சட்டீஸ்கரில் மதமாற்ற புகார்: வழிபாட்டு தலத்தை அடித்து நொறுக்கிய மக்கள்

நாராயண்பூர்: சட்டீஸ்கரில்  மத மாற்ற விவகாரத்தில் வழிபாட்டு தலத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். சட்டீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டம்,எட்கா என்னும் கிராமத்தில் நேற்றுமுன்தினம் மத மாற்றம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. மதமாற்றத்தை கண்டித்து நேற்று  பழங்குடியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். மாவட்ட எஸ்பி சதானந்த் குமாரும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்றார். அப்போது ஒரு கும்பல் எஸ்பி சதானந்த் குமாரை தாக்கியது. … Read more

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: 4 கி.மீ தூரம் தரதரவென்று இழுத்து சென்றதால் இளம்பெண் கோர பலி; 5 இளைஞர்கள் கைது

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் சுல்தான்புரி-கஞ்சவாலா பகுதியில் நேற்று அதிகாலை 3.20 மணியளவில் டெல்லி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், ‘குதுப்கர் சாலையில் காருக்குப் பின்னால் 23 வயதுடைய பெண்ணின் சடலம் தொங்கிக் கொண்டிருக்கிறது’ என்று கூறினார். அதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கஞ்சவாலா பகுதியில் கார் ஒன்றின் பின்னால் பெண்ணின் சிதைந்த உடல் தொங்கிகொண்டிருந்தது. … Read more

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வீட்டருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு..!

சண்டிகரில், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மானின் வீட்டருகே, வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியை சுற்றி வளைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு நிறைந்த பகுதியில் உள்ள பகவந்த் மானின் வீட்டிலிருந்து, சிறிது தூரத்தில் உள்ள ஹெலிபேட் அருகே, வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பகவந்த் மான் வீட்டில் இல்லாத நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டு பாதுகாக்கப்பாக வைக்கப்பட்டதாகவும், ராணுவ குழுவும் விசாரணை நடத்த வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு

பஞ்சாப்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சண்டிகரில் முதலமைச்சர் பகவந்த் மான் வீடு அருகே உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி இளம்பெண் கொடூர கொலை: மூத்த காவல் அதிகாரி விசாரிக்க அமித் ஷா ஆர்டர்!

டெல்லியில், காரில் இளம் பெண் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வழக்கை, காவல் துறை மூத்த அதிகாரி விசாரிக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டு உள்ளார். வட மேற்கு டெல்லியின் கஞ்சவாலா பகுதியில், அஞ்சலி சிங், 20, என்ற இளம் பெண் சென்ற இருசக்கர வாகனம் மீது, மது போதையில் 5 பேர் வந்த கார் மோதியது. புத்தாண்டு அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அஞ்சலி சிங்கின் இருசக்கர வாகனம் மீது காரில் மோதிய … Read more

சபரிமலையில் தொடர்ந்து குவியும் பக்தர்கள்: 90 ஆயிரம் பேர் இன்று முன்பதிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கின்றனர். இன்றும் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து உள்ளனர். இதனால் அதிகாலை முதலே சன்னிதானத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 31ம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. மண்டல காலத்தில் தினமும் சராசரியாக 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்த நிலையில் மண்டல காலத்தில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது. புத்தாண்டு தினமான நேற்று 1 லட்சத்திற்கும் மேற்பட்ட … Read more

உக்ரைனை ரஷ்யா தாக்குவதைப் போல இந்தியாவை சீனா தாக்கக்கூடும்: ராகுல் காந்தி

புதுடெல்லி: உக்ரைன் விஷயத்தில் ரஷ்யாவின் கொள்கை எத்தகையதோ, அதே கொள்கையை இந்தியா விஷயத்தில் சீனா கொண்டிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுடன் தான் நடத்திய உரையாடல் வீடியோவை ராகுல் காந்தி யூடியூபில் வெளியிட்டுள்ளார். அதில், ராகுல் காந்தி கூறி இருப்பதாவது: ”உக்ரைன் விஷயத்தில் ரஷ்யாவின் கொள்கை எத்தகையதோ, அதே கொள்கையை இந்தியா விஷயத்தில் சீனா கொண்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுடன் வலுவான உறவை உக்ரைன் வைத்துக்கொள்ளக்கூடாது என அந்நாட்டை ரஷ்யா எச்சரித்தது. மீறினால், … Read more

நாசிக்கில் உள்ள தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து.. 24 மணி நேரத்திற்கு மேலாகியும் தீயை கட்டுப்படுத்த போராட்டம்..!

மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 24 மணி நேரத்திற்கு மேலாகியும் தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். முண்டேகான் பகுதியில் உள்ள ஜிண்டால் தொழிற்சாலையில், பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில், ஆலையின் பிற பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. சுமார் 10 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், தொடர்ந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆலையில் தீ … Read more

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்த வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு

டெல்லி: ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்த வரைவு விதிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஆன்லைன் விளையாட்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. ஒன்றிய தகவல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் சார்பில் இந்த புதிய வரைவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய தகவல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது; * ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு இந்திய முகவரிகள், … Read more

"என் வாழ்க்கையிலயே இந்த நொடிதான்…"-9 வருடங்களுக்குப்பின் கிடைத்த மனைவி; நெகிழ்ந்த கணவன்!

ஹரியானாவை சேர்ந்த ஒருவர், கிட்டத்தட்ட 9 வருடங்கள் கழித்து தன் மனைவியுடன் இணைந்திருக்கிறார். இதுதான் தன் வாழ்வின் மிகச்சிறந்த தருணம் என்று நெகிழ்ந்தும் இருக்கிறார் அவர். ஹரியானாவை சேர்ந்த கேஹர் சிங் (55) என்பவரின் மனைவி தர்ஷினி (50) என்பவர், கடந்த 2013-ம் ஆண்டு காணாமல் போயுள்ளார். அப்போது அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். அதன்பேரில் உ.பி, டெல்லி, பஞ்சாப் என பல மாநிலங்களில் அவர் தேடப்பட்டு வந்திருக்கிறார். இருப்பினும் அவர் கண்டறியப்படாததால், அவர் குடும்பத்தினருக்கே … Read more