பல மாநிலங்களின் அரசியலில் தடம் பதித்த சரத் யாதவ் – பிஹாரின் ‘கிங்மேக்கர்’ ஆக இருந்த பொதுவுடைமைவாதி

புதுடெல்லி: ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவர் சரத் யாதவ், சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப் பட்டிருந்தார். மூச்சுத்திணறல் காரணமாக டெல்லிக்கு அருகே குருகிராமில் உள்ள போர்டீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (வியாழன்) இரவு காலமானார். அவருக்கு வயது 75. மத்திய பிரதேசத்தின் ஹோசிங்காபாத் மாவட்டம், பபாய் கிராமத்தில் 1947-ல் பிறந்தவர் சரத் யாதவ். 1971-ல் பொறியியல் கல்லூரி மாணவர் பேரவை தலைவரானார். அப்போது அரசியலில் நுழைந்த அவர், காங்கிரஸுக்கு … Read more

திருப்பதி தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

திருப்பதி வெங்கடாஜலபதியை விரைவில் தரிசிக்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கான முக்கியமான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.  திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையான திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி), தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட்-புக்கிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த டிடிடி இணையதளத்தின்படி, ஜனவரி 12 முதல் பிப்ரவரி 28 வரை பக்தர்கள் ரூ.300 விலையில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் மற்றும் இந்த தளத்தில் டிக்கெட் முன்பதிவு செயல்முறை கடந்த ஜனவரி 9-ம் தேதி முதலே தொடங்விட்டது.  சமீபத்தில் … Read more

உணவு டெலிவரிக்கு சென்றபோது நாயிடம் தப்பிக்க 3வது மாடியில் இருந்து குதித்த வாலிபர் சீரியஸ்: ஐதராபாத்தில் பெண் மீது வழக்கு

திருமலை: ஐதராபாத்தில் உணவு டெலிவரிக்கு சென்றபோது வாலிபரை வளர்ப்பு நாய் கடிக்க முயன்றதால் 3வது மாடியில் இருந்து கீழே குதித்தார். ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஷோபனாநாகனி என்ற பெண் கடந்த 11ம் தேதி ஆன்லைன் ஆப்பில் உணவு ஆர்டர் செய்தார்.   டெலிவரி பாயான முகமது ரிஸ்வான்(23) என்பவர் உணவு பார்சலை   தர கதவை தட்டியுள்ளார். அப்போது கதவு திறந்திருந்ததால் வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் வெளியே வந்து முகமதுரிஸ்வானை கடித்தது.   தப்பிக்க … Read more

கடந்த 12 நாட்களில் 5.4 செ.மீ. மண்ணில் புதைந்த ஜோஷிமத் நகரம் – அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷி மத் நகரம் வெறும் 12 நாட்களில் 5.4 செ.மீ. புதைந்திருப்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இமயமலையின் அடிவாரத்தில் உள்ளது ஜோஷிமத்நகரம். பத்ரிநாத் போன்ற பிரபலபுனிதத் தலங்களின் நுழைவாயிலாக இந்நகரம் உள்ளது. இந்தநகரம் மெல்ல மெல்ல மண்ணில்புதைந்து வருவதால் அங்குள்ளவீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள்மற்றும் சாலைகளில் விரிசல்ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளன. … Read more

பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு இமாச்சல அமைச்சரவை ஒப்புதல்

சிம்லா: இமாச்சலப்பிரதேச புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே பழைய ஓய்வுதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சுக்விந்தர் சிங் சுக்கு முதல்வராக பொறுப்பேற்றார். முன்னதாக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மாநிலத்தில் பழைய ஓய்வூதிய முறையே மீண்டும் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில் இமாச்சல் அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு தலைமையில் நடந்த … Read more

முன்னணி விற்பனை நிலையங்களில் இருந்து தரமில்லாத 18,600 பொம்மைகள் பறிமுதல்

புதுடெல்லி: இந்தியாவில் விற்கப்படும் குழந்தைகளுக்கான பொம்மைகள் பிஐஎஸ் தரக் குறியீட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அந்த வகையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளுக்கும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளுக்கும் பிஐஎஸ் தரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம். இந்நிலையில், பிஐஎஸ் அமைப்பு இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கடந்த ஒரு மாதமாக அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது. ஹேம்லிஸ், ஆர்ச்சிஸ், டிபிள்யூஎச் ஸ்மித், கிட்ஸ் ஸோன், கோகோகார்ட் … Read more

சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை: குவியும் பக்தர்கள்: ஆன்லைன் முன்பதிவு ரத்து

திருவனந்தபுரம்: சபரிமலையில்  பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை இன்று நடப்பதையொட்டி பக்தர்கள்  குவிந்த வண்ணம் உள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை இன்று (14ம் தேதி) நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்ப  விக்ரகத்தில் அணிவிக்கப்படும் திருவாபரணம் நேற்று  முன்தினம் பந்தளத்தில் இருந்து  புறப்பட்டது. இன்று மாலை 6.30 மணியளவில் திருவாபரணம் சன்னிதானத்தை அடையும். பின்னர் திருவாபரணம் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு சிறப்பு  தீபாராதனை நடைபெறும். அப்போது பொன்னம்பலமேட்டில் 3 … Read more

முக அங்கீகாரம், கருவிழி ஸ்கேனை வங்கிகள் வரம்புடன் பயன்படுத்த அனுமதி

புதுடெல்லி: மோசடி மற்றும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை குறைக்கும் விதமாக சில சமயங்களில் முக அங்கீகாரம் மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள இந்திய வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார், பொதுத் துறையைச் சேர்ந்த சில வங்கிகள் இந்த வசதியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன மேலும், இந்த வசதியை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வரம்பை மீறும் தனிப்பட்ட பரிவர்த்தனைகளை (ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை) மேற்கொள்ளும் நபர்களின் விவரங்களை வங்கிகள் சரிபார்க்க … Read more

காரில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் அலட்சியமாக இருந்த 11 போலீசார் சஸ்பெண்ட்

புதுடெல்லி: காரில் இளம்பெண் சடலம் இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக பலியான விவகாரத்தில் 11 போலீசாரை டெல்லி காவல்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. புத்தாண்டு தினத்தில் டெல்லியில் 20 வயது இளம்பெண் மீது மோதிய கார், அவரது உடலை சுல்தான்புரியிலிருந்து கஞ்சவாலா பகுதி வரை 12 கி.மீ. தூரத்திற்கு இழுத்துச் சென்றது.   இந்த விபத்து தொடர்பாக காரில் இருந்தவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், விபத்து நடந்த சமயத்தில் சம்பந்தப்பட்ட கார் சென்ற வழித்தடத்தில் … Read more

சட்டீஸ்கரில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் சோதனை

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி வீடு மற்றும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ராய்ப்பூர், கோர்பா, துர்க் ஆகியே இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் ஜார்கண்டின் ராஞ்சி மற்றும் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நீர்வளத்துறை செயலாளர் அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சில அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் நிலக்கரி வியாபாரிகளுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை … Read more