ஆப்கானிஸ்தான் டு டெல்லி: 94 நிமிடம் விமானத்தின் சக்கரத்தில் பயணித்த 13 வயது சிறுவன் – என்ன நடந்தது?

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள குண்டுஸ் என்ற இடத்தைச் சேர்ந்த 13 சிறுவன் ஈரானுக்கு பயணம் செய்ய நினைத்து, யாருக்கும் தெரியாமல் காபூல் விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கே பயணிகளுடன் கலந்து, விமானம் அருகே சென்றதும் அடியில் உள்ள லேண்டிங் கியர் இருக்கும் அறையில் பதுங்கியுள்ளார். விமானமும் பறக்கத்தொடங்கியுள்ளது. ஆனால் அது அவர் எண்ணியதுபோல தெஹ்ரானுக்கு செல்லும் விமானம் அல்ல, டெல்லிக்கு வருவது! ஆப்கானிஸ்தான் டூ டெல்லி: 94 நிமிடம் விமானத்தின் சக்கரத்தில பயணித்த 13 வயது சிறுவன் … Read more

பள்ளி அருகே போதைபொருள் விற்பனை – ஆய்வுக்கு சென்ற அதிகாரிக்கு அடிஉதை! இது திண்டுக்கல் சம்பவம்…

திண்டுக்கல்: பள்ளிக்கு அருகிலேயே குட்கா, பான்மசாலா உள்பட போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில், அந்த பகுதியில் சோதனை நடத்தச் சென்ற அதிகாரிகள்மீது, போதை பொருள் விற்பனை கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த சம்பவம் திண்டுக்கல்லில் அரங்கேறி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி ஜவஹர் நகர்ப் பகுதியில் செயல்கபட்டு வரும் அரசு பள்ளி அருகே  தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுவதாகவும், இதை வாங்கி … Read more

இந்தியா மீது படையெடுத்தவர்களால் இந்து மதத்தினரின் மக்கள் தொகை குறைந்தது; யோகி ஆதித்யநாத்

லக்னோ, தன்னிறைவு இந்தியா மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பாக நாடு தழுவிய அளவில் பாஜக சார்பில் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசத்தின் லக்னோவில் இந்த கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவரும் உ.பி. முதல்-மந்திரியுமான யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது, கி.பி. 1100ம் ஆண்டுவாக்கில் இஸ்லாம் இந்தியாவை தாக்கியபோது இந்து மதத்தினரின் மக்கள் தொகை 60 கோடியாக இருந்தது. ஆனால், 1947ம் ஆண்டு … Read more

தமிழ்நாட்டை மோசமான நிதிச்சீரழிவுக்கு உள்ளாக்கி உள்ளது திமுக அரசு! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை:  நடப்பாண்டில் ரூ.1,06,251 கோடியை கடனாக வாங்கி,  மோசமான நிதிச்சீரழிவுக்கு உள்ளாக்கிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ கூறியுள்ளார். விடியல் ஆட்சி தரப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, நிதி நிர்வாகத்தில் தமிழகத்தை 27 ஆம் இடத்திற்கு தள்ளியிருக்கிறது என்றும் தமிழ்நாட்டை இவ்வளவு மோசமான நிதிச்சீரழிவுக்கு உள்ளாக்கிய திமுக அரசுக்கு மக்கள் மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவார்கள் … Read more

வளர்ப்பு நாயின் நகக் கீறல்; ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு

அகமதாபாத் , குஜராத் மாநிலம் அகமதாபாத் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் காவல் ஆய்வாளராக வன்ராஜ் சிங் மஞ்சரியா கடந்த 25 வருடங்களாக காவல் துறையில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு மனைவி, ஆடிட்டர் படிக்கும் ஒரு மகள், மற்றும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி காவல் ஆய்வாளர் வன்ராஜ் சிங் மஞ்சரியாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவரது குடும்ப உறுப்பினர் மருத்துவமனைக்கு அழைத்து … Read more

Ind vs Ban: "இந்தியாவை வீழ்த்தும் திறன் எல்லா அணிகளுக்கும் இருக்கிறது"- வங்காளதேச பயிற்சியாளர் பளீச்

இந்தாண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 வடிவில் நடைபெற்று வருகிறது. ஏ, பி என இரண்டு குழுக்களாக 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் இரு குழுக்களில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருந்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இந்தச் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். ஆனால், சூப்பர் 4 சுற்றில் தலா … Read more

சென்னையில் செப்டம்பர் 20 வரையிலான கடந்த 6 மாதங்களில் ரூ.900 கோடி சொத்து வரி வசூல் ..!

சென்னை: சென்னையில்,  ஏப்ரல் 1முதல் செப்டம்பர் 20 வரையிலான கடந்த 6 மாதங்களில் ரூ.900 கோடி சொத்து வரி வசூல்  செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போல் 6 மாதத்திற்கு ஒருமுறை சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவு நீர் வரிகள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களுக்கு ஒரு முறையும், அடுத்ததாக, அக்டோபர் முதல் மார்ச்  என அடுத்த 6 மாதம் … Read more

யூத புத்தாண்டு; ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து

டெல்லி, உலகம் முழுவதும் யூத மதத்தினரின் புத்தாண்டு ரோஷ் ஹஷனா என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான யூத புத்தாண்டு ரோஷ் ஹஷனா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. யூத புத்தாண்டு வழக்கமாக 2 நாட்கள் கொண்டாடப்படும். அந்த வகையில் இன்றும், நாளையும் யூத புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், யூத புத்தாண்டையொட்டி உலகம் முழுவதும் உள்ள யூத மதத்தினருக்கும், இஸ்ரேலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹர்சொகிற்கு வாழ்த்து … Read more

தனியே சந்தித்த அண்ணாமலை; மாறுவாரா தினகரன்? – கூட்டணிக் கணக்கில் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை தனியே சந்தித்து, தமிழக அரசியலில் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார், தமிழக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை. அந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் என்ன? தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். TTV Dinakaran “அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி இருக்கும் வரையில், அந்தக் கட்சியால் ஜெயிக்க முடியாது… எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது…” என்று … Read more