சட்டீஸ்கரில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் சோதனை

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி வீடு மற்றும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ராய்ப்பூர், கோர்பா, துர்க் ஆகியே இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் ஜார்கண்டின் ராஞ்சி மற்றும் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

நீர்வளத்துறை செயலாளர் அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சில அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் நிலக்கரி வியாபாரிகளுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.