உலக வங்கியிடம் பெற்ற ரூ.14 ஆயிரம் கோடி கடனை தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்திய நிதிஷ் அரசு: ஜன் சுராஜ் கட்சி தலைவர் உதய் சிங் குற்றச்சாட்டு
பாட்னா: உலக வங்கியிடம் பெற்ற ரூ.14 ஆயிரம் கோடியை நிதிஷ் குமார் தலைமையிலான அரசு தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்தி உள்ளதாக ஜன் சுராஜ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மொத்தம் உள்ள 243 இடங்களில் என்டிஏ 202, மெகா கூட்டணி 35 இடங்களில் வெற்றி பெற்றது. பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி படுதோல்வி அடைந்தது. Source link