மகரவிளக்கு பூஜை: நடை திறந்த நாள் முதல் சபரிமலையில் குவியும் பக்தர்கள்

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, டிசம்பர் 27 ஆம் தேதியுடன் 41 நாள் மண்டல பூஜைக்காலம் நிறைவடைந்து அன்று நடை அடைக்கப்பட்டது. இந்த மண்டல பூஜைக் காலத்தில் மட்டும் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், டிசம்பர் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மகர … Read more

11 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி: சோதனை செய்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி..!

கர்நாடகாவின் மைசூரு நகரில் 11 வயது சிறுமி ஒருவர் அடிக்கடி வயிறு வலிக்கிறது என கூறி வந்துள்ள நிலையில், பெற்றோர் ஒவ்வொரு மருத்துவமனையாக கொண்டு சென்று காண்பித்துள்ளனர். ஆனால், பல்வேறு மருத்துவம் பார்த்தும் வலி குறையவில்லை. கடந்த 8 மாதங்களாக பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றுள்ளது. வலிக்கான காரணம் என்னவென கண்டறிய முடியவில்லை. இதனால், பள்ளி படிப்பையும் இடையிலேயே சிறுமி நிறுத்தி விட்டார். இதனை தொடர்ந்து, இரைப்பை சிகிச்சை நிபுணரிடம் சென்றபோது, அவர் முழு அளவில் எண்டோஸ்கோபி … Read more

பாஜக, ஆர்.எஸ்.எஸ். தான் எனது குரு….! ராகுல் காந்தி அதிரடி கருத்து!…

எதை செய்யக்கூடாது என்று எனக்கு கற்று கொடுத்த பா.ஜ.க தனது குரு என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியின் ஒற்றுமை பயணம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனது ஒற்றுமை பயணம் குறித்து ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், பா.ஜ.க தலைமையிலான அரசு காரணமே இல்லாமல் தன் மீது வழக்கு போட முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டினார். ஒற்றுமை பயணத்தை குண்டு துளைக்காத காரில் … Read more

புத்தாண்டு கொண்டாட்டம் | பெங்களூருவில் பாதுகாப்புக்கு 12,000 போலீஸ் குவிப்பு

பெங்களூரு: பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெங்களூருவில் புத்தாண்டு (ஜனவரி 1) தினத்தையொட்டி எம்.ஜி.சாலை, பிரிகேட் சாலை, சர்ச் சாலை உள்ளிட்ட இடங்களில் இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்பதற்காக கர்நாடகா மட்டுமல்லாமல் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பெங்களூருவில் குவிந்துள்ளனர். இதனால் வன்முறை சம்பவங்கள், பாலியல் அத்துமீறல் போன்ற சம்பவங்கள் … Read more

கர்நாடகாவில் மீண்டும் ஒப்பந்ததாரர் தற்கொலை; 40% கமிஷன் பிரச்சனையா.?

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவிகிதத கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. பொதுவாக கான்ட்ராக்டர்கள், ‘தங்களுடைய பேலன்ஸ் க்ளியர் ஆகாது’ என அரசாங்கத்தை எதிர்த்து பேச மாட்டார்கள். ஆனால், இன்று அவர்களே வெளியே வந்து, ‘கர்நாடக பா.ஜ.க அரசு 40% கமிஷன் கேட்கிறார்கள்’ என்று வெளிப்படையாகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார்கள். அப்படி ஒரு சூழல்தான் கர்நாடகாவில் நிலவுகிறது. கர்நாடக மாநிலம் மால்பே கடற்கரையில் ரூ.80 லட்சம் செலவில் மிதவை … Read more

Income Tax: புத்தாண்டில் ஒரு மாஸ் செய்தி, இந்த வருவாய்க்கு வரி செலுத்த வேண்டாம், தெரியுமா?

வருமான வரி ஸ்லேப்: 2022 ஆம் ஆண்டு முடிவடைந்து 2023 ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது.  புத்தாண்டு மக்களுக்கு புதிய நம்பிக்கைகள் நிறைந்ததாக அமையும். அதே நேரத்தில், இந்த ஆண்டு மக்கள் தங்கள் வாழ்க்கையில் பல புதிய விஷயங்களையும் செய்வார்கள். இந்த ஆண்டு மக்கள் தங்கள் வருமானத்தையும் சேமிப்பையும் அதிகரிக்கும் நோக்கத்துடன் பல வேலைகளைச் செய்ய உள்ளனர். இந்த புத்தாண்டில் சாமானியர்கள் சில முக்கியமான விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இவற்றில் சில மக்களுக்கு புத்தாண்டு பரிசாக … Read more

பீலே மணற்சிற்பம் அமைத்து அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக்

பிரேசில் கால்பந்து ஜம்பவான் பீலே மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கிழக்கு கடற்கரை நகரான ஒடிசாவின் பூரியில் பிரம்மாண்ட மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது. பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன பட்நாயக், இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்திருந்தார். ரசிகர்களும், பொது மக்களும், இந்த மணல் சிற்பத்தை பார்வையிட்டு, பீலேவுக்கு அஞ்சலி செலுத்தினர். இதே போன்று மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களிலும் கால்பந்து வீர்ர்கள் மற்றும் கால்பந்து ஆர்வலர்கள், பீலேவின் முழு உருவ படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். … Read more

மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின: சபரிமலையில் புத்தாண்டு தரிசனத்திற்கு 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. நாளை புத்தாண்டு தரிசனத்திற்கு 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலையில் கடந்த 27ம் தேதி மண்டல பூஜை முடிந்தது. 2 நாள் இடைவேளைக்குப் பின் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக நேற்று மாலை 5 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடை … Read more

ரிஷப் பண்டிற்கு வெற்றிகரமாக முடிந்த ப்ளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை!

ரிஷப் பண்டிற்கு இன்று சிறிய அளவிலான பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நேற்று (டிச.30) காலை உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த போது அவரது கார், சாலைத் தடுப்பின் மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட்டின் வலது முழங்கால் மற்றும் வலது மணிக்கட்டில் தசைநார் கிழிவும், நெற்றி, கணுக்கால் மற்றும் முதுகில் சில சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டுள்ளன. … Read more

“இந்திய – சீன எல்லை குறித்த கவலை எனக்கு இல்லை; ஏனெனில்…” – அமித் ஷா

பெங்களூரு: இந்திய – சீன எல்லை குறித்த கவலை தனக்கு இல்லை என்றும், ஏனெனில் நமது எல்லையை பாதுகாக்கும் பணியில் இருப்பவர்கள் இந்தோ-திபெத் எல்லை படை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று கர்நாடகா வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பெங்களூரு அருகே உள்ள தேவனஹல்லி நகரில் இந்தோ – திபெத் எல்லை படைக்கான நிறைவுற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார். மேலும், பல்வேறு திட்டங்களுக்கு … Read more