கோஹினூர் வைரம்: `இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான வழிகளை தொடர்ந்து ஆராய்வோம்' – அரிந்தம் பாக்சி

நீண்டகாலமாக இங்கிலாந்து ராணியாக இருந்துவந்த இரண்டாம் எலிசபெத் ராணி, காலமானதைத் தொடர்ந்து, அவருடைய மகன் இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராகியிருக்கிறார். ராணியின் மறைவுக்குப் பிறகு `கோஹினூர்’ வைரம் பொருந்திய கிரீடம் யாருக்குச் செல்லும் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது கோஹினூர் வைரம்தான் உலகின் மதிப்புமிக்க வைரமாகக் கருதப்படுகிறது. இந்த கிரீடத்தின் மையத்தில், 21 கிராம் எடைகொண்ட 105 காரட் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்டிருக்கிறது. கோஹினூர் வைரம் இந்தியாவுக்குச் சொந்தமானது என்றும், ஆங்கிலேயரின் படையெடுப்பின்போது இந்த வைரம் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது … Read more

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 19ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றுமுதல் 19ந்தேதி வரை தமிழ்நாட்டில் லேசானது முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா-வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை … Read more

சென்னை பூவிருந்தவல்லி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற சாம் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்; இளைஞர் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“நித்தியானந்தா மேல் தப்பில்லை..!” – அடித்துச் சொல்லும் சூர்யா சிவா

இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு `கைலாசா’ நாட்டில் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படும் நித்தியானந்தாவிடம், திருச்சி சிவா மகனும் தமிழக பா.ஜ.க ஓபிசி பிரிவு பொதுச்செயலாளருமான சூர்யா சிவா “தர்மரக்சகா” விருது பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் பேருபொருளாக மாறியிருக்கும் அவரிடம் பல கேள்விகளை முன்வைத்தோம்.. “நித்தியானந்தாவிடமிருந்து ‘தர்மரக்சகா’ விருது வாங்கியிருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல..?” “இந்து மதத்தை ஆதரித்து உலக அளவில் கருத்துக்கள் பேசி வருவதால் சுவாமி ஜி இந்த விருதை எனக்குக் கொடுத்துள்ளார். இந்த … Read more

இந்துத்துவா.. இந்தி திணிப்பு.. வெறுப்பு அரசியல் பசிக்கான தீர்வல்ல.! ப.சிதம்பரம்

சென்னை; உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 107வது இடத்தில் உள்ள நிலையில், இந்துத்துவா.. இந்தி திணிப்பு.. வெறுப்பு அரசியல் போன்றவை பசிக்கான தீர்வல்ல. என மோடி அரசை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். உலக பட்டினிக் குறியீடு பட்டியலை ஆண்டு தோறும் அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் வெளியிட்டு வருகின்றன. சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு, … Read more

தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாமில் ஒரு லட்சமாவது பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாமில் ஒரு லட்சமாவது பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்குகிறார். தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்பிக்கிறார்.

நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு விசாரணை 12 வாரம் ஒத்திவைப்பு| Dinamalar

புதுடில்லி :மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ எனப்படும் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுதும் பிளஸ் ௨ முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர, ‘நீட்’ எனப்படும் நாடு தழுவிய நுழைவுத் தேர்வை, இந்திய மருத்துவ கவுன்சில் அறிமுகம் செய்தது. மருத்துவ கவுன்சிலின் இந்த முடிவுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் அஜய் … Read more

வலையில் விழுந்த பெரும் புள்ளிகள்? – ஒடிசா அரசியலை கலங்கடித்த இளம்பெண்; திரைப்படமாகும் `அர்ச்சனா' கதை

ஒடிசாவின் வறட்சி மண்டலம் எனப் பெயர்பெற்ற கலஹண்டி மாவட்டத்தின் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா நாக் (26). ஆனால், இப்போது இறக்குமதி செய்யப்பட்ட அலங்கார பொருட்கள், சொகுசு கார்கள், நான்கு விலை உயர்ந்த நாய்கள் மற்றும் ஒரு வெள்ளை குதிரையுடன் ஒரு அரண்மனை போன்ற வீட்டை வாங்கி குட்டி சாம்ராஜ்யத்தை நடந்தி வந்திருக்கிறார். இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு காவல்துறை விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அர்ச்சனா – ஜகபந்து சந்த் தம்பதி … Read more

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான 13கிராம மக்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்…

சென்னை: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான 13கிராம மக்கள் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்படுவதாக விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. சென்னையின் 2வது பெரிய விமான நிலையமாக, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இதனால், அந்த பகுதியில் உள்ள 13 கிராமங்கள், அவர்களின் விளைநிலங்கள், குளம் குட்டைகள் அகற்றப்பட உள்ளது. இதையடுத்து, கிராமக்கள் அங்கிருந்து வெளியே தமிழகஅரசு உத்தரவிட்டதுடன், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும், அவர்களின் நிலத்துக்கு 3 மடங்கு விலை வழங்கப்படும் … Read more

234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.