ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது | Automobile Tamilan

2025 டிவிஎஸ் மோட்டோசோல் அரங்கில் புதிய ரோனின் கஸ்மைஸ்டு செய்யப்பட்ட அகோண்டா எடிசன் உட்பட பல்வேறு கஸ்டமைஸ் கான்செப்ட்கள், அப்பாச்சி 20வது ஆண்டு விழா RTX பதிப்பு ஆகியவை முதல் நாளில் வெளியாகியுள்ளது. கோவாவின் புகழ்பெற்ற அகோண்டா கடற்கரையின் அமைதியையும் அழகையும் பிரதிபலிக்கும் வகையில் கஸ்டமைஸ்டு ரோனின் வடிவமைக்கப்பட்டுள்ளதே இதன் தனிச் சிறப்பாகும். TVS Ronin Agonda விற்பனையில் உள்ள அடிப்படை ரோனின் மாடலை தழுவியதாக 225.9cc என்ஜின் பயன்படுத்தப்பட்டு 20.4hp மற்றும் 19.93Nm வெளிப்படுத்தும் நிலையில் … Read more

“மகள், கணவரை கவனிப்பதில் பிஸி, படங்களில் நடிக்கவில்லை என்பதற்காக கவலையில்லை'' – ஐஸ்வர்யா ராய்

ரெட் சீ திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. தனது குடும்பம், குழந்தை என இருக்கிறார் ஆனால் பொதுநிகழ்ச்சிகள், சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிகள், பேஷன் ஷோக்களில் தவறாமல் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் ரெட் சீ திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டுள்ளார். அவர் அங்கு பிரபல … Read more

கார்த்திகை தீபத்தின் புனித தருணம் திருடப்பட்டுவிட்டது – தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு நீதி கிடைக்கவில்லை! பவன் கல்யாண்

சென்னை:  திமுக அரசு, நீதிமன்ற தீர்ப்பை மீறி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், மதுரையில் இந்துக்களுக்கு நீதி கிடைக்கவில்லை”, கார்த்திகை தீபத்தின் புனித தருணம்  திருடப்பட்டுவிட்டது  என ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் கண்டனம் தெரிவித்து உள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பே காவல்துறையை குவித்து, தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்திய தமிழநாடு அரசின் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளதுடன், தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் இரு முறை உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாக திமுக  அரசின்  ஆவணம் இந்து … Read more

காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கலபுரகி டவுனில் உள்ள பல்கலைக்கழக போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சுனிதா என்ற பெண், வேலைக்கு செல்வதற்காக கடந்த மாதம் 22-ந் தேதி அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் சென்ற கல்லப்பாவும், சந்தோசும் லிப்ட் கொடுப்பது போல் நடித்து ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆட்டோவை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி சுனிதா அணிந்திருந்த தங்க தாலியை கொள்ளையடித்து சென்றனர். … Read more

“இந்தியா – ரஷ்யா உறவு 'துருவ நட்சத்திரத்தை' போன்றது'' – மோடி பெருமிதம்

இந்திய பயணம்‌‌ முடிந்து ரஷ்ய அதிபர்‌ புதின் ரஷ்யாவிற்கு சென்றுவிட்டார். மோடி பேச்சு இந்தியா – ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஐதராபாத் இல்லத்தில் நேற்று இந்திய பிரதமர்‌ மோடி பேசியதாவது, “கடந்த எட்டு தசாப்தங்களில், உலகம் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளது. மனிதநேயம் பல சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்துள்ளது. ஆனால், எப்போதும் இந்தியா – ரஷ்யா உறவு என்பது துருவ நட்சத்திரம் போல, நிலையோடு இருந்துள்ளது. எரிசக்தி பாதுகாப்பு என்பது இந்தியா – ரஷ்யா கூட்டாண்மையின் … Read more

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்! பள்ளி கல்வித்துறை அறிக்கையால் பெற்றோர்கள் ஆசிரியர்கள் குழப்பம்…

சென்னை: சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில்,  பெற்றோர்கள், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மழலையர் பள்ளிகள், தொடக்க பள்ளிகள் செயல்படுமா என்பது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுவாக இதுபோன்ற காலக்கட்டங்களில், மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் மட்டுமே செயல்படும் என்றும்,  மழலையர் பள்ளிகள், தொடக்க பள்ளிகளுக்கு   விடுமுறை விடப்பட்டு வருவதால், இன்றும் விடுமுறையா என பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். டிட்வா புயல் காரணமாக, பெய்து வந்த … Read more

Netflix: BatMan முதல் Ben10 வரை – வார்னர் ப்ரோஸை வாங்கும் நெட்ஃப்ளிக்ஸ்; ரூ.6 லட்சம் கோடி ஒப்பந்தம்!

திரைத்துறை வரலாற்றின் மிகப் பெரிய சாம்ராஜ்யங்களில் ஒன்றான வார்னர் ப்ரோஸ் டிஸ்கவரியின் (Warner Bros Discovery) தொலைக்காட்சி மற்றும் திரைப்பட ஸ்டுடியோக்களை, அதன் ஸ்ட்ரீமிங் பிரிவுடன் சேர்த்து 72 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்) வாங்க நெட்ஃபிளிக்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது. Warner Bros இந்த ஒப்பந்தத்தின் மூலம் திரைப்பட, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு முறையை முற்றிலுமாக மாற்றியமைத்த நியூ-ஜென் ஸ்ட்ரீமிங் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் ஹாலிவுட்டின் பழமையான ஸ்டூடியோக்கள் வருவது கவனிக்கப்படுகிறது. … Read more

ஸ்ரீபெரும்புதூர் அருகே கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்பட்டுள்ள  கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின்  திறந்து வைத்தார். இந்த தொழிற்சாலை மூலம், 830 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கம், சிப்காட் தொழிற்பூங்காவில் இன்று (டிச. 5) பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவியுள்ள உற்பத்தி தொழிற்சாலை இன்று திறக்கப்பட்டது. ‘ ரூ.1003 கோடி முதலீட்டில் 830 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்  இந்த தொழிற்சாலையில்,  கண்ணாடி உற்பத்தி  செய்யப்பட உள்ளது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கார்னிங் … Read more

திருப்பரங்குன்றம்: "சட்டப்போராட்டம் நடத்தியும் சடங்கை செய்ய முடியவில்லை" – பவன் கல்யாண் வருத்தம்!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவும் இருக்கும் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபம் விழாவில் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபம் – திருப்பரங்குன்றம் ஆனால் மலையின் உச்சியில் இருக்கக் கூடிய தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்தது திமுக அரசு. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றம் வரை விவாதிக்கப்பட்டது. … Read more

திருப்பரங்குன்றம் சர்ச்சை: சிஐஎஸ்எஃப் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாது குறித்து,  சிஐஎஸ்எஃப், தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதி மன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணை வரும்12ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றக் கிளையில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் தொடங்கியது. இன்றைய விசாரணைக்கு, அப்போது மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் நேரில் ஆஜராகவில்லை என மனுதாரர் தரப்பில் முறையீடு … Read more