ராகுல் காந்தி அவதூறு வழக்கு: பாட்னா நீதிமன்ற உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

பாட்னா: மோடி பெயர் குறித்து சர்ச்சையில் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை மே 15-ம் தேதி வரை நிறுத்தி வைத்து பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு மோடி என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது தொடர்பாக பிஹார் முன்னாள் துணை முதல்வரும் மாநிலத்தின் மூத்த பாஜக தலைவருமான சுஷில் குமார் மோடி, ராகுல் காந்திக்கு எதிராக பாட்னா கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் … Read more

2024 மக்களவை தேர்தல்: ‘ நாம சேரணும்’.. வொர்க் அவுட் ஆகும் ஸ்டாலின் பிளான்.. பெருசா ஏதோ நடக்க போகுது.!

எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 2024 தேர்தல் அடுத்த ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. 2024 மக்களவை தேர்தல் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரண்டு முறை ஆட்சியை பிடித்த பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க முயன்று வருகிறது. ஆனால் எப்பாடு பட்டாவது பாஜகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய எதிர்கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்து வருகின்றன. ஏனெனில் எதிர்கட்சிகளை குறிவைத்து … Read more

பின்வாங்கினார் எடப்பாடி பழனிசாமி!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் மனு தாக்கல் செய்திருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அவரது வேட்புமனுவை திரும்பப் பெற்றார். அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி ஆதரவுடன் அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல், ஓபிஎஸ் தரப்பில், புலிகேசி நகர், கோலார் தங்கவயல் மற்றும் காந்திநகர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். பரிசீலனையின்போது ஈபிஎஸ் ஆதரவு வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டது. … Read more

கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்படும் நிலை மாற்றப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

ரேவா: கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்படும் நிலை மாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பஞ்சாயத்து ராஜ் தினத்ததை முன்னிட்டு மத்தியப் பிரதேசத்தின் ரேவா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது, ”2014க்கு முன் இருந்த ஆட்சியாளர்கள் கிராமப்புற வளர்ச்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டு வந்தன. ஆனால், 2014க்குப் பிறகு கிராமப்புறங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. முந்தைய அரசுகள் கிராமப்புறங்களுக்குச் செலவிடுவதை தவிர்த்தன. இதன் காரணமாக கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டன. பாஜக … Read more

கர்நாடக தமிழர்களின் வாக்குகள்… பாஜக பிளான் இதுதான்… பெங்களூருவில் அண்ணாமலை பளீச்!

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 113 மேஜிக் நம்பர். ஆனால் இதுவரை பாஜக தனிப் பெரும்பான்மை பெறவில்லை. இம்முறை கர்நாடக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பாஜகவை மீண்டும் பெரும்பான்மையுடன் கொண்டு வர வேண்டும் என விரும்புகிறார்கள். இதற்காக நாங்கள் எதுவும் ஆபரேஷன் செய்யவில்லை. அந்த அளவிற்கு பிரதமர் மோடி வேலை செய்திருக்கிறார். மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது. தற்போது அடைந்துள்ள வளர்ச்சி பெரிதும் உறுதுணையாக இருக்கும். கர்நாடக தமிழர்கள் எந்த ஒரு தலைவரையும் நாங்கள் … Read more

இந்த இடத்தை விட்டு போக மாட்டோம்… மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் !!

மல்யுத்த சங்கத்தின் தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பாலியல் புகாரை முன்வைத்து கடந்த ஜனவரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர் மல்யுத்த வீரர்கள்.அப்போது பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலகவேண்டும் எனவும் அப்போது கோரிக்கை வைத்தனர். இந்த பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், 3 மாதங்களாகியும் இந்த விவகாரத்தில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்த … Read more

"எனக்கு எந்த ஈகோவும் இல்லை; பாஜக பூஜ்யமாக வேண்டும்" – நிதிஷ் சந்திப்புக்குப் பின்னர் மம்தா பானர்ஜி பேட்டி

கொல்கத்தா: எனக்கு எந்த ஈகோவும் இல்லை; பாஜக பூஜ்யமாக வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை இன்று (ஏப்.24) கொல்கத்தாவில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்தார். 2024 தேர்தல் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “பாஜகவை எதிர்க்கும் மெகா கூட்டணிக்கான கட்சிகள் ஒருங்கிணைப்பில் … Read more

சூடானில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர தயாராக உள்ள C-130J ராணுவ விமானங்கள்!

சூடானில் உள்நாட்டுப் போர் வெடித்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான இந்தியக் குடும்பங்கள் தங்கள் நாடு திரும்புவதற்காகக் காத்திருக்கின்றன. 

தெலங்கானா போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட ஒய்.எஸ்.ஷர்மிளா

ஐதராபாத்தில் வீட்டுக்காவலில் சிறை வைக்க முயன்ற போலீசாருடன் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்எஸ் ஷர்மிளா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் ஷர்மிளா, புலனாய்வு குழுவினரின் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல் வெளியானது. அவர் விசாரணைக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் வீட்டுக் காவலில் சிறை வைக்க முயன்ற போலீசார், ஷர்மிளாவின் … Read more

கொலீஜியம் முறைக்கு எதிரான வழக்கை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் உறுதி

புதுடெல்லி: கொலீஜியம் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் நியமன தேசிய ஆணையத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை தேதி அறிவிப்பதாக உச்ச நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது. உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கொலீஜியம் எனப்படும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு தேர்வு செய்கிறது. இதற்கு மாற்றாக மத்திய அரசு தரப்பில் நீதிபதிகள் நியமன தேசிய ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆணையத்திற்கு … Read more