2024 மக்களவை தேர்தலுக்கான அரை இறுதி களம் 2023ல் 9 மாநிலங்களில் தேர்தல் எப்போது?.. உத்தேச பட்டியலுடன் ஆணையம் தீவிரம்

புதுடெல்லி: வரும் 2024ம் ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலுக்கான அரை இறுதி களமாக, 2023ம் ஆண்டில் 9 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடக்க உள்ளன. இதற்கான தேர்தல் தேதிகளை இறுதி செய்ய தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், அரசியல் கட்சிகளும் ஆயத்த பணிகளில் மும்முரமாக களமிறங்கி உள்ளன. தற்போது தொடங்கியிருக்கும் 2023 புத்தாண்டு, தேர்தல்களின் ஆண்டாக அமைந்திருக்கிறது. இந்த ஒரே ஆண்டில் 9 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் நடக்க உள்ளன. முக்கியமாக கர்நாடகா, … Read more

15 சதவீதம் அதிகரிப்பு டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடி

புதுடெல்லி: கடந்த டிசம்பர் மாத ஜிஎஸ்டி ரூ.1.5 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.கடந்த மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:கடந்த டிசம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டியாக ரூ. 1,49,507 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.26,711 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ. 33,357 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.78,434 கோடி வசூலாகியுள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இறக்குமதி வரியாக ரூ.40,263 கோடி அடங்கும். இதுபோல், செஸ் வரியாக ரூ.11,005 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு நிதியமைச்சகம் … Read more

புத்தாண்டையொட்டி சபரிமலையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம்: புத்தாண்டு தினத்தில் சபரிமலையில் நேற்று 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்  செய்தனர். மகர விளக்கு கால  பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30ம் தேதி மாலை  திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. நேற்று புத்தாண்டு  தினம் என்பதால் ஐயப்பனை தரிசிப்பதற்காக நேற்று முன்தினம் மாலை முதலே ஏராளமான  பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்.  பல நாட்களுக்கு முன்பே நேற்றைய  தரிசனத்திற்காக பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். நெரிசல் ஏற்படாமல்  … Read more

இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவு தலைவராக ஏர் மார்ஷல் பங்கஜ் மோகன் சின்ஹா பொறுப்பேற்பு

புதுடெல்லி: இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏர் மார்ஷல் பங்கஜ் மோகன் சின்ஹா ஜனவரி 1, 2023 அன்று ஏற்றுக்கொண்டார். புனேவிலுள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்ற அவர், கடந்த 1985-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய விமானப்படையில் இணைந்தார். இவர், வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியின் முன்னாள் மாணவராவார். 4500 க்கும் அதிகமான மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவத்தை இவர் பெற்றுள்ளார். தமது 37 ஆண்டுகள் பணி … Read more

குஜராத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் நினைவு பிரார்த்தனை கூட்டம்

மேஹ்சனா: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்(வயது 99) அகமதாபாதில் கடந்த வௌ்ளிக்கிழமை  காலமானார். அவரது மறைவுக்கு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், வௌிநாடுகளை சேர்ந்த தலைவர்கள், விளையாட்டு துறையினர் இரங்கல் தெரிவித்தனர். ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக குஜராத்தின் வர்த் நகர் பகுதியில் உள்ள வணிகர்கள் தாங்களாகவே கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். இந்நிலையில், வர்த் நகர் பகுதியில் ஹீராபென் நினைவாக பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில், குஜராத் சட்டமன்ற சபாநாயகர் சங்கர் சவுத்ரி, ஒன்றிய அமைச்சர் … Read more

ஆந்திரா | மீண்டும் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்வில் கூட்ட நெரிசல்: 3 பெண்கள் பலி

குண்டூர்: மீண்டும் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்வில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் உள்ள விகாஸ் நகரில் நடைபெற்றுள்ளது. முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லூரில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்திருந்தனர். ஆந்திராவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தொடர் கூட்டங்கள் … Read more

சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் 3 பேர் உயிரிழப்பு; ஒரே வாரத்தில் 2வது சம்பவம்.!

ஆந்திராவின் கந்துகுரு நகரின் சிவாலயம் தெருவில், முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 28ம் தேதி பேரணி நடத்தினார். முக்கிய வீதிகளில் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், சிறிய சாலைகளிலும் பேரணி சென்றது. இதனால் நெரிசலில் சிக்கி தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்திரபாபு நாயுடு இன்று தனது கட்சி தொண்டர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். “இது ஒரு சோகமான சம்பவம். நான் மிகவும் … Read more

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டி 1,040 பேர் பலி!!

செல்போனில் பேசியபடி சென்று சாலை விபத்தில் சிக்கியதில் 1,040 பேர் பலியாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் 2021ஆம் ஆண்டில் மொபைல் போன் பயன்படுத்தியபடி வாகனத்தில் சென்று ஓட்டுனர்கள் 1,997 சாலை விபத்துகளை ஏற்படுத்தி உள்ளனர். அவர்களால் 1,040 பேர் உயிரிழந்து உள்ளனர் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகள் என்ற அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டில் சிவப்பு நிற விளக்கு எரியும்போது, கடந்து சென்று சாலை விபத்து … Read more

தொடரும் சோகம்!….சந்திரபாபு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்

சந்திரபாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். ஆந்திரபிரதேசத்தில் வரும் 14-ம் தேதி சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்காக நலத்திட்டம் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் குண்டூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பயனாளர்களுக்கு சங்கராந்தி பண்டிகை தொகுப்பை வழங்கினார். பின்னர், பொதுக்கூட்டமும் நடைபெற்றது. நலத்திட்டங்களை பெறவும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் ஆயிரக்கணக்கானோர் … Read more

வணிக கேஸ் சிலிண்டர் விலை ஏற்றம்; மத்திய அரசின் புத்தாண்டு பரிசு.!

2023 ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே, இந்தியாவில் வணிக கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை ஏற்றதால் சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.1917க்கு விற்பனையாகிறது. அதே சமயம் மும்பையில் ரூ. 1721க்கும், கொல்கத்தாவில் ரூ.1870க்கும் வணிக சிலிண்டர் விற்பனையாகிறது. இருப்பினும் ஆண்டின் முதல் நாளே இந்த விலை ஏற்றம், நாளடைவில் வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துமோ என்று பொதுமக்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக … Read more