ஆந்திராவில் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து 5 வயது மாணவர் உயிரிழப்பு; 10 பேர் காயம்

கர்னூல்: ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில், பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து வயது மாணவர் ஒருவர் உயிரிழந்தார். 10 மாணவர்கள் படுகாயமடைந்தனர். கர்னூலில் காவடி தெருவில் உள்ள கீர்த்தி ஆங்கில வழி உயர்நிலைப் பள்ளியில், இன்று காலை தொழுகைக்காக பள்ளிக்கு வெளியே சுவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த மாணவன் ரகீப்பும், இன்னும் சிலரும் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்தனர். அந்த மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அங்கு ரகீப் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 10 … Read more

கேரளாவில் அமீபா தொற்றுக்கு இதுவரை 18 பேர் உயிரிழப்பு; பாதிப்பு 67 ஆக அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவை அச்சுறுத்தும் ஆபத்தான மூளையை தின்னும் அமீபா நோய் எனப்படும் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இப்போது திருவனந்தபுரத்தில் 17 வயது சிறுவனுக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்த சிறுவனுக்கு மூளையை தின்னும் அமீபா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், சுகாதாரத் துறை அக்குளம் எனும் சுற்றுலா கிராமத்தில் உள்ள நீச்சல் குளத்தை மூடினர். மேலும், அந்த நீச்சல் குளத்திலிருந்து சோதனைக்காக நீர் மாதிரிகளை சேகரித்தனர். அந்தச் சிறுவன் … Read more

Bihar SIR வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அக்.7-ல் இறுதி விசாரணை

புதுடெல்லி: பிஹாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் செல்லத்தக்கதா என்பது குறித்த இறுதி வாதம் வரும் அக்டோப ர் 7-ம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிஹாரில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின்போது, 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இது தொடர்பாக ஏடிஆர் அமைப்பு உட்பட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜோய்மால்ய பக்சி அமர்வு விசாரித்து வருகிறது. முந்தைய விசாரணையின்போது, வாக்காளர் … Read more

ஹைதராபாத்தில் ஒரே இரவில் 245 மி.மீ மழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூவர் மாயம்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் இடைவிடாமல் பெய்த கனமழையால் நகரம் முழுவதும் பரவலாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் காணாமல் போயுள்ளனர். நேற்று (செப்டம்பர் 14) காலை 8.30 மணி முதல் இன்று (செப். 15) காலை 8.00 மணி வரை ஹைதராபாத் சித்திபேட்டையின் நாராயண்ராவ்பேட்டையில் அதிகபட்சமாக 245.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. ரங்காரெட்டியின் அப்துல்லாபூர்மெட் – ததியனாரம் … Read more

வக்பு சட்டத்துக்கு முழுமையாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: வக்பு (திருத்த) சட்டத்தை முழுவதுமாக நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும் அச்சட்டத்தில் உள்ள சில விதிகளுக்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த … Read more

மகாராஷ்டிரா ஆளுநராக ஆச்சார்ய தேவ்விரத் பதவியேற்பு

மும்பை: மகாராஷ்டிர ஆளுநராக ஆச்சார்ய தேவ்விரத் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மகாராஷ்டிரா ஆளுநராக இருந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத்துக்கு மகாராஷ்டிராவின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், ஆச்சார்ய தேவ்விரத் மகாராஷ்டிர ஆளுநராக பதவியேற்கும் விழா மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் … Read more

ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் தலைவர் உட்பட 3 பேர் சுட்டுக் கொலை!

ஹசாரிபாக்: ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் இன்று (செப்.5) காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் தலைவர் சஹ்தேவ் சோரன் உட்பட மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கோர்ஹார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டித்ரி வனப் பகுதியில் காலை 6 மணியளவில் மாவோயிஸ்ட் அமைப்பின் சஹ்தேவ் சோரனின் படையினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த நடவடிக்கையின் போது ரூ.1 கோடி வெகுமானம் அறிவிக்கப்பட்டிருந்த சஹ்தேவ் சோரன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் மாவோயிஸ்ட் … Read more

இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க தடை வருமா? உச்சநீதிமன்றம் என்ன சொல்ல போகிறது?

பட்டாசுகளுக்கான தடை உத்தரவு என்பது, வசதி படைத்தவர்கள் வாழும் டெல்லிக்கு மட்டுமானதாக இருக்க கூடாது; அது நாடு முழுவதும் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

சண்டிகர்: பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்டம், கதூர் சாஹிப் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் லால்புரா. கடந்த 2013-ல் 19 வயது தலித் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தாக்கப்பட்டு, மானபங்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மஞ்சிந்தர் சிங் லால்புரா உள்ளிட்டோருக்கு எதிராக பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்ட நீதிமன்றத்தில் 12 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் உள்ளிட்ட 7 பேருக்கு 4 … Read more

சிறிய பிரச்சினை பெரிதாக வெடிக்கும்: ஆதித்யநாத் எச்சரிக்கை

புதுடெல்லி: உத்தர பிரதேசம் லக்​னோ​வில் ராம் மனோகர் லோகியா மருத்​துவ அறி​வியல் மையத்​தின் நிறுவன தின நிகழ்ச்​சி​யில் உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் சிறப்பு விருந்​தின​ராக கலந்து கொண்​டார். அப்​போது அவர் பேசுகை​யில், ‘‘மருத்​து​வ​மனை​களில் ஆம்புலன்ஸ் வாக​னங்கள் கிடைப்பது, ரத்தம் கிடைப்​பது போன்றவை சின்ன சின்ன விஷ​யங்​கள் தான். இதற்​கெல்​லாம் சரி​யான நேரத்​தில் தீர்வு காண​வில்லை என்​றால் பெரிய பிரச்​சினை​களாக வெடிக்​கும். நேபாளத்​தில் சமீபத்​தில் என்ன நடந்​தது என்​பதை நீங்​கள் பார்த்​திருப்​பீர்​கள்’’ என்று தெரிவித்தார். Source link