உள்நாட்டில் விமானக் கட்டணங்கள் 60 சதவீதம் வரை குறைப்பு – மத்திய அரசின் அறிவுறுத்தல்களை அடுத்து நடவடிக்கை

மத்திய அரசின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, உள்நாட்டில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களில் கட்டணங்களை 60 சதவீதம் வரை விமான நிறுவனங்கள் குறைத்துள்ளன. பல்வேறு விமான நிறுவன உயரதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அண்மையில் ஆலோசனை நடத்தினார். விமான கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும், கட்டணங்களை சீராக வைத்திருத்தல் வேண்டுமென அவர் வலியுறுத்தியிருந்தார். உள்நாட்டு விமான கட்டணங்கள்  60 சதவீதம் வரை குறைக்கப்பட்டாலும், சர்வதேச விமான போக்குவரத்துக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை . … Read more

பிப்பர்ஜாய் புயல் நாளை கரையை கடக்கிறது: குஜராத்தில் 20 ஆயிரம் பேர் வெளியேற்றம்

அகமதாபாத்: அரபிக்கடலில் உருவாகியுள்ள பிப்பர்ஜாய் புயல், நாளை கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், குஜராத்தில் 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அரபிக்கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பிப்பர்ஜாய் புயல், குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் நாளை (ஜூன் 15) பிற்பகல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்: புயல் கரையை கடக்கும்போது குஜராத் மாநிலத்தின் கட்ச், சவுராஷ்டிரா, தேவபூமி துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், ஜுனாகர், … Read more

‘கோவின்’ செயலியை குறைமதிப்பீடு செய்ய சில சக்திகள் முயற்சி: தரவு கசிவு குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: “கோவிட் தடுப்பூசி பதிவுக்காக பயன்படுத்தப்படும் அரசாங்கத்தின் ‘கோவின்’ செயலியை குறைத்து மதிப்பிட உலகில் பல சக்திகள் விரும்புகின்றன” என்று மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து மின்னணு மற்றும் தகவல் தொடர்பு இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று (ஜூன் 13) கூறுகையில்,” கோவின் தரவு கசிவு குறித்து நேற்று (திங்கள்கிழமை) கூறப்பட்ட குற்றச்சாட்டு கூட, கோவின் செயலியின் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதல் என்றே நான் நம்புகிறேன். நாட்டின் முதன்மையான சைபர் பாதுகாப்புகள் நிறுவனமான, … Read more

ஜி 20 மாநாடு இந்தியாவின் தலைமையில் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது – ஜெய்சங்கர்

இந்தியாவின் தலைமையிலான ஜி 20 கூட்டமைப்பு மிகப்பெரிய வெற்றியை அடைந்திருப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வாரணாசியில் ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உக்ரைன் போர், ஒரு நிழல் போல, ஜி 20 நாடுகளின் மீது, கவிழும் போதும்,அனைத்து நாடுகளும், இந்தியாவின் கொள்கையின் படி, அரசியலை மறந்து, வளர்ச்சியை இலக்காக வைத்து, ஒற்றுமையாக செயல்படுவதாக, ஜெய்சங்கர் தெரிவித்தார். இதனிடையே இந்த மாநாட்டின் தீர்மானத்தில் உக்ரைன் பற்றிய பகுதிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து … Read more

Cyclone Biparjoy | குஜராத்தில் கடற்கரையோர மக்களை வெளியேற்றும் பணி தொடக்கம்

அகமதாபாத்: அரபிக் கடலில் உருவெடுத்துள்ள பிப்பர்ஜாய் புயலால் அதிக பாதிப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்டிருப்பதால், கடற்கரையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள மக்களை அப்புறப்படுத்துவதற்கானப் பணிகளை அம்மாநில அரசு தொடங்கி உள்ளது. அரபிக் கடலில் தீவிர புயலாக உருவெடுத்துள்ள பிப்பர்ஜாய், நாளை மறுநாள் அதி தீவிர புயலாக மாறி குஜராத்தின் சவுராஷ்ட்ரா பகுதிக்கும், ஜாக்குவா போர்ட்டுக்கும் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து குஜராத்தில் முன்னெச்சரிக்கை … Read more

மத்திய பிரதேசத்தில் அரசு அலுவலக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து..!

