தேசியவாத காங். தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத் பவார் அறிவிப்பு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்துள்ளார். சரத் பவாரின் சுயசரிதை வெளியீட்டு விழா நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அப்போது பதவி விலகலை அறிவித்த சரத் பவார், பொது வாழ்க்கையில் தொடர்ந்து நீடித்தாலும், தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்தார். சரத் பவாருக்கும், அவரது அண்ணன் மகன் அஜித் பவாருக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சரத்பவார் தனது அறிவிப்பை திரும்பப்பெறக்கோரி மகராஷ்டிராவின் பல … Read more

டெல்லி திஹார் சிறையில் பிரபல கேங்ஸ்டர் அடித்துக் கொலை

புதுடெல்லி: டெல்லி ரோஹிணி நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய பிரபல கேங்ஸ்டர் டில்லி தஜுபுரியா திஹார் சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். எதிர் கோஷ்டியினரால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரத்தக்காயங்களுடன் தஜுபுரியாவை மீட்ட சிறைக்காவலர்கள் அவரை தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யார் இந்த டில்லு தஜுபுரியா? டெல்லியைச் சேர்ந்த பிரபல … Read more

எஸ்.ஐ. மகளுக்கு கோவிலுக்குள் வைத்து தாலி கட்டிய இளைஞர்.. கதவை பூட்டிக் கொண்டு அடம்.. இப்படியும் சம்மதம் வாங்கலாமா ?

சப் இன்ஸ்பெக்டர் மகளை ராமர் கோவிலுக்குள் கூட்டிச்சென்று தாலி கட்டிய இளைஞர், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி காதலியுடன் கோவில் கதவுகளை பூட்டிக் கொண்டு வெளியே மறுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது… சினிமா பாணியில் கோவிலுக்குள் சென்று திருமணம் செய்து கொண்ட பின்னர் கோவிலை பூட்டிக் கொண்டு வெளியே வர மறுத்த கறார் காதல் ஜோடி இவர்கள் தான்..! ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மசூலிப்பட்டினம் அருகே உள்ள புத்தாளபாளையம் கிராமத்தின் கிராம நிர்வாக … Read more

கோவில் கதவை பூட்டிக்கொண்டு திருமணம் செய்த ஜோடி!!

காதல் ஜோடிகள் கதவைப் பூட்டிக்கொண்டு கோவிலுக்குள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினம் அருகே புத்தாளபாளையம் கிராம நிர்வாக செயலகத்தில் பணியாற்றி வரும் நாகராஜு, காயத்ரி ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். பெண்ணின் தந்தை உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இரண்டு பேரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் பெண் வீட்டார் தரப்பில் மிகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதல் … Read more

திடீரென சேவையை நிறுத்தும் விமான நிறுவனம்!!

திவாலாகிவிட்டதால் கோ பஸ்ட் விமான நிறுவனம் நாளை முதல் 3 நாட்களுக்கு சேவையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. பி அண்ட் டபுள்யூ இண்டர்னேஷனல் ஏரோ எஞ்சின் என்ற அமெரிக்க நிறுவனம் கோ பஸ்ட் நிறுவனத்திற்கு எஞ்சின் வழங்கி வந்தது. ஆனால் அந்த நிறுவனம் வழங்கிய எஞ்சின்கள் சமீப காலமாக அதிகம் பழுதடைகின்றன. அதற்கான செலவுகளுக்கான கையிருப்பு பணம் இல்லாததாலும் விமான சேவையை தொடர முடியவில்லை என்று கோ பஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தாங்கள் திவாலாகிவிட்டதாக கோ … Read more

இந்தியாவில் புதிதாக 3,325 பேருக்கு கோவிட்: மொத்த பாதிப்பு 45,000க்கு கீழ் குறைந்தது

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,325 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 44,175 ஆக குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் புதிதாக 3,325 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 44,175 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் 17 பேர் உயிரிழந்தனர். இதுவரை தொற்றால் … Read more

நட்சத்திர பிரச்சாரகர்கள் ‘நாவடக்கத்தை’ கடைபிடிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்

கர்நாடக தேர்தலுக்கு முன்னதாக கட்சி சார்பாக பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பிரச்சாரகர்களால் “பொருத்தமற்ற சொற்கள் மற்றும் மொழி” பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளை தேர்தல் ஆணையம் மேற்கோள் காட்டியது.

திகார் சிறைக்குள் டெல்லியின் முக்கிய தாதா அடித்துக்கொலை

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல தாதா சிறைக்குள்ளேயே அடித்துக்கொலை செய்யப்பட்டார். டெல்லி ரோகினி நீதிமன்றத்திற்குள் கோகி என்ற தாதா கடந்த 2021-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு சிறைக்குள் இருந்தபடி தில்லு தாஜ்புரியா என்ற மற்றொரு தாதா சதித் திட்டம் தீட்டினார் என்பது போலீசாரின் சந்தேகம். இந்நிலையில், திகார் சிறையில் இருந்த தாஜ்புரியாவின் அறைக்கு மேல் மாடியில் இருந்த யோகேஷ் துண்டா தலைமையிலான 4 பேர், ஜன்னலை உடைத்து, போர்வையை கட்டி கீழே இறங்கியுள்ளனர். தூங்கிக் … Read more

மத்திய அரசு அதிரடி… நாடு முழுவதும் தடை!!

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளுக்கு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்தது. கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை விதித்து சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை … Read more

ராகுல் காந்தி மேல்முறையீடு: இடைக்கால தடை விதிக்க குஜராத் ஐகோர்ட் மறுப்பு; ஜூனில் இறுதி தீர்ப்பு

குஜராத்: ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த குஜராத் உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் ஜூன் மாதம் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 2019-ல் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி எனப் பெயர் வந்தது எப்படி?” என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் … Read more