கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம்

கர்நாடகாவில் 24 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே. சிவக்குமாரும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பதவியேற்றனர். அவர்களுடன் 8 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதைத்தொடர்ந்து, அமைச்சரைவையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வந்த நிலையில், அமைச்சர் பதவியை பெறுவதற்காக மூத்த தலைவர்கள் பலரும் டெல்லியில் முகாமிட்டிருந்தனர். ஆலோசனையில் முடிவு எட்டப்பட்டதை அடுத்து பெங்களூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு … Read more

இப்படி கூட நடக்குமா ? தவற விட்ட மொபைல் போனுக்காக அணையில் இருந்த நீரை வெளியேற்றிய அதிகாரி..!!

கான்கேர் மாவட்டத்தில் உள்ள கோயிலிபெடா வட்டத்தில் உணவு அதிகாரியாக பணியாற்றி வரும் ராஜேஷ் விஸ்வாஸ். அவர் கடந்த ஞாயிறு அன்று தனது விடுமுறையை கழிக்க கெர்கட்டா அணை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது தனது மொபைல் போனை அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீரில் தவறவிட்டுள்ளார். அந்த போனின் விலை ரூ.96,000. செல்பி எடுக்க முயன்ற போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது அணையில் 15 அடி அளவிற்கு நீர் இருந்துள்ளது. இது தொடர்பாக நீர் பாசனத்துறை அதிகாரிகளுடன் அவர் … Read more

நீரில் தவறிவிழும் குழந்தையை காப்பாற்றும் நவீன டி ஷர்ட் – ஆனந்த் மஹிந்திரா பாராட்டு

மும்பை: குழந்தைகள் நீரில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிற நிலையில், அதை தடுக்கும் வகையில், டி ஷர்ட் ஒன்றை பிரான்ஸ் நாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த டி ஷர்ட் அணிந்து நீரில் விழும்போது, அது தானாக லைப் ஜாக்கெட்டாக மாறி மிதக்கும். இதனால், குழந்தை நீரில் மூழ்காது. இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, “இந்த கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போகலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை … Read more

திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இனிமே அது கிடையாது.. தேவஸ்தானம் அதிரடி!

திருப்பதி தேவஸ்தான பக்தர்களின் தரிசன முறையில் அதிரடி மாற்றம் செய்துள்ளது. திருப்பதிதிருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் பிரசித்து பெற்றது. உலக பணக்கார கோவில்களில் ஒன்று. திருப்பதி ஏழுமலையான் கோவில் பற்றி சொல்ல தெரிய வேண்டியதில்லை. ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காசு, பணம் , நகைகள், தலைமுடி என தாங்கள் உயர்வாக கருதுவதை திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.​ … Read more

பிரிஜ் பூஷனை சிறைக்கு அனுப்ப வேண்டும்: மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாபா ராம்தேவ் ஆதரவு

ராஜஸ்தான்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று யோகா குரு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் மூன்று நாட்கள் நடைபெறும் யோகா சிவிர் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பாபா ராம்தேவிடம் மல்யுத்த வீராங்கனைகள் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பாபா ராம் தேவ், “இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளும், நீதி கிடைக்காமல் மல்யுத்த வீராங்கனைகள் இன்னமும் … Read more

கர்நாடகாவில் இன்று 24 மந்திரிகள் பதவியேற்பு..!!

கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் கடந்த 20-ம் தேதி பதவி ஏற்றனர். அவர்களுடன் 8 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இதுவரை அமைச்சர்களுக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை. அதே நேரத்தில் அமைச்சரவையில் மீதம் இருக்கும் இடங்களுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மூத்த தலைவர்களான தேஷ்பாண்டே, எச்.கே.பட்டீல் உள்ளிட்டோரும் அமைச்சர் பதவி கேட்டு அடம் பிடித்து … Read more

மோடி மீண்டும் பிரதமராக 49% மக்கள் விருப்பம்: சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று 49 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக ஏபிபி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து நேற்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதனை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். மூன்றாவது முறையாக மீண்டும் மோடிதான் பிரதமர் என்பதை கடந்த 25ஆம் தேதி அசாமில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி செய்துள்ளார். … Read more

ஏர் இந்தியாவின் டெல்லி-சிட்னி விமானத்தில் 224 பயணிகளை அச்சமூட்டிய கொந்தளிப்பு…!

ஏர் இந்தியாவின் டெல்லி-சிட்னி விமானத்தில் ஏற்பட்ட கொந்தளிப்புகள் தொடர்பான விசாரணையில் அன்று விமானத்தை ஓட்டிய இரண்டு விமானிகளையும் முழுமையான விசாரணை நிறைவடையும் வரை பணியிடை நீக்கம் செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த மே 16ம் தேதி அந்த விமானத்தில் பலமுறை ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக ஏழு பயணிகள் லேசான காயம் அடைந்தனர். விமானத்தில் மொத்தம் 224 பயணிகள் இருந்தனர்.  Source link

நாளை டெல்லி எல்லைகள் சீல் வைக்கப்படும் : காவல்துறை தகவல்..!

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை 28-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. இதனிடையே டெல்லியில் மத்திய அமைச்சர் பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக வரும் 28-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம் நடைபெறும் என மஹிலா பஞ்சாயத் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் நாளை … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடெல்லி: டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவை புறக்கணிக்க 19 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஜெயா சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் ஜெயா சுகின் வாதிடுகையில், … Read more