அரசு மருத்துவப் பணியில் இருந்து 2013 முதல் தலைமறைவான ஷாகின்: சகோதரர் டாக்டர் பர்வேஸ் அன்சாரியிடம் விசாரணை

புதுடெல்லி: உ.பி. லக்​னோவைச் சேர்ந்த டாக்​டர் ஷாகின், கான்​பூரில் உள்ள கணேஷ் சங்​கர் வித்​தி​யார்த்தி மருத்​து​வக் கல்​லூரி​யில் (ஜிஎஸ்​விஎம்​சி) 7 ஆண்டு விரிவுரை​யாள​ராகப் பணி​யாற்றி உள்​ளார். கடந்த 2013-ம் ஆண்​டில் அவர் நிர்​வாகத்​துக்கு எந்த தகவலும் கூறாமல் காணா​மல் போய் உள்​ளார். இதையடுத்து 2021-ல் ஷாகின் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார். கான்​பூரின் பிரபல ஜிஎஸ்​விஎம்​சி.​யின் தகவல்​களின்​படி, டாக்​டர் ஷாகின் ஜனவரி 1999-ல் பிர​யாக்​ராஜ் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் பட்​டம், டிசம்​பர் 2003-ல் மருந்​தி​யலில் முதுகலைப் பட்​டம் … Read more

தமிழக எல்லையில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் அவதி

பெங்களூரு: தமிழகத்​தில் இருந்து பெங்​களூரு​வுக்கு இயக்​கப்​படும் ஆம்னி பேருந்​துகள் எல்​லை​யிலேயே நிறுத்​தப்​படு​வ​தால் பயணி​கள் கடும் அவதிக்கு ஆளாகி​யுள்​ளனர். தமிழகத்​தில் இருந்து கர்​நாடகா​வுக்கு இயக்​கப்​பட்ட தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்​துகள் உரிய அனு​ம​தி, பாது​காப்புச் சான்​றிதழ் இல்​லாதவை​யாக இருப்​ப​தாகக் ​கூறி, அம்​மாநில போக்​கு​வரத்து துறை அதி​காரி​கள் 60 பேருந்​துகளுக்கு அபராதம் விதித்​தனர். மேலும் ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்​மிட்’ விதி​களின்படி சாலை வரி விதிக்​கப்​பட்​டது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்த தமிழக ஆம்னி பேருந்து உரிமை​யாளர்கள் சங்​கம் கர்​நாட​கா, … Read more

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல்: மத்திய அமைச்சரவையில் தீர்மானம்

புதுடெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என்று மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பூடானில் 2 நாட்கள் அரசு பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலில் காயம் அடைந்தவர்களை, டெல்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் நேற்று சந்தித்தார். அவர்களுடைய உடல்நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பான விவரங்களை மருத்துவர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் … Read more

டெல்லி குண்டுவெடிப்பு சந்தேக நபர்களின் குடும்பங்களை குற்றவாளிகள் போல நடத்தக்கூடாது: மெஹபூபா முப்தி

ஸ்ரீநகர்: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி. மேலும், இதில் காஷ்மீரை சேர்ந்த மருத்துவர்களுக்கு உள்ள தொடர்பை அறிந்து கவலை கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். “இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு அரசு கட்டாயம் தண்டனை வழங்க வேண்டும். எனினும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர்களின் தாய், தந்தை, சகோதரர், சகோதரி என உறவினர்கள் வசம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது … Read more

‘உளவியல் தாக்கத்தை உருவாக்கவே கருத்துக் கணிப்புகள் வெளியீடு’ – தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் நிராகரித்துள்ளார். ‘தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்கவும், ஒரு உளவியல் தாக்கத்தை உருவாக்கவும் இந்த கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன’ என்று அவர் கூறினார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ், “எங்களுக்குக் கிடைக்கும் கருத்துக்களின்படி பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பதற்றமாகவும் அச்சத்தோடும் இருப்பது தெரிகிறது. அவர்கள் அமைதியற்று இருக்கின்றனர். … Read more

டெல்லி குண்டுவெடிப்பில் எங்களுக்குத் தொடர்பு இல்லை: அல் ஃபலா பல்கலைக்கழகம்

புதுடெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அல் ஃபலா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் உள்துறை அமைச்சகத்தால் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விசாரணையை துரிதப்படுத்த சிறப்பு விசாரணைக் குழுவை என்ஐஏ இன்று நியமித்துள்ளது. குண்டுவெடிப்பை நிகழ்ந்திய உமர் முகமது நபி, டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவக் … Read more

டெல்லி குண்டுவெடிப்பில் பாதித்து சிகிச்சை பெறுவோருக்கு பிரதமர் மோடி நேரில் ஆறுதல்

புதுடெல்லி: செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று லோக் நாயக் ஜெய் பிரகாஷ் (LNJP) மருத்துவமனையில் நேரில் சந்தித்தார். இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பூடானுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, டெல்லியில் தரையிறங்கிய உடன் நேராக எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்றார். காயமடைந்தவர்களை பிரதமர் மோடி தனித்தனியாகச் சந்தித்து உரையாடியதாகவும், அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தியதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், மருத்துவமனையில் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வருவோரின் … Read more

தமிழகத்தில் இதுவரை 78.09% எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: இரண்டாம் கட்ட சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதற்கான கணக்கீட்டுப் படிவம் தமிழகத்தில் 78.09% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அளவில் 72.66% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் அந்தமான் நிகோபார் தீவுகள், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவுகள், மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு … Read more

தேஜஸ்வி முதல்வர் கனவில்… மண்ணள்ளி போட்ட PK – மகா கூட்டணிக்கு பெரிய ஆப்பா?

Bihar 2025 Exit Polls: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில்,  ஜன் சுராஜ் கட்சியால் மகா கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து இங்கு விரிவாக காணலாம். 

டெல்லி குண்டுவெடிப்புக்கு தார்மீக பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்

திருவனந்தபுரம்: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மும்பை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதற்கு தார்மீக பொறுப்பேற்று அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்தார். ஆனால், இந்த சம்பவம் நாட்டின் தலைநகரில் நடந்துள்ளது, … Read more