சட்டவிரோத சுரங்கங்களைக் கண்காணிக்கச் காவல்துறையினர் மீது பொதுமக்கள் கல்வீசித் தாக்குதல்..!

ராஜஸ்தானில் சட்டவிரோதமாகச் செயல்படும் சுரங்கங்களைக் கண்காணிக்கச் சென்ற காவல்துறையினர் மீதும் வனத்துறை வாகனங்கள் மீதும் பொதுமக்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். தோல்பூர் பகுதியில் உள்ள ராஜபுரா என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக சுரங்கங்கள் செயல்படுவதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினரும், வனத்துறை அதிகாரிகளும் திடீரென அங்கு சோதனை நடத்தச் சென்றனர்.  இதனையறிந்த அப்பகுதி மக்கள் வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் வனத்துறை வாகனங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த சென்ற காவல்துறையினருடன் பொதுமக்கள் … Read more

வந்தே பாரத் ரயிலில் சிறப்பு எதுவும் இல்லை: மம்தா பானர்ஜி விமர்சனம்..!

கொல்கத்தா: வந்தே பாரத் ரயிலில் சிறப்பு எதுவும் இல்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ஹவுரா ரயில் நிலையத்தில் கடந்த 30ம் தேதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டது. தாயார் காலமான நிலையிலும் இறுதி சடங்குக்கு பின், பிரதமர் மோடி காணொலி மூலம்  இந்த ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது முதல்வர் மம்தா மேடை ஏறாமல் அமர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் … Read more

அயோத்தியில் ராமர் கோயில் 2024 ஜனவரியில் தயாராகும்: அமைச்சர் அமித் ஷா தகவல்

அகர்தலா: அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தயாராகிவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். திரிபுராவில் மாணிக் சஹா தலைமையிலான பாஜக அரசின் பதவிக் காலம் வரும் மார்ச் மாதம் முடிவடைய உள்ளது. இதையொட்டி அம்மாநிலம் சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் ஜன விஸ்வாஸ் ரத யாத்திரையை தெற்கு திரிபுராவில் அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “அயோத்தியில் … Read more

உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்டவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடீரென மரணம்..!

மத்தியப் பிரதேசத்தில் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த உணவக உரிமையாளர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்தூரில் உள்ள உணவக உரிமையாளரான பிரவீன் ரகுவன்ஷி என்பவர் அருகில் இருந்த உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்தார். பின்னர் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ரகுவன்ஷியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். Source link

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் பயணி மீது போதை ஆசாமி சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள், ஊழியர்களுக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) கடிதம் அனுப்பி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 26 ம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது போதையில் இருந்த சக ஆண் பயணி சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது. இது குறித்து ஏர் இந்தியா … Read more

அரசு வேலைக்கு ராணுவ வீரர் வாரிசு அடையாள அட்டை வழங்கும் விவகாரம்: திருமணம் ஆனாலும் தந்தைக்கு மகள்தான் – கர்நாடக உயர் நீதிமன்றம்

பெங்களூரு: கர்நாடகாவின் பெலகாவியை சேர்ந்தவர் பிரியங்கா பாட்டீல் (31). இவரது தந்தை ரமேஷ் கந்தப்பா பாட்டீல் ராணுவத்தில் சுபேதாரராகப் பணியாற்றினார். கடந்த 2001-ம் ஆண்டு இவர் காஷ்மீர் எல்லையில் கண்ணிவெடி அகற்றும் பணியின்போது மரணம் அடைந்தார். இந்நிலையில் பிரியங்கா பாட்டீல் கர்நாடக கல்வித் துறையின் கீழ் இயங்கும் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்து இருந்தார். அவர் முன்னாள் ராணுவ வீரரின் மகள் என்ற அடையாள அட்டையை ராணுவ வீரர்களுக்கான நல வாரியத்திடம் கோரினார். அதற்கு … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் 3வது நாளாக இன்றும் தொடரும் என அறிவிப்பு

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் 3வது நாளாக இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஓ.பி.எஸ் தரப்பு வாதம் நடைபெற்ற நிலையில், இன்று ஈ.பி.எஸ் தரப்பு வாதம் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

உத்தராகண்டில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து வசிக்கும் 50 ஆயிரம் மக்களை இரவோடு இரவாக அப்புறப்படுத்துவது மனிதாபிமான செயல் அல்ல: உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தில் ஹல்த்வானியில் ரயில்வேக்குச் சொந்தமான 29 ஏக்கர் நிலத்தை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்றும், அவர்களை ஜனவரி 9-ம் தேதிக்குள் அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் சென்ற டிசம்பர் 20-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடைவிதித்துள்ளது. உத்தராகண்டில் ஹல்த்வானி நகரில் கபூர் பஸ்தி, தோலக் பஸ்தி, இந்திரா நகர், பான்புல்புரா ஆகிய பகுதிகளில் 4,335 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. மொத்தமாக … Read more

விந்தணு தரத்தை பாதிக்கும் கொரோனா…? – ஆண்களிடம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி

Corona Affects Sperms : இந்தியாவின் உயரிய மருத்துவ நிறுவனங்களில் ஒன்றான எய்மஸ் (AIIMS) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆண்களிடம் ஆய்வு மேற்கொண்டது. ஆண்களின் விந்தணுகளில் SARS-CoV-2 கொரோனா தொற்று இருப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு ஒரு மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  SARS-CoV-2 கொரோனா தொற்று, விந்தணுக்களின் தரத்தில் குறைத்து, பாதிப்பை ஏற்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளது.  எய்ம்ஸ் பாட்னாவின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு, கொரோனா தொற்று ஆஞ்சியோடென்சின்-மாற்றும் என்சைம்-2 ஏற்பி (angiotensin-converting enzyme-2 receptor) … Read more

வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைப்பதில்லை: சரத்பவார் பேச்சு

புனே: மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜன் ஜகார் யாத்திரை பிரசாரத்தை கட்சியின் தலைவர் சரத் பவார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பேசிய சரத்பவார், ‘‘ அதிகாரத்தில் இருப்பவர்கள் விவசாயிகளுக்கு உரிய பலனை வழங்குவதற்கு தயாராக இல்லை. அவர்கள் இடைத்தரகர்களின் நலன்களை பாதுகாத்து சாதாரண மக்களை பணவீக்க பள்ளத்தில் தள்ளுகின்றனர். இன்றைய இளைஞர்கள் படித்தவர்கள். வேலையில்லாததால் அவர்களுக்கு திருமணத்துக்கு பெண் தருவதற்கு யாரும் முன்வருவதில்லை. கிராமப்புறங்களில் இந்த பிரச்னை அதிகம் உள்ளது. … Read more