தஞ்சை மாணவி தற்கொலை :  குழந்தையைத்  தற்கொலைக்குத் தூண்டியதாக சிபிஐ வழக்குப் பதிவு

சென்னை சிபிஐ தஞ்சை மாணவி தற்கொலை குறித்து குழந்தைகளைத் தற்கொலைக்குத் தூண்டியதாகா வழக்குப்  பதிந்துள்ளது, தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகபாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், முதல் மனைவிக்குப் பிறந்த மகளைத் தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மைகேல்பட்டியில் உள்ள தனியார்ப் பள்ளியொன்றில் சில ஆண்டுகளுக்கு முன்னர் 8-ஆம் வகுப்பில் சேர்த்துள்ளார் அந்த மாணவி பள்ளியின் அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி படித்துள்ளார்.  அவர் இந்த … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: பணம் வழங்குவதை தடுக்க கூடுதலாக 45 பறக்கும் படைகள் அமைப்பு

சென்னை: சென்னை நகர்புற உள்ளாட்சித் தேர்தல் கண்காணிப்பு பணி தொடர்பாக,  மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெருநகர சென்னை மாநகராட்சி, 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளுக்கு  உட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒரு மண்டலத்திற்கு மூன்று குழுக்கள் வீதம் 45 பறக்கும் படை குழுக்கள் ஏற்கனவே அமைக்கப் பட்டுள்ளன.  ஆவணங்களின்றி தனிநபர் ஒருவர் ரொக்கமாக ரூ.50,000/-க்கு … Read more

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் டி20 டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

மும்பை: இந்தியா – இலங்கை அணிகள் மோதும் டி20 டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களுக்கான புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. முதல் டி20 – லக்னோ, 2வது மற்றும் 3வது டி20 தரம்சாலாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் – மொகாலி, 2வது டெஸ்ட் – பெங்களூருவில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சுபகிருது பஞ்சாங்கம் வெளியீட்டு விழா| Dinamalar

திருநள்ளாறு :காரைக்கால் திருநள்ளாறில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் சுபகிருது வருட பஞ்சாங்கம் வெளியீட்டு விழா நடந்தது.மாநில செயலாளர் சுவாமி நாத சிவாச்சாரியார், வார, நட்சத்திர, யோக, கரணம் உள்ளிட்டவற்றின் சிறப்பு குறித்து பேசினார். காரைக்கால் மாவட்டத்தலைவர் மணிகண்டன் சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் சுபகிருது வருட பஞ்சாங்கத்தை வெளியிட்டு கோச்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சார பலன்கள், பரிகாரங்கள் குறித்து பேசினார்.பஞ்சாங்கத்தின் முதல் பிரதியை கன்னட நடிகர் சிவராஜ்குமார் … Read more

யானைக்கும் அடி சறுக்கும்.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வுக்கு நஷ்டத்தைக் கொடுக்கும் முதலீடு..!

இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய முதலீட்டுத் தலையாக இருக்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வுக்குத் தொட்டது எல்லாம் தங்கமாக மாறும் ராசி உள்ளது என நினைக்கும் அனைவரும் தெரிந்துகொள் வேண்டியது யானைக்கும் அடி சறுக்கும் என்பது தான். இந்திய முதலீட்டுச் சந்தையில் பல துறையில் பல நிறுவனத்தில் முதலீடு செய்து 5.9 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து மதிப்பைக் கொண்டு இருக்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வுக்கு ஒரு நிறுவனம் பெரும் நஷ்டத்தைக் கொடுத்து வருகிறது. 10 நிமிடத்தில் ரூ.186 கோடி சம்பாதித்த ராகேஷ் … Read more

இன்றைய ராசி பலன் | 16/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

பூக்கள் பூக்கவில்லை… கடும் கோபத்தில் கிம் ஜாங் உன் செய்த கொடுஞ்செயல்

தமது தந்தையின் பிறந்தநாள் விழா மேடையை அலங்கரிக்க பூக்கள் தயாராகாத நிலையில், கடும் கோபத்தில் தோட்டக்காரர்களில் சிலரை சித்ரவதை முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளார் ஜனாதிபதி கிம் ஜாங் உன். வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தமது தந்தை மற்றும் தாத்தாவின் பிறந்தநாளை ஆண்டு தோறும் மிக விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதற்காகவே சிறப்பு பூக்களையும் தமது தோட்டத்தில் பூக்க வைத்து, மேடையில் அலங்காரத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார். வட கொரியாவின் முள்ளாள் தலைவர்களாக இருவருக்கும் அன்றைய தினம் … Read more

போனி கபூர் கம்பெனிக்காக மேலும் ஒரு படத்திற்கு அஜித் ஒப்பந்தம்

AK61 – அஜித் குமாரின் 61 வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. போனி கபூர் தயாரிக்க இருக்கும் இந்த படத்தை எச். வினோத் இயக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள போனி கபூர் AK61 படப்பிடிப்பிற்கு ஆயத்தமாவதாக குறிப்பிட்டுள்ளார். Prep mode on #AK61 pic.twitter.com/UOqGUrZwgK — Boney Kapoor (@BoneyKapoor) February 15, 2022 ஏற்கனவே, நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை … Read more

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களை சேர்ந்த 12,309 பயனாளர்களுக்கு ரூ.34 கோடி நிவாரணம்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் உயிரிழந்த, காப்பீடு செய்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு உதவ கொரோனா நிவாரண திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இஎஸ்ஐசி) செயல்படுத்தி வருகிறது.  இத்திட்டம்  2022 மார்ச் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும்.  ஆனால் தற்போதுள்ள அனைத்தும் பயனாளிகளுக்கும் பயன்கள் தொடரும்.  இத்திட்டத்தின் கீழ், காப்பீடு செய்த இறந்த தொழிலாளியின் சராசரி சம்பளத்தில், 90 சதவீதம் தகுதியான வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.  கொரேனாவால் உயிரிழந்த தொழிலாளர்களின் … Read more

ஜி20 அமைப்புக்கு செயலகம் உருவாக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

டெல்லி : ஜி20 அமைப்புக்கு செயலகம் உருவாக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்  அளிக்கப்பட்டுள்ளது. ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை நடப்பாண்டின் டிச.1 முதல் நவ.30, 2023 வரை இந்தியா ஏற்கவுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.