கர்நாடகா | காங்கிரஸ் குறித்த அவதூறு பேச்சு – அமித் ஷா மீது வழக்குப் பதிவு

பெங்களூரு: உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக பெங்களூருவில் உள்ள ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா, டாக்டர் பர்மேஷ்வார், மாநில காங்கிரஸ் தலைவர் ஆகியோர் பெங்களூரு ஹைகிரவுண்ட் காவல் நிலையத்திற்கு இன்று (வியாழக்கிழமை) வந்தனர். கர்நாடாகாவில் நடந்த பாஜக பேரணியில், காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறாகவும் வெறுப்பைத் தூண்டும் வகையிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை … Read more

ஏவுகணைக்கே டாட்டா காட்டிய ராணுவ வீரர்.. ராக்கெட் பட்டாசு தாக்கி உயிரிழந்த பரிதாபம்.. என்ன நடந்தது?

போபால்: எதிரி நாட்டு ஏவுகணைகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றுக்கே அசால்ட்டாக கல்தா கொடுத்த ராணுவ வீரர் ஒருவர், சாதாரண ராக்கெட் பட்டாசு தாக்கி உயிரிழந்த சோக சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். என்னதான் பெரிய திறமைசாலியாக இருந்தாலும், நேரம் சரியில்லை என்றால் சாதாரண விஷயத்தில் கூட கோட்டை விடுவதை பார்த்திருப்போம். அதுபோல், நாம் தான் பலவற்றை பார்த்திருக்கிறோமே.. இந்த சிறிய விஷயம் என்ன செய்துவிட போகிறது என்ற எண்ணத்தில் … Read more

‘சூடானில் 3,500 இந்தியர்கள் சிக்கியுள்ளனர்’ – வெளியுறவுத்துறை தகவல்

உள்நாட்டு சண்டை மூண்டுள்ள சூடானில் இந்தியர்கள் சுமார் 3,500 பேரும், இந்திய வம்சாவளியினர் 1,000 பேரும் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சூடானின் நிலைமையை இந்திய அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்காக 3வது கடற்படைக் கப்பல் ஐ.என்.எஸ் தர்காஷ், சூடான் துறைமுகத்தை சென்றடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். சூடான் ராணுவமும் துணை ராணுவப்படையினரும் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதை அடுத்து, ‘ஆபரேஷன் காவிரி’ … Read more

இந்தியாவில் புதிதாக 9,355 பேருக்கு கரோனா தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,355 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. முந்தைய நாளில் தொற்று எண்ணிக்கை 9,692 என இருந்த நிலையில், ஒரு நாளில் 2.8 சதவீதம் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் புதிதாக 9,355 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 57,410 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் … Read more

தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள்!!

சூடானில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக சூடானில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிகாரப்போட்டி காரணமாக ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டவர்களை மீட்க அந்தந்த நாட்டின் அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் இந்தியா சார்பில் விமானங்களும், கப்பலும் அனுப்பப்பட்டன. ஆப்ரேஷன் காவேரி என்ற பெயரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அங்கு … Read more

காங்கிரசின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி விட்டன: பிரதமர் மோடி

புதுடெல்லி: காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்த்துவிட்டன; இனி வாக்குறுதி தரமுடியாத நிலையில் அக்கட்சி உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள கர்நாடக மாநில பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது பிரதமர், “கர்நாடக மக்கள் பாஜக மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையானது பிரச்சாரத்திற்காக பாஜக தலைவர்கள் செல்லுமிடங்களில் எல்லாம் வெளிப்படுகின்றது. 10 … Read more

வந்தே பாரத் vs சதாப்தி எக்ஸ்பிரஸ்: வேகம், வசதிகள், டிக்கெட் கட்டணம்… இரண்டில் எது சிறந்தது?

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… கடந்த சில மாதங்களாக இந்தியர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுள்ளது. செம ஸ்பீடு, விமானத்தில் இருப்பது போன்ற வசதிகள், அதிக கட்டணம் எனப் பல்வேறு விஷயங்கள் பேசுபொருளாக மாறியிருக்கின்றன. எந்த ரயில் சிறந்தது? ஏற்கனவே அதிவிரைவு சதாப்தி எக்ஸ்பிரஸ் சேவை அமலில் இருக்கும் போது, புதிதாக வந்துள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஒப்பீட்டளவில் எப்படி இருக்கிறது என்ற கேள்வி பலருக்கும் எழத் தான் செய்கிறது. இதில் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள … Read more

தோசை சுட்டு வாக்கு சேகரித்த பிரியங்கா காந்தி!!

கர்நாடகாவில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கடை ஒன்றில் தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. 24-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தற்போது வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் … Read more

'ஆபரேஷன் காவேரி' | சூடானில் இருந்து மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் நாடு திரும்பினர்

புதுடெல்லி: சூடானில் இருந்து மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் புதுடெல்லி வந்தடைந்தனர். சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ராணுவத் தளபதி அப்தல் ஃபதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையாக ஆர்எஸ்எஃப் பிரிவும் (ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ்) கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன. அங்கு 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இது தொடர்பாக கடந்த 21ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. … Read more

தெலுங்கானாவில் பட்டப்பகலில் லாரி ஓட்டுநரை கல்லால் அடித்துக் கொன்ற பயங்கரம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

தெலங்கானாவில், பட்டப்பகலில் லாரி ஓட்டுநர் கல்லால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தாரம் கிராமத்தை சேர்ந்த கனகய்யா – பத்மா தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது மூத்த மகளும், அதே ஊரை சேர்ந்த மகேஷ் என்ற இளைஞரும் 5 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். பின்னர் கருத்துவேறுபா டு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், தன்னை காதலிக்கும்படி மகேஷ் தொடர்ந்து துன்புறுத்திவந்துள்ளார். இதற்கிடையில், அந்த இளம்பெண்ணுக்கு … Read more