இந்திய எல்லையையொட்டி கிராமங்களை அமைக்கும் சீனா..!

உத்தரகாண்ட் மாநிலத்தையொட்டிய சர்வதேச எல்லையில் கிராமங்களை உருவாக்கி தனது குடிமக்களை சீனா குடியேற்றி வருவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் சீனாவுடன் சுமார் 350 கிலோமீட்டர் தொலைவிற்கு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. அந்த எல்லையில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய 250 குடியிருப்புகளை கொண்ட கிராமம் ஒன்றை சீனா உருவாக்கி வருவதாகவும், எல்லையை ஒட்டி இதே போன்ற மேலும் 400 கிராமங்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய … Read more

செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை: காங்கிரஸ்

புதுடெல்லி: நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்றும், அவ்வாறு கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு: “அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு மத அமைப்பால் உருவாக்கப்பட்ட, சென்னையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கம்பீரமான செங்கோல் ஆகஸ்ட் 1947-இல் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது என்பது உண்மை. ஆனால், … Read more

வயலில் உருண்டு புரண்டு தாக்கிக்கொண்ட ஆசிரியைகள்.. இதுக்கெல்லாமா சண்டை..!

பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியையை அப்பள்ளியின் இரண்டு ஆசிரியைகள் சேர்ந்து தாக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. வித்யாலயா பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருப்பவர் காந்தி குமாரி. இவருக்கும் அனிதா குமாரி ஆசிரியைக்கும் வகுப்பறையின் ஜன்னலை மூடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தலைமை ஆசிரியை காந்தி குமார் அனிதாவை மாணவர்கள் மத்தியில் கண்டித்துள்ளார். இதனால் அனிதாவுக்கு அவமானமாக இருந்துள்ளது. இதனை அடுத்து தலைமை ஆசிரியை காந்தி குமார் வகுப்பறையில் இருந்து … Read more

நாடாளுமன்ற கட்டட திறப்புவிழா சர்ச்சைகள்! மடாதிபதிகள் உள்ளே குடியரசு தலைவர் வெளியே!

Decomcracratic Country: புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு குறித்து மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விவகாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு..!

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் எனக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்காதது, குடியரசுத் தலைவரின் மதிப்பை குறைப்பது மட்டுமன்றி, அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயல் என பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என மறுப்பு தெரிவித்தது. பொதுநல மனு விளம்பர நோக்கத்திற்காக தொடுக்கப்பட்டிருப்பதாகவும் நீதிபதிகள் கண்டனம் … Read more

கர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம் – 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்

புதுடெல்லி: கர்நாடகாவில் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் கடந்த 20-ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் 5 முறை எம்எல்ஏவாக … Read more

ஆத்தி… கேப் புக் பண்ணா கிறுகிறு… அப்படியே ஃப்ளைட் டிக்கெட் காசு… ஆடிப் போன பெங்களூருவாசி!

இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் வாடகை கார்கள் (Cabs) பயன்பாடு அதிகரித்துவிட்டது. பள்ளி, கல்லூரிகள் முதல் தினசரி வேலை, வெளியூர் செல்பவர்கள் வரை பலரும் கேப்பில் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் கேப் இல்லாத சூழலை பலரால் ஜீரணிக்கவே முடியாது. வாடகை கார் பயணம் இது மேல் நடுத்தர வர்க்க மற்றும் உயர் வகுப்பை சேர்ந்தவர்களின் தினசரி பயன்பாட்டில் ஒன்றாக மாறிப் போய்விட்டது. ஆனால் பீக் ஹவர் (Peak Hours), … Read more

75 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறது மத்திய அரசு!!

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவை ஒட்டி 75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக மத்திய அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதை ஒட்டி மத்திய அரசு 75 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளது. புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம்பெறுகிறது. இடதுபுறத்தில் … Read more

உலகின் பழமையான மொழி தமிழ்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

புதுடெல்லி: உலகின் பழமையான மொழி தமிழ், ஒவ்வொரு இந்தியரின் மொழி தமிழ் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஜப்பான், பப்புவா நியூ கினி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று அதிகாலை 3 மணிக்கு டெல்லி திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் பாஜகவினர் உட்பட ஏராளமானோர் திரண்டு வந்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கரோனா பெருந்தொற்று … Read more

நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்ய வைப்பர் ரோவர் விண்கலத்தை அனுப்புகிறது நாசா..!

நிலவின் மேற்பரப்பில் நீர் உள்ளதாக என்பதைக் கண்டறிய நாசா ரோவர் விண்கலத்தை அனுப்பி சோதனை செய்யத் திட்டமிட்டுள்ளது. 1972 க்குப் பிறகு முதன்முறையாக விண்வெளி வீரர்களை சந்திரனுக்குத் திருப்பி அனுப்ப நாசாவின் ஆர்ட்டெமிஸ் மிஷன் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. நாசாவின் VIPER எனப்படும் ரோவர் விண்கலத்தை அடுத்த ஆண்டு நிலவின் தென்துருவத்தில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரோவர் மூலம் நிலவின் மேற்பரப்பில் பனி அல்லது நீர் இருப்பு குறித்து ஆராயப்படும் என நாசா குறிப்பிட்டுள்ளது. … Read more