விமான பணிப்பெண்களுக்கான நேர்முகத்தேர்வு.. ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு..!

டாட்டாவுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், சென்னை, டெல்லி, மும்பை உட்பட 11 நகரங்களில் விமான பணிப்பெண்களுக்கான ஆள்சேர்ப்பு முகாமை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாதுகாப்பு மற்றும் சேவை பிரிவில் பணியாற்ற தகுதியுள்ள, 18 முதல் 27 வயதுக்குள் உள்ள, பிளஸ் 2 தேர்ச்சியடைந்த பெண்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. இன்று மும்பையில் தொடங்கிய நேர்முகத்தேர்வு, வரும் 24-ம் தேதி புனேவில் நிறைவடைகிறது. வரும் 10-ம் தேதி, ஏர் இந்தியா நேர்முகத்தேர்வு சென்னையில் நடைபெறவுள்ளது. … Read more

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இல்லை என்பதை காட்டவே போலியான வதந்தி பாஜகவினர் பரப்புகின்றனர்: பீகார் துணை முதல்வர்

பாட்னா: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இல்லை என்பதை காட்டவே போலியான வதந்திகளை பரப்புவதே பாஜகவின் வேலை. இதுபோன்ற சம்பவம் நடந்தால் எங்கள் அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கும் என பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படும் வீடியோக்களை பீகாரைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ளார், ஆனால் இது போலியானது என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக  டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட வீடியோவில்:சமூக வலைதளங்களில் 2 … Read more

கண்ணீர் வரவழைக்கும் செய்தி..!! 3 வயது சிறுமியை 200 இடத்தில் கடித்த 20 தெரு நாய்கள்..!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலி சிபி கஞ்ச் பகுதியில் பாண்டியா கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் கங்கா. இவரது மகள் பாரி (3). இவர் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தெரு நாய்கள் அந்த சிறுமியை கடித்தது. சுமார் 20 நாய்கள் சிறுமியை சூழ்ந்து கொண்டு கடித்துள்ளது. சிறுமியை நாய்கள் சுமார் 100 மீட்டர் வரை இழுத்துச் சென்று மாறி மாறி கடித்துள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்து வந்த … Read more

உத்தராகண்ட்டில் குரூப் சி தேர்வுக்கு நேர்காணல் ரத்து – முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவிப்பு

ஹல்த்வானி: காப்பி அடிப்பதை தடுக்கும் சட்டத்தை அமல்படுத்தியதற்காக உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை ஹல்த்வானி நகரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பாரதிய ஜனதா யுவ மோர்சா அமைப்பு நேற்று முன்தினம் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேசியதாவது: கஷ்டப்பட்டு படித்து தேர்வில் வெற்றி பெறும் இளைஞர்களின் உரிமைகளை, காப்பி அடிப்பவர்கள் பறித்தால், தேர்வெழுதியவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மிகுந்த வருத்தம் அடைவர். அதனால்தான் கடுமையான நடவடிக்கை … Read more

ஹிஜாவு, ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் தலைமறைவாக உள்ள 15 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

டெல்லி: ஹிஜாவு, ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் தலைமறைவாக உள்ள 15 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக பொருளாதார குற்றப்பிடிவு போலீசார் அறிவித்துள்ளனர். மக்களை நம்ப வைத்து நிதி மோசடி செய்த ஹிஜாவு, ஆருத்ரா நிறுவனங்கள் மீது பொருளாதார குற்றப்பிடிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதிக வட்டி தருவதாக மோசடி செய்த 3 வழக்குகளில் தொடர்புடைய 15 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ் … Read more

கணவனை கோடாரியால் வெட்டிக் கொன்ற 5ஆவது மனைவி!!

20 தூக்க மாத்திரைகள் கொடுத்து கணவனை கோடாரியால் வெட்டிக் கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் பிறப்புறுப்பு வெட்டப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்த நபர் பிரேந்தர் குர்ஜார் என்பவர் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பிரேந்தர் குர்ஜாரின் மனைவி காஞ்சன் குர்ஜாரின் நடவடிக்கை போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரை தொடர்ந்து கண்காணித்தபோது அவர்தான் குற்றவாளி … Read more

அதிர்ச்சி! ஹத்ராஸ் குற்றவாளிகளை தப்பிக்க வைத்த பாஜக அரசு!!

ஹத்ராஸில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியான நிலையிலும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த 19 வயது பட்டியலினப் பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த 2020ஆம் ஆண்டு கடுமையாகத் தாக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அந்த 4 பேரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணின் நாக்கை வெட்டியது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் மீட்கப்பட்ட அந்தப் … Read more

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு | முக்கிய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; 3 பேர் விடுவிப்பு

ஹத்ராஸ்: ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. எஞ்சிய 3 பேரை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் 19 வயது பட்டியலினப் பெண் ஒருவர், வேறு சமூகத்தை சேர்ந்த 4 பேர் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டார். பிறகு அவர் கடுமையாக தாக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அப்பெண் டெல்லி சப்தர்ஜங் … Read more

கர்நாடகா தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜகவிற்கு மரண அடி; பகீர் எம்எல்ஏ.!

கர்நாடகாவில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டதால், பாஜக எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்து தலைமறைவாகியுள்ளார். கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தது முதலே ஊழலில் திளைத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. அரசு பணிகளுக்கான ஒப்பந்தங்களுக்கு 40 சதவிகிதம் கமிசனை பாஜகவினர் கேட்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதை உண்மையாக்கும் விதத்தில் கர்நாடகாவில் அரசு பணிகளை டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களின் தற்கொலை நிகழ்வுகள் நடைபெற்றது. … Read more

தற்போதைய முதல்வருக்கு வாய்ப்பு மறுப்பு; திரிபுராவுக்கு பெண் முதல்வரா?.. பாஜக தலைமை தீவிர ஆலோசனை

டெல்லி: திரிபுராவில் முதன் முறையாக பெண் ஒருவரை முதல்வராக பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. திரிபுராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டதற்கு முக்கிய காரணமாக அம்மாநில முதல்வர் மாணிக் சஹாவின் மிகப்பெரிய பங்கு என்று கூறுகின்றனர். அவரே இந்த முறையும் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், பாஜக தேசிய தலைமை புதிய மாற்றத்தை பரிசீலித்து வருவதாக ஊகங்கள் எழுந்துள்ளன. திரிபுரா மாநிலத்தில் முதன் முதலாக பெண் … Read more