தமிழ் வேத மந்திரங்கள் முழங்க, சர்வமத பிரார்த்தனையுடன் புதிய நாடாளுமன்றத்தை திறந்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: தமிழ் வேத மந்திரங்கள் முழங்க, சர்வமத பிரார்த்தனையுடன் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு, தமிழக ஆதீனத் தலைவர்கள் வழங்கிய செங்கோலை மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே அவர் நிறுவினார். டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க, பிரதமர் மோடி நேற்று காலை 7.30 மணி அளவில் புதிய நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்தடைந்தார். அங்கு தேசத் தந்தை மகாத்மா காந்தி சிலைக்கு … Read more

மாற்றுத்திறனாளிகளை மனதில் வைத்து சென்னையில் ‘அனைத்தும் சாத்தியம்’ அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமைகளில் உரையாற்றி வருகிறார். நேற்று நடந்த 101-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாம் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை நிறைவு செய்து, 2-வது சதத்தை தொடங்கியுள்ளோம். மக்களின் பங்களிப்புதான் இந்நிகழ்ச்சியில் மிகப் பெரிய பலம். 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி வெளிநாடுகள் பலவற்றில் இருந்தும் மக்கள் கேட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தில் … Read more

கர்நாடகா அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: சித்தராமையாவுக்கு நிதித் துறை, சிவகுமார் வசம் நீர்ப்பாசனத் துறை

பெங்களூரு: கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் செய்து இரண்டு நாட்களுக்கு பின்னர், அம்மாநில முதல்வர் சித்தராமையா அமைச்சர்களுக்கு இன்று (மே 29) இலாகாக்கள் ஒதுக்கீடு செய்துள்ளார். நிதித்துறை, தொழிலாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், உளவுத்துறை, ஐடி,பிடி, உள்கட்டமைப்பு மேம்பாடு, தகலவல் தொடர்பு ஆகிய முக்கியத் துறைகளை முதல்வர் தன்வசம் வைத்துள்ளார். துணை முதல்வர் டி.சிவகுமாருக்கு, பிற முக்கியத் துறைகளான பெரிய மற்றும் சிறிய நீர்ப்பாசனம் ப்ருஹட் பெங்களூரு மகாநகர பாலிகே (பிபிஎம்பி) உள்ளடக்கிய பெங்களூரு நகர மேம்பாடு, பெங்களூரு … Read more

என்விஎஸ்-1 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப்-12

ஸ்ரீஹரிகோட்டா: நாட்டின் வழிகாட்டுதல் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள என்விஎஸ்-1 செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வழிகாட்டி செயற்கைக்கோளான என்விஎஸ்-01 செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி மூலம் விண்ணில் செலுத்த திட்டமிட்டிருந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதற்கான கவுன்ட்டவுனை நேற்று காலை தொடங்கியது. 27.30 மணி நேர கவுன்ட்டன் முடிவில் இன்று காலை 10.42 மணிக்கு செயற்கைக்கோளை ஏந்தியவாறு ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஏவுதள மையத்தின் இரண்டாவது … Read more

ராஜஸ்தான் அரசியல் | அசோக் கெலாட், சச்சின் பைலட் உடன் கார்கே, ராகுல் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: ராஜஸ்தானில் ஆளும் கட்சியின் இருபெரும் தலைவர்களான அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும், ராகுல் காந்தியும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ராஜஸ்தானில் வசுந்தராராஜே சிந்தியா தலைமையிலான கடந்த ஆட்சியில், அரசு பணிகளை வழங்குவதில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று சச்சின் பைலட் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், ராஜஸ்தான் பப்ளிக் சர்வீஸ் கமிஷனை முழுமையாக கலைத்துவிட்டு மறுசீரமைக்க வேண்டும் … Read more

இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை அதிகரிப்புக்கு காரணம் என்ன?

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலை எப்போதுதான் குறையும் என்ற கேள்வி, ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தியாவில் எண்ணெய் விலை உயரக் காரணம் என்ன? எண்ணெய் வணிகம் எத்தகைய கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது? விலையை குறைக்க வாய்ப்பு இருக்கிறதா? – இந்தக் கேள்விகளுக்கு விடை காண்போம். இன்றியமையாத உணவுப் பொருட்களில் ஒன்று சமையல் எண்ணெய். சந்தையில் இதன் விலை உயரும்போது இருக்கும் வேகம் குறையும்போது இருப்பதில்லை. இதற்கு பல … Read more

ராகுல் காந்தி: அடுத்த தேர்தலுக்கு தயார்.. இந்த முறை 150 சீட்கள் டார்கெட்.. களத்தில் காங்கிரஸ்.!

மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில், ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த மே 10ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மெகா வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மைக்குத் தேவையான 113 தொகுதிகளைக் காட்டிலு, 135 இடங்களில் வெற்றி பெற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. தென் இந்திய மாநிலங்களில் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலத்திலும் வெறும் 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பாஜக … Read more

அசாமின் முதல் வந்தே பாரத் ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

அசாமின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரயில், அசாமின் கவுகாத்தி நகரையும், மேற்கு வங்காளத்தின் நியூ ஜல்பைகுதிரி நகரையும் இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது. 411கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் ஐந்தரை  மணிநேரத்தில் இந்த ரயில் கடந்து செல்லும். மேற்கு வங்கத்தில் 3வது ரயிலாகவும், தேசிய அளவில் 18வது ரயிலாகவும் இது இருக்கும். வாரத்தில் 6 நாட்கள் இயங்கக்கூடிய இந்த ரயிலானது … Read more

தில்லி தமிழ் சங்கத்தில் அருளாசி வழங்கிய தமிழக ஆதீனங்கள்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் வைக்கப்பட்டுள்ள செங்கோலை நேரில் வழங்க தமிழகத்தின் 20 சைவ ஆதீனங்கள் டெல்லி வந்திருந்தனர். அப்போது அவர்கள் தில்லி தமிழ் சங்கத்திற்கும் நேரில் சென்று அருளாசி வழங்கினர். அருளாசி வழங்கிய நிகழ்வில் பேரூர் ஆதீனம் ஆற்றிய உரையில், “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்ற வாக்கிற்கேற்ப சங்க நுழைவாயிலிலேயே திருவள்ளுவரின் சிலை அமைத்திருப்பது அருமை. நாட்டு விடுதலையை வரவேற்பதற்காகவே, 1946ம் ஆண்டிலேயே இந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளது போல உள்ளது. … Read more

என்.வி.எஸ் 01 செயற்கைக்கோள் உடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி எப் 12 ராக்கெட்!

51.7 மீட்டர் நீளம் கொண்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி எப் 12 ராக்கெட், 2,232 கிலோ எடை கொண்ட என்.வி.எஸ் 01 என்ற செயற்கைக்கோள் உடன் இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. முன்னதாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விஞ்ஞானிகள் செயற்கைக்கோளை மிகவும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த ஜி.எஸ்.எல்.வி எப் 12 என்பது ஜி.எஸ்.எல்.வி வரிசையில் இஸ்ரோ அனுப்பிய 15வது ராக்கெட் ஆகும். இது 420 … Read more