சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் – உ.பி.யில் 2 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி

புதுடெல்லி: உ.பி.யில் ஸ்வர், சான்பே ஆகிய 2 தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அப்னாதளம் வெற்றி பெற்றுள்ளது. உ.பி.யில் ஸ்வர் தொகுதியை உள்ளடக்கிய ராம்பூர் மாவட்டம், சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம்கானின் கோட்டையாக கருதப்படுகிறது. இங்குள்ள மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. முஸ்லிம் வாக்காளர்களும் இங்கு அதிகம். இங்கு பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அப்னாதளம் வேட்பாளர் ஷபீக் அகமது அன்சாரி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து … Read more

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய எவ்வளவு நேரம் ஆகிறது? ஏழுமையான் பக்தர்கள் ஏமாற்றம்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் பக்தர்கள் வெள்ளமாக காட்சி அளிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தின் மத்தியில் இருந்தே கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை காரணமாக பலரும் திருப்பதிக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். இதற்காக ஒவ்வொரு மாதத்திற்கும் முன்பாக தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் டிக்கெட்களுக்காக பக்தர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ​திருப்பதியில் சாமி தரிசனம்அந்த வகையில் மே மாதத்திற்கான டிக்கெட்கள் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன. எனவே ஆன்லைனில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்கள் … Read more

லோகேஸின் சினி யுனிவர்ஸ்.. ரூ.25000 கோடி போதை வஸ்து நிஜ ரோலக்ஸை தட்டி தூக்கினர்..! நடுக்கடலில் பரபர ஷேசிங்

விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களில் வருவது போன்று 2500 கிலோ போதை பொருட்களுடன், நடுக்கடலில் தண்ணி காட்டிய ரோலக்ஸை , கடற்படை உதவியுடன் தேசிய போதை பொருள் தடுப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர். 25 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.. திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது திரைப்படங்களில் போதை பொருள் கடத்தல் குறித்தும், அதில் ஈடுபட்டுள்ள சர்வதேச கடத்தல் கும்பல் குறித்தும், அவர்களை … Read more

காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாயின. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி அதற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது. இந்நிலையில் கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், … Read more

கர்நாடகா வெற்றி குறித்து ராகுல் காந்தி பேட்டி..!

கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில் காங்கிரஸ் கட்சி 130-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறது. இந்த நிலையில் கர்நாடகா தேர்தலில் காங்கிரசின் வெற்றி குறித்து மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பெரும் முதலாளிகளை எளிய மக்கள் வீழ்த்தியுள்ளனர். கர்நாடகாவில் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு, அன்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. வெறுப்பரசியலை கையிலெடுக்காமல் அன்பின் … Read more

ஜி 20 மாநாட்டை சீர்குலைக்க சதி: காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு உள்ளது. இங்கு பாகிஸ்தானில் இருந்து வந்த தீவரவாதிகள் எல்லையை கடக்க முயன்றனர். அவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து தீவிரவாதிகள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஓடிவிட்டனர். இந்த சண்டையில் ராணுவத்தின் இளம் அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார். இதன் மூலம் ஜி20 மாநாட்டை சீர்குலைக்க, பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட மற்றொரு முயற்சி தோல்வியடைந்துள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவ ட்ரோன் ஒன்றையும் பாகிஸ்தான் அனுப்பியுள்ளது. அதன் மீது … Read more

கர்நாடகாவில் அண்ணாமலை ரிசல்ட் இதுதான்… பாஜகவிற்கு விழுந்த சரியான அடி!

கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. பாஜகவை வெல்ல முடியாது என்ற பிம்பத்தை உடைத்து மற்ற கட்சிகளுக்கு ஒரு பாடத்தை அளித்துள்ளது. பலரும் கூறுவது போல, இது 2024 மக்களவை தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகவும் இருக்கலாம். கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 136 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை பிடிக்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் பாஜக 65 இடங்களுடன் பாஜக எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. கர்நாடக தேர்தலில் உள்ளூர் … Read more

பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா -ஆம் ஆத்மி பிரமுகர் ராகவ் சட்டா நிச்சயதார்த்தம்.. திரையுலக நட்சத்திரங்கள் நேரில் வாழ்த்து!

டெல்லியில் நடைபெற்ற பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா, ஆம் ஆத்மி எம்பி ராகவ் சட்டா திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் திரைநட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். மணமுடிக்க உள்ள காதலர்கள் இருவரும் வெள்ளை ஆடையணிந்து வலம் வந்தனர். சமூக ஊடகப் பதிவுகளில் தங்களின் நீண்டகால கனவு நனவானதாக தெரிவித்தனர். இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள், நேரில் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். டெல்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவால், முன்னாள் மத்திய அமைச்சர் … Read more

அதிர்ச்சி சம்பவம் ..!! பள்ளியிலும் பெண் குழந்தைகளுக்கு சுதந்திரம் இல்லையா ?

தலைநகர் டெல்லி ரோஹினி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது 4 வயது மகளை கடந்த மே மாதம் அருகே உள்ள பள்ளியில் சேர்த்துள்ளார். இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி அன்று சிறுமி பள்ளி மைதானத்தில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ப்யூனாக வேலை பார்க்கும் 43 வயது நபரான சுனில் குமார் சிறுமியை தனியாக அழைத்து சென்றுள்ளார். பின்னர், சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டி தொல்லை கொடுத்துள்ளார். பயந்து போய் சிறுமி … Read more

சைபர் க்ரைம் எச்சரிக்கை!! இந்த நம்பரில் இருந்து வாட்ஸ் அப்க்கு போன் வந்தா எடுக்காதீங்க..

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் வெளிநாட்டு வாட்ஸ்அப் கால் மோசடி நடைபெறுவதாக பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக +84, +62, +63, +212, +917 ஆகிய எண்ணில் தொடங்கிய மலேசியா, … Read more