வங்கதேசத்தை சேர்ந்த 4 பேர் குஜராத்தில் கைது

அகமதாபாத்: குஜராத் காவல் துறையின் தீவிரவாத எதிர்ப்பு படை டிஐஜி தீபன் பத்ரன் நேற்று முன்தினம் கூறியதாவது: அகமதாபாத்தின் ஓதவ் மற்றும் நரோல் பகுதிகளில் போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் முகமது சோஜிப், முன்னா காலித் அன்சாரி, அசாருல் இஸ்லாம் அன்சாரி, மொமினுல் அன்சாரி ஆகிய 4 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் நால்வரும் அகமதாபாத்தில் முஸ்லிம் இளைஞர்களை அல்-காய்தா அமைப்பில் சேருமாறு ஊக்குவித்து … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் கூட்டாக அறிவிப்பு

புதுடெல்லி: வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சிபிஎம், சிபிஐ, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் தளம், கேரள காங்கிரஸ், இந்திய யூனியன் … Read more

‘சித்தராமையா 5 ஆண்டுகள் முதல்வராக நீடிப்பார்’ – அமைச்சரின் பேச்சால் டி.கே.சிவகுமார் அதிருப்தி

பெங்களூரு: கர்நாடகவின் முதல்வராக சித்தராமையாவே 5 ஆண்டுகளுக்கும் நீடிப்பார் என அமைச்சர் எம்.பி. பாட்டீல் பேசியதால், துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் முதல்வர் பதவியை கைப்பற்ற சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. காங்கிரஸ் மேலிடம் அளித்த ரகசிய வாக்குறுதிகளின் அடிப்படையில் டி.கே.சிவகுமார் துணை முதல்வர் பதவியை ஏற்றார். சித்தராமையா இரண்டரை ஆண்டுகளும், டி.கே.சிவகுமார் இரண்டரை ஆண்டுகளும் முதல்வர் பதவியில் இருப்பார்கள் என தகவல் … Read more

சோழர்களின் செங்கோல் பாஜகவின் கையில்.. அரசியல் ஆரம்பம்.. எடுபடுமா தேசிய அரசியல்.!

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா தான் தற்போதைய ஹாட் டாபிக். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வருகிற 28ம் தேதி சாவர்க்கர் பிறந்தநாள் அன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பொதுவாக அரசியலமைப்பு சாசனத்தின் படி குடியரசு தலைவர் தான் நாடாளுமன்றத்திற்கு தலைவர் ஆவார். ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பழங்குடியினர் என்பதால் நாடாளுமன்றத்தின் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என்பதை அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகவும் … Read more

தாயின் தகாத உறவுகள்..! வீடுகளுக்கு தீ வைத்து அலற விட்ட மகள்..!! தாயை திருத்த மகளின் விபரீத போராட்டம்….!

ஆந்திர மாநிலத்தில் பல ஆண்களோடு தொடர்பில் இருந்த தாயை திருத்துவதற்காக விபரீத முடிவெடுத்த மகள், தாயோடு தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளுக்கு தீ வைக்க, அலறிப் போன அந்த கிராமமே பில்லி, சூனியம், ஏவல் பயத்தில் மந்திரவாதிகளை அழைத்து வந்து பூஜைகள் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. திடீர் திடீரென வீடுகளில் உள்ள பொருட்கள் தீப்பற்றி எரிவதும், வைக்கோல் போர்கள் தீயில் எரிவதுமாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பாகவும் பில்லி சூனிய பீதியிலும் உறைந்திருந்த கிராமம் தான் புதிய … Read more

லாரி மோதி இளம் நடிகை பலி!!

29 வயது இளம் நடிகை லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்காலி சீரியல்களில் நடித்து வந்த சுசந்திரா தாஸ்குப்தா (29) என்ற நடிகை மாடலிங்கும் செய்து வந்தார். இவர் பெங்காலி சீரியல்களில் நடித்து பிரபலமானதை அடுத்து, பெங்காலி திரைப்படங்களிலும் நடித்தார். இவர், 3 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஷூட்டிங் முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல இரு சக்கர வாகனம் ஒன்றை புக் செய்து அதில் பயணம் செய்தார். இரு சக்கர வாகனம் கொல்கத்தாவின் … Read more

பிரபல நடிகர் மர்ம மரணம்!!

பிரபல தொலைக்காட்சி நடிகர், ஹோட்டலில் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய நடிகர் நித்தேஷ் பாண்டே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான, மஞ்சிலின் அபானி அபானி, சாயா, ஜஸ்தாஜூ, துர்கேஷ் நந்தினி போன்றவற்றில் நடித்துள்ளார். மேலும், அவர் ஓம் சாந்தி ஓம், கோஸ்லா கா கோஸ்லா, பதாய் தோ, ஷாதி கே சைட் எபெக்ட்ஸ் உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியுள்ளார். நாசிக் நகரில் இகத்பூரி பகுதியில் ஓட்டல் ஒன்றில் பிரபல நித்தேஷ் தங்கியிருந்தார். இந்நிலையில், அவர் … Read more

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக யு.டி.காதர் ஒருமனதாக தேர்வு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக யு.டி.காதர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்று அதில் பதிவான வாக்குகள் கடந்த 13ம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 135 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியதை அடுத்து, அதன் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் கடந்த சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து, புதிய சட்டப்பேரவையின் சபாநாயகர் பதவிக்கு 5 முறை எம்எல்ஏ-வாக பதவி வகித்த யு.டி. காதரை காங்கிரஸ் கட்சி நேற்று … Read more

தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை!!

தாலி கட்டும் நேரத்தில் ஓடிப்போன மாப்பிள்ளையை மணப்பெண் 20 கி.மீ ஓடிச் சென்று பிடித்துவந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அதான் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும், இளம்பெண்ணும்காதலித்து வந்த நிலையில், இருவரது வீட்டிலும் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினர். இதையடுத்து எளிமையாக கோவிலில் திருமணம் நடத்த திட்டமிட்டனர். அதன்படி, திருமண நாளன்று மணப்பெண் உட்பட அனைவரும் வந்திருந்தனர். ஆனால், மாப்பிள்ளை வரவில்லை. நீண்ட நேரமாகியும் மணமகன் வரவில்லை என்பதால், அவரை தேடி மணமகளே சென்றார். … Read more

புதிய நாடாளுமன்ற‌ கட்டிட சர்ச்சை: பிரதமர் மோடி பதிலளிக்க கார்கே வலியுறுத்தல்

பெங்களூரு: புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல், பாஜகவினர் அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகாவில் உள்ள குல்பர்காவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பாஜகவினர் பட்டியலின, பழங்குடியின வகுப்பினரை பெயரளவுக்கு மட்டுமே மதிக்கிறது. அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக ஓரிருவருக்கு பொறுப்புகளை வழங்கப் படுகிறது. ஆனால் மதிக்க வேண்டிய இடத்தில் அவர்களை அவமதிப்பதை பாஜக வழக்கமாக கொண்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் … Read more