மோடி சர்டிபிகேட் வேணுமா.. 25000 ஃபைன் கட்டுங்க.. கேஜ்ரிவாலை அலறவிட்ட குஜராத் ஹைகோர்ட் – என்னாச்சு?

காந்திநகர்: குஜராத் உயர் நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை பற்றிதான் ஒட்டுமொத்த நாடே பேசிக்கொண்டு இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் கல்விச் சான்றிதழை கேட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது குஜராத் உயர் நீதிமன்றம். ஏற்கனவே ராகுல் காந்தி விவகாரத்தில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பே பெரும் பேசுபொருளாகிய நிலையில், குஜராத் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, இந்த தீர்ப்பால் … Read more

உலகிலேயே முதல்முறையாக கொல்கத்தாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், தாவர பூஞ்சை நோயால் பாதிப்பு..!

உலகிலேயே முதல்முறையாக கொல்கத்தாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், உயிரைப்பறிக்கும் தாவர பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 61 வயதான அந்த நபர், தொண்டை அழற்சி, சோர்வு, பசியின்மை உள்ளிட்ட பிரச்சனைகளுடன் மருத்துவமனைக்குச்சென்றுள்ளார். சி.டி.ஸ்கேனில் அவரது கழுத்தின் வலது பக்கத்தில் சீழ் கட்டியிருந்தது தெரியவந்தது. சீழை எடுத்து உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவுக்கு அனுப்பியதில், தாவரங்களுக்கு ஏற்படும் “காண்ட்ரோஸ்டீரியம் பர்பூரியம்” ( Chondrostereum purpureum ) என்ற தாவர பூஞ்சை நோய் பாதித்திருந்தது தெரியவந்தது. தாவர பூஞ்சையியல் ஆராய்ச்சியாளரான … Read more

பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு

காந்திநகர்: பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை வழங்க தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டதை குஜராத் ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழங்க உத்தரவிட்டது ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சான்றிதழ் விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் கோர்ட் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. பிரதமர் மோடியின் சான்றிதழ் நகலை வழங்க வேண்டும் என ஒன்றிய தகவல் ஆணையம் கடந்த 2016ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. … Read more

ஒரு கொசு வர்த்தியால் ஆறு பேர் உயிரிழந்த சோகம்!!

கொசுவர்த்தியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் கொசுத்தொல்லை அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் கொசுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு தூங்குவதை அப்பகுதி மக்கள் வழங்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் ஒரு குடும்பத்தினர் வழக்கம் போல் இரவு கொசுவர்த்தி ஏற்றிவைத்து விட்டு அனைவரும் தூங்கிவிட்டனர். மறுநாள் காலை வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார், கதவை … Read more

முதலமைச்சருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த நீதிமன்றம்!!

பிரதமர் மோடியின் கல்லூரி பட்டப்படிப்பு விவரங்களை வெளியிடக்கோரிய வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி தகுதி குறித்து அறிந்து கொள்ள, அவர் பட்டம் பெற்றதாக கூறப்படும் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கோரியிருந்தார். கேட்கப்பட்ட தகவல் 3ஆம் தரப்பினருடையது எனக்கூறி, அதை அளிக்க டெல்லி மற்றும் குஜராத் … Read more

அவுரங்காபாத்தில் ராமநவமி விழாவில் வன்முறை: அரசியல் சாயம் பூசவேண்டாம் என பட்னாவிஸ் வேண்டுகோள்

அவுரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் நடந்த ராமநவமி விழாவில் இளைஞர்கள் சிலர் மோதிக்கொண்டனர். இதை தடுக்க முயன்ற போலீஸார் மீது 500-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது. அவுரங்காபாத் கிரத்புரா பகுதியில் புனரமைக்கப்பட்ட ராமர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமநவமி விழா நேற்று முன்தினம் இரவே களைகட்டியிருந்தது. பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், கோயிலுக்கு அருகில் இளைஞர்கள் சிலர் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். இதையடுத்து 500-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அங்கிருந்த போலீஸார் மீது … Read more

கர்நாடக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா; தேர்தல் திக்… திக்… உடையும் சீக்ரெட்!

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவும், 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் , பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அடுத்தகட்டமாக வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் பிரச்சாரம், வாக்குறுதிகள் என தேர்தல் களம் சூடுபிடிக்கவுள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.எல்.ஏ ராஜினாமா இன்றைய தினம் குட்லிகி சட்டமன்ற தொகுதி பாஜக எம்.எல்.ஏ என்.ஒய்.கோபாலகிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா … Read more

இந்திய ரூபாயை சர்வதேச கரன்சியாக மாற்ற திட்டம்..!

2023 ஆம் ஆண்டிற்கான புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை, டெல்லியில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டார். வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பை, 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்த, அதில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாலரை போல், இந்திய ரூபாயை சர்வதேச கரன்சியாக மாற்றும் முன்னெடுப்புகளுடன் இந்த வர்த்தக கொள்கை உருவாக்கப்பட்டுள்ள நிலையில், முதலில் டாலர் கையிருப்பு பற்றாக்குறையுள்ள நாடுகளுடன் இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள … Read more

ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு..!!

டெல்லி: ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. புதிய மதுபான கொள்கை முறைகேடு குறித்து சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்க டெல்லி கோர்ட் மறுத்துவிட்டது.

பிரதமர் மோடியின் எம்ஏ பட்டம் விவகாரம்: மத்திய தகவல் ஆணைய உத்தரவை ரத்து செய்தது குஜராத் ஐகோர்ட்

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் முதுகலை பட்டம் குறித்த தகவல்களை அளிக்க உத்தரவிட்ட மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி எம்ஏ பட்டம் பெற்றதற்கான சான்றிதழ் நகலை வழங்கக் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த 2016-ம் ஆண்டு மத்திய தகவல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அவரது கடித்தைப் பரிசீலித்த அப்போதைய மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சாரியலு, பிரதமர் மோடி முதுகலை பட்டம் … Read more