டெல்லியில் உள்ள அமிர்தா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு!

தலைநகர் டெல்லியில் புஷ்ப் விஹாரில் உள்ள அமிர்தா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தததையடுத்து போலீசாரும், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினரும் உடனடியாக பள்ளிக்கு சென்று, மோப்ப நாய் உதவியுடன் முழுமையாக சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இந்த மிரட்டலை விடுத்தது யார் என்பது குறித்து டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 12-ம் தேதி, மதுரா சாலையில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கு, … Read more

உ.பி. உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவளித்த முஸ்லிம்கள்

புதுடெல்லி: உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு முஸ்லிம்களால் பலன் கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது. இவர்கள் தங்கள் வாக்குகளை குறிப்பிட்ட கட்சிக்கு என்றில்லாமல் வேட்பாளர்களை பார்த்து வாக்களித்திருப்பதாகத் தெரிகிறது. உ.பி. உள்ளாட்சி தேர்தல் அதன் சட்டப்பேரவை தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாகக் கருதப்படுகிறது. இதில் பெறும் வெற்றியின் பலன் பலசமயம் அங்கு நடைபெறும் மக்களவை தேர்தலிலும் கிடைப்பதுண்டு. இதனால் உ.பி.யில் உள்ள கட்சிகள் உள்ளாட்சி தேர்தலை சவாலாக ஏற்று கவனம் செலுத்தி வருகின்றன. இந்தமுறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முஸ்லிம்கள் அனைத்து … Read more

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஷாருக் மகனை விடுவிக்க ரூ.25 கோடி: என்சிபி அதிகாரி உட்பட 4 பேர் மீது சிபிஐ வழக்கு

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி லஞ்சம் பெற்றதாக என்சிபி அதிகாரி சமீர் வான்கடே உட்பட 4 பேர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேரை போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் சில … Read more

முதல்வரை நாளை அறிவிக்கிறார் கார்கே… அதுவும் பெங்களூருவில்!

Siddaramaiah vs DK Shivakumar: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும், இன்னும் அம்மாநிலத்தின் முதல்வரை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், கார்கே நாளை காலை முதல்வரை பெங்களூருவில் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பாக மாணவர்கள் இடையே மோதல்.!

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பாக ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்தனர். திரைப்படம் குறித்த ஆட்சேபகரமான பதிவை வாட்ஸ்அப் குழு ஒன்றில் மாணவர் ஒருவர் பகிர்ந்ததையடுத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மோதலின் போது கல்லூரி விடுதிக்குள் சில அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவர்களில் ஒரு தரப்பினர் போராட்டத்தில் … Read more

வெயிலில் நடந்து சென்ற கர்ப்பிணி உயிரிழப்பு!!

கடும் வெயிலில் நடந்தே மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியை சேர்ந்த 8 மாத கரப்பிணியான சோனாலி வாகத் (21) மருத்துவமனைக்கு சென்று அடிக்கடி உடல் பரிசோதனை செய்து வந்துள்ளார். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் இவர் வசிக்கும் பகுதியில் போக்குவரத்து வசதி இல்லாததால், வீட்டில் இருந்து சுமார் 3.2 கி.மீ தூரம் வரை நடந்து நெடுஞ்சாலை பகுதிக்கு வந்துள்ளார். … Read more

2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

புனே: வரும் 2047-ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பொறியியல் பல்கலைக்கழகம் (டிஐஏடி), மகாராஷ்டிராவின் புனே நகரில் செயல்படுகிறது. அந்த பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழா புனேவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது: போருக்கான ஆயுதங்கள், தளவாட உற்பத்தியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அறிவியல், … Read more

ஓடும் பேருந்தில் பெண் நடத்துனரின் உதவியுடன் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணிப் பெண்…!

கர்நாடகாவில் ஓடும் பேருந்தில் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, கர்ப்பிணி பெண் ஒருவர், பெண் நடத்துனரின் உதவியுடன் பேருந்திலேயே பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பெங்களூர்-சிக்மகளூர் வழித்தடத்தில் பயணித்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, பயணிகளை கீழே இறங்குமாறு கேட்டுக்கொண்ட நடத்துனர் வசந்தம், அந்த பெண் பேருந்திலேயே குழந்தையைப் பெற்றெடுக்க உதவி செய்தார். மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த அப்பெண்ணுக்கு அவசர செலவிற்காக பேருந்து பயணிகள் ஆயிரத்து 500 ரூபாய் வசூலித்துக் கொடுத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் தாயும், சேயும் ஷாந்தாகிராம … Read more

டெண்டுல்கரின் மகனுக்கு நாய் கடி!!

அர்ஜுன் டெண்டுல்கர் தன்னை நாய் கடித்து விட்டதாக சக வீரரிடம் தெரிவித்துள்ள வீடியோவை லக்னோ அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் நடப்பு ஐ.பி.எல் தொடரின் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். அதேபோல் U-19லும் இந்திய அணியில் விளையாடியுள்ளார். தற்போது நடப்பு ஐ.பி.எல் தொடரில் அறிமுகமாகி மும்மை அணியில் … Read more

அதிர்ச்சி! மது அருந்தியதால் இளம்பெண் சுட்டுக்கொலை!!

மது அருந்தியதற்காக 33 வயது பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள துக்னிவரன் சாஹிப் குருத்வாரா வளாகத்தில் பெண் ஒருவர் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அதனைக்கண்ட ஒருவர், அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். தகவல் அறிந்த காவல்துறையினர், அந்த நபரைக் கைது செய்து, சம்பவ இடத்திலிருந்து புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், இறந்த பெண் பர்மிந்தர் கவுர் என்பதும், அவர் … Read more