ஹெலிகாப்டர் விபத்து – தேனியைச் சேர்ந்த ராணுவ அதிகாரியின் உடலை இன்று தமிழ்நாட்டிற்கு கொண்டு வர திட்டம்

அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனியைச் சேர்ந்த ராணுவ அதிகாரியின் உடல், இன்று தமிழகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா ரக ஹெலிகாப்டர், நேற்று காலை அருணாச்சலபிரதேசத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து மண்டலா மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த லெப்டினெண்ட் ரெட்டி மற்றும் தேனி ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் ஆகிய 2 விமானிகள் உயிரிழந்தனர். மேஜர் … Read more

சினிமா உலகின் மிக உயரிய ஆஸ்கர் விருது பெற்றவர்கள் தாயகம் திரும்பினர்: பதாகைகளுடன் வரவேற்று ரசிகர்கள் வாழ்த்து..!!

டெல்லி: சினிமா உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கரை வென்று தாயகம் திரும்பியுள்ள ஆர்.ஆர்.ஆர். மற்றும்தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் படக்குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் 14 ஆண்டுகால ஆஸ்கர் தாகத்தை தீர்த்து வைத்த இரு வேறு படக்குழுவினரும், விமானம் மூலம் தாயகம் திரும்பினர். மும்பை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் தயாரிப்பாளர் குனித் மோங்காவுக்கு ரசிகர்கள் யானைகளின் படம் பதித்த பதாகைகளை பிடித்தபடி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது … Read more

தேசவிரோத சக்திகளின்  நிரந்தர கருவியாக ராகுல் காந்தி மாறிவிட்டார்: ஜெ.பி. நட்டா

புதுடெல்லி: தேசவிரோத சக்திகளுக்கான நிரந்தர கருவியாக ராகுல் காந்தி மாறிவிட்டார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் உறுதி, அதன் வலிமையான ஜனநாயகம் மற்றும் தீர்க்கமான அரசாங்கத்தின் மீது தேச விரோத சக்திகளுக்கு எப்போதுமே பிரச்சினைகள் உண்டு. இந்திய ஜனநாயகத்தை விமர்சித்ததன் மூலமும், இந்திய ஜனநாயகத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என்று அந்நிய மண்ணில் தெரிவித்ததன் மூலமும் நம் நாட்டின் … Read more

3 பாஜக தலைவர்களை அவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

டெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்ட 3 பாஜக தலைவர்களை அவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி அவரை பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர்.

பெண் சக்தியின் நம்பிக்கை! வந்தே பாரத் ரயிலை இயக்கும் முதல் பெண்! யார் இந்த சுரேக்கா யாதவ்?

இந்தியாவின் முதல் ‘ரயில் ஓட்டுநர்’ என்ற பெருமைக்கு சொந்தக்காரரான சுரேக்கா யாதவ் என்ற மகாராஷ்ட்ராவை சேர்ந்த 57 வயது பெண்ணொருவர், ஆசியாவிலேயே முதல்முறையாக வந்தே பாரத் ரயிலை இயக்கும் (Loco Pilot) முதல் பெண் என்ற பெருமையையும் தற்போது பெற்றுள்ளார். Semi அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலை, சோலாபுர் நிலையம் முதல் மும்பையின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் டெர்மினஸ் வரை கடந்த திங்கட்கிழமை இயக்கியுள்ளார் சுரேக்கா. அவரது புதிய சாதனைக்கு, பிரதமர் – ரயில்வே அமைச்சகம் … Read more

எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும்கட்சி அமளி | 5-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 5-வது நாளாக இன்றும் முடங்கின. இரண்டு அவைகளும் வரும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 13-ம் தேதி திங்கள்கிழமை தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், அந்நிய மண்ணில் இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல் காந்தி அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் … Read more

XBB.1.16 வைரஸ்: அறிகுறிகள், அதிகரிக்கும் பரவல், விளைவுகள்… மீண்டும் கலக்கத்தில் இந்தியா!

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதற்கு உதாரணம் தான் XBB.1.16 வைரஸ். இது கொரோனா XBB மாதிரியில் இருந்து புதிய வைரஸாக உருமாறி வந்துள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவில் தான் XBB.1.16 உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சொல்லலாம். இதில் மகாராஷ்டிராவில் இருந்து உருமாறிய … Read more

ஓய்வூதிய கோரிக்கைப் போராட்டத்தால் ஸ்தம்பித்த அரசு சேவைகள்! 3 நாளாக வேலைநிறுத்தம்

மும்பை: பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக மகாராஷ்டிரா ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது, அரசு அதிகாரிகள் பிடிவாதமாக இருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் குற்றம் சாட்டும் நிலையில், போராட்டம் பல நாட்கள் தொடரும் என்றும், விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் கூறப்படுகிறது.   போராட்டத்தில் ஈடுபட்ட மகாராஷ்டிர மாநில அரசு ஊழியர்கள்  மகாராஷ்டிர மாநிலத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைக்கக் கோரி மாநில அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தத்தின் மூன்றாவது நாளான இன்று, பொதுச் … Read more

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: சோனியா காந்தி, ராகுல் பங்கேற்பு

டெல்லி: அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் எம்.பி.க்கள் பலர் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு … Read more

மீண்டும் அதிகரிக்கும் தொற்று | இந்தியாவில் ஒரே நாளில் 796 பேருக்கு கரோனா தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 796 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 796 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 109 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,625 … Read more