‘‘ஒடிசாவை தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆட்சி செய்வதா?’’ – அமித் ஷா கேள்வி

புரி(ஒடிசா): தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். ஒடிசாவின் புரி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “இந்தத் தேர்தல் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்குவதற்கான தேர்தல். இந்த தேர்தல் 3 கோடி லட்சாதிபதிகளை உருவாக்கும் தேர்தல். இந்தத் தேர்தல் 4 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதற்கான தேர்தல். இந்தத் தேர்தல், ஜெகந்நாதரின் பெருமையையும் … Read more

புனே போர்ஷே சொகுசு கார் விபத்து: சிறுவனுக்கு மது வழங்கிய மதுபானக்கூடத்திற்கு சீல்!

Porsche Luxury Car Accident: சிறுவனுக்கு சட்டவிரோதமாக மது வழங்கிய கோசி மற்றும் பிளாக் ஆகிய இரண்டு மதுபானக்கூடத்திற்கு புனே கலால் துறை சீல் வைத்தது.

மம்தா குறித்து அவதூறாக பேசிய பாஜக வேட்பாளர் அபிஜித்துக்கு 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாஜக வேட்பாளரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய் 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கடந்த 15-ம் தேதி மேற்கு வங்கத்தின் ஹால்டியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் வங்க மொழியில் பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், “மம்தா பானர்ஜி, நீங்கள் உங்களை எவ்வளவு விலைக்கு விற்கிறீர்கள்? உங்கள் கட்டணம் ரூ.10 … Read more

ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமீன் மனுவை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத் துறை கைது செய்தது. அதையடுத்து அவர் முதல்வர் பொறுப்பை ஜாமீன் செய்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தேர்தல் பிரச்சாரம் செய்யும் வகையில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நாளை (புதன்கிழமை) தினத்துக்கு ஒத்திவைத்துள்ளனர் நீதிபதிகள். அண்மையில் அமலாக்கத் துறை கைது நடவடிக்கைக்கு ஆளான டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், மக்களவைத் தேர்தலில் … Read more

ஜகந்நாதர் குறித்த சம்பித் பத்ராவின் பேச்சை பிஜேடி அரசியலாக்காது: வி.கே.பாண்டியன்

புவனேஸ்வர்: புரி ஜகந்நாதர் குறித்த சம்பித் பத்ராவின் பேச்சை, பிஜு ஜனதா தளம் அரசியலாக்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “புரி ஜகந்நாதர் மோடியின் பக்தர் என தவறுதலாகக் கூறிவிட்டதாகவும், அதற்காக 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் சம்பித் பத்ரா கூறியுள்ளார். வெயிலும் தூசியும் அதிகம் இருப்பதால் சம்பித் பத்ரா தனது உடல்நிலையை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். சரியாக சாப்பிட்டு அவர் கவனமாக … Read more

“கர்நாடகாவில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும்” – முதல்வர் சித்தராமையா உறுதி

பெங்களூரு: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் குறைந்தது 15 இடங்களில் வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் இரண்டு கட்டங்களாக அங்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சித்தராமையா சந்தித்து பேசினார். அப்போது அவர், “மக்கள்வை தேர்தலைப் பொறுத்த வரையில் கர்நாடகாவில் குறைந்தது காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் … Read more

ராஜீவ்காந்தி நினைவு தினம்: ராகுல் நெகிழ்ச்சி பதிவு: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்தச் சூழலில் தனது தந்தை ராஜீவ்காந்தியுடன் தான் இருக்கும் பால்ய கால புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். “அப்பா… உங்களது கனவுகள், எனது கனவுகள். உங்களின் ஆசைகள், எனது பொறுப்புகள். உங்களது நினைவுகள் எனது … Read more

வாக்களிக்காதவர்களுக்கு வரியை உயர்த்த வேண்டும்: நடிகர் பரேஷ் ராவல்

பிரபல இந்தி நடிகர் பரேஷ் ராவல். தமிழில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தில் தொழிலதிபராக நடித்திருந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் அகமதாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று நடந்த 5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில், மும்பையில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தில் நடிகர் பரேஷ் ராவல் வாக்களித்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, “அரசு இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என்று குறை சொல்கிறார்கள். நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால் அதற்கு … Read more

47.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை; தகிக்கும் டெல்லி – 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று (மே.20) 47.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்திய வரலாற்றிலேயே இதுதான் மிக அதிகமான வெப்பநிலை பதிவாக அறியப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் ஆகிய 4 மாநிலங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என்று எச்சரித்துள்ளது. மே 23 ஆம் தேதியன்று உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் ஒரு சில பகுதிகளிலும் குஜராத் மாநிலத்தின் … Read more

ஆந்திர மாநில தேர்தலில் 33 வன்முறை சம்பவங்கள்: சிறப்பு ஆய்வு குழு விசாரணையில் தகவல்

அமராவதி: ஆந்திராவில் நடந்து முடிந்த தேர்தலில் வன்முறை சம்பவங் களில் பலர் படுகாயம் அடைந்தனர். சில வேட்பாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இது வேண்டுமென்றே செய்த சதி எனவும், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும், வாக்கு எண்ணிக்கையின் போதும், அதன் பிறகும் கூட ஆந்திராவில் வன்முறை நடக்கலாம் எனமுன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு மத்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தார். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். … Read more