கோவையில் நிறுவப்பட்டுள்ள 7 அடி உயர வ.உ.சி. முழு உருவச் சிலை : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..!!

நாட்டின் விடுதலைக்காக போராடிய வ.உ. சிதம்பரம்பிள்ளை, ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது செக்கு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது தியாகத்தை நினைவு கூரும் வகையில், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.க்கு, கோவையில் முழு உருவச் சிலை நிறுவப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தார். இதையடுத்து, கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், வ.உ.சி மைதானத்தில் அவிநாசி சாலையை ஒட்டிய இடத்தில் 50 அடி அகலம், 45 … Read more

மல்யுத்த வீராங்கனைகள் புகார் – பாஜக எம்.பி. மீது போக்சோ பாய்ந்தது!!

டெல்லியில் மல்யுத்த வீராங்கனை பாலியல் புகார் தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், பாஜக எம்.பி. பிரிஷ் பூஷன் சரண்சிங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டமும் நடத்தி வருகின்றனர். மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு கபில்தேவ், சானியா மிர்சா, நீரஜ் சோப்ரா … Read more

கன்னட நடிகர் சிவராஜ்குமார் மனைவி காங்கிரஸில் இணைந்தார்: கணவருடன் பிரச்சாரம் செய்ய திட்டம்

பெங்களூரு: கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியும் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகளுமான‌ கீதா நேற்று பெங்களூருவில் காங்கிரஸில் இணைந்தார். கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கன்னட நடிகர்கள் சுதீப், தர்ஷன் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மதச்சார்பற்ற ஜனதா தளத்திக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நடிகர் நிகில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதேபோல நடிகையும் முன்னாள் எம்.பி.,யுமான ரம்யா காங்கிரஸூக்காக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் கன்னட உச்ச நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியும் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் … Read more

தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் 2 மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டதா..? வெளியான அதிர்ச்சி தகவல்

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதல் இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. தண்டேவாடாவில் கடந்த சில நாட்களுக்கு முன் மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகள் சுரங்கம் அமைத்து ஆழத்தில் வெடிமருந்தை பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் கண்ணி வெடியை அகற்றும் போது, மாவோயிஸ்ட்டுகள் மறைத்து வைத்திருந்த வெடிபொருளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு 40 முதல் 50 கிலோ வரை வெடிமருந்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம் … Read more

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு | பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீஸ் 2 பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி கனோட் ப்ளேஸ் காவல்நிலையத்தில் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லி காவல் ஆணையர் ப்ரணவ் தாயல் கூறுகையில், “மல்யுத்த வீராங்கனைகள் புகார் மீது இரண்டு எஃப்ஐஆர்க்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை கூறி … Read more

கொடூர வீடியோ! வகுப்பறையில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை!!

வகுப்பறையில் பட்டப்பகலில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோவை சமூக செயற்பாட்டாளரான அருணேஷ் குமார் யாதவ் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அரசு ஐடிஐயில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பதிவேற்றம் செய்து, அருணேஷ் குமார் யாதவ் காவல்துறைக்கு டேக் செய்துள்ளார். போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என … Read more

இன்று 216 பேருக்கு கலைமாமணி விருது வழங்கும் புதுவை அரசு..!!

புதுச்சேரி மாநிலத்தில் இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம்- சிற்பம் மற்றும் நாட்டுப்புறக்கலை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகளும், தமிழுக்கு சிறந்த தொண்டு புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்மாமணி விருதுகளும் புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பாக வழங்கப்பட்டு வந்தது. முன்பு கலைமாமணி விருதுக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 சவரன் தங்க பதக்கம் தரப்படும். தமிழ்மாமணி விருதுக்கு ரூ. 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 சவரன் … Read more

சத்தீஸ்கரில் 10 போலீஸார் உயிரிழந்த சம்பவத்தில் சாலையில் சுரங்கம் தோண்டி கண்ணிவெடி தாக்குதல் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியீடு

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 10 போலீஸார் உயிரிழந்த சம்பவத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தியவிதம் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட ஆயுதபோலீஸ் படை (டிஆர்ஜி) உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தப் படையில் உள்ளூர் இளைஞர்கள், மனம் திருந்திய மாவோயிஸ்ட்கள் மற்றும் போலீஸார் இடம்பெற்றுள்ளனர். டிஆர்ஜி படையில் முன்னாள் மாவோயிஸ்ட்கள் இருப்பதால் தீவிரவாதிகளின் … Read more

கர்நாடக காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரச்சாரம்

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி அமித்ஷா யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட செல்வாக்கு மிக்க தலைவர்கள் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளநிலையில் காங்கிரஸ் கட்சியும் நட்சத்திரப் பேச்சாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. Source link

விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10, +2 வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள்..!!

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி முடிந்தன. அதேபோல 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிந்தது. இந்த நிலையில் அவர்களுக்குத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 21 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதிய நிலையில், 12ஆம் வகுப்புத் தேர்வை 16 லட்சத்துக்கும் மாணவர்கள் எழுதி … Read more