ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தை கடந்து சென்றது சென்னையின் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்

ஒடிசாவின் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான பகுதியில் இருப்புப் பாதை சீரமைப்புப்பணிகள் நிறைவு பெற்றன. இதையடுத்து சென்னையில் இருந்து புறப்பட்ட கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் 30 கிலோமீட்டர் வேகத்தில் விபத்து நடந்த பகுதியைக் கடந்து சென்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு இருவழித்தடங்களும் சீரமைக்கப்பட்டதையடுத்து வந்தே பாரத் ரயில் உள்பட சுமார் 70 ரயில்கள் மீண்டும் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டுள்ளன. Source link

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி குண்டு – இந்திய கடற்படை வெற்றிகர பரிசோதனை

புதுடெல்லி: முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கி குண்டு பரிசோதனையை இந்திய கடற்படை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது. இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: எம்எச்-60 ‘ரோமியோ’ மல்டி- மிஷன் ஹெலிகாப்டர் ஐஎன்எஸ் விக்த் போர்க்கப்பலில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுக்குப் பிறகு மற்றொரு தனித்துவமான சாதனையை இந்திய கடற்படை நிகழ்த்தி காட்டியுள்ளது. முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிக எடைகொண்ட ‘டார்பிடோ’ எனும் நீருக்கடியில் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் நீர்மூழ்கி குண்டு … Read more

உருவானது புதிய புயல்: அடித்து வெளுக்கப் போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலர்ட்!

தென்கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேலும் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இந்த புயலின் காரணமாக கேரளா முதல் மகாராஷ்டிரா வரை மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும். ‘பிபோர்ஜோய்’ புயல், மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை ஜூன் … Read more

‘இன்டர்லாக்கிங்’ முறை மாற்றத்துக்கு சதி வேலை காரணமா? – ஒடிசா ரயில் விபத்து நடந்த பகுதியில் சிபிஐ தீவிர விசாரணை

பாலாசோர்: ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பகுதியில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விபத்து நடந்த பகுதியில் தேசிய தடய அறிவியல் ஆய்வகத்தின் நிபுணர்களும் தடயங்களை சேகரித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். ‘இன்டர்லாக்கிங்’ முறையில், வெளியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் சதி வேலை இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 2-ம் தேதி ஒடிசா … Read more

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 40 பேர் மின்சாரம் தாக்கி பலியாகியிருக்கலாம்..? – போலீசார்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 275 பேரில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்கப்பட்ட நாற்பது உடல்களில் வெளிப்புற காயங்கள் எதுமின்றி இருந்ததாகவும், ரயில் தடத்தில் இருந்த மேல் நிலை மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் அவர்கள் பலியாகி இருக்கலாம் என்றும் மீட்பு பணியை மேற்பார்வையிட்ட காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமையன்று ரயில்வே காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையிலும், பல பயணிகள் … Read more

ஆந்திராவில் ரயிலில் தீ – பயணிகள் உயிர் தப்பினர்

ஓங்கோல்: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து நிகழ்ந்தது. இதில் சுமார் 275 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் மற்றொரு விபத்து ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலம், மசூலிப் பட்டினத்தில் இருந்து திருப்பதிக்கு நேற்று புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், பிரகாசம் மாவட்டம் டங்கடூர் அருகே வந்தபோது, திடீரென ரயிலில் புகை … Read more

பிரிஜ் பூஷன் சிங் வீட்டில் டெல்லி போலீஸ்… உ.பி.,யில் பரபரப்பு… பாலியல் புகார் நிரூபிக்கப்படுமா?

டெல்லியில் சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் பல வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய பாலியல் தேவையை பூர்த்தி செய்தால், தங்களின் விளையாட்டு, வேலை, பொருளாதாரம் எனப் பல்வேறு விஷயங்களில் சாதகமான அம்சங்கள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியதாக புகார் கூறுகின்றனர். சர்ச்சையில் பிரிஜ் … Read more

கடந்த காலத்தை மட்டுமே பேசும் பிரதமர் மோடி, பாஜக – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க் நகரில் உள்ள ஜாவிட்ஸ் மையத்தில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது: பிரதமர் மோடியும் பாரதிய ஜனதா கட்சியினரும் எதிர்காலத்தைப் பற்றி பேசுவதில்லை. தங்களுடைய தோல்வியை மறைக்க கடந்த கால ஆட்சியாளர்கள் மீது குறை கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதும் ரயில் விபத்து நடந்தது. அப்போது, ரயில் விபத்து ஏற்பட்டதற்கு பிரிட்டிஷாரின் தவறுதான் காரணம் என காங்கிரஸார் கூறவில்லை. அப்போதைய ரயில்வே … Read more

சிபிஐ வந்தாச்சு… ஒடிசா பாலசோரில் ரயில் விபத்து எப்படி நடந்தது? சோதனையில் சிக்கும் ஆதாரங்கள்!

கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு நிகழ்ந்த ஒடிசா ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் பெரிதும் உலுக்கியது. பாலசோர் மாவட்டம் பகனகா பஸார் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என மொத்தம் மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் 275 பேர் பலியாகினர். ஜூன் 2, 2023 என்பது இந்திய வரலாற்றில் பெரும் சோகச் சுவடாக மாறி நிற்கிறது. ஒடிசா விபத்திற்கு காரணம் … Read more

செல்வத்தின் பெரும் பகுதியை நன்கொடையாக வழங்கும் தொழிலதிபர் நிகில் காம்த்…!

இந்திய கோடீஸ்வரரும், ஜிரோதா நிறுவனத்தின் இணை நிறுவனருமான 34 வயதான நிகில் காமத் தனது செல்வத்தின் பெரும் பகுதியை “தி கிவிங் ப்ளெட்ஜ்” தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளார். பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட்டால் நிறுவப்பட்ட “தி கிவிங் ப்ளெட்ஜ்” அமைப்புக்கு ஏற்கனவே இந்தியாவிலிருந்து அசிம் பிரேம்ஜி, கிரண் மசூம்தார்ஷா, ரோகினி நந்தன் நிலேகனி ஆகிய மூவர் பெருமளவு நன்கொடை வழங்கி இருந்தனர். அந்த வரிசையில் ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி 3.45 பில்லியன் டாலர் நிகர … Read more