ராஜிவ் கொலையாளிகள் மனு விசாரணை ஒத்திவைப்பு| Dinamalar

புதுடில்லி, முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகளான நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர், தங்களை விடுதலை செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. முன்னாள் பிரதமர் ராஜிவ், சென்னை அருகே ஸ்ரீபெரும்புதுாரில் 1991ல் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார். இதில், அவருடன் இருந்த போலீஸ் அதிகாரிகள் உட்பட 21 பேர் பலியாகினர். இந்தப் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த விடுதலைப் புலிகள் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் … Read more

விலைவாசி இப்படி உயர்ந்தால், மக்கள் தாங்க மாட்டார்கள்!

கடந்த செப்டம்பரில் சில்லறைப் பணவீக்க விகிதம் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.4 சதவிகிதமாக உயர்ந்திருப்பதைப் பார்த்தால், நமக்கு பெருங்கவலையாக இருக்கிறது. காரணம், விலைவாசி உயர்வானது மற்ற பொருள்களைக் காட்டிலும், உணவுப் பொருள்களுக்கான விலைதான் கடுமையாக அதிகரித்திருக்கிறது.பொதுவான பொருள்களுக்கான சில்லறைப் பணவீக்க விகிதம் 7.4 சதவிகித மாக உயர்ந்திருக்கும் நிலையில், அதே சில்லறைப் பணவீக்க விகிதம் உணவுப் பொருள்கள் என்று வரும்போது 8.6% அளவுக்கு உயர்ந்துள்ளது. இது கடந்த 22 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகம் … Read more

அக்-15: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஞானவாபி மசூதி விவகாரம் ஹிந்து அமைப்பு மனு தள்ளுபடி| Dinamalar

வாரணாசி :உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்துக்கு, ‘கார்பன் டேட்டிங்’ எனப்படும் கால வயது ஆய்வு செய்யக்கோரிய ஹிந்து அமைப்பின் மனுவை வாரணாசி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு வாரணாசி நகரில் உள்ள ஞானவாபி மசூதியின் பக்கவாட்டு சுவற்றில் உள்ள ஹிந்து தெய்வங்களின் உருவங்களை வழிபட அனுமதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து ஞானவாபி மசூதியில் ஆய்வு … Read more

“நான் நேர்மையாக இருக்க விரும்புகிறேன்” புதிய நிதியமைச்சரை அறிவித்த பின் பிரதமர் லிஸ் ட்ரஸ் பேச்சு!

எனது நல்ல நண்பர் குவாஸ் குவார்டெங்கை இழந்ததற்கு வருந்துகிறேன். பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சராக ஜெர்மி ஹன்ட் நியமனம். நான் நேர்மையாக இருக்க விரும்புகிறேன், ஆனால் இது கடினமானது என பிரித்தானியாவின் நிதியமைச்சர் குவாசி குவார்டெங்கை பதவி நீக்கம் செய்த பிறகு பிரதமர் லிஸ் டிரஸ் கருத்து தெரிவித்துள்ளார்.  பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, நிதி அமைச்சர் குவாசி குவார்டெங்க (Kwasi Kwarteng) அமெரிக்காவில் நடைபெற்ற IMF கூட்டங்களில் இருந்து நாடு திரும்பிய உடன், அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்தார். … Read more

சாமியார் குர்மீத் ராம் ரஹிமுக்கு 40 நாள் பரோல்| Dinamalar

சண்டிகர் : ஆசிரம பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் ஹரியானா சிறையில் உள்ள ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பின் தலைவர், குர்மீத் ராம் ரஹிம் சிங், ஒரு மாதம் பரோலில் வெளியே வந்துள்ளார். ஹரியானாவில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் , சிர்ஸாவில் உள்ள தனது ஆசிரமத்தில்இரு இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பஞ்ச்கோலா சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் 2017-ம் ஆண்டு 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து … Read more

நோட்டோவுடனான நேரடி மோதல்…இதற்கு தான் வழிவகுக்கும்: ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரிக்கை

அணிதிரட்டல் இன்னும் இரண்டு வாரங்களில் முடிந்துவிடும் புடின் அறிவிப்பு. நோட்டோவுடனான நேரடி மோதல் உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும் புடின் எச்சரிக்கை. உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். கசாக் தலைநகர் அஸ்தானாவில் பரந்த அளவிலான உரையில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் ராணுவ அணிதிரட்டல் இன்னும் இரண்டு வாரங்களில் முடிந்துவிடும் என்று தெரிவித்தார். அப்போது நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாயை பற்றி பேசிய ஜனாதிபதி … Read more

ஏழுமலையான் தரிசனத்திற்கு 30 மணிநேரம் காத்திருப்பு| Dinamalar

திருப்பதி :திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 30 மணிநேரத்துக்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருமலையில் கடந்த நான்கு நாட்களாக அதிகமாக இருந்த பக்தர்களின் கூட்டம் தற்போது சற்று குறைந்து காணப்படுகிறது. எனவே, நேற்று காலை 32 காத்திருப்பு அறைகளை கடந்து சீலாதோரணம் பகுதி வரையில் வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அதனால் தர்மதரிசனத்திற்கு 30 மணிநேரமும், விரைவு தரிசனத்திற்கு 5 முதல் 6 மணிநேரமும் தேவைப்படுகிறது.காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு … Read more

ஹரி மற்றும் மேகன் மார்க்கல் பிள்ளைகள் பட்டங்களை பெறுவார்களா? மன்னர் சார்லஸிடம் இளவரசர் கோரிக்கை

பேரக்குழந்தைகளின் பட்டங்கள் தொடர்பாக இளவரசர் ஹரியுடன் மன்னர் சார்லஸ் விவாதித்துள்ளார். இளவரசர் ஹரியின் கோரிக்கை இன்னும் சார்லஸ் மன்னரால் தீர்க்கப்படாமல் உள்ளது. ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டின் அரச பட்டங்கள் குறித்து மன்னர் சார்லஸிடம் இளவரசர் ஹரி வைத்த கோரிக்கைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்கு பிறகு இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் பிள்ளைகள் பட்டங்களை பெறுவார்களா என்பது அரச வட்டாரங்களில் மிக முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது. photo … Read more

தேர்தல் பத்திர திட்டத்தில் முறைகேடு இல்லை திட்டவட்டம் ! உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்| Dinamalar

புதுடில்லி ‘தேர்தல் பத்திர திட்டம் முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படுகிறது. இதன் வாயிலாக, கறுப்பு பணமோ, கணக்கில் வராத பணமோ மாற்றப்பட வாய்ப்பே இல்லை’ என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படை தன்மையை கொண்டு வருவதற்காக, தேர்தல் பத்திரங்கள் விற்பனை திட்டம், 2018ல் கொண்டு வரப்பட்டது. இதில், தனி நபரோ அல்லது நிறுவனமோ தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்க, அக்கட்சியின் தேர்தல் பத்திரத்தை பணம் கொடுத்து … Read more