சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை: குவியும் பக்தர்கள்: ஆன்லைன் முன்பதிவு ரத்து

திருவனந்தபுரம்: சபரிமலையில்  பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை இன்று நடப்பதையொட்டி பக்தர்கள்  குவிந்த வண்ணம் உள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை இன்று (14ம் தேதி) நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்ப  விக்ரகத்தில் அணிவிக்கப்படும் திருவாபரணம் நேற்று  முன்தினம் பந்தளத்தில் இருந்து  புறப்பட்டது. இன்று மாலை 6.30 மணியளவில் திருவாபரணம் சன்னிதானத்தை அடையும். பின்னர் திருவாபரணம் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு சிறப்பு  தீபாராதனை நடைபெறும். அப்போது பொன்னம்பலமேட்டில் 3 … Read more

முக அங்கீகாரம், கருவிழி ஸ்கேனை வங்கிகள் வரம்புடன் பயன்படுத்த அனுமதி

புதுடெல்லி: மோசடி மற்றும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை குறைக்கும் விதமாக சில சமயங்களில் முக அங்கீகாரம் மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள இந்திய வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார், பொதுத் துறையைச் சேர்ந்த சில வங்கிகள் இந்த வசதியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன மேலும், இந்த வசதியை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வரம்பை மீறும் தனிப்பட்ட பரிவர்த்தனைகளை (ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை) மேற்கொள்ளும் நபர்களின் விவரங்களை வங்கிகள் சரிபார்க்க … Read more

காரில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் அலட்சியமாக இருந்த 11 போலீசார் சஸ்பெண்ட்

புதுடெல்லி: காரில் இளம்பெண் சடலம் இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக பலியான விவகாரத்தில் 11 போலீசாரை டெல்லி காவல்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. புத்தாண்டு தினத்தில் டெல்லியில் 20 வயது இளம்பெண் மீது மோதிய கார், அவரது உடலை சுல்தான்புரியிலிருந்து கஞ்சவாலா பகுதி வரை 12 கி.மீ. தூரத்திற்கு இழுத்துச் சென்றது.   இந்த விபத்து தொடர்பாக காரில் இருந்தவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், விபத்து நடந்த சமயத்தில் சம்பந்தப்பட்ட கார் சென்ற வழித்தடத்தில் … Read more

சட்டீஸ்கரில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் சோதனை

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி வீடு மற்றும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ராய்ப்பூர், கோர்பா, துர்க் ஆகியே இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் ஜார்கண்டின் ராஞ்சி மற்றும் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நீர்வளத்துறை செயலாளர் அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சில அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் நிலக்கரி வியாபாரிகளுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை … Read more

திருப்பதியில் ஓராண்டில் ரூ.1,450 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியையொட்டி  சொர்க்கவாசல் வழியாக 6.6 லட்சம் பக்தர்கள்   தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.39.40 கோடி காணிக்கையாக கிடைத்தது. 2022   ஜனவரி முதல் டிசம்பர் வரை 2.37 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.1,450.41 கோடி காணிக்கை கிடைத்தது. 11.54 கோடி  லட்டு விற்கப்பட்டது. 4.77 கோடி பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.  இவ்வாறு, அவர் கூறினார்.

ஜன. 30,31ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

கொல்கத்தா: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் தொழிற்சங்க அமைப்பான யுனைடட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன் சார்பில் 2 நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி நாள், ஊதிய உயர்வு, ஓய்வூதிய முறை புதுப்பிப்பு, தேசிய ஓய்வூதிய முறையை ரத்து செய்தல், ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை உடனே தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30, 31 தேதிகளில் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக … Read more

5 ஆண்டுகளாக ஆப்சென்ட் 64 மருத்துவர்கள் டிஸ்மிஸ்

பாட்னா: தொடர்ந்து பணிக்கு வராமல் இருந்த 64 அரசு மருத்துவர்கள்   ஒரே நேரத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். பீகார்  அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பலர் முறையான விடுப்பு எடுக்காமல் மாதக்கணக்கில் பணிக்கு வராமல் உள்ளதாக புகார்கள் வந்தன. இந்நிலையில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில்  மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிக்கு வராத 64  மருத்துவர்களை டிஸ்மிஸ் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

நாளை முதல் டெல்லி மற்றும் சுற்றுப்புற மாநிலங்களில் குளிரின் தாக்கம் அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்

நாளை முதல் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் குளிரின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், வெப்பநிலை மைனஸ் 4 டிகிரி வரை குறையக் கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெதர்மேன் நவ்தீப் தாஹியா என்பவர் விடுத்துள்ள அறிக்கையில், நாளை முதல் 19ம் தேதி வரை கடுமையான குளிர் நிலவ வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை குளிர் உச்சத்தில் இருக்கும் எனவும், இந்த நிலைமை 2023ம் … Read more

ரஜோரி வழக்கு விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைப்பு: அமித் ஷா அறிவிப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பான விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். ரஜோரி மாவட்டத்தில்   தீவிரவாதிகள்  தாக்குதல்களில் 2 குழந்தைகள் உட்பட மொத்தம் 7 பேர் பலியாகினர். தாக்குதல் நடந்து 13 நாட்களுக்கு பிறகு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஒருநாள் பயணமாக ரஜோரியின் டோங்கிரி கிராமத்திற்கு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் அமித் ஷா கூறியதாவது, “ரஜோரி தாக்குதல் தொடர்பான விசாரணை … Read more

சோசலிச தலைவர் சரத் யாதவ் மறைவு; பீகாரில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு.!

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான 75 வயது சரத் யாதவ் நேற்று இரவு காலமானார். பொறியியல் பட்டதாரியான இவர், ராம் மனோகர் லோஹியாவின் சோஷியலிச கருத்துகளால் ஈர்க்கப்பட்டு 1974ல் அரசியலில் குதித்தார். அப்போது நடைபெற்ற உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது அந்த காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த சோஷியலிஸ்ட் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் புரட்சி பயணத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இருந்தது. 1977ல் … Read more