கர்நாடக தேர்தலில் ஒவைசி கட்சி போட்டி – முஸ்லிம் வாக்குகள் சிதற வாய்ப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஹைதராபாத் எம்பியும், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி தங்களது கட்சி, கர்நாடக பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று ஒவைசி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநிலத் தேர்தலில் … Read more

மேலும் 125 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியது ஏர்டெல்..!

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், மேலும் 125 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவையை ஏர்டெல் தொடங்கியது. இந்நிலையில் நேற்று புதிதாக 125 நகரங்களுக்கு 5ஜி சேவையை அந்நிறுவனம் விரிவாக்கம் செய்தது. இதன்மூலம் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களின் மொத்த எண்ணிக்கை 265ஆக உயர்ந்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து நகரங்கள் மற்றும் முக்கிய கிராமங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டு விடும் என்றும் … Read more

லஞ்ச வழக்கில் தேடப்பட்டு வரும் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. சரணடைய உத்தரவு

டெல்லி: லஞ்ச வழக்கில் தேடப்பட்டு வரும் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. விருபக்சப்பா 48 மணி நேரத்தில் சரணடைய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பா.ஜ.க. விருபாக்சப்பாவுக்கு 2 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கிய நீதிமன்றம், போலீசில் சரணடைய உத்தரவு பிறப்பித்துள்ளது.

டோல்கேட் கட்டணம் உயர்வு .. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது..?

இந்தியாவின் தேசிய நெடுஞசாலைகள் எல்லாமே மத்திய அரசின், நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அந்த அமைச்சகமே நெடுஞசாலைகள் ஆணையங்கள் மூலமாக தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்பட்டு , நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சுங்கச்சேவை கட்டணங்களை அவ்வப்போது தேசிய நெடுஞசாலை ஆணையம் உயர்த்தி வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 1 முதல் இந்தியா முழுவதும் தற்போதைய கட்டணத்தை விட 5 முதல் 10 சதவீதம் உயர்த்தப் போவதாகவும். இது குறித்த ஆவணங்கள்மார்ச் 25-ம் தேதி மத்திய அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கக … Read more

இந்தியாவை காட்டிக் கொடுக்காதீர்கள் ராகுல் – மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கண்டனம்

புதுடெல்லி: இந்தியாவை காட்டிக் கொடுக் காதீர்கள் என ராகுல் காந்தி மீது மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் இங்கிலாந்து சென்றிருந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்தநிகழ்ச்சியில் ராகுல் உரையாற்றினார். அப்போது இந்தியாவைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தலைநகர் லண்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ராகுல்பேசும் போது, “இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடைபெறுகிறது. ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகின் ஜனநாயக நாடுகள் இதைக் … Read more

வழக்கொழிந்த 65 சட்டங்களை நீக்குவதற்கு புதிய மசோதா – கிரண் ரிஜிஜூ

வழக்கொழிந்த 65 சட்டங்களை நீக்குவதற்கு வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு புதிதாக மசோதா கொண்டு வர இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற்ற 23வது காமன்வெல்த் சட்ட கருத்தரங்கில் பேசிய அவர், வழக்கில் இல்லாத சட்டங்களுக்கு முடிவு கட்டும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும், கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் இதுபோன்ற 1,486 வழக்கொழிந்த சட்டங்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். நீதித்துறையை காகித பயன்பாடு … Read more

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

கேரளா: திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். பகவதி அம்மன் கோயில் அர்ச்சகர் தீபத்தை எரியவிட்டவுடன் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்

விலை வீழ்ச்சி எதிரொலி – வெங்காயத்தை தீயிட்டு கொளுத்தும் விவசாயிகள்

நாசிக்: மகாராஷ்டிர மாநிலத்தில் வெங்காய விளைச்சல் அதிகமாக இருந்தாலும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதனால் நாசிக் உட்பட பல பகுதிகளில் வெங்காயத்தை தீயிட்டு கொளுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். சமீபத்தில் 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து விளைவித்த 500 கிலோ வெங்காயத்துக்கு சந்தையில் வெறும் ரூ.2 காசோலை வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனவே, விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களுக்கு அரசு உதவ வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு … Read more

பிரசாந்த் உம்ரா: இங்க எதுக்கு வந்தீங்க? ஜாமீன் வேணுமா… தமிழ்நாட்டுக்கு போங்க!

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பிகாரை சேர்ந்த 12 தொழிலாளர்கள் (Bihar Migrant Labourers) இந்தி பேசியதால் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவலை பரப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊர் திரும்பிய வட மாநில தொழிலாளர்கள் அச்சப்பட்டு ஓடுவதாக கிளப்பி விட்டனர். கடும் கண்டனம் இது தமிழ்நாட்டில் கொந்தளிப்பான சூழலுக்கு வித்திட்டது. இதற்கு பின்னால் அரசியல் ரீதியாக சில விஷயங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த … Read more

பாலியல் கொடுமைகள் குறித்து பேச பெண்கள் முன்வர வேண்டும் – குஷ்பூ

தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் குறித்து மவுனம் காக்காமல், சமூகத்தில் பேச பெண்கள் முன்வர வேண்டும் என்று நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ கேட்டுக் கொண்டுள்ளார். பாலியல் ரீதியில் 8 வயது முதல் 15 வயது வரை தனக்கு தனது தந்தை கொடுமை இழைத்ததாக குஷ்பூ தெரிவித்திருந்தார். இந்த கருத்துகள், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவர் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், அந்த கருத்துக்காக தாம் வெட்கப்படவில்லை … Read more