இன்று தங்கம் வாங்கலாமா ? சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது..!

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து, ரூ.5,625-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ரூ.45,000-க்கு விற்பனையாகிறது. அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,640-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 … Read more

வரலாறு | நேருவிடம் செங்கோல் ஒப்படைத்த ஆதீனம்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28-ம் தேதி திறக்கப்படுகிறது. இதில் வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால மாதிரி செங்கோலை மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே பிரதமர் மோடி நிறுவ உள்ளார். சுதந்திரத்தின்போது, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம், பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த மவுன்ட் பேட்டனால் வழங்கப்பட்டது இந்த செங்கோல் என்பது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர்கால மாதிரி செங்கோல்: அமித் ஷா தகவல் நேருவிடம் செங்கோல் ஒப்படைத்த … Read more

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது: ஜெகன் ரெட்டி

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கும் ஜெகன் ரெட்டியின் கட்சி, ‘விழாவை புறக்கணிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது’ என்கிறார். மேலும், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

தமிழ் மொழி ஒவ்வொரு இந்தியரின் மொழி: தாயகம் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

புதுடெல்லி: மூன்று நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (வியாழக்கிழமை) காலை தாயகம் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விமான நிலையத்தில் பேசுகையில், தமிழ் மொழிதான் இந்த உலகின் தொன்மையான மொழி. அது ஒவ்வொரு இந்தியரின் மொழி எனத் தெரிவித்தார். ஜப்பான், பப்புவா நியூ கினி மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணங்களை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி டெல்லி பாலம் சர்வதேச விமான நிலையத்தில் … Read more

அப்பாடா.. ஓய்ந்தது வெப்ப அலை… ஆரஞ்சு அலர்ட்… அடுத்த 2 நாட்களில் தொடங்கும் பருவமழை!

நாடு முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை ஓய்ந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயில்கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டனர். இந்த கடுமையான வெயிலால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகம் உட்பட ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர் உள்பட வட மாநிலங்களிலும் வெயில் கொளுத்தியது.​ முதலீடு ஈர்ப்பு என்ற … Read more

தமிழுக்கு புகழாரம் சூட்டிய மோடி….!

உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என்று புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்தியனின் மொழி என்று குறிப்பிட்டார். ஜப்பான், பபுவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று காலை நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த ஏராளமானோர் தேசியக் கொடியை அசைத்தும், மலர்களைத் தூவியும் … Read more

செங்கோல் வரலாற்றை நினைவுகூர்ந்த ‘மகா பெரியவர்’

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களிடம் ஆட்சி கைமாறியதில் செங்கோல் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு மிக முக்கியமானது. ஆனால், அது வரலாற்றில் முக்கிய அம்சமாக இடம் பெறவில்லை. கடந்த 1978-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, காஞ்சி சங்கரமட நிகழ்ச்சி ஒன்றில், இந்த செங்கோல் கதையை எடுத்துக் கூறினார் அப்போதைய காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். இவர் ‘மகா பெரியவர்’ என அழைக்கப்பட்டார். இந்த கருத்து இவர் கடந்த 1994-ம் ஆண்டு முக்தி அடைந்தபின் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில் இடம் பெற்றது. … Read more

மணிப்பூரில் மீண்டும் தலைதூக்கிய வன்முறைச் சம்பவங்கள்.. போலீசார் குவிப்பு..!

மணிப்பூரில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் தலை தூக்கியுள்ளன. இம்பால் மேற்கு மாவட்டம் கடங்காபாத்தில் மூன்று இடங்களில் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்றதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சில ஆயுதமேந்திய விஷமிகள் குன்றில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.இதில் ஒருவர் விரல் சேதம் அடைந்தது. எல்லைப் பாதுகாப்புப் படையினரும், மணிப்பூர் போலீசாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மணிப்பூர் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார் Source link

ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் பைக்கை பறிமுதல் செய்த போலீஸ்

லக்னோ: இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற் காக ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞரின் பைக்கை உ.பி. மாநில போலீஸார் பறிமுதல் செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள கவுதம்பள்ளி போலீஸ் சரகத்துக்குட்பட்ட யூடியூபர் ஒருவரின் பைக்கை போலீஸார் அண்மையில் பறிமுதல் செய்தனர். அவர் ஆபத்தான முறையில் சாலையில் பைக்கில் சாகசம் செய்து அதை மற்றொருவர் மூலம் வீடியோவில் படம்பிடித்துக் கொண்டிருந்தார். சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டே கடந்து சென்றனர். இதைப் பார்த்த கவுதம் பள்ளி போலீஸ் … Read more

தரையிறங்கியவுடன் மீண்டும் வானில் பறந்த இண்டிகோ விமானம்.. பயணிகள் பதற்றம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானம் உடனே மீண்டும் வானில் பறக்கத் தொடங்கியது. இதனால் சில நிமிடங்களுக்கு விமானத்தில் இருந்த பயணிகள் குழப்பமடைந்தனர். திங்கள்கிழமை இரவு சுமார் 100 பயணிகளுடன் சண்டிகரிலிருந்து அகமதாபாத் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சர்தார் படேல் சர்வதே விமான நிலையத்தின் ஓடுபாதையில் அன்றிரவு 8.45 மணியளவில் தரையிரங்கியது. இரவு 9.15 மணிக்கு தரையிறங்க வேண்டிய அந்த விமானத்தில் இருந்த பயணிகள், விமானம் தரையிறங்கியதும் சட்டென்று திரும்பவும் பறக்க ஆரம்பித்ததால் குழப்பம் … Read more