விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக தரையிறக்கும் சோதனை: ககன்யான் திட்டத்தில் சாதனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, குறைந்த உயரத்தில் இருந்து வீரர்களை பாதுகாப்பாக தரையிறக்கும் மோட்டார் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தி சாதித்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ‘இஸ்ரோ’ ஈடுபட்டுள்ளது. இதற்கு பயன்படுத்தப்பட உள்ள, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் பொருத்தப்படவுள்ள, ‘பூஸ்டர்’ சமீபத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, விண்வெளி வீரர்கள் குழு … Read more

6 லட்சம் கோடியை தொட்ட ஐசிஐசிஐ வங்கி.. எலைட் கிளப்-ல் சேர்ந்தாச்சு..!

ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் ரூ.866.15-ஐ எட்டிய நிலையில் இதன் சந்தை மதிப்பு முதல் முறையாக 6.01 லட்சம் கோடி ரூபாயை தொட்டு உள்ளது. 2022 ஆம் ஆண்டில் இதுவரை ஐசிஐசிஐ வங்கி பங்குகள் கிட்டத்தட்ட 17% உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் அதன் முந்தைய முடிவிலிருந்து 1.27 சதவீதம் அதிகரித்து 859.30 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. 25 ஆண்டுகளாக Parle-G பிஸ்கட் விலை ரூ.5 தான். … Read more

இந்தியாவைத் தவிர ஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினம் கொண்டாடும் பிற நாடுகள்! – ஒரு பார்வை

இந்தியாவைப்போன்றே, இன்னும் சில நாடுகள் பிரிட்டிஷ், பிரெஞ்சு ஆட்சியாளர்களிடமிருந்து ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் பெற்றிருக்கின்றன. இந்தியா, காங்கோ குடியரசு, தென் கொரியா, வட கொரியா, பஹ்ரைன், லிச்சென்ஸ்டைன் என மொத்தம் 6 நாடுகள் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன. பஹ்ரைன் பஹ்ரைன்: தில்முன் நாகரிகத்தின் பண்டைய நிலமாக அறியப்படும் பஹ்ரைன், ஐ.நா சபை நடத்திய பஹ்ரைன் மக்கள்தொகை ஆய்வின்படி, பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களிடமிருந்து 1971, ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் பெற்றது. காங்கோ காங்கோ குடியரசு: … Read more

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ரூ.22 ஆயிரம் கோடி செலவு! ஆனால், வருமானம்….?

சென்னை:  சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த 22 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், வருவாய் ரூ. 200 கோடி மட்டுமே என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கடுமையான நஷ்டத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு வருமானத்தை பெருக்க பல்வேறு நடவடிக்கைளை முன்னெடுத்து வருகிறது. சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தற்போது முதல் வழித்தடமான  நீல வழித்தடம் (விம்கோ … Read more

பாஜகவை ஓர் ஆக்டோபஸ் என கலைஞர் கூறியது உண்மை: முத்தரசன்…

சென்னை: பாஜகவை ஓர் ஆக்டோபஸ் என கலைஞர் கூறியது பெரிய உண்மை என்பது நிரூபணமாகியுள்ளது என முத்தரசன் தெரிவித்தார். பாஜகவுக்கு மதச்சார்பின்மை கொள்கையில் உடன்பாடு இல்லை எனவும் மதச்சார்பின்மைக்கு நேர்மாறாக பாஜக செயல்படும் என அவர் கூறினார்.

வில்லியனுார் அருகேவாலிபருக்கு சரமாரி வெட்டு| Dinamalar

வில்லியனுார், வில்லியனுார் அருகே வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.அரியூர் பாரதி நகரை சேர்ந்தவர் பெருமாள்(22), முடி திருத்தும் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ஜடாசதீஷ். இருவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள ஓட்டல் அருகே பெருமாள் அமர்ந்திருந்தார். அங்கு வந்த ஜடா சதீஷ், சகோதரர் சூர்யா, கூட்டாளிகள் சதீஷ், அன்பரசன் ஆகியோர், மிளகாய் பொடியை பெருமாள் முகத்தில் வீசி, சரமாரியாக தாக்கி கத்தியால் … Read more

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முக்கிய மாற்றம்.. யாருக்கெல்லாம் பாதிப்பு..!

2015-ம் ஆண்டு அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் விளைவாகத் தற்போது வருமான வரி செலுத்துவோர் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தைத் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டாம் என நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட புதிய உத்தரவு அக்டோபர் 1, 2022 முதல் அமலுக்கு வரும். 6 நாள் உயர்வுக்கு முற்றுப்புள்ளி.. 52 புள்ளிகள் … Read more

நமது லைஃப் ஸ்டைல் Inflation சரியாக உள்ளதா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் அநேக இந்தியர்களின் தற்போதைய பேசுபொருள் தேசத்தின் பணவீக்கம் பற்றித் தான். தேசத்தின் மட்டும் அல்ல கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்துமே தற்போது பணவீக்கத்தைக் கண்டு அஞ்சி வருகின்றது. இத்தகைய சூழலில் ஒரு சராசரி மனிதனாக நாம் என்ன செய்து விட முடியும். நம்மால் … Read more

மாடுகள் கடத்தல் வழக்கில் மம்தாவின் நெருங்கிய உதவியாளர் அனுப்ரதா கைது!

கொல்கத்தா: மாடுகளை கடத்திய வழக்கில், மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு நெருக்கமான அனுப்ரதா மொண்டலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், மம்தாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பாஜக அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளவர் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மத்தியஅரசின் பல்வேறு திட்டங்களை எதிர்த்து, அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். எந்தவொரு விஷயத்திலும் தன்னையே முன்னிலைப்படுத்திக்கொள்ளும் மனோபாவம் கொண்டவர். மறைந்த ஜெயலலிதாவை போன்று, தடாலடி அரசியலுக்கு சொந்தமானவர். சமீப காலமாக … Read more

சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே

சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். சிங்கப்பூரில் தங்கியிருந்த நிலையில், தாய்லாந்து செல்ல அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மக்களின் வரலாறு காணாத போராட்டத்தில் அங்கிருந்து தப்பிய அவர், மாலத்தீவுகள் நாட்டுக்கு தப்பினார்.