ரெயில்வே வாரிய தலைவர் சதீஷ் குமாரின் பதவி காலம் ஓராண்டு நீட்டிப்பு

புதுடெல்லி, ரெயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வருபவர் சதீஷ் குமார். அவருடைய பதவி காலம் 2025, ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், அவருக்கு ஒரு வருட பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்திய ரெயில்வே துறையில் 1988-ம் ஆண்டு மார்ச்சில் பணியை தொடங்கிய அவர், அத்துறையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வருகிறார். இதுபற்றி அரசு வெளியிட்ட உத்தரவில், சதீசுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதற்கான ஒப்புதலை நியமனங்கள் குழு வழங்கியுள்ளது. … Read more

UK: நாடு முழுவதும் பாகிஸ்தான் பாலியல் வன்கொடுமை கும்பல் அட்டூழியம் – சுயேச்சை எம்.பி குற்றச்சாட்டு!

ஐக்கிய ராச்சியத்தில் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் தனிப்பட்ட முறையில் நடத்திய விசாரணையில் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை நடத்தும் கும்பல்கள் கண்டறியப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 85 அதிகாரிகள் இதுபோன்ற கும்பல்களை அடையாளம் கண்டுள்ளதாக கூறுகிறார் ரூபர்ட் லோவ். இந்த கும்பல்களால் லட்சக்கணக்கான உயிர்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் ரூபர்ட். இதில் 1960களில் நடந்த சில வழக்குகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. Our Rape Gang Inquiry has today released research detailing eighty-five local authorities in … Read more

‘மூளையை தின்னும் அமீபா’ குறித்து பதற்றப்பட வேண்டிய அளவுக்கு பயம் இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ‘மூளையை தின்னும் அமீபா’ குறித்து பதற்றப்பட வேண்டிய அளவுக்கு பயம் இல்லை என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நீர்மூலம் பரவும் இந்த யோய் கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கண்டறியப்பட்டு உள்ளது.  தற்போது 18 பேருக்கு மூளையை தின்னும் அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த … Read more

பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் ஏழைகளின் பெயர்கள் நீக்கம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பாட்னா, பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்குகள் திருட முயற்சி நடப்பதாக நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில், பீகாரில் ராகுல்காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக சீதாமர்ஹியில் நடந்த பேரணியில் ராகுல்காந்தி உரையாற்றியதாவது; “பீகாரின் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏழைகள் மற்றும் சமூக ரீதியாக பலவீனமான பிரிவைச் சேர்ந்த 65 லட்சம் பேரின் பெயர்கள் … Read more

Driver Amma: துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஓட்டி அசத்தும் 72 வயது கேரளப் பெண்மணி; யார் இந்த மணியம்மா?

72 வயது இந்தியப் பெண்மணி ஒருவர் துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை ஓட்டும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. வைரலாகும் வீடியோவின் படி, கேரளா சேலை அணிந்து சொகுசு காரை ஓட்டுகிறார் அந்தப் பெண்மணி. தனது சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை அந்த வீடியோவில் காண்பிக்கிறார். பின்னர் உயர் ரக வாகனத்தை அவர் இயக்குகிறார். மணியம்மா என்ற அழைக்கப்படும் இவர், இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். மணியம்மா அவரின் இன்ஸ்டாகிராம் பயோவின் படி, … Read more

எங்க ஊரு சொர்க்க பூமிங்க… .இந்தத் தண்ணீர்ல குளிச்சுப் பாருங்க…! டிரெண்டிங்கான கூமாபட்டிக்கு தமிழ்நாடு அரசு ரூ.10கோடி ஒதுக்கீடு…

சென்னை; எங்க ஊரு சொர்க்க பூமிங்க”….இந்தத் தண்ணீர்ல குளிச்சுப் பாருங்க…!   என சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கான கூமாபட்டி வளர்ச்சிக்கு  தமிழ்நாடு அரசு ரூ.10கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில்தான்  இயற்கை கொஞ்சும் இடத்தில்,  இந்த கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த இடமானது,   பிளவக்கல் பெரியார் அணை மற்றும் கோயிலாறு அணையுடன் மலையடிவாரத்தில் இந்தக் கிராமம் அமைந்திருப்பதால், கண்ணுக்கு விருந்தளிக்கும் இயற்கைக் காட்சிகளைக் கொண்டுள்ளது. … Read more

வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும்: கெஜ்ரிவால்

புதுடெல்லி, இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகளின் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா வரி விதிப்பால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மாற்று வழியை … Read more

கூலி படத்துக்கு யு/ஏ சான்று கிடையாது! மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்…

சென்னை: ரஜினி நடித்துள்ள கூலி படத்துக்கு யு/ஏ சான்று கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம்,  தள்ளுபடி செய்தது. ‘கூலி’ படத்துக்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில்,  ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரி, படத்தை தயாரித்த நிறுவனம் சார்பில்   சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவை  தள்ளுபடி செய்தது. இதுதொடர்பாக,  எம்.ஜோதிபாசு என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனத்தின் சாா்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கூலி’ திரைப்படம் … Read more

சண்டிகரில் 50 கி.மீ தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் தவிப்பு

ஸ்ரீநகர், வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அங்கு பெரும்பாலான இடங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முக்கிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. சண்டிகர் – குல்லு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 50 கிலோமீட்டர் தொலைவுக்கு … Read more