கருவிலேயே குழந்தைக்கு கீதை, ராமாயண பாடம் – ஆர்எஸ்எஸ் துணை அமைப்பு திட்டம்

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் பெண்கள் பிரிவான ராஷ்டிர சேவிகா சமிதியின் ஓர் அங்கம் சாம்வர்தினி நியாஸ். இது ‘கர்பா சன்ஸ்கார்’ என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் மாதுரி மராத்தே நேற்று கூறும் போது, “கர்பா சன்ஸ்கார் திட்டத்தின் கீழ், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சியுடன் பகவத் கீதை, ராமாயண பாடம் கற்பிக்கப்படும். இதன் மூலம் தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைகள் கலாச்சார மதிப்பை தெரிந்து கொள்ள உதவும். கர்ப்ப காலம் முதல் … Read more

ஐதராபாத் ஷூட்டிங்கில் அமிதாப்புக்கு காயம்: படப்பிடிப்பு ரத்து

மும்பை: ஐதராபாத்தில் நடந்த சினிமா ஷூட்டிங்கில் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தற்போது அவர் ஓய்வெடுத்து வருகிறார். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். படப்பிடிப்பின்போது நடந்த சண்டைக் காட்சியில் எதிர்பாராத விதமாக அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவர் ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஐதராபாத்தில் இருந்து மும்பை திரும்பினார். தற்போது, அவரது படப்பிடிப்பு ரத்து … Read more

நாகாலாந்தில் எதிர்கட்சிகள் இல்லாத ஆட்சி அமைகிறதா ?

நாகாலாந்து மாநிலத்தில் கடந்த பிப். 27ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் மார்ச் மாதம் 2ம் தேதி அறிவிக்கப்பட்டன. 60 தொகுதிகள் கொண்ட நாகாலாந்தில் முந்தைய கூட்டணியான தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி(என்டிபிபி) 40 தொகுதிகளிலும், பா.ஜ.க. 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில் இதில் என்டிபிபி- 25, பா.ஜ.க.-12 தொகுதிகளில் வெற்றி பெற்றன. என்சிபி-7, என்பிபி-5, எல்ஜேபி(ராம் விலாஸ்), நாகா மக்கள் முன்னணி(என்பிஎஃப்), ஆர்பிஐ(அத்வாலே) ஆகிய கட்சிகள் தலா இரண்டு இடங்களிலும், ஜேடி(ஐ) ஒரு … Read more

மகன், மகள்கள் பராமரிக்காததால் ரூ.1.5 கோடி வீடு, நிலத்தை அரசுக்கு அளித்த முதியவர்

லக்னோ: உ.பி. மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் நாது சிங் (85). இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவருக்கு ஒரே மகன் சஹாரன்பூர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 4 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. மனைவி காலமானதால் சொந்த வீட்டிலேயே நாது சிங் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு கிராமத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள வீடு, விவசாய நிலங்கள் உள்ளன. மகனும், மகள்களும் பராமரிக்காததால் முதியோர் இல்லத்தில் நாது சிங் சேர்ந்தார். அங்கும் யாரும் வந்து பார்க்கவில்லை. … Read more

திரிபுரா முதலமைச்சராக 2வது முறையாக பதவியேற்கிறார் மாணிக் சாஹா

திரிபுரா முதலமைச்சர் பதவிக்கு மாணிக் சாஹாவை பாஜக எம்எல்ஏக்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். முதலமைச்சராக இருந்த விப்லப் குமார் கடந்தாண்டு ராஜினாமா செய்ததையடுத்து, மாணிக் சாஹா அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக 32 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான IPFT கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றன. இந்நிலையில், அகர்தலாவில் நேற்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மாணிக் சாஹா முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரிபுரா முதலமைச்சராக 2வது முறையாக நாளை மாணிக் சாஹா … Read more

வாலிபர் பின்தொடர்வதாக நடிகை புகார்: போலீஸ் விசாரணை

ஐதராபாத்: ஓ பில்லா நீ வல்லா, பாக்ய நகர வீட்டில் கம்மத்து உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்தவர் ஷாலு சவுதாசியா. ஐதராபாத் கேபிஆர் பூங்காவில் 2021ம் ஆண்டில் நடைபயிற்சியில் ஈடுபட்டபோது மர்ம நபர்கள் அவரை தாக்கி பலாத்கார முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களிடமிருந்து தப்பித்த ஷாலு, அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தார். மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு, படங்களில் நடிப்பதையும் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது அதே இடத்துக்கு நடை பயிற்சி செய்ய ஷாலு செல்கிறார். … Read more

முன்னாள் முதல்வரின் மனைவி மற்றும் மகள்கள் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை..!!

ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் தொடர்பாக லல்லு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக லல்லு பிரசாத் மற்றும் அவரது மனைவிக்கு தில்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. முன்னதாக ரயில்வே அமைச்சராக லல்லு பிரசாத் இருந்தபோது, வேலைக்காக அணுகியவா்களிடமிருந்து நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டு, அவா்களுக்கு குரூப்-டி பணிகள் வழங்கப்பட்டுள்ளன. எந்த விளம்பரமோ, பொது அறிவிக்கையோ இல்லாமல் இந்த நியமனங்கள் முறைகேடாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வகையில், பாட்னாவில் சுமார் 1.05 லட்சம் சதுர … Read more

வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைத்து சுகாதாரத் துறையில் தன்னிறைவு பெற முயற்சி – பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: சுகாதாரத் துறையில் இந்தியா வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைத்து தன்னிறைவு பெற மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வு தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கலந்துரையாடல் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது: நீண்ட காலமாக ஒருங்கிணைந்த அணுகுமுறை மற்றும் தொலைநோக்குப் பார்வை இல்லாததால் இந்தியாவின் சுகாதாரத் துறை பாதிக்கப்பட்டது. ஆனால்எனது அரசில் சுகாதார அமைச்சகம் மட்டுமின்றி … Read more

வங்கிக் கணக்கு விவரங்களை கொடுத்து ஆன்லைன் மோசடியால் ரூ.57 ஆயிரம் இழந்த ஸ்வேதா மேனன்

மும்பை: வங்கிக் கணக்கு விபரங்களை கொடுத்து, ஆன்லைனில் ரூ. 57 ஆயிரம் இழந்த நடிகை ஸ்வேதா மேனன், இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். மலையாள நடிகை ஸ்வேதா மேனன், தமிழில் சாது மிரண்டால், சினேகிதியே, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆன்லைன் பணமோசடி அதிகரித்து வரும்நிலையில் ‘பான்’ எண் புதுப்பித்தல் உள்ளிட்ட காரணங்களால் வங்கிக் கணக்கில் பணம் இழந்த 40 பேர் மும்பை போலீசில் புகார் அளித்தனர். மேற்கண்ட 40 பேரில் நடிகை ஸ்வேதா மேனனும் … Read more

லிபியாவில் சிக்கிய 12 இந்தியர்கள் மீட்பு – வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை

புதுடெல்லி: வேலைவாங்கித் தருவதாக மோசடி செய்து லிபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தவித்து வந்த 12 இந்தியர்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மீட்டுள்ளது. பஞ்சாபிலுள்ள 12 பேருக்கு துபாயில் வேலை வாங்கித் தருவதாக கூறி சிலர் லிபியாவுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அங்கு அவர்கள் கொத்தடிமை போல வேலை செய்து வந்தனர். இதுதொடர்பான புகார் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு (என்சிஎம்) வந்தது. இதையடுத்து சிறுபான்மையினர் ஆணையம் அதிரடியாக நடவடிக்கை எடுத்து 12 … Read more