உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு; ஏப்.12ல் விசாரணை..!!

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக அந்த அமைப்பின் தொண்டர் ராகுல்காந்தி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ராகுல் மீதான அவதூறு வழக்கு ஏப்ரல் 12ல் விசாரணைக்கு வர உள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளது.

“பிரதமர் மோடியின் கல்விச் சான்றிதழ் போலியானதா?” – குஜராத் ஐகோர்ட் தீர்ப்பைத் தொடர்ந்து கேஜ்ரிவால் கேள்வி

புதுடெல்லி: பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு கல்விச் சான்றிதழ் நகல்களை வழங்கத் தேவையில்லை என்ற குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்பு பல கேள்விகளை எழுப்புகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், “கல்வியறிவு இல்லாத அல்லது குறைவாக கல்வியறிவு கொண்ட பிரதமர் நாட்டிற்கு ஆபத்தானவர். பிரதமர் தனது கல்வி குறித்த சான்றிதழ்களை காட்டாததற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, அவரது ஈகோ. தன்னுடைய கல்விச் சான்றிதழை யாரிடமும் காண்பிக்க … Read more

சித்தூரில் பாஜக அலுவலகம் திறப்பு விழா பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களால் ஆந்திராவில் வளர்ந்து வரும் பாஜக-மாநில தலைவர் பேச்சு

சித்தூர் : பிரதமரின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால், ஆந்திர மாநிலத்தில் பாஜக வளர்ந்து வருகிறது என சித்தூரில் நடந்த விழாவில் மாநில தலைவர் சோமு வீரராஜூ பேசினார்.சித்தூர் மிட்டூர் பகுதியில் புதிதாக கட்டியுள்ள பாஜக அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி காட்சி மூலம்  அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, மீட்டூரில் நடந்த விழாவில் பாஜக மாநில தலைவர் சோமு வீரராஜூ தலைமை தாங்கி பேசியதாவது: ஆந்திர மாநிலத்தில் பாஜக … Read more

2023-ல் 75% அங்கன்வாடிகள் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் கட்டப்படும்: மத்திய அரசு

புதுடெல்லி: நடப்பாண்டில் கட்டப்படும் புதிய அங்கன்வாடி மையங்களில் 75%, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், கல்வி, பெண்கள், இளைஞர்கள், விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அறிக்கை அளித்திருக்கிறது. அதில், ”நாடு முழுவதும் இந்த ஆண்டு 27 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் அமைக்க வேண்டிய தேவை உள்ளது. இதில், சுமார் … Read more

ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபடுவர் முதல்வர் ஜெகன்மோகன்-திருப்பதி எம்எல்ஏ பேச்சு

திருப்பதி : ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபடுபவர் முதல்வர் ஜெகன்மோகன் என திருப்பதி எம்எல்ஏ கருணாகர  பேசினார்.திருப்பதி இந்திரா மைதானத்தில், ஒய்எஸ்ஆர் ஆசரா திட்டத்தின் கீழ் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 3வது தவணையாக காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், எம்எல்ஏ  கருணாகர , மாநகராட்சி ஆணையர் அனுபமா அஞ்சலி, துணை மேயர் முத்ரா நாராயணா, கார்ப்பரேட்டர்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், எம்எல்ஏ கருணாகர  மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ₹8.12 … Read more

“பாகிஸ்தானில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை; பிரிவினை தவறென நினைக்கிறார்கள்” – ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து

போபால்: சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையிலும் பாகிஸ்தானில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றும், இந்தியப் பிரிவினை தவறு என தற்போது அவர்கள் நம்புகிறார்கள் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். புரட்சியாளரும், சுதந்திர போராட்ட வீரருமான ஹேமு கலாணியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்து கொண்டார். இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அதில் … Read more

2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.15,920 கோடிக்கு ராணுவ உபகரணங்கள் ஏற்றுமதி – அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவிப்பு

2022-23-ம் நிதியாண்டில் இந்தியா 15 ஆயிரத்து 920 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இது முன்னெப்போதும் இல்லாத உயர்வு எனவும் ராஜ்நாத்சிங் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டின் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி தொடர்ந்து அதிவேகமாக வளரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2024-25 ம் நிதியாண்டுக்குள் ராணுவ ஏற்றுமதியை 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. Source … Read more

புதுச்சேரி அடுத்த சுல்தான்பேட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்..!!

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த சுல்தான்பேட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுல்தான்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பிய 2 பேர் G Pay-ல் பணம் அனுப்புவதாக கூறியுள்ளனர். தங்களிடம் G-Pay இல்லை என்று கூறிய பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

குட் நியூஸ்..!! வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.76 குறைந்தது..!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 351 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால், … Read more

2022 – 23 நிதி ஆண்டில் இந்தியாவின் ராணுவ வன்பொருள் ஏற்றுமதி ₹15,920 கோடி: ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: கடந்த 2022-23 நிதியாண்டில் இந்தியா ₹15,920 கோடி மதிப்புள்ள ராணுவ வன்பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த நிதி ஆண்டு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அதில் நமது ராணுவ வன்பொருள் ஏற்றுமதி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், அது குறித்த விவரங்களையும் பகிர்ந்துள்ளார். அதன்படி, கடந்த 2022-23 நிதி ஆண்டில் இந்தியாவின் வன்பொருள் ஏற்றுமதி ₹15,920 கோடி. … Read more