27 நதிகள்… 51 நாட்கள்… 4,000 கிமீ… உலகின் நீண்ட தூர சொகுசு கப்பல் பயணம்: வாரணாசியில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

வாரணாசி: வாரணாசியில் இருந்து திப்ருகர் வரை 27 நதிகளின் வழியாக 51 நாட்களில் 4000 கி.மீ தூரம் செல்லும் உலகின் மிக நீண்டதூர சொகுசு கப்பல் பயணத்தை பிரதமர் மோடி நாளை  தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் இருந்து அசாமின் திப்ருகர் வரை வங்கதேசம் வழியாக கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகளில் 51 நாட்கள் பயணிக்கும் சொகுசு நதிக் கப்பல் நாளை தனது முதல் பயணத்தை தொடங்குகின்றது. உலகின் மிக  நீண்டதூர நீர்வழிப்பாதை சொகுசு கப்பல் பயணமாக … Read more

பள்ளி வேன் டிரைவரின் சிறு அலட்சியத்தால் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுமி பலி!!

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா பிச்சனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சுவாமி. இவரது மனைவி உமா. இந்த தம்பதிக்கு ரக்ஷா (4) என்ற மகள் உள்ளார். இவள் கனகபுராவில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி வேனில் ரக்ஷா வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தாள். வேனின் படிக்கட்டு அருகே உள்ள இருக்கையில் ரக்ஷா அமர்ந்து இருந்தாள். அப்போது பிச்சனஹள்ளி பகுதியில் வேன் … Read more

ரூ.4,276 கோடி மதிப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் கொள்முதல் – பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஏவுகணைகளை ரூ.4,276 கோடி மதிப்பில் உள்நாட்டில் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதலை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் வழங்கியுள்ளது. குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகளை (விசோராட்ஸ்), ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. இந்த வகை ஏவுகணைகளை ரூ.1,920 கோடி மதிப்பில் வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. விசோராட்ஸ் ஏவுகணைகள் சீன எல்லையில் பயன்படுத்த தேவைப்படுகின்றன. எளிதில் தூக்கிச் செல்லக் … Read more

உலக அளவில் சிறந்த செயல்பாடு கோவை ஏர்போர்ட் 13வது இடம்: 15வது இடத்தை பிடித்தது இண்டிகோ

புதுடெல்லி: சரியான நேரத்தில் இயங்கும் விமான நிலையங்களில் உலக அளவில் கோவை விமானநிலையம் 13வது இடத்தையும், விமானநிறுவனங்களில் இண்டிகோ 15வது இடத்தையும் பிடித்துள்ளன. விமான நிறுவனங்கள், விமான நிலையங்களின் இயக்கத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் ஓஏஜி நிறுவனம் உலக அளவில் சரியான நேரத்தில் இயங்கும் விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் குறித்த பட்டியலை வௌியிட்டுள்ளது. முதல் 20 இடங்களை கொண்ட அந்த பட்டியலில் விமான நிலையங்கள்பட்டியலில் கோவை விமான நிலையம் 13வது இடம் பெற்று … Read more

பல அமைச்சர்கள் பதவி பறிப்பு? ஒன்றிய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்ய திட்டம்: ஓரிரு நாளில் அதிகாரபூர்வ அறிவிப்பு

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல அமைச்சர்கள் பதவி பறிக்கப்படுவதாகவும், முக்கிய இலாகாக்கள் மாற்றப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 2வது முறையாக  ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தது. பிரதமர் மோடி தனது 2வது பதவிக்காலத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒருமுறை மட்டுமே அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார். … Read more

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.. ராணுவ அதிகாரிகள் 3 பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் தவறி விழுந்ததில் ராணுவ அதிகாரிகள் 3 பேர் உயிரிழந்தனர். வடக்கு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள மச்சல் செக்டரில் ராணுவ அதிகாரிகள் 3 பேர் இன்று வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டது. பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் அதிகாரிகள் சென்ற வாகனம் தவறி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் 3 ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

பள்ளத்தாக்கில் விழுந்து 3 ராணுவ வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் மச்சால் செக்டாரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரோந்து பணியில் இருந்த ராணுவ வீரர்கள் தவறி அருகில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்தனர். இதில் அவர்கள் 3 பேரும் உயிரிழந்தனர். சக வீரர்கள் கொடுத்த தகவலின்பேரில் பள்ளத்தாக்கில் இருந்து ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டது.

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்படுவதில் காலதாமதம்!

தலைநகர் டெல்லியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை வரவேண்டிய விமானங்கள் தாமதமாக வந்ததாகவும், அதேபோல் டெல்லியில் இருந்து சிம்லா, காத்மண்டு, சென்னை, ஜெய்சால்மர், பரேலி, மும்பை, வாரணாசி, ஸ்ரீநகர், ஜெய்ப்பூர் மற்றும் கவுகாத்தி செல்லும் விமானங்கள் கடும் பனிமூட்டத்தால் தாமதமானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பனிமூட்டம் காரணமாக 26 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக என வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. … Read more

ஒன்றிய அமைச்சரவையில் முடிவு: 3 புதிய பல மாநில கூட்டுறவு சங்கங்கள் அமைக்க ஒப்புதல்

புதுடெல்லி: இயற்கை வேளாண் பொருட்கள், விதைகள் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்க, 3 புதிய தேசிய அளவிலான பல மாநில கூட்டுறவு சங்கங்களை அமைக்க ஒன்றிய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறியதாவது: நாட்டின் கிராமப்புற வளர்ச்சியில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், கிராமப்புறங்களின் வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதை … Read more

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது..!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு அமெரிக்காவின் கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில், ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரைத்துறையில் ஆஸ்கருக்கு அடுத்தப்படியாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு கிடைத்துள்ளது. லாஸ் … Read more