திருப்பதியில் உள்ளூர் போட்டோகிராபர்களின்கேமராக்களை பறிமுதல் செய்து உண்டியலில் போட்ட அதிகாரிகள்: பக்தர்களுக்கு இடையூறு செய்ததால் அதிரடி

திருமலை: திருப்பதி கோயில் எதிரே பக்தர்களுக்கு இடையூறாக புகைப்படம் எடுத்த உள்ளூர்  புகைப்பட கலைஞர்களின் கேமராக்களை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் பறித்து  உண்டியலில் செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோயிலுக்கு வந்ததற்கு நினைவாக தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து செல்வது வழக்கம். ஒரு சிலர் அங்கு உள்ள புகைப்பட கலைஞர்கள் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டு போட்டோ பிரேம் போட்டு கொண்டு செல்வது வழக்கம். இதற்காக … Read more

பாஜகவை பின்னுக்கு தள்ள மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட ஜனநாயகச் சக்திகள் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமை மீட்டு சிறப்பு மாநாடு கம்பன் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. புதுச்சேரி செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். பெருமாள் வரவேற்றார். அகில இந்தியப் பொதுச்செயலர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு மாநாட்டு பிரகடன தீர்மானத்தை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது. ‘‘புதுச்சேரியில் மட்டுமல்ல கோவா, கர்நாடகா என பல மாநிலங்களில் இரட்டை என்ஜின் போன்ற பாஜக மற்றும் மாநிலக் கட்சிகள் இணைந்த ஆட்சி நடக்கிறது. ரயிலின் இருமுனையில் … Read more

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க நாளை இந்தோனேஷியா செல்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்தோனேஷியா செல்கிறார். உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 கூட்டமைப்பின் 17வது உச்சி மாநாடு இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடைபெற உள்ளது. இதில், அமெரிக்கா, சீனா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர். ஜி20 கூட்டமைப்பின் தலைமையை கடந்த ஓராண்டாக வகித்து வந்த … Read more

மாஸ் காட்டிய பிரபல நடிகர் மீது பாய்ந்த வழக்கு!!

ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தற்போது ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே கடுமையான அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆந்திராவில் சாலை விரிவாக்க பணிகளுக்காக குண்டூரில் ‘இப்டம்’ என்ற கிராமத்தில் வீடுகள் இடிக்கப்பட்டன. ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை நேரில் சந்தித்து சில காட்சிகள் ஆறுதலும் தெரிவித்தன. அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் பிரபல … Read more

ஜி-20 மாநாடு..பிரதமர் மோடி நாளை இந்தோனேசியா செல்கிறார் ..

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பே ஜி-20 கூட்டமைப்பாகும். இதில் இந்தியா கடந்த 1999ம் ஆண்டு இணைந்தது. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) யில் 85 சதவிகிதம் இந்த நாடுகளுக்கு சொந்தமானதாக உள்ளதால், ஜி-20 கூட்டமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேபோல், உலகில் வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் 65 சதவிகிதம் இந்த 20 நாடுகளுடையது தான். எனவே ஒவ்வொரு ஆண்டும் கூட்டப்படும் இந்த ஜி-20 கூட்டமைப்பு, … Read more

திருப்பதி மலையில் அனுமதியின்றி போட்டோ எடுக்கும் தொழில் செய்தவர்களின் கேமராக்கள் பறிமுதல்

திருப்பதி மலையில் தேவஸ்தான அனுமதியில்லாமல் போட்டோ எடுக்கும் தொழில் செய்து வந்த 30க்கும் மேற்பட்ட போட்டோகிராபர்களின் கேமராக்களை, தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் பறிமுதல் செய்து, உண்டியலில் சமர்ப்பித்தனர். போட்டோ கிராபர்கள் பக்தர்களுக்கு தொல்லை கொடுப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏழுமலையான் உண்டியலில் சமர்ப்பிக்கப்படும் பொருள், தேவஸ்தானத்திற்கே சொந்தமாகும் என்பதால், ஏலத்தின் மூலம் மட்டுமே கேமராக்களை திரும்ப பெற முடியும். Source link

“சீட் கொடுக்கலைனா தற்கொலை செஞ்சுக்குவேன்”-மின் கோபுரத்தில் ஏறி ஆம் ஆத்மி பிரமுகர் அலப்பறை!

டெல்லி மாநகராட்சி தேர்தலில் தனக்கு சீட் கிடைக்காததால் டெல்லி முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலர் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தல் வரும் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் டெல்லியில் இப்போது ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி, உள்ளாட்சித் தேர்தலிலும் அமோக வெற்றியை அறுவடை செய்யும் முனைப்பில் தீவிரமாக … Read more

கணவருக்கு சூனியம் வைக்க ரூ.59 லட்சம் செலவு செய்த மனைவி; விசாரணையில் திடுக்கிடும் தகவல்

தன்னுடைய ஆண் நண்பருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்க தடையாக இருக்கும் கணவருக்கு சூனியம் வைக்க மனைவி ரூ.59 லட்சம் வரை செலவு செய்த சம்பவம் மும்பையில் அரங்கேறி உள்ளது. மும்பை அருகே உள்ள அந்தேரி பகுதியை சேர்ந்த 39 வயதான தொழிலதிபர் ஒருவருக்கு 38 வயதில் ஒரு மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், தொழிலதிபரின் மனைவி 13 வருடங்களுக்கு முன்பு பரேஷ் கோடா என்பவரை காதலித்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் அவர்களது … Read more

தேர்தலில் வெற்றி பெற்றால் ரூ.500க்கு சிலிண்டர்!!

குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றால், சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 182 சட்டப்பேரவை இடங்களை கொண்ட குஜராத் சட்டமன்றத்துக்கு வரும் 1ஆம் தேதி முதல் கட்டம், 5ஆம் தேதி 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதனால் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ந்நிலையில், குஜராத் மாநிலத்துக்கான … Read more

நேபாளத்தில் அடிக்கடி ஏற்படுவதால் எந்த நேரத்திலும் டெல்லியில் 7.9 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்படலாம்!: ஆய்வறிக்கையில் தகவல்; நேற்றிரவு 3 முறை குலுங்கியது

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் எப்போது வேண்டுமானாலும் 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் நேற்றிரவு 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தலைநகர் டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில்  நேற்றிரவு ஒரே நிமிடத்தில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த  நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது.  பாதிப்புகள் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் கூட, பொதுமக்கள் பெரும்  பீதியடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு … Read more