இந்தியாவில் புதிதாக 7,533 பேருக்கு கோவிட் – ஒரே நாளில் 44 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,533 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி தற்பேது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,852 ஆக குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் புதிதாக 7,533 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 53,852 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் 44 பேர் உயிரிழந்தனர். இதுவரை தொற்றால் … Read more

இந்தியாவில் யானைகளின் வாழிடம் 86 விழுக்காடு அழிக்கப்பட்டதாக ஆய்வில் தகவல்

ஆசியா முழுவதும் யானைகளின் வாழ்விடங்களில் 3ல் 2 பங்கு அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சான்டியாகோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், காடழிப்பு, விவசாயம், மரம் வெட்டுதல், சாலைகள் அமைத்தல் போன்ற காரணங்களால் யானைகள் தங்கள் வாழிடங்களை இழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. தற்போது 13 நாடுகளில் வசித்து வரும் ஆசிய யானைகளின் காடுகள் மற்றும் புல்வெளிப் பகுதிகளில் 64 விழுக்காடு அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக யானை, மனித மோதல்கள் அதிகரித்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவில் 94 விழுக்காடு நிலத்தையும், … Read more

கர்நாடகாவில் ஓபிஎஸ் வேட்பாளர் குமார் மீது மோசடி வழக்குப் பதிவு

பெங்களூரு: க‌ர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து மோசடி செய்ததாக, ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளர் குமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் காந்தி நகர் தொகுதியில் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த குமார் (52) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் கடந்த 20ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை … Read more

கர்நாடகாவில் யாருக்கு வெற்றி? குஷியில் JDS… சிக்கலில் பாஜக, காங்கிரஸ்… லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் 2023… நாடெங்கும் இதே பேச்சாக தான் இருக்கிறது. ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் தீயாய் வேலை செய்து வருகிறது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜக வியூகம் வகுத்துள்ளது. எப்படியாவது கிங் மேக்கராகி மீண்டும் ஒருமுறை முதல்வர் நாற்காலியில் அமர்ந்து பார்த்துவிட மதச்சார்பற்ற ஜனதா தளம் தீவிரம் காட்டி கொண்டிருக்கிறது. இவ்வாறு களம் மும்முனை போட்டியாக இருந்தாலும் சாதக, பாதகங்கள் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு … Read more

தேசிய மருத்துவ உபகரணங்கள் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: முக்கியமான முடிவு என பிரதமர் பதிவு

புதுடெல்லி: தேசிய மருத்துவ உபகரணங்கள் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் சுகாதார துறை ஊக்கம் பெறும் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கடந்த 2014 முதல் நாடு முழுவதும் புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு அருகில் ரூ.1,570 கோடி செலவில் 157 செவிலியர் கல்லூரிகளை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தேசிய மருத்துவ உபகரணங்கள் கொள்கைக்கும் … Read more

நாடு முழுவதும் 84 மாவட்டங்களில் 91 எஃப்.எம். டிரான்ஸ்மிட்டர்களை இன்று தொடங்குகிறார் பிரதமர்

புதுடெல்லி: நாடு முழுவதும் பண்பலை வானொலி (எஃப்.எம். ரேடியோ) இணைப்பை மேம்படுத்தும் வகையில், 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 எஃப்.எம். டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வளரும் மாவட்டங்கள் மற்றும் எல்லைப்புற பகுதிகளில் ரேடியோ ஒலிபரப்பை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதையொட்டி, பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, ஹரியானா, ராஜஸ்தான், உத்தர … Read more

திமுகவுக்கு எதிராக வியூகம் அமைக்க பாஜகவிடம் இணக்கம் காட்டிய அதிமுக?

புதுடெல்லி: திமுகவுக்கு எதிராக வியூகம் அமைக்க பாஜகவிடம் அதிமுக இணக்கம் காட்டியதாகத் தெரிகிறது. மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்.இந்த சந்திப்பில் எதிர்பாராதவிதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார். அமித் ஷாவின் அழைப்பின்பேரில் அவர் பங்கேற்றிருக்கிறார். சுமார் 50 நிமிடங்கள் நீடித்த சந்திப்பில் பல முக்கிய விவகாரங்கள் பேசப்பட்டதாகத் தெரிகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை போன்று இந்த சந்திப்பு … Read more

ஆந்திர மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முதலமைச்சர் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றதால் பரபரப்பு..!

ஆந்திர மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அனந்த்பூர் மாவட்டத்தில் தும்பர்தி, மொதுமாரு ஆகிய பகுதிகளில் வீடுகள் கட்டிதர விவசாயிகளிடம் இருந்து 210 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என கூறி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சிங்கனமாலா தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, புட்டப்பர்த்தி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென … Read more

தன்பாலின திருமண விவகாரத்தை நாடாளுமன்ற முடிவுக்கு விடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் – மத்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: தன்பாலினத்தவர்களின் திருமணத் துக்கு சட்ட ரீதியாக அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.கே.பட், ஹிமா கோலி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, “சமுதாயத்தில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, மிகவும் சிக்கலான … Read more

சிம்லாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தீ விபத்து… புறநோயாளிகள் பிரிவு முற்றிலும் சேதம்

ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று காலை நேரிட்ட தீ விபத்தில் புறநோயாளிகள் பிரிவு முற்றிலும் சேதமடைந்தது. இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகளுக்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு மேல்தளத்தில் திடீரென பற்றிய தீ, மளமளவென வேகமாக பிற பகுதிகளுக்கும் பரவியது. உடனடியாக அருகருகே வார்டுகளில் இருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்தில் உயிரிழப்போ, … Read more