பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தலைமை நீதிபதியின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் சட்டம் நிறைவேறியது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தலைமை நீதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் சட்டம் நேற்று நிறைவேறியது.  பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும்  சட்ட மசோதாவை அந்நாட்டின் சட்ட அமைச்சர் அசாம் நசீம் தரார் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.  அப்போது எதிர்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் எம்பி.க்கள் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும், தனிப்பெரும்பான்மை உடன் ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவது என்பது முறையற்றது. நாடாளுமன்ற விவாதத்துக்கு … Read more

ராமநவமி விழாவில் சோகம்ம.பியில் படிக்கட்டு கிணறு இடிந்த விபத்தில் 13 பேர் பலி

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராமநவமி விழாவில் படிக்கட்டு கிணறு சரிந்து விழுந்த விபத்தில் இதுவரை 13 பேர் பலியாகினர். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் படேல் நகரில் உள்ள பலேஷ்வர் மகாதேவ் ஜுலேலால் என்ற புகழ்பெற்ற பழமையான கோயிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். விழாவின் ஒருபகுதியாக நடைபெற்ற தீப சடங்கை முன்னிட்டு, அங்கிருந்த படிக்கிணற்றில் குளிக்க பக்தர்கள் முண்டியடித்து கொண்டு உள்ளே இறங்கினர். அப்போது பாரம் தாங்காமல் கிணற்றின் படிக்கட்டுகள் சரிந்து … Read more

அரிய வகை நோய் மருந்துகள் இறக்குமதிக்கு வரிவிலக்கு

புதுடெல்லி: அரிய நோய்களுக்கான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ தேவைகளுக்கான உணவுகளுக்கு இறக்குமதி வரி விலக்கு அளித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இறக்குமதி வரி விலக்கு  ஏப்ரல் 1ம் தேதி(நாளை) முதல் அமலுக்கு வரும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவாக மருந்துகளுக்கு அடிப்படையாக 10% இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. சில உயிர் காக்கும் நோய்களுக்கும், தடுப்பூசிகளுக்கும் சலுகை விகிதத்தில் 5% இறக்குமதி வரி அல்லது 0% இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், … Read more

பாபர் மசூதி விவகாரம் ஆக்கிரமிப்பு இடத்தை ஒப்படைக்க உச்ச நீதிமன்றத்தில் அரசு மனு

புதுடெல்லி: பாபர் மசூதி விவகாரத்தில் கட்டுமானத்திற்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடத்தை மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அனுமதி கோரி ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. பாபர் மசூதி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட எந்த தடையும் கிடையாது என கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி தீர்ப்பு வழங்கியது.  இதையடுத்து, ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பாக ராமர் கோயில் கட்டும் பணியானது துவங்கி தொடர்ந்து நடந்து … Read more

கொரோனா: 3 ஆயிரத்தை தாண்டிய ஒரு நாள் பாதிப்பு; ஒன்றிய அரசு ரெட் அலர்ட்.!

கடந்த 6 மாதங்களுக்கு பிறகு, இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா அதிகரிப்பு இந்தியாவில் கடந்த சிலநாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,000, 2,000 என உயர்ந்து கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறும், தடுப்பூசி இயக்கத்தை அதிகப்படுத்துமாறும் ஒன்றிய சுகாதரத்துறை அமைச்சகம், மாநிலங்களுக்கு சமீபத்தில் கடிதம் எழுதியது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா … Read more

போலீஸ் வாகனம் மீது குண்டு வீச்சு பாகிஸ்தானில் 4 போலீசார் பலி

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள லக்கி மார்வாட் நகரில் காவல்நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நேற்று காலை தாக்குதல் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போலீஸ் வாகனத்தில் போலீசார் விரைந்தனர். அப்போது போலீஸ் வாகனத்தின் மீதும் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவங்களில் 4 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு பாகிஸ்தான்  தலிபான்கன் பொறுப்பேற்றுள்ளனர்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி சர்ப்ரைஸ் விசிட்

புதுடெல்லி: நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி சர்ப்ரைஸ் விசிட் மேற்கொண்டு, பணிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம், வைஸ்ராய் லார்ட் இர்வினால் கட்டப்பட்டது. இது, சுமார் 96 வருடங்களுக்கு முன் ஜனவரி 18-ல் திறக்கப்பட்டு இன்று வரை செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் கூடுதல் வசதிகளுக்காக புதிய கட்டிடம் … Read more

ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தின்போது கோவிலில் பற்றிய தீ: அலறி அடித்துக் கொண்டு வெளியேறிய பக்தர்கள்

அமராவதி: ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தின் போது கோயிலில் தீப்பற்றியதால் பக்தர்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர். ஸ்ரீராம நவமி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் தனுகு மண்டலத்தில் துவா கிராமத்தில் வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. அந்த கோயிலில் ஸ்ரீராம நவமிக்கான பூஜையையொட்டி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருப்பதற்காக பனை ஓலையை கொண்டு கோயில் முழுவதும் நிழற்பந்துகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று … Read more

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ

அகர்டல: திரிபுரா சட்டப்பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ சிக்கினார். பேரவை நடந்து கொண்டிருந்த போது பாஜக எம்எல்ஏ ஜாதவ் லால் நாத் ஆபாச படம் பார்த்ததால் பரபரப்பு நிலவியது. விளக்கம் கேட்டு, பாஜக எம்எல்ஏ ஜாதவ் லாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹவுரா ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை: போலீஸ் குவிப்பு – மம்தா கண்டனம்

ஹவுரா: இன்று (மார்ச் 30) நாடு முழுவதும் ஸ்ரீ ராம நவமி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இதனால் சம்பவ இடத்தில் வாகனங்கள் மீது கற்கள் வீசியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் இருந்தனர் வன்முறையில் ஈடுபட்டவர்கள். வன்முறையை தடுக்கும் நோக்கில் அந்த இடத்தில் போலீஸ் படை அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளது. இதை செய்தவர்கள் தேச விரோதிகள் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். … Read more