பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 184 மீனவர்கள் குஜராத் வந்தடைந்தனர்
அகமதாபாத்: பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 198 இந்திய மீனவர்களில் 184 பேர் குஜராத் வந்தடைந்தனர். அரபிக்கடலில் குஜராத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் பாகிஸ்தான் கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்களை விடுவிக்க மத்திய அரசு தூதரக ரீதியில் நடவடிக்கைகளை எடுத்தது. இதையடுத்து, பாகிஸ்தான் சிறையில் உள்ள 198 … Read more