பிரியங்கா காந்தி மகள் மீது அவதூறு: காங்., புகாரின் பேரில் இமாச்சலில் வழக்கு

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா வத்ராவின் மகள் மீது ட்விட்டரில் பொய் தகவல்கள் பரப்பியதாக வழக்கு பதிவாகி உள்ளது. இமாச்சல பிரதேசக் காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகார் செய்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மக்களவை தேர்தல் நடைபெறும் சூழலில் தங்களுக்குள் கடுமையான விமர்சனங்களை அரசியல்வாதிகள் முன் வைத்துக் கொள்கின்றனர். இதில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வத்ரா மகள் மீது பொய்யானத் தகவல்கள் பரவி உள்ளன. இது தொடர்பாக ஒரு ட்விட்டர் பதிவில், பிரியங்காவின் … Read more

“காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் 60 ஆண்டுகளாக நாட்டை நாசப்படுத்தி விட்டன” – மோடி பேச்சு

கிழக்கு சம்பரான்: காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து 60 ஆண்டுகாலமாக நாட்டை நாசப்படுத்தி விட்டதாகவும், 3-4 தலைமுறைகளின் வாழ்க்கையை அழித்துவிட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் மாநிலம் கிழக்கு சம்பாரனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “முதல் 5 கட்ட தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. முதல்கட்டத்தில் இண்டியா கூட்டணி படுதோல்வி அடைந்தது. அடுத்தடுத்த கட்டங்களில் இண்டியா கூட்டணி சரிந்தது. நேற்று நடந்த ஐந்தாம் கட்டத்தில் இண்டியா கூட்டணி முற்றிலும் தோல்வியடைந்தது. … Read more

உங்களின் 10 ஆண்டு கால பணிகளை பேசாமல் காங்கிரஸையே வசைபாடுவதா? – மோடிக்கு கார்கே கேள்வி

சண்டிகர்: பிரதமர் நரேந்திர மோடி, தனது அரசின் 10 ஆண்டு கால பணிகள் பற்றிக் கூறாமல், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியையே வசைபாடிக் கொண்டிருப்பதாக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார். சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகியவை மிகவும் வளமான மாநிலங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், இம்மாநிலங்களில் இன்னும் வேலையின்மை மற்றும் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது அரசின் 10 ஆண்டு காலப் பணி குறித்துப் பேசாமல், நாள் … Read more

Lok Sabha Election 2024: பாஜகவுக்கு கண்டிப்பாக 370 கிடைக்காது.. 270க்கு குறையாது -பிரசாந்த் கிஷோர்

Lok Sabha Election 2024: ஐந்து கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அடுத்த இரண்டு கட்ட வாக்குப்பதிவுக்கு முன், பாஜக கைப்பற்றும் இடங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் என்ன சொன்னார்.. அறிந்துக் கொள்ளுங்கள்

‘‘ஒடிசாவை தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆட்சி செய்வதா?’’ – அமித் ஷா கேள்வி

புரி(ஒடிசா): தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். ஒடிசாவின் புரி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “இந்தத் தேர்தல் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்குவதற்கான தேர்தல். இந்த தேர்தல் 3 கோடி லட்சாதிபதிகளை உருவாக்கும் தேர்தல். இந்தத் தேர்தல் 4 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதற்கான தேர்தல். இந்தத் தேர்தல், ஜெகந்நாதரின் பெருமையையும் … Read more

புனே போர்ஷே சொகுசு கார் விபத்து: சிறுவனுக்கு மது வழங்கிய மதுபானக்கூடத்திற்கு சீல்!

Porsche Luxury Car Accident: சிறுவனுக்கு சட்டவிரோதமாக மது வழங்கிய கோசி மற்றும் பிளாக் ஆகிய இரண்டு மதுபானக்கூடத்திற்கு புனே கலால் துறை சீல் வைத்தது.

மம்தா குறித்து அவதூறாக பேசிய பாஜக வேட்பாளர் அபிஜித்துக்கு 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாஜக வேட்பாளரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய் 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கடந்த 15-ம் தேதி மேற்கு வங்கத்தின் ஹால்டியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் வங்க மொழியில் பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், “மம்தா பானர்ஜி, நீங்கள் உங்களை எவ்வளவு விலைக்கு விற்கிறீர்கள்? உங்கள் கட்டணம் ரூ.10 … Read more

ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமீன் மனுவை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத் துறை கைது செய்தது. அதையடுத்து அவர் முதல்வர் பொறுப்பை ஜாமீன் செய்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தேர்தல் பிரச்சாரம் செய்யும் வகையில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நாளை (புதன்கிழமை) தினத்துக்கு ஒத்திவைத்துள்ளனர் நீதிபதிகள். அண்மையில் அமலாக்கத் துறை கைது நடவடிக்கைக்கு ஆளான டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், மக்களவைத் தேர்தலில் … Read more

ஜகந்நாதர் குறித்த சம்பித் பத்ராவின் பேச்சை பிஜேடி அரசியலாக்காது: வி.கே.பாண்டியன்

புவனேஸ்வர்: புரி ஜகந்நாதர் குறித்த சம்பித் பத்ராவின் பேச்சை, பிஜு ஜனதா தளம் அரசியலாக்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “புரி ஜகந்நாதர் மோடியின் பக்தர் என தவறுதலாகக் கூறிவிட்டதாகவும், அதற்காக 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் சம்பித் பத்ரா கூறியுள்ளார். வெயிலும் தூசியும் அதிகம் இருப்பதால் சம்பித் பத்ரா தனது உடல்நிலையை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். சரியாக சாப்பிட்டு அவர் கவனமாக … Read more

“கர்நாடகாவில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும்” – முதல்வர் சித்தராமையா உறுதி

பெங்களூரு: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் குறைந்தது 15 இடங்களில் வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் இரண்டு கட்டங்களாக அங்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சித்தராமையா சந்தித்து பேசினார். அப்போது அவர், “மக்கள்வை தேர்தலைப் பொறுத்த வரையில் கர்நாடகாவில் குறைந்தது காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் … Read more