சாதி அரசியலை பிஹார் நிராகரித்தது: பிரதமர் நரேந்திர மோடி கருத்து
சூரத்: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் சாதி அரசியலை மக்கள் நிராகரித்து உள்ளனர். இந்த தேர்தலில் தோல்வியை தழுவியவர்கள் பேரதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த தினம் மற்றும் பழங்குடியினர் கவுரவ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி குஜராத்தின் நர்மதா மாவட்டம், டெடியாபடா பகுதியில் உள்ள தேவமோக்ரா தேவி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழிபட்டார். இந்த கோயில் பழங்குடி மக்களின் கோயில் ஆகும். Source link