது,  முல்லை பெரியாறு  அணை விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களின் சட்டம் – ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட … Read more

2022-23 காரீப் சந்தைப்பருவ காலத்தில் 518 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு..!!

டெல்லி: 2022-23 காரீப் சந்தைப்பருவ காலத்தில் 518 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு சிறுதானிய கொள்முதலில் கவனம் செலுத்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுரை வழங்கியிருக்கிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு வழக்கு: விரைவில் விசாரணை| Dinamalar

புதுடில்லி : பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, வரும் 6ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், 2019ல் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.இந்நிலையில், ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம், 2005ல் அறிமுகம்செய்யப்பட்டது. ‘இந்த சட்டம் செல்லாது’ என, … Read more

“அவன் என்னை சாக விட்டுவிட்டான்; அவனும் சாக வேண்டும்..!" – அங்கிதா உதிர்த்த கடைசி வார்த்தைகள்

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரைச் சேர்ந்தவர் அங்கிதா (19). இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த ஷாருக் கான் என்பவர் அடிக்கடி காதலின் பேரில் பள்ளிக்குச் செல்லும்போது தொல்லைச் செய்துள்ளார். இது குறித்து அங்கீதா அவரின் தந்தையிடமும் புகார் செய்துள்ளார். இந்த நிலையில், அங்கிதா காதலை மறுத்ததன் காரணமாக ஷாருக் கான் அவருடைய நண்பர் நயீம் அலியாஸ் சோட்டுக்கான் என்பவருடன் சேர்ந்து, கடந்த ஆகஸ்ட் 23-ம் … Read more

“நீங்கள் அரசியலுக்கும் இந்த மாநிலத்துக்கும் சாபக்கேடு” – பி.டி.ஆர். குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமான பதிவு

தீவிரவாதிகள் தாக்குதலில் ஜம்முவில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆகஸ்ட் 13 ம் தேதி மதுரை விமான நிலையம் வந்த தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது நடைபெற இருந்த தாக்குதல் சம்பவம் முறியடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அமைச்சரின் கார் மீது செருப்பு வீசிய மூன்று பெண்கள் உட்பட பாஜக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்பு … Read more