கோழிக்கோடு ரயிலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் பயங்கரவாத சதியா?: போலீசார் விசாரணை..!!

திருவனந்தபுரம்: கோழிக்கோடு ரயிலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் பயங்கரவாத சதியா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேகப்படும் நபர் எனக் கூறப்படும் ஒருவரின் பையில் இருந்து இந்தி, ஆங்கிலக் குறிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார், ரயில்வே போலீசார் உள்ளிட்டோர் சம்பவம் தொடர்பாக விசாரிக்கின்றனர். கோழிக்கோடு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் டைரியில் கன்னியாகுமரி என எழுதப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கால அவகாசத்தை நீட்டித்த மத்திய அரசு!

பல நகைக்கடைகளில் வாங்கப்படும் தங்கம் சுத்த தங்கமாக இருப்பதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இவ்வாறான முறைகேடுகளை தடுக்க கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் தங்க நகைகளை விற்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, இந்தியாவில் தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஹால்மார்க் மூலம் நகையின் தரம், விற்பனை தொடர்பான விவரங்களை வாடிக்கையாளர் தெரிந்து கொள்ள முடியும். நகைக்கடைகளில் விற்பனை … Read more

பீகாரில் பதற்றத்தை தணிக்க 144 தடை உத்தரவு..!!

பீகாரில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டது. நாலந்தா மற்றும் சசரம் பகுதிகளில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை உருவானது. ரோத்தாஸ் மாவட்டம் சசரம் பகுதியில் நடந்த ஊர்வலத்தின் போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு மற்றும் வன்முறை சம்பவம் நிகழ்ந்தன. அதைத்தொடர்ந்து குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல நாலந்தா மாவட்டம் பீகார்ஷெரீப் பகுதியில் … Read more

பிஹாரில் வன்முறை எதிரொலி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேரணி ரத்து

புதுடெல்லி: பிஹாரில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த மோதல் தொடர்பாக இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிஹார் ஷரிப்பீன் காவல் துறை கண்காணிப்பாளர் அசோக் மிஸ்ரா தெரவித்துள்ளார். வன்முறை நடைபெற்ற பகுதி களில் அமைதி நிலவுவதாகவும், வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிஹார் போலீஸார் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பிஹாருக்கு இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை … Read more

‘இன்னைக்கு பால் கறக்க மாட்டாங்க’ … வார விடுமுறையில் குதூகலிக்கும் மாடுகள்!

ஏறக்குறைய ஒரு வார கடின உழைப்புக்குப் பிறகு ஒரு நாள் ஓய்வு என்பது நாம் அனைவரும் விரும்பும் ஒன்று தான். ஆனால், பண்ணை விலங்குகள் பற்றி யாராவது நினைத்து பார்த்த்துண்டா… பெரும்பாலான இடங்களில் பல நாட்கள்  தொடர்ந்து வேலை வாங்கப்படுகின்றனர். ஆனால், ஜார்க்கண்டில் உள்ள சுமார் கிராமங்களில், மக்கள் தங்கள் கால்நடைகளுக்கு வாரந்தோறும் விடுமுறை அளிக்கிறார்கள்.  ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லடேஹர் என்ற பகுதியில் உள்ள 12 கிராமங்களில் பசுக்கள், எருமை மாடுகள் ஆகியவற்றுக்கு வாரம் ஒரு … Read more

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா என்ற பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் உயிரிழப்பு: பணம், துப்பாக்கிகள் பறிமுதல்

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து 2 ஏகே 47 துப்பாக்கிகளும், 10 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. 5 பேரில் இருவரிடம் தலா ரூ.25லட்சமும், மற்ற இருவரிடம் தலா ரூ.5லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஜார்க்கண்ட் போலீஸ் கூறியுள்ளது. சத்ராவில் நடந்த என்கவுன்டரில் 5 நக்சல்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் தலா 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், இருவர் … Read more

மும்பையிலிருந்து – கன்னியாகுமரி-க்கு ஸ்பெஷல் ரயிலை இயக்க மத்திய ரயில்வே முடிவு..!!

வாராந்திர சிறப்பு ரயில், ரயில் எண்- 01465, மும்பையின் முக்கிய ரயில் நிலையமான லோக் மானிய திலக் டர்மினஸ்-யில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும். அடுத்த நாள் இரவு 11.20 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும். ஏப்ரல் 6, 13, 20, 27 மற்றும் மே 4, 11, 18, 25 மற்றும் ஜூ 1 தேதி மும்பையிலிருந்து இயக்கப்படுகிறது. எல்லா வியாக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது. இதுபோல ரயில் எண் – 01466, கன்னியாகுமரியில் இருந்து மதியம் 2.15 … Read more

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் துப்பாக்கி, ஆயுதங்கள் மீட்பு: ட்ரோன் மூலம் வீசப்பட்டதாக போலீஸார் சந்தேகம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தின் சர்வதேச எல்லைப் பகுதியில், ட்ரோன் மூலம் வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொட்டலம் ஒன்றிலிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இன்று (ஏப்.3) அதிகாலையில், ராக் பரோட்டியா பகுதி ரயில்வே லைன் அருகில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மூட்டையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட மூன்று கை துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் மீட்கப்பட்டன. இதுகுறித்து சம்பா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரிந்தர் சவுத்ரி கூறுகையில், “விஜயபுர் சரகத்திலுள்ள ராக் பரோட்டியா பகுதியில் சந்தேகத்திற்கிடமான … Read more

ராகுல் காந்தி மேல்முறையீடு; எம்.பி பதவி திரும்ப கிடைக்குமா? காங்கிரஸ் வியூகம்!

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்தவர் ராகுல் காந்தி. இவர் 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது மோடி குறித்து பேசியது சர்ச்சையாக மாறியது. இதையடுத்து பாஜக பிரமுகர் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு, குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மார்ச் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராகுல் காந்திக்கு சிறை அவதூறு வழக்கில் இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் … Read more

கோழிக்கோடு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் டைரியில் கன்னியாகுமரி என எழுதப்பட்டதால் அதிர்ச்சி..!!

திருவனந்தபுரம்: கோழிக்கோடு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் டைரியில் கன்னியாகுமரி என எழுதப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பையில் இருந்த டைரியில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 3 பேர் உயிரிழந்தனர். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்தனர்.