தண்ணீர் பஞ்சத்தால் கிணற்றுக்குள் கயிறு பிடித்து இறங்கும் மகாராஷ்டிர கிராம மக்கள் – ‘திக் திக்’ வீடியோ

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள கோஷிம்பாடா கிராமத்தில் வசித்து வரும் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அந்த கிராமத்தின் சுற்று வட்டார பகுதிகளிலும் இதே நிலைதான். வறண்ட கிணற்றில் கிடைக்கும் தண்ணீரை எடுக்க கிணற்றுக்குள் இறங்கி ஒவ்வொரு குடமாக சேகரிக்க வேண்டிய சூழல் உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டால் வாழ்வதே போராட்டமாகி உள்ள நிலையில், வறண்டு போன அந்த கிணற்றில் கிடைக்கும் நீரை எடுக்க மணிக்கணக்கில் தினந்தோறும் நேரத்தை செலவிட்டு வருகின்றனர் கிராம … Read more

இன்று டி.எம்.எஸ். நினைவு நாள்….!

கம்பீரமான குரலில் தெளிவான உச்சரிப்புடன் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் டி.எம்.சௌந்தர்ராஜன். உலகெங்கும் உள்ள தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த பாடகர் டிஎம்எஸ்-சின் நினைவுநாளில், அவரைப் பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு இதோ உங்களுக்காக.. டிஎம்எஸ்-சின் பக்திச்சுவை ததும்பும் பாடல்களைக் கேட்காதோர் இருக்க முடியாது… இனிமையான குரலில் கேட்போரை லயிக்கச் செய்யும் குரல் டிஎம்எஸ் உடையது. 1950களில் மந்திரிகுமாரி படத்தில் எம்ஜிஆருக்கு அவர் பாடிய பாடல் திரையுலகினரைத் திரும்பிப் பார்க்கவைத்தது. அதன்பின்னர், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை 25 ஆண்டுகள் … Read more

‘ஒரு ஆணின் ஈகோ குடியரசுத் தலைவரின் அரசியலமைப்பு உரிமையை தடுக்கிறது’ – நாடாளுமன்ற விவகாரத்தில் காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஒரு ஆணின் ஈகோ மற்றும் சுயவிளம்பரத்திற்கான விருப்பம் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரின் அரசியலமைப்பு உரிமையைத் தடுக்கிறது என்று காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி மீது வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விவகாரத்தில் அக்கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தினை வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். இந்த திறப்பு விழாவினை புறக்கணிக்கப்போவதாக 20 எதிர்க்கட்சிகள் நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி … Read more

இன்று தங்கம் வாங்கலாமா ? சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது..!

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து, ரூ.5,625-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ரூ.45,000-க்கு விற்பனையாகிறது. அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,640-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 … Read more

வரலாறு | நேருவிடம் செங்கோல் ஒப்படைத்த ஆதீனம்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28-ம் தேதி திறக்கப்படுகிறது. இதில் வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால மாதிரி செங்கோலை மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே பிரதமர் மோடி நிறுவ உள்ளார். சுதந்திரத்தின்போது, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம், பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த மவுன்ட் பேட்டனால் வழங்கப்பட்டது இந்த செங்கோல் என்பது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர்கால மாதிரி செங்கோல்: அமித் ஷா தகவல் நேருவிடம் செங்கோல் ஒப்படைத்த … Read more

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது: ஜெகன் ரெட்டி

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கும் ஜெகன் ரெட்டியின் கட்சி, ‘விழாவை புறக்கணிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது’ என்கிறார். மேலும், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

தமிழ் மொழி ஒவ்வொரு இந்தியரின் மொழி: தாயகம் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

புதுடெல்லி: மூன்று நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (வியாழக்கிழமை) காலை தாயகம் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விமான நிலையத்தில் பேசுகையில், தமிழ் மொழிதான் இந்த உலகின் தொன்மையான மொழி. அது ஒவ்வொரு இந்தியரின் மொழி எனத் தெரிவித்தார். ஜப்பான், பப்புவா நியூ கினி மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணங்களை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி டெல்லி பாலம் சர்வதேச விமான நிலையத்தில் … Read more

அப்பாடா.. ஓய்ந்தது வெப்ப அலை… ஆரஞ்சு அலர்ட்… அடுத்த 2 நாட்களில் தொடங்கும் பருவமழை!

நாடு முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை ஓய்ந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயில்கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டனர். இந்த கடுமையான வெயிலால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகம் உட்பட ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர் உள்பட வட மாநிலங்களிலும் வெயில் கொளுத்தியது.​ முதலீடு ஈர்ப்பு என்ற … Read more

தமிழுக்கு புகழாரம் சூட்டிய மோடி….!

உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என்று புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்தியனின் மொழி என்று குறிப்பிட்டார். ஜப்பான், பபுவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று காலை நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த ஏராளமானோர் தேசியக் கொடியை அசைத்தும், மலர்களைத் தூவியும் … Read more

செங்கோல் வரலாற்றை நினைவுகூர்ந்த ‘மகா பெரியவர்’

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களிடம் ஆட்சி கைமாறியதில் செங்கோல் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு மிக முக்கியமானது. ஆனால், அது வரலாற்றில் முக்கிய அம்சமாக இடம் பெறவில்லை. கடந்த 1978-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, காஞ்சி சங்கரமட நிகழ்ச்சி ஒன்றில், இந்த செங்கோல் கதையை எடுத்துக் கூறினார் அப்போதைய காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். இவர் ‘மகா பெரியவர்’ என அழைக்கப்பட்டார். இந்த கருத்து இவர் கடந்த 1994-ம் ஆண்டு முக்தி அடைந்தபின் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில் இடம் பெற்றது. … Read more