சாவர்க்கர் பற்றி விமர்சனம் – ராகுலுக்கு உத்தவ் எச்சரிக்கை

நாசிக்: மக்களவை எம்.பி. பதவியை இழந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் “நான் காந்தி, சாவர்க்கர் அல்ல, காந்திகள் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்’’ என்றார். இதுகுறித்து மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று கூறியதாவது: அந்தமான் சிறையில் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு பல கொடூரங்களை 14 ஆண்டுகள் சாவர்க்கர் அனுபவித்தார். அதுவும் ஒருவிதமான தியாகம்தான். சாவர்க்கரை இழிவுபடுத்துவதை எப்போதும் சகித்துக் கொள்ள … Read more

அதிகரிக்கும் கொரோனா: அடுத்த மாதம் 2 நாள்கள் மட்டும்.. முடிவை அறிவித்த ஒன்றிய அரசு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஒன்றிய அரசு முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. கொரோனா மூன்று அலைகள் காரணமாக நாடு முழுவதும் மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகினர். உறவுகளை இழந்து தவித்தனர். கொரோனா பொது முடக்கத்தால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். பல ஆண்டுகள் சேமிப்பு கரைந்து கடனாளிகளாக மாறினர். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பின்னரே பாதிப்பு கட்டுக்குள் வந்தது. உயிரை காப்பாற்றிய தடுப்பூசிகள்! இரண்டு டோஸ் தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ் … Read more

குட்கா மேல்முறையீட்டு வழக்கு ஏப்.14க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி:  தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை சென்னை ஐேகார்ட் ரத்து செய்தது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான  அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை ஒத்திவைக்க கோரி புகையிலை நிறுவனங்கள் தரப்பில் ஏற்கனவே கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதால் வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்க வைக்கப்பட்டது இதையடுத்து வழக்கு ஏப்ரல் 14 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வரி கட்டாமல் இழுத்தடித்த பால் வியாபாரி.. எருமையை ஓட்டிச் சென்ற நகராட்சி அதிகாரிகள்: எங்கு?

அரசு நிர்வாகத்துறைகளான மாநகராட்சி, நகராட்சிகள் விதிக்கும் வரிகளை கட்ட முடியாமல் போனால் பலகட்ட எச்சரிக்கைகளுக்கு பிறகு பைக், டிராக்டர் போன்றவையோ, சமயங்களில் வீட்டையே ஜப்தி செய்வதும் வாடிக்கை. ஆனால் குடிநீருக்கான வரியை கட்டாமல் இருந்தவரின் எருமை மாட்டை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்த நிகழ்வு மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது. குவாலியரில் உள்ள தலியான்வாலா பகுதியைச் சேர்ந்த பால்கிஷன் பால் என்ற பால் வியாபாரி 1 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்க்கான வரியை கட்டாததால் மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை பல … Read more

பச்சிளம் குழந்தையைக் கொன்ற சிறுமிகள்.. பொம்மை போல நினைத்து விளையாடிய போது நேர்ந்த விபரீதம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் இரண்டு சிறுமிகளும் குழந்தையைக் குளிப்பாட்ட முயற்சித்தபோது, குழந்தை அவர்களிடமிருந்து நழுவி வாளிக்குள் விழுந்துவிட்டது. நீர் நிறைந்த வாளிக்குள் இருந்து குழந்தையை வெளியே எடுக்க முடியாததால் சிறுமிகள் பீதியடைந்துள்ளனர். பெற்றோரிடம் தெரிவிக்க பயந்து வாளியின் மீது ஒரு மூடியை போட்டு மூடி வைத்துவிட்டனர் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 22-ம் தேதி இரண்டு மாத கைக்குழந்தையை காணவில்லை என பெற்றோர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காணாமல்போன … Read more

கோவில் விருந்து : 3 குழந்தைகள் கவலைக்கிடம்..!!

உத்திய பிரதேச மாநிலம், பாக்பத்தில் அமைந்துள்ள கோவிலில் மத சமூக விருந்து நடைபெற்றது. இந்த விருந்தை பிப்பன் என்கிற ஓம்பிரகாஷ் என்பவர் ஏற்பாடு செய்துள்ளார். அவர் காலையில் பிரசாதத்தில் கீரை விநியோகித்தார், மாலை சுமார் 5 மணிக்கு கிச்சடி விநியோகிக்கப்பட்டது. இந்த கிச்சடியை சுமார் 100 பேர் சாப்பிட்டனர். இந்த விருந்தில் வழங்கப்பட்ட கிச்சடி சாப்பிட்டதில், குழந்தைகள் உள்பட 21 பேர் மயக்கம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் சுகாதார … Read more

100 வழக்கு, ரூ.11,684 கோடி சொத்து, 5 முறை எம்எல்ஏ – ரவுடி அகமதுவை சிறையில் தீவிரமாக கண்காணிக்கும் உ.பி. அரசு

லக்னோ: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் அத்திக் அகமது (60). இவர் மீது கொலை, ஆள்கடத்தல் உட்பட 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரது குடும்பத்தினர் மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. உ.பி. முழுவதும் கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் அத்திக் அகமது ஈடுபட்டு வந்தார். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி வரை அவர் சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது. பதிவுத் துறை ஆவணங்களின் அடிப்படையில் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் … Read more

மீண்டும் அதிகரிக்கும் COVID-19 தொற்று: பழைய நிலை திரும்பலாம்! எச்சரிக்கும் மருத்துவர்கள்

நாட்டில் கோவிட்-19 தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. இதனால் நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது, ஐசியூவில் சேர்க்கப்பட வேண்டிய நிலை, ஆக்ஸிஜனுக்கான தேவை ஆகியவை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணர்கள் திங்களன்று தெரிவித்தனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,805 புதிய கோவிட் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டது. 134 நாட்களுக்குப் பிறகு, நாட்டில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை நேற்று 10,000 ஐத் தாண்டியது. … Read more

சீன எல்லை அருகே 37 புதிய சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டம்

சீன எல்லை அருகே 875 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மேலும் 37 சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ICBR எனப்படும் இந்திய- சீன எல்லைச் சாலைகள் அமைக்கும் பணிகள் லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில் 3ம் கட்டப் பணிகளுக்கான உயர்மட்டக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்க … Read more

அம்ரித்பால் சிங் தலைமறைவு? நேபாள அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்

காத்மாண்டு: காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் நேபாளத்தில் தலைமறைவாகி உள்ளார் என கூறப்படுகிறது.  அவரை அங்கிருந்து தப்பாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி நேபாளத்துக்கு ஒன்றிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்ரித்பால் சிங். காலிஸ்தான்  ஆதரவாளரான இவர் வாரிஸ் பஞ்சாப் டி என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். இவரை  கைது செய்ய 7 மாவட்டங்களை சேர்ந்த மாநில போலீசார் அடங்கிய ஒரு சிறப்பு படை அமைக்கப்பட்டு  தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அம்ரித்பால் … Read more