பிஹார் பாலம் இடிந்த விவகாரம்: கட்டுமான நிறுவனத்துக்கு நோட்டீஸ்

பாட்னா: பிஹாரில் கங்கை ஆற்றின் நடுவே கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்த விவகாரத்தில், அதன் கட்டுமான நிறுவனத்துக்கு அம்மாநில அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து பிஹார் மாநில சாலை மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரத்யாய் அம்ரித் கூறுகையில், “பிஹார் ராஜ்ய புல் நிர்மான் நிகம் நிறுவனத்தின் இயக்குநர், இடிந்து விழுந்த பாலத்தின் கட்டும் பணியினை மேற்கொண்டு வந்த ஹரியாணாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். … Read more

ஒடிசா ரயில் விபத்தில் மின்சாரம் தாக்கி 40 பேர் பலி… அதிகாரிகள் தகவலால் அதிர்ச்சி!

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா ரயில் விபத்துமேற்கு வங்க மாநிலம் ஷாலிமர் – சென்னை கோரமண்டல் விரைவு ரயில் பெங்களூரு-ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் மற்றும் ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த வெள்ளிக் கிழமை விபத்துக்குள்ளானது. நாட்டையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்ததிய இந்த கோர விபத்தில் 278 பேர் … Read more

ஒடிசா  ரயில் விபத்து | செய்தி பரபரப்புக்காகவே சிபிஐ விசாரணை – காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே நிர்வாகம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்திருப்பது, செய்தி பரபரப்பிற்காகவும், காலக்கெடுவை நீட்டிப்பதற்காகவுமே என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ள பதிவில், “பாலசோர் ரயில் விபத்து குறித்து ரயில்வேயின் பாதுகாப்பு ஆணையர் இன்னும் தனது அறிக்கையை சமர்ப்பிக்காத நிலையில், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தலைப்புச் செய்தி பரபரப்புக்காவும், காலக்கெடுவை நீட்டிப்பதற்காகவும் மட்டுமே இவ்வாறு செய்யப்படுகிறது” … Read more

அரபிக் கடலில் உருவாகும் புயல் பெயர் "பிபர்ஜாய்"… என்ன அர்த்தம் தெரியுமா?

அடுத்த 12 மணி நேரத்தில் அரபிக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர் வெளியாகியுள்ளது. 12 மணி நேரத்தில் புயல்தென் கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.​ சிவப்பு நிற லெஹாங்காவில் அழகு தேவதையாய் ஸ்ரீதேவி விஜயக்குமார்… அசத்தல் போட்டோஸ்!​எந்த திசையில்இந்த புயல் செல்லும் பாதை குறித்த தகவல் … Read more

Odisha Train Tragedy | 7 பேரின் உடலுக்கு கீழே சிக்கிய தம்பியை காப்பாற்றிய அண்ணன்

கட்டாக்: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பாஹாநாகா பஜார் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒடிசா மாநிலம் போக்ராய் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் சிக்கி உள்ளனர். அந்த குடும்பத்தில் 10 வயது சிறுவன் தேபேசிஷ் பத்ரா. ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். தனது தாய், தந்தை, அண்ணனுடன் ரயிலில் கடந்த வெள்ளிக்கிழமை பயணித்தான். பத்ராக் பகுதியில் உள்ள மாமா வீட்டுக்கு அவர்கள் சென்று கொண்டிருந்தனர். … Read more

அடுத்த 24 மணி நேரத்தில் புயல்… இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதிஅரபிக் கடலில் காற்றழுத்தம் உருவாகி உள்ளதாகவும் அடுத்த சில நாட்களில் இந்த காற்றழுத்தம் தீவிர புயலாக வலுவடையும் என்றும் ஐரோப்பிய வானிலை மையம் கடந்த வாரமே தனது வானிலை முன்னறிவிப்பில் அறிவித்தது. இதனை இந்திய தனியார் வானிலை ஆய்வாளர்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்து வந்தனர்.​ … Read more

அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து செல்போன் அழைப்பு வந்தால் ஏற்க வேண்டாம் – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து செல்போனில் அழைப்பு வந்தால் எடுக்காதீர்கள் என்று தொலைத் தொடர்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சைபர் குற்றங்கள் மற்றும் ஸ்பாம் அழைப்புகள் தொடர்பான பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அழைப்பவர் அடையாளத்தை குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பும் வரை அறிமுகம் இல்லாதவரின் அழைப்பை ஏற்க வேண்டாம் என்று கூறினார். தொலைத் தொடர்பு மோசடிகள் குறித்து புகார் அளிக்க சஞ்சார் சாத் என்ற இணையதளத்தையும் அண்மையில் அவர் தொடங்கி வைத்தார். Source link

இந்தியாவின் சேவைத் துறையில் 13 ஆண்டுகளில் 2-வது வலுவான வளர்ச்சி

புதுடெல்லி: இந்தியாவின் சேவைத் துறை வளர்ச்சி 13 ஆண்டுகளில் இரண்டாவது வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதற்கு, தேவையில் ஏற்பட்ட சாதகமான நிலை மற்றும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்தது முக்கிய காரணங்களாக அமைந்தன. எஸ்&பி குளோபல் இந்தியா சர்வீசஸ் மதிப்பீட்டின்படி பிஎம்ஐ பிசினஸ் ஆக்டிவிட்டி குறியீடு ஏப்ரல் மாதத்தில் 62 ஆக இருந்த நிலையில், மே மாதத்தில் 61.2 ஆக குறைந்தது. இந்திய சேவை துறையின் வளர்ச்சி ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதத்தில் குறைந்திருந்தாலும் 2010 … Read more

மே மாதத்தில் மின்சார வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரிப்பு

மே மாத வாகன விற்பனையில் மின்சார வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 8 சதவீதமாகும். ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மாற்றமில்லாமல் வைத்திருந்தால் மின்சார வாகனங்களின் தேவை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விநியோக ரீதியாக உள்ள சிக்கல்கள் போன்றவை எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும். எனினும் திருமண சீசன் காலங்களில் இருசக்கர வாகனங்களின் விற்பனை சாதகமாகவே உள்ளது. மே மாதத்தில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. Source link

மணிப்பூரில் மீண்டும் வன்முறை – 3 பேர் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்

இம்பால்: மணிப்பூரில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்; 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மணிப்பூரில் பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்த்தி சமூகத்தவர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், மெய்த்தி சமூகத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்தை வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 3ம் தேதி பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அம்மாநிலத்தில் திடீர் திடீரென வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த வன்முறை … Read more