உ.பி.யில் பிரம்மோஸ், ட்ரோன்கள் தயாரிக்கப்படும் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
லக்னோ: உத்தர பிரதேசத்தின் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) தயாரிக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் ஆக்ரா, அலிகர், ஜான்சி, கான்பூர், லக்னோ உள்ளிட்ட 6 பகுதிகளை ஒன்றிணைத்து பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தொழில் வழித்தடத்தில் லக்னோவில் ரூ.300 கோடி செலவில் 80 ஹெக்டேர் பரப்பளவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டில் புதியஆலையை … Read more