நாட்டின் இளம் பணக்காரர் ஒரு தமிழர்… அவரின் சொத்து மதிப்பு தெரியுமா?

Arvind Srinivas Net Worth: இந்தியாவின் இளமையான பணக்காரர் என்ற பெருமையை அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பெற்றுள்ளார். அவர் யார் மற்றும் அவரது சொத்து மதிப்பை இங்கு காணலாம்.

முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான் பதவிக் காலம் 8 மாதங்களுக்கு நீட்டிப்பு

புதுடெல்லி: ​முப்​படைகளின் தலைமை தளபதி அனில் சவு​கானின் பதவிக்​காலம் 8 மாதங்​களுக்கு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து பாது​காப்பு அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: கடந்த 2022-ம் ஆண்டு செப்​டம்​பர் முதல் முப்​படைகளின் தலைமை தளப​தி​யாக​வும் (சிடிஎஸ்), ராணுவ விவ​கார துறை​யின் செயல​ராக​வும் அனில் சவு​கான் (64) பணி​யாற்றி வரு​கிறார். இவரது பதவிக்​காலம் செப்​டம்​பர் 30-ம் தேதி நிறைவடைய உள்​ளது. இந்த நிலை​யில், அனில் சவு​கானின் பதவிக் காலத்தை மே 30, 2026 வரை அல்​லது மறு உத்​தரவு வரும் வரை … Read more

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் போராட்டம்: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது

லே: லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்து வழங்​கக் கோரி​யும், அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் சமூக ஆர்​வலரும், கல்​வி​யாள​ரு​மான சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக உண்​ணா​விரதம் மேற்​கொண்டு வந்தார். வேறு சில அமைப்​பு​களும் போராட்​டத்​தில் ஈடு​பட்​டிருந்​தன. லடாக் யூனியன் பிரதேசத்​துக்கு மாநில அந்​தஸ்து கோரி தலைநகர் லேயில் அங்​குள்ள லே உச்ச அமைப்பு (எல்​ஏபி) சார்​பில் நடத்​தப்​பட்ட போராட்​டம் கடந்த புதன்​கிழமையன்று வன்​முறை​யாக மாறியது. போராட்​டத்​தைக் கட்​டுப்​படுத்த முயன்ற பாது​காப்​புப் படை​யினர் … Read more

ம.பி.யில் குர்ஆன் கற்ற 556 இந்து குழந்தைகள்: மதமாற்ற முயற்சியா? – விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தின் 27 மதரஸாக்களில் 556 இந்து குழந்தைகளுக்கு புனிதக் குர்ஆன் கற்றுத் தரப்பட்டுள்ளது. ‘இது, மதமாற்ற முயற்சியா?’ எனக் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் ம.பி. அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 556 இந்து குழந்தைகளுக்கு குர்ஆன் கற்பிக்கப்படுவதும், மத்தியப் பிரதேசத்தில் 27 மதரஸாக்கள் மதமாற்றத்திற்குத் தயாராகி வருவதும் ஏன்? என மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் போபால், ஹோஷங்காபாத், ஜபல்பூர், ஜபுவா, தார், பர்வானி, காண்ட்வா, கார்கோன் மற்றும் … Read more

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? – தீபாவளிக்கு முன் சர்ப்ரைஸ்

Centre Govt Tax Devolution: மாநில அரசுகளுக்கான தனது வரி பகிர்வை தீபாவளி பண்டிகைக்கு முன் மத்திய அரசு நேற்று (அக். 1) விடுவித்தது. அந்த வகையில், எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்பதை இங்கு காணலாம்.

அதிபர் புதினை பிரதமர் மோடி வற்புறுத்தியதாக நேட்டோ தலைவர் கூறுவது தவறு: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: “இந்​தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரி ரஷ்​யாவை மறை​முக​மாக பாதிக்​கிறது. உக்​ரைன் விவ​காரத்​தில் தனது நிலைப்​பாட்டை தெளிவுபடுத்த போனில் ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி வற்​புறுத்​தி​னார்” என நேட்டோ பொதுச் செயலா​ளர் மார்க் ரூட் கூறி​யிருந்​தார். இதுகுறித்து, வெளி​யுறவுத்​துறை செய​லா​ளர் ரந்​தீர் ஜெய்​ஸ்​வால் கூறி​யிருப்​ப​தாவது: உக்​ரைன் விவ​காரத்​தில் தனது நிலைப்​பாட்டை தெளிவுபடுத்த போனில் ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி வற்​புறுத்​தி​னார் என நேட்டோ பொதுச் செய​லா​ளர் மார்க் ரூட் கூறியது … Read more

