முறை தவறிய உறவால் வந்த வினை; கணவருக்கு சைலன்சரால் சூடு வைத்து தலையில் சிறுநீர் கழித்து சித்ரவதை: மனைவி, ஆட்டோ டிரைவர் கைது

திருமலை: கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், அவர்கள் இறந்துவிட்டதாக முகநூலில் பதிவு செய்தார். ஆத்திரமடைந்த கள்ளக்காதலன், ஆட்டோ டிரைவருக்கு சூடு வைத்து, தலையை மொட்டை அடித்து சிறுநீர் கழித்து கொடுமை செய்துள்ளார். இதையடுத்து ஆட்டோ டிரைவரின் மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஏ.ரங்கம்பேட்டையை சேர்ந்தவர் வம்சி (30). ஆட்டோ டிரைவர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமான தெலங்கானா மாநிலம் கரீம் … Read more

திஹார் சிறையில் பிற கைதிகளுடன் மணீஷ் சிசோடியா அடைக்கப்பட்டுள்ளார்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திஹார் சிறையில் தியான வசதி கொண்ட விப்பாசனா அறையில் அடைக்கப்படாமல், பிற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், “தனக்கு தியான வசதி கொண்ட அறை சிறையில் வழங்கப்பட வேண்டும் என்று மணீஷ் சிசோடியா வேண்டுகோள் விடுத்திருந்தார். நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டிருந்தது. நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தும், அவர் குற்றவாளிகளுடன் சிறையில் … Read more

ஆந்திராவில் விறுவிறுப்படையும் எம்எல்சி தேர்தல் வேலையில்லா இளைஞர்கள், பட்டதாரிகள் தெலுங்கு தேசத்துக்கு வாக்களிக்க வேண்டும்-கட்சியினர் வீடு வீடாக ஆதரவு திரட்டினர்

சித்தூர் : ‘வேலையில்லா  இளைஞர்கள், பட்டதாரிகள் தெலுங்கு தேசத்துக்கு வாக்களிக்க வேண்டும்’ கட்சியினர் வீடு வீடாக ஆதரவு திரட்டினர். இதனால், ஆந்திராவில் எம்.எல்.சி. தேர்தல் விறுவிறுப்பு அடைந்துள்ளது.சித்தூர் தெலுங்கு தேச கட்சி மாவட்ட இளைஞர் அணி  தலைவர் ராஜேஷ் தலைமையில் பட்டதாரிகள் இருக்கும் வீடுகளுக்கு நேற்று நேரடியாக சென்று எம்எல்சி தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களில் பலர் வாக்களிப்பதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தெலுங்கு தேச கட்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜேஷ் தெரிவித்ததாவது: … Read more

எக்ஸ்பிரஸ் ரயிலில் சக பயணி இடையே வாக்குவாதம்… கீழே தள்ளி விட்டு கொன்ற தமிழ்நாட்டை சேர்ந்த நபர்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கோயிலண்டி பகுதியில் ரயில் தண்டவாள பகுதியில் கிடந்த 25 வயது ஆடவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மங்களூரு சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரல் செல்லும் மலபார் எக்ஸ்பிஸ் ரெயிலில் பயணித்த இரு பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் மோதல் முற்றியதில், சக பயணியை ஒருவர் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு உள்ளார். இந்த சம்பவத்தில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்ட பகுதியை … Read more

மும்பை அருகே கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்ட கடற்படை ஹெலிகாப்டர்: 3 பேர் பத்திரமாக மீட்பு

மும்பை: இந்திய கடற்படைக்குச் சொந்தமான உள்நாட்டு தயாரிப்பான மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ஏஎல்ஹெச்) இன்று (புதன்கிழமை) அவசரமாக மும்பை கடற்கரையில் தரையிறக்கப்பட்டது. அதிலிருந்த மூன்று பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தங்களின் வழக்கமான பயணத்தில் இருந்த ஹெலிகாப்டர் அவசரமாக கடலில் தரையிரக்கப்பட்ட போது, அவை மும்பை கடற்கரைக்கு அருகில் இருந்தன. அதனால் உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து த்ருவ் ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பேரும் கடற்படை ரோந்து கப்பல் … Read more

மும்பை கடல்பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர், அவசரமாக கடலில் இறங்கியது

மும்பை: இந்திய கடற்படைக்கு  சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக கடலில் இறங்கியது. ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் மீட்கப்பட்டநிலையில் கடலில் ஹெலிகாப்டர் இறக்கப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2 இதயம், 4 கால்களுடன் குழந்தை… பிறந்து சில நிமிடங்களில் உயிரிழந்த சோகம்!!

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டம் ரத்தன்கரில் உள்ள கங்காராம் தனியார் மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி 19 வயது கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கைலாஷ் சோங்காரா சோனோகிராபி செய்தார். அதில் கர்ப்பிணியின் வயிற்றில் விசித்திரமான குழந்தை இருப்பது தெரியவந்தது. அந்த குழந்தைக்கு 2 இதய துடிப்புகள் உணரப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் ஒரு மணிநேரத்தில் அந்த பெண்மணிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு 2 இதயம், … Read more

2-வது முறையாக திரிபுரா முதல்வராக பதவியேற்றார் மாணிக் சாஹா

அதர்தலா: தொடர்ந்து இரண்டாவது முறையாக திரிபுரா மாநில முதல்வராக டாக்டர் மாணிக் சாஹா இன்று (மார்ச் 8) பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். புதன்கிழமை அகர்தலாவில் நடந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருந்த அஸ்ஸாம் முதல்வர் ஹேம்ந்த பிஸ்வா சர்மாவும் கலந்து கொண்டார். சமீபத்தில் திரிபுராவின் 60 சட்டப்பேரவைத் … Read more

திரிபுராவில் இரண்டாவது முறையாக முதலமைச்சரானார் மாணிக் சாஹா..!

வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த மாணிக் சாஹா இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். கடந்த மாதம் நடைபெற்ற திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தலைநகர் அகர்தலாவிலுள்ள விவேகானந்தர் மைதானத்தில் புதிய அரசு பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். முதலமைச்சர் மாணிக் சாஹா மற்றும் 8 … Read more

ம.பி. முதலமைச்சரின் பாதுகாப்பு பணியை முழுக்க கையாண்ட பெண்கள் : சிறப்பு டூடுல், மணல் சிற்பம் உருவாக்கி மகளிருக்கு கவுரவம்..!!

மராட்டியம்: நாடு முழுவதும் இன்று சர்வதேச தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மராட்டிய மாநிலம் நாக்பூர் குடும்ப நீதிமன்றம் சார்பில் 2017-ம் ஆண்டு முதல் பெண்களுக்கு இலவச தொழில்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், தனித்து விடப்பட்ட பெண்கள் இதனால் பயன்பெற்று வருகின்றன. கைவினை பொருட்கள் தயாரிப்பு, அழகு கலை உள்ளிட்ட பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தையொட்டி இந்த திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. … Read more