மத்தியப் பிரதேச மாநிலம் தலைநகரான போபாலில் சத்புர பவன் என்ற 6 மாடி அரசுக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்த போராடின. தீயை அணைக்க ராணுவம் அழைக்கப்பட்டது. மூன்றாவது மாடியிலிருந்து ஆறாவது மாடி வரை முழுவதும் தீயில் கருகின. இதையடுத்து தீயை அணைக்க விமானப்படையின் உதவி கோரப்பட்டது. தொலைபேசி மூலம் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புஅமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரிடம் முதலமைச்சர் சிவராஜ் சவுகான் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து … Read more

“வேலைவாய்ப்பு மேளா… பாஜக அரசின் புதிய அடையாளம்” – 70,000 பணி நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘வேலைவாய்ப்பு மேளா’ பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அடையாளமாக மாறியிருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், பரம்பரை அரசியல் கட்சிகள், அரசு வேலைவாய்ப்புகளில் வாரிசுரிமை மற்றும் ஊழலை ஊக்குவித்து, பல்வேறு பதவிகளுக்கு ‘ரேட் கார்டு’ மூலமாக இளைஞர்களை சுரண்டியதாக குற்றம்சாட்டிய பிரதமர் தனது அரசு இளைஞர்களின் நலனை பாதுகாக்கின்றது என்றும் தெரிவித்தார். ‘ரோஜ்கார் மேளா’ எனும் வேலைவாய்ப்பு மேளா மூலம் 70,000-க்கும் மேற்பட்டோருக்கு அரசு வேலைக்கான பணிநியமன ஆணையை பிரதமர் மோடி … Read more

தம்பி நம்ம டிரைவிங் எப்படி ? அக்கா நிறைய வண்டி டேமேஜ்… விளம்பர பெண் எம்.எல்.ஏ சம்பவம்..!

கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை தொடங்கி வைப்பதாக கூறி பேருந்தை ஓட்டிய பெண் எம்.எல்.ஏ தவறுதலாக ரிவர்ஸ் கியர் போட்டதால் பேருந்து மோதி பல வாகனங்கள் சேதம் அடைந்தது. பேருந்தை ஓட்டுவதாக கூறி ரிவர்ஸ் கியர் போட்டு சாலையோரம் நின்றிருந்த வாகனங்களை தட்டித்தூக்கிய பெண் எம்.எல்.ஏ ரூபா கலா இவர் தான் கர்நாடக அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணத்தை மாநில முதல் அமைச்சர் சித்தராமையா தொடங்கி வைத்த நிலையில் கோலார் தங்க வயலில் காங்கிரஸ் … Read more

ஜம்மு காஷ்மீரில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: டெல்லி, சுற்றுப் பகுதிகளிலும் உணரப்பட்ட அதிர்வு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் தோடா பிராந்தியத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. பூமிக்கு அடியில் 6 கி.மீ., தொலைவில் உருவான இந்த நிலநடுக்கமானது தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய நில அதிர்வு அறிவியல் ஆய்வு மையம் அதன் ட்விட்டர் பக்கத்தில், “5.4 ரிக்டர் அளவில், ஜூன் … Read more

அரசிடம் இருந்து உதவி பெற்று தொழில் தொடங்கும் இளைஞர்கள், மேலும் பல இளைஞர்களுக்கு வேலை வழங்கி வருகின்றனர் – பிரதமர் மோடி

அரசிடம் இருந்து உதவி பெற்று தொழில் தொடங்கும் இளைஞர்கள், மேலும் பல இளைஞர்களுக்கு வேலை வழங்கி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்திய அரசு நடத்தி வரும் வேலைவாய்ப்பு திருவிழாவின் ஒரு பகுதியாக 70 ஆயிரத்து 126 பேருக்கு பணி நியமன ஆணைகளை நாடு முழுவதும் 43 இடங்களில் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை டெல்லியில் இருந்து காணொளி மூலமாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட … Read more