‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை கோருவதன் மூலம் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக உதவுகிறது காங்கிரஸ் – பிரதமர் மோடி

பெங்களூரு: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இந்திய தேசத்துக்கு எதிரான சதியை அம்பலமாக்கியுள்ளது. அந்த படத்துக்கு தடை கோருவதன் மூலம் தீவிரவாதிகளுக்கு காங்கிரஸ் மறைமுகமாக‌ உதவுகிறது என கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதீப்டோ சென் இயக்கிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. … Read more

மணிப்பூரில் 23,000க்கும் மேற்பட்டவர்களை மீட்ட ராணுவம்.. கண்காணிப்பு தீவிரம்!

மணிப்பூரில் இனக்கலவரத்தை அடக்குவதற்காக அழைக்கப்பட்ட இந்திய ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில், மணிப்பூர் ராணுவம் வான்வழி மூலம் கண்காணிப்பு முயற்சிகளை கணிசமாக அதிகரித்துள்ளது.

புல்வாமாவில் சுமார் 6 கிலோ எடையிலான வெடிபொருள் மீட்பு

ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில், சுமார் 6 கிலோ எடையுடைய வெடிபொருள் மீட்கப்பட்டதை அடுத்து பெரும் அசம்பாவிதம்  தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஏற்கனவே ஒரு வழக்கில் கைதான பயங்கரவாதிகளின் கூட்டாளி ஒருவனிடம்  நடத்திய விசாரணையில், வெடிபொருள் பதுக்கி வைத்திருந்த தகவல் தெரியவந்ததாகவும், Arigam பகுதியில் இருந்த வெடிபொருள் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ரஜெளரியில் ஆப்ரேஷன் திரிநேத்ராவின் கீழ் மூன்றாம் நாளாக பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் … Read more

பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் சூப்பரான புது யுக்தி!!

கர்நாடகா தேர்தலில் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் புதிய யுக்தியை கையாண்டு மக்களை கவர்கின்றனர். கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் ஹூப்ளியில் சோனியா காந்தி வாக்கு சேகரித்தார். கர்நாடகா பாஜக அரசு 40 சதவீத கமிஷன் அரசு என்று கூறி காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் … Read more

ராகுல் பாத யாத்திரையை பார்த்து பாஜக.வுக்கு கலக்கம் – கர்நாடக பிரச்சாரக் கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு

பெங்களூரு: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரையை பார்த்து பாஜக கலக்கம் அடைந்துள்ளதாக முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா முதல் முறையாக ஹுப்ளியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது: நாட்டு மக்களிடையே வெறுப்பை விதைப்பதையே சிலர் வேலையாக கொண்டுள்ளனர். அவர்களுக்கு எதிராகவே ராகுல் காந்தி பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். வெறுப்பை … Read more

பாஜகவின் ஊழல் பயங்கரவாதம்! நாட்டின் சொத்துக்களை விற்கும் கட்சி! காங்கிரஸ் புகார்

Karnataka Election 2023: தட்சிண கன்னடாவின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் பிரியங்கா காந்தி, ஊழல் பயங்கரவாதம் செய்யும் பாஜக நாட்டின் சொத்துக்களை விற்கும் கட்சி என்று சாடினார்

“காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொய்களும் அம்பலமாகியுள்ளது” – கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பெண் கல்வி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்டவை பின்னுக்குத் தள்ளப்பட்டதாக பிரதமர் மோடி விமர்சித்தார். கர்நாடகாவின் சிவமொக்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ் பொய்களை பரப்பி வருவதாகவும், அதனால் அவர்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் அரசியல் மற்றும் வளர்ச்சி வெறும் காகித அளவில் மட்டுமே இருக்குமெனவும், காங்கிரசால் ஒருபோதும் கர்நாடகவின் வளர்ச்சிக்கு உதவ முடியாது எனவும் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், ரஷ்யா – உக்ரைன் … Read more

4 வயது குழந்தையை வன்கொடுமை செய்த 81 வயது முதியவர்!!

சாக்லெட் வாங்கித்தருவதாக கூறி 4 வயது சிறுமியை 81 வயது முதியவர் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் மால்டா அருகே கஜோல் என்ற பகுதியில் பங்கின் சந்திர ராய் (81) என்ற முதியவர் தனியே வசித்து வந்தார். அவர் வீட்டின் அருகே 4 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர் வீட்டின் உள்ளே இருந்தனர். அப்போது அந்த முதியவர் குழந்தையுடன் சாக்லெட் வாங்கித் தருகிறேன் தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். … Read more

மணிப்பூர் கலவரம் | இதுவரை 23,000 பேர் மீட்பு; வான்வழி கண்காணிப்பை தீவிரப்படுத்திய ராணுவம்

இம்பால்: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் தற்போது இயல்பு வாழ்க்கை மெதுவாக திரும்பிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இதுவரை அங்கிருந்து 23 ஆயிரம் வெளியேற்றப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் மீண்டும் கலவரஙகள் வெடிக்காமல் இருப்பதை உறுதி செய்ய அங்கு ராணுவம் வான்வழி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவு காலை 7 மணி முதல் 10 மணி வரை தளர்வு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் வகையில் இந்த ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. வதந்திகளை நம்ப … Read more

உ.பி.யில் மது அருந்துவோர் எண்ணிக்கை உயர்வு: கள்ளச்சாராயம், கடத்தல் மீதான தடுப்பு நடவடிக்கைகள் காரணமா?

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கு கள்ளச்சாராயம், கடத்தல் உள்ளிட்டவை மீது அரசு எடுக்கும் நடவடிக்கை காரணம் எனக் கருதப்படுகிறது. உ.பி.யில் பீர் மற்றும் ஒயின் அருந்துவோர் எண்ணிக்கை பல மடங்குகள் உயர்ந்துள்ளன. இம்மாநில அரசின் ஆயத்தீர்வை துறை சார்பில் சமீபத்தில் புள்ளிவிவரங்கள் வெளியாகின. இதில், அன்றாட மதுவின் விற்பனை மூன்று பில்லியன் அளவில் உயர்ந்திருப்பது தெரிந்துள்ளது. குறிப்பாக இந்த விற்பனை கடந்த இரண்டு வருடங்கள் வரை வெறும் ஒரு பில்லியனாக மட்டுமே இருந்துள்ளது. … Read more