தொடர் போராட்டங்களை அறிவித்தது காங்கிரஸ்

டெல்லி: நாளை முதல் காங்கிரஸ் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளது என காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து மாநில தலைநகரங்களிலும் அம்பேத்கர், காந்தி சிலை முன்பு நடத்தப்படும். நாளை முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நாடு முழுவதும் ஜெய் பாரத் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும். ஏப்ரல் 3ம் தேதி முதல் பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தப்பட உள்ளது எனவும் கூறியுள்ளார்.

டெல்லியில் தலைப்பாகை இல்லாமல் நடந்துசென்ற அமரித்பால் சிங்.. வெளியான புதிய சிசிடிவி காட்சி

போலீசாரால் தேடப்பட்டு வரும் பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், தற்போது தலைப்பாகை இல்லாமல் வெளியேறும் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவராக உள்ளார். சீக்கிய மதகுரு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, பஞ்சாப்பில் உள்ள அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பினர், துப்பாக்கிகள் மற்றும் வாட்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் … Read more

பிபிசியின் பஞ்சாபி ட்விட்டர் கணக்கு முடக்கம்

புதுடெல்லி: பிபிசி செய்தி நிறுவனத்தின் பஞ்சாபி ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பிபிசி செய்தி நிறுவனம் தனது செய்திகளை சமூக வலைதளமான ட்விட்டர் மூலமும் பகிர்ந்து வருகிறது. பஞ்சாபி மொழியில் பிபிசி வெளியிடும் செய்திகளை பகிர்வதற்காக bbcnewspunjabi என்ற பெயரில் கணக்கு வைத்துள்ளது. இந்நிலையில், அரசின் கோரிக்கையை ஏற்று அந்த கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எனினும், அரசு விடுத்த சட்டப்படியான வேண்டுகோள் குறித்த தகவல்களை ட்விட்டர் இதுவரை பகிரவில்லை. பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதியான அம்ரித்பால் சிங்கை கைது செய்ய … Read more

கேரளா லாட்டரி முடிவுகள், முதல் பரிசு ரூ 75 லட்சம்..யார் அந்த அதிர்ஷ்டசாலி?

Stree Shakti Lottery SS-357 லாட்டரி டிரா முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. கேரள மாநில லாட்டரி துறையின் கோர்கி பவனில் மதியம் மூன்று மணிக்கு நடைபெற்றது. முதல் பரிசு SW 104268 டிக்கெட்டுக்கும், இரண்டாம் பரிசு SV 407794 டிக்கெட்டுக்கும் கிடைத்துள்ளது, இதன் முழு முடிவு இன்று மாலை 5 மணிக்குள் லாட்டரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 40 ரூபாய் மதிப்பிலான ஸ்த்ரீசக்தி லாட்டரியின் முதல் பரிசாக 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது பரிசாக … Read more

இறுதி வாய்ப்பு: உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் தேர்வு எழுத அனுமதி.. உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்..!!

டெல்லி: உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் காரணமாக உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக சென்ற சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். போர் இன்னும் நிறைவடையாத சூழலில் அவர்கள் தங்களது படிப்பினை தொடர முடியாத … Read more

#BIG NEWS : பான் – ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு!

பான் வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். இந்நிலையில், வரி எய்ப்பு, மோசடி பணப் பரிவர்த்தனை போன்ற நிதி களை தவிர்க்க மக்கள் அனைவரும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும். இதனையடுத்து, பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை அவகாசம் அளித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, பான்-ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2023 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது. Source link

மக்களே உஷார்..!! இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிப்பு…!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மத்திய சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிக்கு பிறகு இந்தியாவில் தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 78 சதவீதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 1807 புதிய கொரோனா வகை வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை … Read more

உமேஷ் பால் கடத்தல் வழக்கு: உ.பி கேங்ஸ்டர் அக்திக் அகமதுக்கு ஆயுள் தண்டனை

பிரயாக்ராஜ்: உமேஷ் பால் கடத்தல் வழக்கில் உத்தரப் பிரதேசத்தின் கேங்க்ஸ்டரும், முன்னாள் எம்எல்ஏவுமான அத்திக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அத்திக், தினேஷ் பாஸி, கான் சவுகத் ஆகிய மூன்ற குற்றவாளிகளுக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அக்திக் அகமதுவின் சகோதரர் காலீது அசீம் உள்ளிட்ட 7 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். முன்னதாக அக்திக் அகமது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் … Read more

”பாஜக வளர வளர எதிர்க்கட்சியினரின் தாக்குதல் அதிகரிக்கும், ஆதலால் வலுவான எதிர்தாக்குதலுக்கு தயாராக வேண்டும்..” – பிரதமர் மோடி..!

பாஜகவின் செல்வாக்கு அதிகரிக்கும் நேரத்தில், எதிர்க்கட்சிகளின் விமர்சனமும் அதிகமாக இருக்குமென்றும், ஆதலால் வலுவான எதிர்தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டுமென்று பாஜக தலைவர்களை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு, அண்மையில் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜகவுக்கு வெற்றி பெற்று தந்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, மத்தியில் பாஜக ஆட்சியமைத்து 9 ஆண்டுகள் … Read more

ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டுவண்டி பந்தயத்தை எந்த திட்டத்தின்கீழும் அங்கீகரிக்கவில்லை: ஒன்றிய அரசு

டெல்லி: ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டுவண்டி பந்தயத்தை எந்த திட்டத்தின்கீழும் அங்கீகரிக்கவில்லை என ஒன்றிய அரசு கூறியுள்ளது. கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும் கேலோ இந்தியா திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.