பஞ்சாப் சிறையில் உள்ள சித்துவின் விடுதலையில் முட்டுக்கட்டை: ராகுல் நடைபயணத்தில் பங்கேற்கவில்லை..!

சண்டிகர்: பஞ்சாப் சிறையில் உள்ள சித்துவின் விடுதலையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதால், அவர் ராகுலின் நடைபயணத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரரான பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து,  1988ம் ஆண்டு சாலை விபத்து வழக்கில் சிக்கியதால், நீதிமன்ற உத்தரவுபடி பாட்டியாலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.  குடியரசு தினத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் 51 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கான பட்டியலை சிறைத்துறை நிர்வாகம் தயாரித்து … Read more

ஷ்ரத்தா கொலை வழக்கு | அஃப்தாபுக்கு எதிராக 6,629 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கில் அஃப்தாப் ஆமின் பூனவல்லாவுக்கு எதிராக டெல்லி போலீசார் 6,629 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல் இணை ஆணையர் மீனு சவுத்ரி, ”ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பாக தோறாயமாக 6 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். இதில், இந்த கொலை வழக்கு தொடர்பாக 150க்கும் மேற்பட்டவர்களிடம் பெற்ற அறிக்கையை இணைத்துள்ளோம்” எனக் குறிப்பிட்டார். கொலைக்கான காரணம் … Read more

விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவம்… மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்!

இந்தியாவின் விமான போக்குவரத்து இயக்குநரமான DGCA, விமான பயணி ஒருவரின் மோசமான நடத்தை குறித்து தகவல் தெரிவிக்காததற்காக ஏர் இந்தியா மீது மீண்டும் அபராதத்தை விதித்துள்ளது. கடந்த ஆண்டு பாரிஸ்-புது டெல்லி விமானத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் குறித்து புகார் செய்யாததற்காக டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நியூயார்க்-டெல்லி விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் நடந்த சில நாட்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அறிக்கைகளின்படி, … Read more

மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்கின் குற்றச்சாட்டிற்கு மத்திய விளையாட்டுத்துறை விளக்கம்

டெல்லி: மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்கின் குற்றச்சாட்டிற்கு மத்திய விளையாட்டுத்துறை விளக்கம் அளித்துள்ளது. போராடும் வீரர்கள் கொடுத்த பரிந்துரையிலேயே குழுவில் 3 பேர் தேர்தெடுக்கப்பட்டனர் என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்படும் குழு பற்றி ஆலோசனை நடத்தப்படவில்லை என சாக்சி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

”இந்தா வெச்சுக்கோங்க” – மேம்பாலத்தின்மீது நின்று ரூபாய் நோட்டுக்களை வீசிய நபர்!

பெங்களூருவில் மேம்பாலத்தில் வாகனத்தை நிறுத்தி கீழே மக்கள் கூட்டம் நிறைந்த மார்க்கெட்டில் ரூபாய் நோட்டுக்களை வீசிய நபரை போலீசார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கட்டுக்கட்டாக பணத்தை காற்றில் பறக்கவிடுவதை சினிமாவில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு நபர் ஹீரோயிசம் செய்வதாக நினைத்து மேம்பாலத்தில் நின்றுகொண்டு பணத்தை அள்ளிவீசிய சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. இதனை பலரும் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவில், நகரின் டவுன்ஹால் பகுதியிலுள்ள கே.ஆர் மார்க்கெட்டின் மேம்பாலத்தில் தனது காரை நிறுத்திய கோட் சூட் அணிந்த … Read more

குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் | டெல்லி வந்தடைந்தார் எகிப்து அதிபர் அல் சிசி

புதுடெல்லி: குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினரான எகிப்து அதிபர் அல் சிசி தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். நாட்டின் 74வது குடியரசு தினம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எகிப்து அதிபர் அல் சிசி இன்று (செவ்வாய்கிழமை) மாலை டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் நாட்டுப்புற நடனக் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. … Read more

இடஒதுக்கீடு குறித்து பேசியதால் அமைச்சரின் ஜாதி பெயரை கூறி கொலை மிரட்டல்: பீகார் போலீஸ் விசாரணை

பாட்னா: இடஒதுக்கீடு குறித்து பேசியதால் பீகார் அமைச்சரின் பெயரை குறிப்பிட்டு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான, பீகார் வருவாய் மற்றும் நில சீர்திருத்தத்துறை அமைச்சர் அலோக் மேத்தா, கடந்த சில நாட்களுக்கு முன் பாகல்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில்  பேசுகையில், ‘பத்து சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் பயனடைபவர்கள் ஆங்கிலேயர்களின் தரகர்கள்; அவர்களுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம்  உள்ளது. ஆனால் கடுமையாக உழைத்து வாழ்பவர்கள் … Read more

பிரபல கட்டடக் கலை நிபுணர் பி.வி.தோஷி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

புது டெல்லி: பிரபல கட்டடக் கலை நிபுணர் டாக்டர் பி.வி.தோஷி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘டாக்டர் பி.வி.தோஷி மிகச் சிறந்த கட்டடக்கலை நிபுணராகவும், பல்வேறு நிறுவனங்களை நிர்மாணித்தவராகவும் திகழ்ந்தவர். இந்தியா முழுவதும் அவர் மேற்கொண்ட நுட்பமான சிறந்த பணிகள் மூலம் வருங்கால தலைமுறையினர் கட்டடக்கலை நுட்பத்தை அறிந்து கொள்வார்கள். அவருடைய மறைவு கவலை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல். … Read more

விமான பணிப்பெண்ணிடம் வம்பு: டெல்லியில் 2 பயணிகள் கைது

ஐதராபாத்: டெல்லியில் இருந்து ஐதராபாத் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பணியாற்றும் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட பயணி அப்சர் ஆலம் என்பவரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘டெல்லியில் இருந்து ஐதராபாத் நோக்கிச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணி அப்சர் ஆலம் என்பவரும், அவருடன் வந்த மற்றொரு பயணியும் டெல்லியில் விமானத்தில் ஏறும் போது விமான பணிப்பெண்ணிடம் மோசமாகவும், ஆபாசமாகவும் நடந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் … Read more

`சும்மா அதிருதுல்ல…’-கடும் நிலநடுக்கத்தை #Earthquake போட்டு ட்ரெண்டாக்கும் டெல்லிவாசிகள்

இன்று நேபாளில் 5.8 ரிக்டர் அளவில் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், டெல்லியிலும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் அது உணரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம், “மதியம் 2.28 மணி அளவில் நேபாளில் 5.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது” என்றுள்ளது. Earthquake of Magnitude:5.8, Occurred on 24-01-2023, 14:28:31 IST, Lat: 29.41 & Long: 81.68, Depth: 10 Km ,Location: Nepal for more information Download the … Read more