மக்களவை தேர்தல் இன்று நடந்தால்… ஆட்சியை கைப்பற்றுமா பாஜக – குட் நியூஸ் யாருக்கு?

2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியடைந்து, இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் ஆட்சியமைத்தது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து இரண்டு இலக்க தொகுதிகளிலேயே கைப்பற்றியது. கடந்த முறை திமுக உள்ளிட்ட சில மாநில எதிர்கட்சிகள் தங்கள் மாநிலத்தின் சில தொகுதிகளை கைப்பற்றினர்.  ஆனால், இந்த நிலை அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பிரதிபலிக்குமா என்று தற்போது கேட்டால் பலருக்கும் மாற்றுக்கருத்து இருக்கும். அந்த … Read more

கர்நாடகாவை சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருது – சட்டப்பேரவை தேர்தல் காரணமா?

பெங்களூரு: மத்திய அரசு நேற்று முன்தினம் பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் அதிகபட்சமாக, பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 8 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு (90) பொதுசேவைக்காக பத்ம விபூஷண் விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸில் இருந்து விலகி கடந்த 2017-ல் பாஜகவில் இணைந்த இவருக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இதனால் பாஜகவின் மீது அதிருப்தி அடைந்த எஸ்.எம்.கிருஷ்ணா அண்மையில் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக … Read more

சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலையில்லாதவர்களுக்கு அடுத்த நிதியாண்டு முதல் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்: முதல்வர் பூபேஷ் பாகல்

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலையில்லாதவர்களுக்கு அடுத்த நிதியாண்டு முதல் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

குடியரசு தின விழாவில் தெலங்கானா முதல்வர் பங்கேற்கவில்லை – ராஜ்பவனில் ஆளுநர் தமிழிசை தேசிய கொடியேற்றினார்

ஹைதராபாத்: குடியரசு தினத்தையொட்டி தெலங்கானாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், ராஜ்பவன் வளாகத்தில் நேற்று தேசிய கொடியேற்றினார். இதில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மாநில அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. மாநில அரசு சார்பில் தலைமைச் செயலாளரும், டிஜிபியும் கலந்து கொண்டனர். தெலங்கானாவில் ஆளுநருக்கும் – மாநில முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது. குடியரசு தின விழாவிலும் இந்த மோதல் எதிரொலித்தது. கரோனாவை காரணம் காட்டி, இந்த ஆண்டும் குடியரசு தின விழா ரத்து செய்யப்படுவதாக தெலங்கானா அரசு … Read more

கோவிஷீல்டு செலுத்தியவர்களுக்கு 2-வது டோஸ் கோவாக்சின் செலுத்த அனுமதி இல்லை – நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: முதல் டோஸ் கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் கோவாக்சின் செலுத்த அனுமதி இல்லை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மதுர் மிட்டல் கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “முதல் டோஸ் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். இதனால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட்டன. எனவே, 2-வது டோஸ் கோவாக்சின் செலுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு உத்தரவிட … Read more

முலாயம் சிங் யாதவ், எஸ்.எம். கிருஷ்ணா, கீரவாணி உட்பட 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

புதுடெல்லி: உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, கர்நாடக இசைக் கலைஞர் வாணி ஜெயராம் உட்பட 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடியரசு தினத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. 6 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மறைந்த உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், … Read more

ராகுல் நடைபயண நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க ஐக்கிய ஜனதா தளம் மறுப்பு

பாட்னா: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கூட்டணிக் கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் … Read more

கவர்னர் தமிழிசையுடன் மோதல் முற்றுகிறது: தெலங்கானாவில் குடியரசு தின விழா; முதல்வர் சந்திரசேகரராவ் புறக்கணிப்பு

திருமலை: தெலங்கானாவில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில், கவர்னர் தமிழிசையை மாநில முதல்வர் சந்திரசேகரராவ் புறக்கணித்துள்ளார்.தெலங்கானா கவர்னராக கடந்த 3 ஆண்டுகளாக தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகித்து வருகிறார். ஆரம்பத்தில் முதல்வர் சந்திரசேகர ராவுடன் இணக்கமான நட்பு இருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அரசு பரிந்துரைத்த எம்எல்சியை, கவர்னர் நிராகரித்ததால் இருவருக்கும் இடையேயான பனிப்போர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து முதல்வர் அனுப்பும் மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்ப தொடங்கியதால் இருவருக்கும் மோதல் முற்றியது. இந்தநிலையில் … Read more

74-வது குடியரசு தின விழா கோலாகலம் – தலைநகர் டெல்லியில் கண்கவர் அணிவகுப்பு; ஜனாதிபதி தேசியக் கொடியேற்றினார்

புதுடெல்லி/சென்னை: நாட்டின் 74-வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு, எகிப்து அதிபர் அப்தெல் படாக் எல்-சிசி அழைக்கப்பட்டிருந்தார். அவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து, ராணுவ அணிவகுப்பு நடைபெறும் கடமை பாதைக்கு, குதிரைப்படை வீரர்கள் புடைசூழ குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது வாகனத்தில் அழைத்து வந்தார். குடியரசுத் … Read more

குடியரசு தினத்தில் ஸ்பெஷல் கூகுள் டூடுல்

புதுடெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று ஸ்பெஷல் கூகுள் டூடுல் வெளியாகி உள்ளது. அதனை பலரும் பாராட்டி வருகின்றனர். நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், இணைய தேடு பொறி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான கூகுள் நிறுவனம், தனது டூடுல் அமைப்பை, அந்தந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகின்றது. அந்த வகையில் உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசு தின விழாவினை பிரதிபலிக்கும் வகையில், கூகுள் … Read more