கணவரை தாக்கிய கொள்ளையர்கள்… தடுக்க வந்த நடிகை சுட்டுக்கொலை

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் வழிப்பறி கொள்ளையை தடுக்க முயன்ற ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை இன்று (டிச. 28) சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். நடிகை ரியா குமாரி என்பவர் தனது கணவரும், திரைப்பட தயாரிப்பாளருமான பிரகாஷ் குமாரும் அவர்களது இரண்டு வயது மகளும் காரில் தேசிய நெடுஞ்சாலை 16 வழியாக கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாக்னன் காவல் நிலையப் பகுதியில் உள்ள மகிஸ்ரேகா அருகே இன்று காலை 6 மணியளவில் … Read more

ஜம்மு – காஷ்மீர், லே – லடாக் பாதுகாப்பு, மேம்பாடு குறித்து அமித்ஷா ஆலோசனை

டெல்லி: ஜம்மு – காஷ்மீர் மற்றும் லே – லடாக் பாதுகாப்பு, மேம்பாடு குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் முதல்நிலை ஆளுநர்கள் உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

தேவாலயத்தில் தாக்குதல்; குழந்தை இயேசு சிலை உடைப்பு: உண்டியல் அபேஸ்..!

கர்நாடகாவில், கிறிஸ்துமஸ் பண்டிகை நடந்த 2 நாட்களுக்குள் தேவாலயம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் மைசூர் மாவட்டம் பெரியபட்டினத்தில் புனித மேரி தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலத்தில் இருந்த குழந்தை இயேசுவின் சிலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த 4 உண்டியல்களை எடுக்க முயற்சித்துள்ளனர். அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது. ஆனால், அதில் ஒரு உண்டியலை அந்த கும்பல் எடுத்துச்சென்றுள்ளது. திருட்டு நோக்கத்தோடு இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக … Read more

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மருத்துவமனையில் அனுமதி

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தயார் ஹீராபென், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தயார் ஹீராபென் கடந்த ஜூன் மாதம் 100-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமீபத்தில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச் சாவடிக்கே வந்து அவர் வாக்களித்தார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அகமதாபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடி, தாயார் ஹீராபென்னை சந்தித்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் … Read more

மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து

டெல்லி: தாய்க்கும் மகனுக்கும் இடையிலான அன்பு முடிவில்லாதது மற்றும் விலைமதிப்பற்றது. அகமதாபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் விரைவில் குணமடைய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் உலகக் கோப்பை ஹாக்கி: முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு..!

வரும் 2023-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கிறது. ஏற்கனவே, கடந்த 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய … Read more

வாடிக்கையாளர் கேட்டது வெஜ் பிரியாணி… வந்ததோ எலும்புகளுடன் பிரியாணி..!!

 இந்தூரில் உள்ள உணவகம் ஒன்றில் சைவ உணவு சாப்பிடும் ஆகாஷ் துபே என்ற நபர் அந்த உணவகத்தில் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தார். இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் எலும்புகள் இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அவர் உணவக மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார். இதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்டனர். தொடர்ந்து ஆகாஷ் விஜய் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதுகுறித்து உணவக மேலாளர் ஸ்வப்னில் குஜ்ராதி மீது 298-வது பிரிவின் கீழ் எப்.ஐ.ஆர் … Read more

வட இந்தியாவில் தொடரும் பனிப்பொழிவு – விமான சேவை கடும் பாதிப்பு

புதுடெல்லி: வட இந்தியாவில் தொடரும் பனிப்பொழிவு காரணமாக தலைநகர் புதுடெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ”புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டன. பல்வேறு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன” என புதுடெல்லி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக … Read more

பிரதமர் மோடி தாயின் உடல்நிலை; டாக்டர்கள் தீவிர சிகிச்சை!

இந்தியாவின் பிரதமராக இருப்பவர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி (Narendra Damodardas Modi). மேலும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராகவும் பிரதமர் மோடி இருந்து வருகிறார். நடுத்தர குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தார். தாமோதர் தாஸ் முல்சந் மோடி மற்றும் கீரபேன் தம்பதிக்கு பிறந்த 6 குழந்தைகளில் நரேந்திர மோடி 3வது குழந்தையாக பிறந்தவர். நரேந்திர மோடி ஏற்கனவே அக்டோபர் 7, 2001 முதல் மே 22, 2014 வரை … Read more

வடஇந்திய மாநிலங்களில் நிலவி வரும் பனி மூட்டம்… 331 ரயில்களின் சேவையை ரத்து செய்தது ரயில்வே நிர்வாகம்!

வட இந்திய மாநிலங்களில் நிலவி வரும் பனி மூட்டம் உள்பட பல்வேறு காரணங்களால் இன்று இயக்கப்படும் 331 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வடக்கு ரயில்வே, மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே, தென்னக ரயில்வே, மேற்கு ரயில்வே ஆகிய ரயில் நிர்வாகங்கள் உள்ளூர் மற்றும் தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் 268 ரயில்களின் சேவையை முழுமையாகவும், 63 ரயில்களின் சேவயை பகுதியாகவும் ரத்து செய்துள்ளன. கடந்த சில நாட்களாகவே, பனிமூட்டம் உள்ளிட்ட காரணிகளால் நூற்றுக்கும் … Read more