டெல்லி என்சிஆர் பகுதிகளில் பசுமை பட்டாசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: பேரி​யம் நைட்​ரேட் போன்ற வேதிப்​பொருட்​கள் பட்​டாசு தயாரிப்​பில் பயன்​படுத்​து​வ​தால் உடல் நலனுக்​கும், சுற்​றுச்​சூழலுக்​கும் கேடு ஏற்​படு​வ​தாகத் தெரி​வித்து அவற்​றைத் தடை செய்​யக் கோரி அர்​ஜுன் கோபால் உள்​ளிட்​டோர் உச்ச நீதி​மன்​றத்​தில் பொதுநல மனுக்​களை தாக்​கல் செய்​தனர். இந்த மனுக்​களை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், பசுமை பட்​டாசுகளை மட்​டுமே தயாரிக்க வேண்​டும் என தீர்ப்பு வழங்​கியது. இதனிடையே பட்​டாசு வெடிப்​ப​தற்​குத் தடை விதிக்​கக் கோரி அர்​ஜுன் கோபால் தாக்​கல் செய்த மற்​றொரு மனுவை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், … Read more

பிஹாரில் தனிக் கட்சி தொடங்கினார் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப்

பாட்னா: பிஹார் மாநிலத்​தில் விரை​வில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், லாலு பிர​சாத் யாத​வின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், பிஹாரில் தனிக் கட்சி தொடங்கி உள்​ளார். தனது கட்​சிக்கு ‘ஜன் சக்தி ஜனதா தளம்’ என்று தேஜ் பிர​தாப் பெயர் சூட்​டி​யுள்​ளார். கட்​சி​யின் சின்​ன​மாக ‘கரும்​பல​கை’ தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளது. ஆர்​ஜேடி நிறு​வனர் லாலு பிர​சாத்​தின் மூத்த மகன் தேஜ் பிர​தாப். காங்​கிரஸ், ஆர்​ஜேடி கூட்​டணி ஆதர​வுடன் நிதிஷ் குமார் முதல்​வ​ராக இருந்த போது, கடந்த 2015 … Read more

உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத மதரசாவில் 40 சிறுமிகள் கழிப்பறைக்குள் அடைப்பு

லக்னோ: உ.பி.​யின் பரைச் மாவட்​டம், பயாக்​பூர் அரு​கில் உள்ள பகல்​வாரா கிராமத்​தில் 3 மாடி கட்​டிடம் ஒன்​றில் சட்​ட​விரோத​மாக மதரசா செயல்​படு​வது குறித்து மாவட்ட நிர்​வாகத்​திற்கு தொடர்ந்து புகார்​கள் வந்​தன. இதையடுத்து பயாக்​பூர் துணை ஆட்​சி​யர் அஸ்​வினி குமார் பாண்டே தலை​மை​யில் அதி​காரி​கள் கடந்த புதன்​கிழமை அங்கு ஆய்வு நடத்​தச் சென்​றனர். அப்​போது அதி​காரி​கள் மாடிக்​குச் செல்​வதை மதரசா நடத்​துபவர்​கள் தடுக்க முயன்​றனர். எனினும் போலீ​ஸார் உதவி​யுடன் அக்​கட்​டிடத்​தில் அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். அப்​போது மாடி​யில் இருந்த … Read more

மேற்கு வங்க துர்கா பூஜை பந்தலில் ‘அசுரன்’ வேடத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் சிலை

கொல்கத்தா: ​நாடு முழு​வதும் நவராத்​திரி விழா கோலாகல​மாகக் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. மேற்கு வங்க மாநிலத்​தில் பிரம்​மாண்​ட​மான வகை​யில் துர்கா பூஜைகள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், பஹராம்​பூர் பகு​தி​யில் வைக்​கப்​பட்​டுள்ள துர்கா பூஜை பந்​தலில், அசுரன் சிலை வைக்​கப்​பட்​டுள்​ளது. அந்த சிலை பார்க்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போலவே உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து காக்ரா சமஷான்​கட் துர்கா பூஜை கமிட்டி நிர்​வாகி பிரதீக் கூறிய​தாவது: இந்​தி​யா​வுக்கு எதி​ராக அதிபர் ட்ரம்ப் 50 சதவீத வர்த்தக வரி விதித்​துள்​ளார். அத்​துடன் எச்​-1பி … Read more