இந்தியா 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கு அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: நிதி ஆயோக் அமைப்பின் 8-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை எட்ட மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம் என்று பிரதமர் மோடி இக்கூட்டத்தில் வலியுறுத்தினார். மத்திய அரசின் சிந்தனை அமைப்பான ‘நிதி ஆயோக்’ அமைப்பின் 8-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் அதன் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. … Read more

2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது பற்றி பிரதமர் தலைமையில் ஆலோசனை

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 8ஆவது நிதி அயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. 2047ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது தொடர்பாக ஆலோசிக்க நடந்த கூட்டத்தில் உத்தர பிரதேசம், ஆந்திரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களும், மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர். அதில், உட்கட்டமைப்பு, முதலீடுகள், சுகாதாரம், திறன் மேம்பாடு உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், நாட்டின் வளர்ச்சியை அடுத்த 25 ஆண்டுகளுக்கு வேகப்படுத்துவது குறித்தும், அதற்கான வழிமுறைகளைத் திட்டமிடுவது பற்றியும் … Read more

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் | ஒரு பெண் உள்பட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

பெங்களூரு: கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் உள்பட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். கடந்த 10-ம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மை வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா கடந்த 20ம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்றார். அவருடன் சேர்ந்து கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவகுமார் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். அதோடு, 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், இன்று அமைச்சரவை முழுமையாக … Read more

மக்களின் குரலை எதிரொலிக்க 8 முதலமைச்சர்களும் தவறி விட்டதாக பாஜக விமர்சனம்..!

நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் முக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டு, மக்களின் குரலை எதிரொலிக்க 8 மாநிலங்களின் முதலமைச்சர்களும் தவறி விட்டதாக பாஜக விமர்சித்துள்ளது. நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் டெல்லி, கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப், தெலுங்கானா, மேற்குவங்கம்,பிகார், ஓடிசா ஆகிய 8 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், நாட்டின் வளர்ச்சி மற்றும் திட்டமிடலுக்கு நிதி ஆயோக் முக்கியமானது என்றும், இன்றைய … Read more

குடியரசுத் தலைவர் குறித்த கருத்து: கார்கே, கேஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி கமிஷனரிடம் புகார்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு எதிராக வேண்டுமென்றே கருத்துகளைத் தெரிவித்ததாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோருக்கு எதிராக டெல்லி காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான வினீத் ஜிண்டால் என்பவர் இது தொடர்பாக டெல்லி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில், “நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழா தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே, அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத் … Read more

மத்திய அரசை பாராட்டி நாட்டு மக்கள் பகிரும் பதிவுகள் மேலும் தீவிரமாக பணியாற்றும் சக்தியை அளிக்கிறது – பிரதமர் மோடி

மத்தியில் தனது அரசு பதவியேற்று 9 ஆண்டுகாலம் பூர்த்தியாவதை முன்னிட்டு தெரிவிக்கப்படும் வாழ்த்துகள், மக்களுக்காக மேலும் தீவிரமாக பணியாற்றுவதற்கான சக்தியை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி முதல்முறையாக பிரதமர் மோடி தலைமையில் அரசு பதவியேற்றது. இதையடுத்து 2வது முறையாக 2019ம் ஆண்டு மே 30ம் தேதி அவரது தலைமையில் அரசு பதவியேற்றது. அவரது அரசு பதவியேற்று வரும் 30ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை சுட்டிகாட்டி, ட்விட்டரில் … Read more

பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தை 8 முதல்வர்கள் புறக்கணித்தது பொறுப்பற்ற செயல்: பாஜக

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் சில மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணித்தது பொறுப்பற்ற செயல் என்று பாஜக விமர்சித்துள்ளது. நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சிமன்றக் குழுவின் ஒருநாள் கூட்டம் புதுடெல்லி, பிரகதி மைதான அரங்கில் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் … Read more

கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகார ரத்து விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் பணிக்கு போதிய மூத்த மருத்துவர்கள் இல்லாதது மற்றும் சி.சி.டி.வி., கேமரா இல்லாதது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, இந்திய மருத்துவ கவுன்சில், 2023-24ம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்துள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசினார். பல்வேறு உயர் கல்விகளுக்கான … Read more

‘இந்திய பாரம்பரியத்தின் சின்னம் செங்கோல்’ – ஆதீனங்களிடம் ஆசிபெற்ற பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: நாளை புதிய நாடாளுமன்றம் திறக்கப்படவுள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து சென்ற ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார். இந்தநிகழ்வின் போது நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ள செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. பிரதமரின் இல்லத்தில் நடந்த விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் செங்கோலை பிரதமரிடம் வழங்கினார். மந்திரங்கள் முழங்க செங்கோல் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வின்போது உடன் இருந்தனர். முன்னதாக, மதுரை … Read more

புதிய நாடாளுமன்ற கட்டடம்: நீங்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய 10 தகவல்கள் இதோ!

New Parliament Building: டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடம் குறித்த முக்கியமான பத்து தகவல்களை இத்தொகுப்பில் காணலாம்.