உத்தரப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலி

உத்தரபிரதேசத்தின் Ballia பகுதியில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உயிழந்தனர். மால்தேபூர் பகுதியில் நடைபெற்ற சடங்கு ஒன்றில் பங்கேற்க ஏராளமானோர் கூடி இருந்த நிலையில், ஆற்றைக் கடக்க படகு ஒன்றில் பெண்கள், குழந்தைகள் என சுமார் 35 பேர் சென்றதாக கூறப்படுகிறது. எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து காற்றின் வேகத்தில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படகில் … Read more

காஷ்மீரில் ஜெய்ஷ் தீவிரவாதியை கைது செய்தது என்ஐஏ

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாத சதி செயலில் ஈடுபட்டு வந்ததாக எழுந்த புகாரின் பேரில் ஜேஇஎம் தீவிரவாதியை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். காஷ்மீரில் தடை செய்யப்பட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத சதி செயலில் ஈடுபடுவதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்கு பதிவு செய்தது. இந்தியாவுக்குள் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு தேவையான நிதி, ஆயுதங்களை அந்த தீவிரவாத அமைப்புகள் பல்வேறு வழிகளில் பெறுகின்றன. மேலும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் … Read more

2000 ரூபாய் நோட்டை மாற்ற வங்கிக்கு ஓடாதீங்க! சக்திகாந்த தாஸ் சொல்றதை கேளுங்க

Rs 2,000 Notes Will Continue To Be Legal Tender:  2000 ரூபாய் நோட்டு சட்டப்பூர்வ நாணயமாக தொடரும், வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டை மாற்ற அவசரம் வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது

பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார்

நடிகர் சரத்பாபு காலமானார் பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் உயிர்பிரிந்தது நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் சரத்பாபு முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சரத்பாபு காலமான நடிகர் சரத்பாபுவின் வயது 71 கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார் சரத்பாபு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஐதராபாத்தில் இருந்து சென்னை தி.நகரில் உள்ள வீட்டிற்கு உடல் … Read more

பிரதமர் மோடிக்கு பிஜி நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

போர்ட் மோர்ஸ்பி: இந்திய பிரதமர் மோடிக்கு, பிஜி நாட்டின் உயரிய விருதினை அந்நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகா திங்கள்கிழமை வழங்கி கவுரவித்தார். பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக பிஜி குடிமகனில்லாத ஒருவருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பிரதமர் அலுவலகம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது இந்தியாவுக்கான மிகப் பெரிய கவுரவம். பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, பிஜி நாட்டின் உயரிய விருதான ‘கம்பானியன் ஆஃப் … Read more

புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் ரூ.2,000 நோட்டுகள் செல்லும் – ஆர்.பி.ஐ.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தரும்படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி, நாளை முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் அதனை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தது. இதற்கான வழிகாட்டுதல்களை அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ள ஆர்.பி.ஐ., கோடை காலத்தை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு இருக்கை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தருமாறு … Read more

“நமது ராணுவ வீரர்களின் உடல்கள் மீது நடத்தப்பட்டது 2019 மக்களவைத் தேர்தல்” – சத்ய பால் மாலிக்

புதுடெல்லி: “2019 மக்களவைத் தேர்தல், நமது ராணுவ வீரர்களின் உடல்கள் மீது நடத்தப்பட்டது” என்று பாஜக அரசு மீது ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் சத்ய பால் மாலிக் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது: “தேர்தல்கள் (2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்) நமது ராணுவ வீரர்களின் உடல்கள் மீது நடத்தப்பட்டன. அதுகுறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அப்படி … Read more

ம.பி.யில் மூத்த குடிமக்களுக்கு நிதியுதவி: புனித யாத்திரைக்கான விமானப் பயணம் தொடக்கம்

போபால்: மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆளும் பாஜக அரசு பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த குடிமக்களை கவரும் வகையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், மூத்த குடிமக்கள் விமானம் மூலம் புனித யாத்திரை மேற்கொள்ள நிதியுதவி அளிக்கும் “முக்யமந்திரி தீர்த்-தர்சன் யோஜனா” திட்டத்தை மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று காலை போஜ் விமான நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். … Read more

தாய்க்காக கிணறு தோண்டிய 14 வயது சிறுவன்

பால்கர்: மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் கெல்வே கிராமத்தில் ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். விவசாய தொழிலாளியாக உள்ளார். இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். கடைசி மகன் பிரணவ் சல்கர் (14) 9-ம் வகுப்பு படிக்கிறார். பிரணவ் சமீபத்தில் சூரிய மின்சக்தி தகடுகளை, மோட்டார் சைக்கிள் பேட்டரியில் இணைத்து, தனது குடிசையில் விளக்கெரிய வைத்தான். இந்நிலையில், தனது தாய் நீண்ட தூரம் சென்று ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதைப் பார்த்து வேதனை அடைந்துள்ளான். கடப்பாரை, மண்வெட்டி, … Read more

தார் பகுதியில் அமையும் மெகா ஜவுளிப்பூங்கா பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வளர்ச்சிக்கான புதிய கதவுகளைத் திறந்து விடும் – பிரதமர் மோடி

மத்தியப் பிரதேச மாநிலம் தார் பகுதியில் அமையும் மெகா ஜவுளிப்பூங்கா பல லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வளர்ச்சிக்கான புதிய கதவுகளைத் திறந்து விடும் என்று பிரதமர் மோடி டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தாரில் பி.எம். மித்ரா பார்க் என்ற பெயரில் பிரம்மாண்டமான ஜவுளிப் பூங்கா அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் சிவராஜ் சவுகான் டிவிட்டர் பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதற்குப் பதிலளித்து மோடி தமது டிவிட்டரில் மாநில அரசுக்கு … Read more