விண்வெளியில் பயணம் செய்ய தயாராகும் 23 வயது ஆந்திர இளம் பெண்

அமராவதி: 23 வயதே நிரம்பிய ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் ஜானவி தங்கேட்டி, வரும் 2029-ம் ஆண்டு விண்வெளியில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பாலகொல்லு பகுதியை சேர்ந்தவர் ஜானவி தங்கேட்டி(23). பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர், அமெரிக்காவின் டைடன்ஸ் விண்வெளி பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம் வரும் 2029-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜானவி தங்கேட்டி 5 மணி நேரம் வரை விண்வெளியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இவர்தான் … Read more

ஜூலை 1 முதல் ரயில் கட்டணங்கள் உயர்வு? இனி டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Indian Railways: இந்தியாவில் ரயில்வே கட்டணங்கள் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

ராஜா ரகுவன்சி கொலை வழக்கில் ம.பி.யில் மேலும் 2 பேர் கைது

இந்தூர்: ராஜா ரகுவன்சி கொலை வழக்கில் மேலும் 2 பேரை மத்திய பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சிக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரும் அவரது மனைவி சோனமும் தேனிலவுக்கு மேகாலயா மாநிலத்துக்குச் சென்றனர். அங்கு ரகுவன்சி கொல்லப்பட்டார். சோனம் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ரகுவன்சியை கொன்றது தெரியவந்தது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சோனம் உள்ளிட்ட … Read more

கர்நாடகாவின் வீட்டு வசதி திட்டத்தில் சிறுபான்மையினருக்கு 15% இட ஒதுக்கீடு

கர்நாடகாவில் வீட்டு வசதி திட்டத்தில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அண்மையில் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியதாவது: கர்நாடக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து விதமான வீட்டு வசதி திட்டங்களில் முஸ்லிம், கிறிஸ்தவர், பவுத்தர் உள்ளிட்ட அனைத்து மத சிறுபான்மையினருக்கும் … Read more

தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆபரேஷன் சிந்தூர் சிறந்த உதாரணம்: பிரதமர் மோடி

தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை ஆபரேஷன் சிந்தூர் உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளதாக பிரதமர் நேரந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆன்மீக குருவும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயண குரு மற்றும் மகாத்மா காந்தி இடையிலான உரையாடலின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து மேலும் கூறியதாவது: இந்தியர்களை ரத்தம் சிந்தவைக்கும் தீவிரவாதிகளுக்கு உலகின் எந்த மறைவிடமும் பாதுகாப்பானது அல்ல என்பதை நாம் நிரூபித்துக்காட்டியுள்ளோம். இந்தியர்களை தாக்கும் தீவிரவாதிகள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் … Read more

குடும்ப வருமானம் பற்றி அடுத்த ஆண்டில் கணக்கெடுப்பு: மத்திய புள்ளியியல் அமைச்சகம் திட்டம்

நாட்டிலேயே முதல் முறையாக அடுத்த ஆண்டில் குடும்ப வருமானம் பற்றி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் வரும் 2026-ல் குடும்ப வருமானம் குறித்த கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சகத்துக்கு வழிகாட்ட ஐஎம்எப் முன்னாள் செயல் இயக்குநர் சுர்ஜித் பல்லா தலைமையில் ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழு (டிஇஜி) அமைக்கப்படும். இக்குழு கணக்கெடுப்பு எப்படி நடத்த வேண்டும் … Read more

மேற்கு வங்க சட்டப்பேரவையிலிருந்து 4 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டபேரவையில் இருந்து தீபக் பர்மன், சங்கர் கோஷ், அக்னிமித்ர பால் மற்றும் மனோஜ் ஓரான் ஆகிய நான்கு பாஜக எம்எல்ஏக்களை எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் பிமன் பானர்ஜி உத்தரவிட்டார். அவையில் முன்பு கூறப்பட்ட சில கருத்துகளை நீக்குவது தொடர்பான விவாதத்தின்போது இந்த எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சபாநாயகர் இந்த முடிவை எடுத்தார். இதுகுறித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் கூறுகையில், “ நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை … Read more

அமெரிக்காவின் சாதாரண வாழ்க்கை வேண்டாம்: இந்தியாவில் குடியேறிய பெண் பேட்டி

புதுடெல்லி: அமெரிக்காவில் உள்ள சாதாரண வாழ்க்கை எனக்கு வேண்டாம். இந்தியாவில் உள்ள அசாதாரணமான வாழ்க்கையை விரும்புகிறேன் என்று இந்தியாவில் குடியேறிய அமெரிக்க பெண் கிறிஸ்டன் பிஷர் தெரிவித்தார். அமெரிக்காவைச் சேரந்த கிறிஸ்டன் பிஷர் 4 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை விட்டு வெளியேறி இந்தியாவில் வசித்து வருகிறார். அவரது குடும்பத்தாரும் அவருடன் வசித்து வருகின்றனர். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை போட்டு புகழ் பெற்று வருகிறார் பிஷர். அவரது வீடியோக்களை பலரும் ஷேர் செய்து ரசித்து வருகின்றனர். … Read more

உ.பி.யில் பள்ளிக்கு வராமலேயே மாணவர்கள் ‘பாஸ்’ ஆவதை தடுக்க ஆன்லைன் வருகைப் பதிவு அமல்

புதுடெல்லி: அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் சேர்க்கைக்கு பின் வகுப்புகளுக்கு வராமலேயே தேர்ச்சிபெற மாணவர்கள் முயல்வதாகப் புகார் எழுந்துள்ளது. இதை தடுக்க மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் அன்றாட வருகையை ஆன்லைனில் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. உ.பி-யில் அரசு அங்கீகாரம் பெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அரசு நிதியும் கிடைக்கிறது. இதற்காக அப்பள்ளிகள் குறிப்பிட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்ச்சி விகிதத்தையும் கடைப்பிடிப்பது முக்கியம். இதனால், அரசு அங்கீகாரப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதை … Read more

ஒன் சைட் லவ்… பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல்கள்! போலீசாருக்கு டுமிக்கி கொடுத்த பெண் சிக்கியது எப்படி?

Hoax Bomb Threats Woman Arrested: தனது ஒருதலை காதலன் பெயரில் போலி மின்னஞ்சல் கணக்குகளை தொடங்கி, 11 மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.