பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ஊர்தி குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்பு

டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது. இந்தியாவின் பன்முக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகள் அணி வகுப்பு நடைபெற்றது. அந்தந்த மாநிலங்களின் பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு இருந்தது. ஆந்திரா, அசாம், உத்தரகாண்ட், திரிபுரா, குஜராத், மேற்குவங்கம், மராட்டியம், உத்திரபிரதேசம் மாநில அலங்கார ஊர்திகள் வகுப்பில் பங்கேற்றது. பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ஊர்தி … Read more

தீவிரவாத அமைப்புகளில் சேரவிருந்த 5 காஷ்மீர் இளைஞர்கள் மீட்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத அமைப்பில் சேரவிருந்த 2 சிறார்கள் உள்ளிட்ட 5 இளைஞர்களை ராணுவத்துடன் சேர்ந்து பாரமுல்லா போலீஸார் மீட்டனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்த சில இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளில் சேர பாகிஸ்தானில் இருந்து தூண்டப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலைப் பெற்ற பாதுகாப்பு படையினர் முதலில் இந்த இளைஞர்களை கண்டுபிடித்தனர். பிறகு பெற்றோர்கள் உதவியுடன் அவர்கள் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுடன் இவர்கள் … Read more

Republic Day 2023: டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

நியூடெல்லி: இந்திய குடியரசு தினமான இன்று, ஜனவரி 26 ஆம் தேதி அன்று குடியரசு தின விழா கொண்டாட்டங்கள், நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றுகிறார். குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற பின், திரவுபதி முர்மு கொடியேற்றும் முதல் குடியரசு தினம் இதுவாகும். சென்னையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தேசியத் தலைநகர் டெல்லியில், குடியரசு … Read more

நாட்டின் 74வது குடியரசுதின விழாவில் டெல்லியில் பார்வையாளர்களை கவர்ந்த விமான சாகசங்கள்

டெல்லி: நாட்டின் 74வது குடியரசுதின விழாவில் டெல்லியில் நடைபெற்ற விமான சாகசங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ரஃபேல், மிக்-29, சு-30 உள்ளிட்ட விமானப்படை விமான சாகசங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது. விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களின் வான் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது. வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

74-வது குடியரசு தினம் | டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: கடமைப் பாதையில் முதல் அணிவகுப்பு

புதுடெல்லி: 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவரால் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பை தொடங்கிவைத்த குடியரசுத் தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அணிவகுப்பில் முதலில் எகிப்திய ஆயுதப்படையின் ஒருங்கிணைந்த இசைக்குழு அணிவகுத்துச் சென்றது. இந்த … Read more

Republic Day: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் செயலாக்கம்தான் – குடியரசு தினம்

இந்திய அரசியலமைப்பு சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாள்தான் குடியரசு தினமாகும். அதனடிப்படையில்தான் ஆண்டுதோறும் சனவரி 26ஆம் நாளன்று நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. விடுதலை இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் தேர்தல் மூலம் தாங்கள் விரும்பிய அரசியல் கட்சியினரை –  ஆட்சியாளர்களை சுதந்திரமாக தேர்ந்தெடுத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டதுதான் குடியாட்சி ஆகும். குடியாட்சி என்பதற்கு மக்களாட்சி என்பதே சரியான பொருளாகும். மேலும் நாட்டில் வசிக்கும் குடிமக்களால் தேந்தெடுக்கப்படுகிற அரசுதான் குடியரசாகும். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான … Read more

நாட்டின் 74வது குடியரசு தின விழா: டெல்லி கடமை பாதையில் முதன் முறையாக மூவர்ண கொடியை ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

டெல்லி: நாட்டின் 74வது குடியரசு தினமான இன்று டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பிரதமர், துணை குடியரசு தலைவர், ஒன்றிய அமைச்சர்கள், ராணுவவீரர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி ஆகியோர் பங்கேற்றனர்.   நாட்டின் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய பேர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் குதிரைப்படை சூழ வந்த … Read more

ஒருங்கிணைந்து செயல்படுவோம்.. பிரதமர் மோடி குடியரசு தின வாழ்த்து..!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம் என, குடியரசு தினத்தை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா தனது 74-வது குடியரசு தின விழாவைக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “குடியரசு தின வாழ்த்துகள். இந்தத் தருணம் சிறப்பானது. காரணம், நாடு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் நாம் இந்த குடியரசு தின விழாவைக் கொண்டாடுகிறோம். இத்தருணத்தில் … Read more

74வது குடியரசு தின விழா | டெல்லியில் போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

புதுடெல்லி: 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் சரியாக காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி போர்வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்த குறிப்பேட்டில் பிரதமர் மோடி தனது அஞ்சலிக் குறிப்பினை பதிவிட்டார். தொடர்ந்து அங்கிருந்து குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் கர்தவ்ய பாதைக்கு சென்றனர். போர் நினைவிடத்தில் … Read more

டெல்லியில் குடியரசு தின விழா: தேசியக் கொடியை ஏற்றி வைத்த திரவுபதி முர்மு!

தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. இந்தியா கேட் முதல் ராஷ்டிரபதி பவன் வரையிலான இரண்டு கிலோமீட்டர் நீளம் கொண்ட கடமைப் பாதையில் அலங்காரங்கள், அணிவகுப்பு, பாதுகாப்பு என சிறப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் கடமைப் பாதைக்கு வருகை புரிந்தார். அங்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் எகிப்து அதிபர் அப்துல் பதஏ எல்-சிசியை பிரதமர் மோடி, … Read more