நேபாளத்தில் பயங்கர விமான விபத்து: 5 இந்தியர்கள் உட்பட 68 பேர் பலி.! தரையிறங்கும்போது நேர்ந்த சோகம்

புதுடெல்லி: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 72 பேரை ஏற்றிச் சென்ற விமானம் நேற்றுக் காலை பொகாராவில் விழுந்து நொறுங்கியது. இதில் 68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  மேற்கு நேபாளத்தில் அமைந்துள்ள நகரின் பழைய மற்றும் புதிய விமான நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும், ஏடிஆர் 72 விமானம் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து புறப்பட்டது. இதில் 68 பயணிகள், 4 விமான பணியாளர்கள் இருந்துள்ளனர். காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் … Read more

உலகக் கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆட்டம் டிரா!

ஒடிசாவில் நடைபெறும் உலகக் கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டியில், இந்தியா- இங்கிலாந்து இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதின. இதில் இரு அணிகளும் கடைசி வரை கோலடிக்கவில்லை. இதனால் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, வேல்ஸ் அணியை 5க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வென்றது.  Source link

கர்ப்பிணி மனைவி என்று கூட பாராமல் பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற சைக்கோ கணவன்..!!

உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டம் குஞ்சாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்கோபால். இவரது மனைவி சுமன். இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் காதல் ஏற்பட்டது. முதலில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமனின் பெற்றோர் இறந்துவிட்டனர். இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே காதல் கணவர் போதைக்கு அடிமையானார் என்று சுமன் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் … Read more

75-வது ராணுவ தினம் | ஆயுதப்படையினரின் நிகரற்ற துணிச்சல், தியாகம் – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்

பெங்களூரு: 75-வது ராணுவ தினத்தை முன்னிட்டு நேற்று (ஜனவரி 15) பெங்களூருவில் நடைபெற்ற இந்திய ராணுவத்தின் வீரம் மற்றும் சாகசங்களை உள்ளடக்கிய சவுர்யா சந்தியா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில் பாதுகாப்பு தலைமை தளபதி அனில் சவ்ஹான், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, துணை தளபதி பிஎஸ் ராஜூ, மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் ராணுவ தின வாழ்த்துக்களைத் … Read more

செகந்திராபாத் உடன் விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார்

புதுடெல்லி: செகந்திராபாத் – விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் இந்திய இரயில்வே அறிமுகப்படுத்திய எட்டாவது வந்தே பாரத் விரைவு ரயில் ஆகும். மேலும், தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களை இணைக்கும் முதலாவது வந்தே பாரத் ரயில் இதுவாகும். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, விழாக்கள் கொண்டாடப்படும் இந்த மங்களகரமான சூழலில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் பாரம்பரியத்தை … Read more

ராணுவ தினத்தை முன்னிட்டு பெங்கரூருவில் ராணுவ தின அணிவகுப்பு..!

இன்று ராணுவ தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம் பெங்கரூருவில் ராணுவ தின அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ராணுவ தின அணிவகுப்பு மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகள் முதல்முறையாக டெல்லிக்கு வெளியே நடத்தப்படுவதாகவும், இது ராணுவம் மக்களுடன் இணைவதற்கு பொன்னான வாய்ப்பு என்றும் தெரிவித்தார். இது நமது உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புவதாகவும் மனோஜ் பாண்டே தெரிவித்தார். ஆங்கிலேயரிடம் இருந்த ராணுவ தலைமைப் பொறுப்பை 1949-ம் ஆண்டு ஜனவரி … Read more

எஸ்.பி.ஐ ஏடிஎம்மை உடைத்து ரூ.19.50 லட்சம் ரூபாய் கொள்ளை.. சேஸிங் செய்து விரட்டிப் பிடித்த போலீசார்…!

தெலுங்கானாவில், ஏடிஎம்மை உடைத்து 19 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த, முகமூடி கொள்ளையர்களை போலீசார் சேஸிங் செய்து பிடித்த பரபரப்பான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. நேற்றிரவு கோரண்ட்லாவில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்மை உடைத்து சிலர் கொள்ளையடிப்பதைக் கண்ட பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில், கொள்ளையர்கள் பணப்பையுடன் காரில் தப்பிச் செல்ல முயன்ற போது சரியான நேரத்தில் போலீசார் அங்கு வந்தனர். போலீசாரைக் கண்டதும் ஒரு பணப்பையை தவறவிட்டு கொள்ளையர்கள் காரில் தப்பிச் சென்றனர். ஆனால், எதிர் … Read more

உலக சாதனையுடன் இலங்கையை ஊதி தள்ளிய இந்திய வெற்றி..!

இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி உலக சாதனையுடன் வெற்றியை பதிவு செய்தது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்களை குவித்தது. சுப்மன் கில் 116 ரன்களும்,விராட்கோலி ஆட்டமிழக்காமல் 166 ரன்களும் குவித்தனர். இதன் மூலம் இந்திய மைதானங்களில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட்கோலி முறியடித்தார். தொடர்ந்து, களமிறங்கிய இலங்கை வீரர்கள், இந்திய … Read more

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும்..” – மும்பையில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய தமிழர்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தமிழர்களுடன் சேர்ந்து மண்ணின் மைந்தர்களான மராட்டியர்களும் பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்தியாவின் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் தமிழர்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடியது குறித்து ஒரு சிறப்பு தொகுப்பினை காணலாம். இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொண்ட தமிழர்கள் அந்த இயற்கைக்கு நன்றி தெரிவிக்க பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் திருவிழாதான் பொங்கல் திருநாள். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பொங்கல் தினத்தை கொண்டாட தமிழர்கள் தவறுவதில்லை. அதே நேரம் அந்த கொண்டாட்டங்கள் உற்சவங்களையும் தொற்றிக்கொள்ளும் … Read more

சர்ச்சை! அசைவ உணவுக்கு தடை விதித்த கல்லூரி விடுதி!!

டெல்லியில் ஹன்ஸ்ராஜ் கல்லூரி விடுதியில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இக்கல்லூரி விடுதியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். கொரோனா காலத்திற்கு முன்பு விடுதியில் மாணவர்களுக்கு அசைவம் கலந்த உணவு முறையே கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு முடிவடைந்து கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டு விடுதி செயல்பட தொடங்கியதில் இருந்து அசைவ உணவு மறுக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் அசைவ உணவு வழங்கப்படுவதில்லை எனப் புகார் அளித்தனர். அதனைத் … Read more