மனைவியை கொலை செய்து உடலை மறைத்து நாடகமாடிய கணவன்..!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் காஞ்சியூர் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியை வட்சமா (27). இவரது கணவர் விஜேஷ். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மதுபழக்கத்திற்கு அடிமையான விஜேஷ் அவ்வப்போது மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி வட்சமாவை துன்புறுத்தியுள்ளார். கடுமையான வார்த்தைகளை பேசியும், அவரை தாக்கியும் துன்புறுத்தியுள்ளார். இதனிடையே, கடந்த 18-ம் தேதி பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கு சென்ற மனைவி வீட்டிற்கு வரவில்லை என்று வட்சமாவின் உறவினர்களுடம் விஜேஷ் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த வட்சமாவின் உறவினர்கள் … Read more

இனி சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் இப்படி தான் வசூலிக்கப்படும்..!!

நாடு முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளும், அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிளும் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கட்டணம் ரூ.55 வரை உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுங்கக்கட்டணங்கள் ஆண்டுதோறும் தேசிய நெடுஞ்சாலை கண்மூடித்தனமாக உயர்த்தப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் அன்றாடம் சாலைகளை பயன்படுத்த வேண்டியுள்ள நிலையில், மாதாந்திர அனுமதி அட்டைகளுக்கான கட்டணங்களும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் … Read more

கர்நாடக மாநில எம்எல்ஏ.க்களில் 95 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்

பெங்களூரு: சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் கல்வித் தகுதி, நிதி ஆதாரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்வதை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) வழக்கமாக கொண்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அம்மாநில எம்எல்ஏக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 எம்எல்ஏக்களில் 219 பேரின் கல்வித் தகுதி, நிதி ஆதாரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 35 சதவீத எம்எல்ஏக்கள் மீது கடுமையான … Read more

காஷ்மீரில் சிக்கியவருடன் மகனுக்கு தொடர்பு குஜராத் முதல்வர் அலுவலக அதிகாரி ராஜினாமா

அகமதாபாத்: பிரதமர் அலுவலக அதிகாரி என ஏமாற்றி வந்த கிரணுடன், மகன் தொடர்பு வைத்திருந்ததால், குஜராத் முதல்வர் அலுவலக அதிகாரி பதவியை ஹிதேஷ் பாண்டியா ராஜினாமா செய்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த கிரண் பாய் படேல், பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் இயக்குநராக பணியாற்றுவதாக கூறி, காஷ்மீரின் குல்மார்க் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்றுள்ளார். கிரணை 5 நட்சத்திர உணவு விடுதியில் தங்க வைத்த காஷ்மீர் அரசு, அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும் கொடுத்துள்ளது. இந்நிலையில், கிரணின் … Read more

ராகுலுக்கு தண்டனை அதிகமானது: பிரசாந்த் கிஷோர் கருத்து

பாட்னா: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ராகுல் காந்தி விஷயத்தில் நான் கருத்து சொல்வதற்கு சட்ட நிபுணர் கிடையாது. ஆனால் சட்டத்தின் செயல்பாட்டுக்கு உரிய மரியாதையுடன் கூற வேண்டும் என்றால், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகையானது என்று தோன்றுகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு பெரிய மனது காட்டியிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கட்சியினர் மேல் முறையீடு செல்லும் வரைக்கும் சில நாட்கள் பொறுத்திருந்து தகுதி இழப்பு முடிவை அமல்படுத்தியிருக்க வேண்டும். … Read more

பிறந்த நாளில் உருக்கம் நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் காதல் கடிதம்

புதுடெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தனது பிறந்தநாளையொட்டி  நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு காதல் கடிதம் எழுதியுள்ளார். பிரபல தொழிலதிபர் மனைவியிடம் ரூ. 200 கோடி மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்கில் கைதாகி டெல்லி மண்டோலி சிறையில் இருப்பவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்சுக்கு ரூ. 10 கோடிக்கு பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார். இந்நிலையில், தனது பிறந்தநாளையொட்டி ஜாக்குலினுக்கு அவர் காதல் கடிதம் எழுதியுள்ளார். அவர் மிக அழகான பெண் என்று … Read more

ராகுலுக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனைக்கு தடைபெறாதது ஏன்?: பாஜ கேள்வி

பாட்னா: ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை பெறாதது ஏன் என்று பா.ஜ மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார். டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர் சந்திப்பிற்கு பின், பீகார் மாநிலம், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த பாஜவின் மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘கர்நாடக தேர்தலில் இந்த பிரச்னையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதற்காக தான், அவதூறு வழக்கில் ராகுலுக்கு  வழங்கிய  தண்டனைக்கு உடனடியாக தடை பெறுவதற்கு … Read more

2 ஆண்டு சிறை… எம்பி பதவி பறிப்பு என்னவாகும் ராகுலின் அரசியல் எதிர்காலம்?: 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்

புதுடெல்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை, அதைத் தொடர்ந்து எம்பி பதவி பறிப்பு போன்ற நடவடிக்கையால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்? அவர் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படுமா? என்பது குறித்து சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் மூலம் ராகுலுக்கு மக்கள் ஆதரவு பெருகி உள்ளது. பாஜவுக்கு எதிராக சக்திவாய்ந்த தலைவராக ராகுல் … Read more

எம்பி, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

புதுடெல்லி: சிறை தண்டனைப் பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் மக்கள் பிரதிநித்துவ சட்டப்பிரிவு 8ன் உட்பிரிவான 3ஐ ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அபா.முரளிதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,‘‘இரண்டாண்டு அல்லது அதற்கு மேலாக சிறை தண்டனை விதிக்கப்பட்டால், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். குறிப்பாக மக்கள் பிரதிநித்துவ சட்டம் பிரிவு 8ன் உட்பிரிவு 3ல் தானாக … Read more

ராகுலுக்கு அரசு பெரிய மனதை காட்டியிருக்க வேண்டும்

தனது சொந்த மாநிலமான பீகாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அரசியல் வியூகர் பிரசாந்த் கிஷோர்  கூறுகையில், ‘‘நான் சட்ட வல்லுநர் கிடையாது. ஆனால் சட்டத்தின் செயல்பாட்டுக்கு உரிய மரியாதையுடன் கூறுகிறேன் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகையானது. தேர்தல் நேரத்தின்போது மக்கள் அனைத்து விஷயங்களையும் கூறுகிறார்கள். இது முதல் நிகழ்வு கிடையாது, கடைசியாக இருக்கப்போவதும் இல்லை. அவதூறு வழக்குக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை என்பது மிகவும் அதிகப்படியானது. மறைந்த அடல் பிகாரி வாஜ்பாயின் பிரபல வரியான … Read more