வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12..!

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 ராக்கெட், என்.வி.எஸ் – 01 வழிகாட்டி செயற்கைக் கோளை அதன் சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியது. சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டபடி காலை 10.42 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 ராக்கெட் நெருப்பை கக்கிக் கொண்டு விண்ணில் பாய்ந்தது. ஏவப்பட்ட 19-ஆவது நிமிடத்தில் 2-ஆம் தலைமுறை தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட தரை, வான் மற்றும் கடல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் என்.வி.எஸ்-01 செயற்கைக் கோளை ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 துல்லியமாக … Read more

அடையாள ஆவணமின்றி ரூ.2,000 மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: அடையாள ஆவணம் இல்லாமல் ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (மே 29) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஸ் குமார் சர்மா, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக” நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் பொதுமக்கள் ஒரு … Read more

மகளிருக்கு 1500 ரூ, இளைஞர்களுக்கு 3000 ரூ: ஸ்டாலினை ஓவர் டேக் பண்ணும் சந்திரபாபு நாயுடு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், திமுக அரசில் நிறைவேற்றப்படும் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தெலுங்கு தேச கட்சியின் முதலாம் கட்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கு தேச கட்சியின் மாநாடு நேற்று (மே 28) கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜ மகேந்திரபுரத்தில் நடைபெற்றது. அங்கு சந்திரபாபு நாயுடு தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அரசுப் பேருந்தில் இலவச பயணம்!தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நகரப் பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயண … Read more

அசாம் | அதிவேகத்தில் சென்ற கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்து: கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி

கவுஹாத்தி: அசாம் தலைநகர் குவாஹாட்டியில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் பொறியியல் மாணவர்கள் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ளது அசாம் பொறியியல் கல்லூரி. இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பத்து பேர், ஏழு பேர் அமரக்கூடிய கார் ஒன்றை எடுத்துக் கொண்டு இன்று காலை கல்லூரியிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். குவாஹாட்டியின் நெடுஞ்சாலை பகுதியில் அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்த அவர்களது கார், … Read more

அச்சச்சோ.. தமிழ்நாடு வெதர்மேன் என்ன இப்படி சொல்லிட்டாரு? இன்னைக்கும் ஐபிஎல் மேட்ச் அவ்ளோதானா?

ஐபிஎல் 16வது சீசன் கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. நேற்று இறுதிப் போட்டி நடைபெற இருந்த நிலையில் ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மழை பெய்ய தொடங்கியது. இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் மைதானத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. தொடர்ந்து மழை நீடித்ததால் நேற்று இறுதி போட்டி நடைபெறவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இதனை தொடர்ந்து மாற்றுநாளான இன்று இரவு 7.30 மணிக்கு ஐபிஎல் இறுதிப்போட்டி … Read more

ISRO: விண்ணில் சீறிப் பாய்ந்தது GSLV-F12 ராக்கெட்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, ‘GSLV-F12’ ராக்கெட்டை இன்று (மே 29) காலை விண்ணில் செலுத்தியது. 

கடந்த 1921-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை: பழைய, புதிய நாடாளுமன்ற கட்டிட வரலாறு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 1921-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான நாடாளுமன்ற கட்டிடங்களின் வரலாறு பின்வருமாறு: 1921, பிப்ரவரி 12: இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு (அப்போது கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்டது.) அப்போது கன்னாட் பிரபு அடிக்கல் நாட்டினார். 1927, ஜனவரி 18: நாடாளுமன்ற கட்டிடத்தை அப்போதைய கவர்னர் ஜெனரல் லார்ட் இர்வின் திறந்து வைத்தார். 1927, ஜனவரி 19: நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. 1946, டிசம்பர் 9: முதல் அரசியலமைப்பு சபை … Read more

பெண்ணை அப்படியே சாப்பிட்ட இளைஞர்.. நாயாக மாறிய இளைஞரை கைது செய்த போலீஸ்.. அதிர்ச்சி

ஜெய்ப்பூர்: மூதாட்டியை துரத்திச் சென்று அவரை உயிருடனே கடித்து குதறி சாப்பிட்ட இளைஞரை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள சாராதனா கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி தேவி (65). ஆடுகளை வளர்க்கும் தொழிலை செய்து வந்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில், அவர்களுக்கு திருமணமாகி அந்தப் பகுதியிலேயே தனியாக வசித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2 … Read more

மணிப்பூர் செல்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா: 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல்வர் தகவல்

இம்பால்: மணிப்பூரில் கடந்த 4 நாட்களில் 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில முதல்வர் பைரன் சிங் கூறியுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மணிப்பூர் செல்கிறார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மேதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி உள்ளிட்ட பழங்குடியினர் கலவரத்தில் ஈடுபட்டனர் இதில் 70 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.மணிப்பூரில் 3 வாரத்துக்கும் மேலாக ஆங்காங்கே வன்முறையும் பதற்றமும் நீடித்தது. இந்நிலையில் அங்கு மீண்டும் பதற்றம் … Read more

பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள சிறப்பு அம்சங்கள்..!

பிரதமர் மோடி நேற்று புதிய பாராளுமன்றத்தை திறந்து வைத்தார். இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:- புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 1250 கோடி. 4 மாடிகளுடன் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. 23 லட்சத்து 4 ஆயிரத்து 95 மனித வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த கட்டிடத்தின் ஆயுள் காலம் 150 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. கட்டிடக் கலையில் இந்தியாவின் அனைத்து மாநில அம்சங்களும் இடம் … Read more