டெல்லியில் பூடான் மன்னருக்கு வரவேற்பு!

புதுடெல்லி: இரண்டு நாள் அரசு பயணமாக பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்ங்யெல் வாங்சுங் இந்தியா வந்துள்ளார். நேற்று காலை டெல்லி விமான நிலையம் வந்த ஜிக்மே கேசரை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார். பின்னர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது. பூடான் அரசர் ஜிக்மே இந்தியாவுக்கு வந்துள்ளதை வரவேற்கிறோம். மாட்சிமை தாங்கிய அவரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவு … Read more

ஊழலில் இருந்து நாட்டை விடுவிப்பது முக்கிய பொறுப்பு: சிபிஐ வைர விழாவில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு வைரவிழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது. ஜனநாயகம் மற்றும் நீதிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது. எனவே, ஊழலை இந்தியாவிலிருந்து அகற்றுவதே சிபிஐ-யின் முக்கிய பொறுப்பாக இருக்க வேண்டும். ஊழலை எதிர்த்து போராடுவதில் அரசு மன உறுதியுடன் செயல்படுகிறது. நாட்டு குடிமக்களின் முதல் விருப்பம் ஊழல்வாதிகள் யாரும் தப்பிவிடக்கூடாது என்பதுதான். ஊழல் என்பது சிறிய குற்றமல்ல. … Read more

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல்: பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரச்சாரம் செய்ய திட்டம்

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக தீவிரமாக உள்ளது. அதற்காகப் பிரதமர் மோடி பங்கேற்கும் 20-க்கும் மேற்பட்ட கூட்டங்களை பாஜக-வினர் ஏற்பாடு செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிற‌து. தேர்தல் முடிவுகள் 13-ம் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா … Read more

சீண்டி பார்க்கும் சீனா… அருணாச்ச பிரதேசத்தின் 11 இடங்களுக்கு ‘புதிய’ பெயர் சூட்டி வரைபடம் வெளியீடு!

அருணாச்சலப் பிரதேச விஷயத்தில் இந்தியாவை சீண்டும் வகையில், சீனா மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை “திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்” என்று பெயரிட்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னதாக அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா ஜி20 மாநாட்டின் கூட்டம் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, சீனா இவ்வாறு வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இந்த மாநாட்டின் கூட்டத்தில் சீனா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  சீன, திபெத்திய மற்றும் பின்யின் ஆகிய மொழிகளில் சீனாவின் சிவில் விவகார … Read more

மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த தந்தை.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கொட்டியூர் அருகே உள்ள கேளகம் பகுதியில் வசித்து வந்தவர் லிஜோ ஜோஸ் (33). அவரது மகன் நெபின் ஜோசப் (6). நெபின் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளார். நேற்று லிஜோ ஜோஸ் தனது மகனுக்கு நீச்சல் சொல்லிக் கொடுப்பதற்காக அருகில் உள்ள பாவலிப் புழா ஆற்றுக்கு அழைத்துச் சென்றார். இருவரும் பாவலிப் புழா ஆற்றில் உள்ள தடுப்பணையில் குளித்து வந்த நிலையில், லிஜோ ஜோஸ் தனது … Read more

மாதத்தில் 20 நாள் மக்களை சந்திக்க வேண்டும்: அமைச்சர்கள், எம்எல்ஏ.க்களுக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

அமராவதி: ஆந்திராவில் அடுத்த வருடம் மக்களவைத் தேர்தலுடன் மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற எம்எல்சி தேர்தலில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 4 எம்எல்ஏ.க்கள் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். இது முதல்வர் ஜெகன்மோகனுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில், முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் அமராவதியில் நேற்று அமைச்சர்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெகன் பேசியதாவது. … Read more

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு: மனிஷ் சிசோடியாவின் காவல் ஏப்ரல் 17 வரை நீட்டிப்பு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்மாநில முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டித்து ரூஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. டெல்லியில் புதிய மதுபான கொள்கை நடைமுறைப்படுத்தியதில் சில நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதும், அதற்கு பிரதிபலானாக ரூ.100 கோடி வரை லஞ்சம் பணம் கைமாறியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதில், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட பலருக்கு … Read more

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் 2023: வாட்ஸ்-அப் குரூப், லீகல் டீம், சோஷியல் மீடியா டீலிங்… கட்சிகள் பலே வியூகம்!

கர்நாடக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வாக்குப்பதிவு மே 10ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதியும் நடத்தப்படுகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி கட்டிலில் அமரும். இங்கு போட்டி என்பது பாஜக, காங்கிரஸ் , மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டியாகவே அமைந்துள்ளது. மும்முனை போட்டி அதிலும் ஓல்டு மைசூரு மண்டலத்தை ஒதுக்கி வைத்தால் பாஜக, காங்கிரஸ் என இருமுனைப் போட்டியாக களம் அமையும். … Read more

காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 59 மருந்துகள் தரமற்றவை..!!

இந்தியா முழுவதும் விற்பனைசெய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆய்வின்போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் 1,251 மருந்துகள் ஆய்வுக்குஉட்படுத்தப்பட்டன. அதில், காய்ச்சல், சளி, கால்சியம், இரும்புச்சத்து, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 59 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததுகண்டறியப்பட்டது. பெரும்பாலானவை இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் … Read more

புகழ்பெற்ற தலைவர் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்..!!

நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளின் அடிப்படையில், அந்தந்த நாடுகளில் அவரவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு தொடர்பாக சர்வதேச ஆய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் ஆய்வு மேற்கொண்டுள்ளது. கடந்த மார்ச் 22 முதல் 28 வரையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம் பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் வயது வந்தவர்களிடம் இந்த கருத்துக் கணிப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 22 தலைவர்களின் பட்டியலை மார்னிங் கன்சல்ட் வரிசைப்படுத்தி உள்ளது. அதன்படி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி … Read more