ஒடிசா ரயில் விபத்து | உயர்மட்ட விசாரணைக் குழு அமைப்பு: ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்

புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும், ரயில் பாதுகாப்பு ஆணையரும் சுதந்திரமான விசாரணை மேற்கொள்வார் என்று ரயில்வே துறை அமைச்சர் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் நேற்று (ஜூன் 2) சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 233 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் … Read more

ஒடிசா ரயில் விபத்து: ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் ஆய்வு!

மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுராவுக்கு சென்று கொண்டிருந்த சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், மற்றொரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே விபத்துக்கு உள்ளானது. ஒடிசாவில் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 900க்கும் அதிகமானோர் படு காயமடைந்துள்ளனர். 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக … Read more

ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதி விபத்து – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு 233 பேர் உயிரிழப்பு

பாலசோர்: ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 233-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னைசென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்தபோது, தண்டவாளத்தில் … Read more

குவியல் குவியலாக சடலங்கள்… பதை பதைக்க வைக்கும் காட்சிகள்… நாட்டிய உலுக்கிய கோர விபத்து!

ஒடிசாவில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 233 பேர் பலியாகியுள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ரயில் விபத்துஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாக பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக் கொண்டன. ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஏற்கனவே அங்கு தடம் புரண்டிருந்த பெங்களூரு – ஹவுரா ரயில் மீதும் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீதும் மோதி … Read more

ரயில் விபத்து நடந்தது எப்படி? வெளியானது அதிர்ச்சி தகவல்

ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.  பெங்களூர் யஷ்வந்த்புரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த அதிவிரைவு ரயிலின் சில பெட்டிகள் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரவு 7 மணியளவில் தடம் புரண்டன. இதில் இரண்டு பெட்டிகள் அருகில் இருந்த இணை தண்டவாளத்தின் மீது சரிந்தன. அப்போது மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து சென்னையை நோக்கி நேற்று பிற்பகலில் புறப்பட்ட கொரமண்டல் … Read more

மக்களவையில் இருந்து தகுதி நீக்கத்தை கற்பனையிலும் நினைக்கவில்லை – ராகுல் காந்தி ஆதங்கம்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவின் மூன்று நகரங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய மாணவர்களின் கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 2000-ம் ஆண்டு அரசியலில் இணைந்தபோது இப்படியெல்லாம் நடக்கும் என்பதை நான் நினைத்துப்பார்க்கவில்லை. குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினராக மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவேன் என்பதை கற்பனையிலும் எண்ணிப்பார்க்கவில்லை. ஆனால், தற்போது … Read more

கோரமண்டல் ரயில் விபத்து | ஒடிசாவில் 3 ரயில்கள் மோதியது எப்படி; தமிழ் பயணிகள் நிலை என்ன?

பாலாசூர்: ஒடிசா ரயில் விபத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இரண்டு பயணிகள் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய விபத்து ஒடிசாவில் நேற்று நடந்தது. ஒரு ரயில் தடம் புரண்ட மற்றொரு பெட்டியின் மீது மோதியதால் பல பெட்டிகள் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 207 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் அறிவித்துள்ளார். நடந்தது என்ன?: … Read more

குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 – கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவி தொகையாக 2 ஆயிரம் ரூபாய், 25 வயது வரை உள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய், டிப்ளமோ படித்தவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை ஆயிரத்து 500 ரூபாய் ஆகியவற்றை வழங்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பேருந்தில் இலவச … Read more

ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: மணிப்பூர் வன்முறையாளர்களுக்கு அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை

இம்பால்: மணிப்பூரில் 38 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் 53 சதவீதம் பேர் மேதேயி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மணிப்பூர் மாநில அரசியலில் இவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தற்போதைய முதல்வர் பிரேன் சிங் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர். மணிப்பூரில் குகி, நாகா, அங்கமிஸ், லூசாயிஸ், தாட்வாஸ் உள்ளிட்ட சமுதாயங்களை சேர்ந்த மக்கள் மலைப்பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் மேதேயி சமுதாய மக்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு … Read more

கோரமண்டல் உள்பட 3 ரயில்கள் விபத்து… வெளியான சென்னை பயணிகள் விவரம்!

Coromandel Express Train Accident: கோரமண்டல் ரயில் விபத்தில் 30 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படும் நிலையில், இதில் சென்னைக்கு முன்பதிவு மேற்கொண்டிருந்த பயணிகளின் பட்டியலும் வெளியாகியுள்ளது.