நண்பன் என நம்பி வீட்டுக்கு சென்ற 15 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை..!!

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மைனர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். போலீசாரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாஹில் ராஜ்பர் (18), சுஜல் கவதி (20), விஜய் பெரா (21) மற்றும் ஒரு மைனர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, தானே கோல்சேவாடி காவல் நிலையத்தில் … Read more

“இது எங்களுக்கு மறுபிறவி” – சூடானில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 231 இந்தியர்கள் நாடு திரும்பினர்

புதுடெல்லி: சூடானில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 231 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர். இதுவரை 2,100-க்கும் மேற்பட்டோர் நாடு திரும்பி உள்ளனர். சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ராணுவத் தளபதி அப்தல் ஃபதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையாக ஆர்எஸ்எஃப் பிரிவும் (ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ்) கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன. அங்கு 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு … Read more

Mann Ki Baat: மனதின் குரல் 100வது நிகழ்ச்சி ஐநா தலைமையகத்தில் நேரடி ஒலிபரப்பு!

பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரையின் 100வது பகுதி இந்திய நேரப்படி  ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்படும் நிலையில், இந்நிகழ்ச்சி ஐநா தலைமையகத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.  

பாஜக எம்.பி மீது இரண்டு பிரிவுகளில் டெல்லி போலீஸார் வழக்கு பதிவு..!!

மல்யுத்த பயிற்சி பெறும் மைனர் வீராங்கனைகளை, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிட்ஜ் பூஷன் சிங் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்பது குற்றச்சாட்டாகும். அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மீண்டும் கடந்த 6 நாட்களாக வீரர் வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிட்ஜ் பூஷன் பாஜக எம்.பி., என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து … Read more

ஆந்திராவில் அதிர்ச்சி: 2 நாட்களில் 9 பள்ளி மாணவர்கள் தற்கொலை

ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேசத்தில் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியால், கடந்த இரண்டு நாட்களில் 9 பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரண்டு பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் 10 லட்சத்திற்கும் அதிமான மாணவர்கள் 11, 12-ம் வகுப்பு தேர்வுகளை எழுதி இருந்தனர். இந்தநிலையில், அம்மாநிலத் தேர்வு வாரியம் புதன்கிழமை 11, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில், 11-ம் வகுப்பில் 61 சதவீத மாணவர்களும், 12-ம் வகுப்பில் … Read more

காலவரையின்றி மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோயில்.. அதிர்ச்சியில் பக்தர்கள்.. என்னவாம்..?

மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள உலக பிரிசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் சீரடி. இங்குதான் சாய்பாபா பிறந்து வளர்ந்தார். ஏழை எளிய மக்களுக்கும், நோயாளிகளுக்கும் பல்வேறு தொண்டுகளை செய்ததால் சாய்பாபாவை தெய்வமாக மக்கள் வணங்கி வருகின்றனர். நாடு முழுவதும் அவருக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். அதேபோல் ஏராளமான சாய்பாபா கோயில்களும் இருக்கின்றன. எத்தனை கோயில்கள் இருந்தபோதிலும், அவர் … Read more

கடையை மூடிய பிறகு பழம் கேட்டு தகராறு செய்து பழ வியாபாரி மீது தீ வைத்து விட்டு சென்ற போதை ஆசாமி

நாகர்கோவிலில் கடையை மூடிவிட்டதால் பழம் எடுத்து தர இயலாது என கூறிய பழ வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். வடக்கு சூரங்குடி தட்டான்விளையை சேர்ந்த பழவியாபாரி பிரேம் ஆனந்த், ராமன்புதூர் சந்திப்பில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு 11.00 மணிக்கு அவர் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்ல இருந்தபோது, மதுபோதையில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த நவீன் என்பவர் பழம் கேட்டதாக கூறப்படுகிறது. கடையை மூடிவிட்டதால் … Read more

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்த பிரியங்கா காந்தி: பிரிஜ் பூஷனை அரசு பாதுகாப்பதாக குற்றச்சாட்டு 

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீராங்கனைகளை பிரிங்கா காந்தி வத்ரா இன்று (சனிக்கிழமை) சந்தித்து ஆதரவு தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளைச் சந்தித்து தனது ஆதரவினைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர்களுடன் உரையாடி தகவல்களைக் … Read more

ஓடும் ரயிலில்.. பெண்களுடன் அமர்ந்து "சுய இன்பம்".. இளைஞரை தூக்க விரைந்தது தனிப்படை..!

டெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு சுய இன்பம் அனுபவித்த நபரை பிடிக்க டெல்லி காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் நேற்று காலை வழக்கம் போல சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பெட்டியில் பெண்கள் நிறைய பேர் இருந்தனர். கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என ஏராளமானோர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெண்களின் கூட்டத்துக்கு இடையே 26 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் அமர்ந்திருந்தார். பெண்கள் நடுவே இருந்ததால் … Read more

மல்யுத்த வீராங்கனைகள் போராட்ட பின்புலத்தில் காங்கிரஸ் இருப்பதாக பிரிஜ் பூஷண் குற்றச்சாட்டு!

மல்யுத்த வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு பின்புலத்தில் காங்கிரஸ் கட்சியும், சில தொழிலதிபர்களும் இருப்பதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் குற்றம்சாட்டியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகளை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனிடையே, பிரிஜ் பூஷண் மீது டெல்லி போலீசார் போக்சோ உள்ளிட்ட 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய அவர், கடந்த 12 ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகள் … Read more